Wednesday, October 23, 2019

காரில் பதிவு எண்ணுக்கு பதில் ஆந்திர பிரதேச முதல்அமைச்சர் பெயராம்!

தெலங்கானாவில் அய்தராபாத் நகரில் கார் ஒன்றின் முகப்பு பகுதியில் பதிவு எண் இருப்பதற்கு பதிலாக, ஆந்திர பிரதேச முதல்அமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் பெயரை குறிப்பிடும் வகையில், ஏ.பி. சி.எம். ஜெகன் என ஆங்கில எழுத்துகளால் எழுதப்பட்ட வெள்ளை நிற நம்பர் பிளேட் இருந்தது.
அந்த காரை ஓட்டி வந்த நபரிடம் வாகன சோதனையில் ஜீடிமெட்லா காவல்துறையினர் இதுபற்றி விசாரணை மேற்கொண்டனர்.
அந்த வாகனம் ஏசு ரெட்டி என்பவரது பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதும், அதனை ராகேஷ் என்பவர் பயன்படுத்தி வந்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
காரை ஓட்டிய நபர், சுங்க சாவடி கட்டணம் செலுத்துவது மற்றும் காவல் துறையினர் சோதனையை தவிர்ப்பதற்காக வாகன பதிவு எண்ணுக்கு பதில் ஆந்திர பிரதேச முதல்அமைச்சர் ஜெகன் பெயரை பயன்படுத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நாட்டிலேயே அதிக குற்றங்கள் நடக்கிற மாநிலம் பிஜேபி ஆளும் உத்தரபிரதேசம்: தமிழ்நாட்டுக்கு 7ஆவது இடம்

நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள், யூனியன் பிர தேசங்களில் 2017ஆ-ம் ஆண்டு நடந்துள்ள குற்றச்சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்பான புள்ளி விவர பட்டியலை தேசிய குற்ற ஆவண காப்பகம் (என்.சி.ஆர்.பி.) வெளியிட்டுள்ளது.
2017ஆ-ம் ஆண்டில் நாடு முழு வதும் 30 லட்சத்து 62 ஆயிரத்து 579 குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன. 2016இ-ல் இந்த எண்ணிக்கை 29 லட்சத்து 75 ஆயிரத்து 711 ஆக இருந்தது.
2015-ஆம் ஆண்டு இது 29 லட்சத்து 49 ஆயிரத்து 400 ஆகும்.
நாட்டிலேயே பெரிய மாநிலம் என்ற சிறப்பை பெற்றுள்ள உத்தர பிரதேசம்தான், குற்றச்சம்பவங் களிலும் முதல் இடத்தில் உள்ளது.
இந்த மாநிலத்தில் 2017ஆ-ம் ஆண்டில் 3 லட்சத்து 10 ஆயிரத்து 84 குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன. இது நாட்டில் 10.1 சதவீதம் ஆகும்.
இங்கு 2016-ஆம் ஆண்டில் 2 லட்சத்து 82 ஆயிரத்து 171 குற்ற வழக்குகளும், 2015ஆ-ம் ஆண்டு 2 லட்சத்து 41 ஆயிரத்து 920 வழக்கு களும் பதிவாகின.
மராட்டிய மாநிலம், அதிக எண் ணிக்கையிலான குற்றச்சம்பவங்கள் நடந்துள்ள 2-ஆவது மாநிலம் என்ற பெயரை பெறுகிறது.
இங்கு 2017-இல் 2 லட்சத்து 88 ஆயிரத்து 879 வழக்குகள் பதிவாகி உள்ளன. இது 9.4 சதவீதம் ஆகும்.
மத்திய பிரதேசத்துக்கு மூன் றாவது இடம்.
இந்த மாநிலத்தில் 2 லட்சத்து 69 ஆயிரத்து 512 குற்ற வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. இது 8.8 சதவீதம் ஆகும்.
4-ஆவது இடம், கேரள மாநிலத் துக்கும், 5-ஆவது இடம் டில்லிக்கும், 6ஆ-வது இடம் பீகாருக்கும் கிடைத் துள்ளது.
குற்றச்சம்பவங்களின் எண்ணிக் கையில் தமிழ்நாடு 7-ஆவது இடத்தில் உள்ளது.
தமிழ்நாட்டில் 2017-ஆம் ஆண்டு 1 லட்சத்து 78 ஆயிரத்து 836 வழக்குகள் பதிவாகி உள்ளன.
இது 5.8 சதவீதம் ஆகும். 2016-ஆம் ஆண்டு, 1 லட்சத்து 79 ஆயிரத்து 896 குற்ற வழக்குகளும், 2015-ஆம் ஆண்டு, 1 லட்சத்து 87 ஆயிரத்து 558 குற்ற வழக்குகளும் பதிவாகி உள்ளன.
இந்த வகையில் தமிழ்நாட்டில் குற்றங்களின் எண்ணிக்கை குறைந் துள்ளது.

2020ஆம் ஆண்டின் தமிழக அரசு விடுமுறை பட்டியல் பாரீர்!


தமிழக அரசு, 2020இல் 23 நாட்களை பொது விடுமுறை நாட்களாக அறிவித்துள்ளது.
தமிழக அரசு, 2015இல் 24 நாட்கள், 2016இல் 23, 2017இல் 22; 2018இல், 23, 2019இல் 23 நாட்களை பொது விடுமுறை நாட்களாக அறிவித்திருந்தது. அடுத்த 2020ஆம் ஆண்டிற்கும் நடப்பு ஆண்டை போலவே, 23 நாட்களை பொது விடுமுறை நாட்களாக அறிவித்துள்ளது. பொது விடுமுறை நாட்களில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அலுவலகங்களும், மூடப்பட வேண்டும். அனைத்து, சனி, ஞாயிற்று கிழமைகளும், விடுமுறை நாட்கள் ஆகும்.

ஜனவரி மாதத்தில் 5 நாட்களும், ஏப்ரல் மாதத்தில் 4 நாட்களும், ஆகஸ்ட் மாதத்தில் 5 நாட்களும், அக்டோபர் மாதத்தில் 4 நாட்களும்  பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

ரஷ்யாவும், கியூபாவும் இணைந்து பல்நோக்கு கதிர்வீச்சு மய்யம் அமைப்பு


இந்தியாவைப் போன்ற தனி சுதந்திர குடியரசு நாடான கியூபாவில், பல்வேறு பணிகளுக்கு பயன் படுத்தும் நோக்கிலான கதிர்வீச்சு மய் யம் ஒன்றை அமைக்க கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி ஒப்பந்தம் கையெழுத்தானது. கியூபாவின் தலைநகர் ஹவானாவில் இதற்காக நடைபெற்ற நிகழ்வில் பங் கேற்று, கூட்டு ஒப்பந்தத்தில் ரசியா கையொப்பமிட்டது.
கியூபாவின் சார்பில் அந்நாட்டின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுப்புறச் சூழல் துறைகளுக்கு பொறுப்பு வகிக்கும் துணை அமைச்சர் ஜோஸ் ஃபிடல் சந்தனா அவர்களும், ரஷ்யாவின் சார்பில், அந்நாட்டு அணு மின் சக்திக் கழகமான ரொசாட்டம் நிறுவனத்தின் துணை தலைமை இயக்குனர் நிக்கோலே ஸ்பாஸ்கை அவர்களும் இந்த ஒப்பந் தத்தில் கையொப்பமிட்டனர்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், ரசிய அணுமின் கழகமான ரொசாட்டம் நிறு வனம் சார்பில் கியூபாவிற்கு வழங்கப் படும் நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு, ரொசாட்டம் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜே.எஸ்.சி. ரொசாட்டம்  ஹெல்த்கேர் வடிவமைத்து உருவாக்கும் பல்நோக்கு கதிர்வீச்சு மய்யம் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகின்றன.
தற்போது அமைக்கப்படும் முதல் மய்யம் வெற்றிகரமாக அமைந்தால், இந்த இரு நாடுகளும் இணைந்து கியூபா வில் மேலும் பல இடங்களில் இது போன்ற மய்யங்களை அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் எனவும் தெரிகிறது.

கனடா நாடாளுமன்ற தேர்தல் மீண்டும் பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ


நிலப் பரப்பில் உலகின் 2ஆவது மிகப்பெரிய நாடாக விளங் கும் கனடாவில் 338 தொகு திகளை கொண்ட நாடாளு மன்றத்துக்கு நேற்று முன் தினம் தேர்தல் நடைபெற்றது.
இதில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சிக்கும், ஆண்ட்ரூ ஷீர் தலைமையிலான கன்சர் வேட்டிவ் கட்சிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது. நேற்று மாலை வாக்குப்பதிவு முடிந்தவுடன், வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.
இந்த தேர்தலில் எந்த கட் சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனாலும், ஜஸ்டின் ட்ரூடோவின் லிப ரல் கட்சி, 157 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. கன்சர் வேட்டிவ் கட்சிக்கு 121 இடங்கள் கிடைத்துள்ளன. ஆட்சி அமைக்க 170 இடங் கள் தேவை என்கிற நிலையில், ஜஸ்டின் ட்ரூடோவுக்கு 13 நாடாளுமன்ற உறுப்பினர் களின் ஆதரவு மட்டுமே தேவைப்படுகிறது.
அந்த வகையில் இந்திய வம்சாவளி சீக்கியரான ஜக் மித் சிங்கின், புதிய ஜனநாயக கட்சி ஆதரவுடன், ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் ஆட்சிய மைப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் மத்தி யில் அதிகம் வரவேற்பை பெற்ற புதிய ஜனநாயக கட்சி 20 இடங் களை கைப்பற்றி யுள்ளது.
கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைப்ப தன் மூலம் ஜஸ்டின் ட்ரூடோ தொடர்ந்து 2ஆவது முறை யாக பிரதமராகிறார். இதற் கிடையே நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்கு ஜஸ்டின் ட்ரூடோவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சமூக நீதிக்கு மரண அடி!: பல்கலைக்கழகம், கல்லூரி படிப்பில் சேர உயர்கல்விக்கு ஒரே நுழைவு தேர்வாம்! சமூக நீதிக்கு மரண அடி!: பல்கலைக்கழகம், கல்லூரி படிப்பில் சேர உயர்கல்விக்கு ஒரே நுழைவு தேர்வாம்!

ஒரே தேர்தல், ஒரே உணவுப் பங்கீட்டு அட்டை பாணியில், பல்கலைக்கழகம், கல்லூரிகளில் கலை, அறிவியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக நாடு முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வை கொண்டு வர மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
இது தொடர்பாக, புதிய தேசியக் கல்விக் கொள்கை இறுதி வரைவில் பரிந்துரைக்கப்பட இருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை  அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
மருத்துவ படிப்புக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான நீட் நுழைவுத்தேர்வு கொண்டு வரப்பட்டது. கடந்த மே மாதம் வெளியிடப்பட்ட புதிய தேசிய கல்விக் கொள்கையில், கலை அறிவியல் உட்பட அனைத்துபட்டப் படிப்புகளுக்கும் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டுமென பரிந்துரைக்கப் பட்டது.
இதற்கு பல தரப்பிலும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின.
ஆனாலும், பட்டப்படிப்புக்கு ஒரே நுழைவுத் தேர்வை கொண்டு வருவதில் மத்திய அரசு தீவிரமாக இருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தற்போது கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
நாடு முழுவதும் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் கலை, அறிவியல் படிப்புகளில் சேர, பாடவாரியாக ஒரே நுழைவுத் தேர்வை கொண்டு வருவது குறித்து புதிய தேசிய கல்விக் கொள்கையின் இறுதி வரைவில் பரிந்துரைக்கப்படும். மாணவர்களின் சிரமத்தை போக்க, இத்தேர்வு ஆண்டுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட முறை நடத்தப்படும். இத்தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தும். தற்போது, பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் சேர மாணவர்கள் தனித்தனியாக நுழைவுத் தேர்வு எழுதி வருகின்றனர். ஒரே நுழைவுத்தேர்வு கொண்டு வருவதின் மூலம் மாணவர்களுக்கு ஏற்படும் நெருக்கடி குறையும். புதிய தேசிய கல்விக் கொள்கையின் இறுதி வரைவு குறித்து 2 லட்சம் பரிந்துரைகள் ஆய்வு செய்யும் பணி முடிந்துள்ளது.
இதனால், இறுதி வரைவு விரை வில் தயாராகி விடும். இதற்கான பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன. உயர்கல்விக்கான பரிந் துரைகளை ஆய்வு செய்ய பெங்களூ ருவில் ஓர் அலுவலகம் அமைக்கப் பட்டது. பள்ளி கல்விக்காக, சிபிஎஸ்இ தலைவர் அனிதா கர்வாலின் கீழ் ஒரு குழு அறிக்கையை இறுதி செய்தது.
புதிய தேசிய கல்விக் கொள்கை, முற்போக்கான, முற்றிலும் இந்தியாவை மய்யமாக கொண்ட கொள்கையாக இருக்கும் என நம்புகிறேன். இறுதி வரைவுக்கு பிரதமர் மோடியின் ஒப்புதல் கிடைத்ததும், அதை விரைவில் அறிவிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தற்போது, பொறியியல், வேளாண்,  மருத்துவம், மேலாண்மை உள்ளிட்ட சில பட்டப்படிப்பு களுக்கு மட்டுமே நுழைவுத்தேர்வு இருந்து வருகிறது. கலை, அறிவியல் பட்டப் படிப்பில் சேர நுழைவுத் தேர்வு கிடையாது. ஆனால் புதிய கல்விக் கொள்கையில், கலை, அறிவியல் பட்டப்படிப்புக்கும் ஒரே நுழைவுத்தேர்வு கொண்டு வரப் படும் என்பது கிராமப்புற மாண வர்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தும் என கல்வியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கீழடி அகழாய்வில் சுடுமண் குழாய் கண்டுபிடிப்பு


கீழடி அகழாய்வுக் குழிகளை மூடும்போது, மேம்பட்ட சுடுமண் குழாய் அமைப்புகள் கண்டுபிடிக்கப்பட் டுள்ளன.
சிவகங்கை மாவட்டம், கீழடியில், இதுவரை, அய்ந்து கட்டங்களாக அகழாய்வுகள் செய்யப்பட்டு உள்ளன. முதல் மூன்று கட்ட அகழாய்வுகளை, மத்திய தொல் லியல் துறையும், அடுத்த, இரண்டு கட்ட அகழாய்வுகளை,தமிழக தொல்லியல் துறையும் மேற்கொண் டன. அய்ந்தாம் கட்ட அகழாய்வு பணிகள், கடந்த வாரத்தில் முடிந்தன. அதனால், அகழாய்வுக் குழிகளை, தார்ப்பாய்களால் மூடி, மண் கொட்டும் பணிகள் நடந்தன.
அப்போது, அகழாய்வுக் குழி ஒன்றின், 52 செ.மீ., ஆழத்தில், 20 செ.மீ., விட்டமுள்ள வாய்ப் பகுதி யுடன் கூடிய, 60 செ.மீ., நீளமுள்ள, சுடுமண் குழாய் கண்டுபிடிக்கப் பட்டது.
அது, இரண்டு குழாய் களால் இணைக்கப்பட்டிருந்தது. அதன் ஒவ்வொன்றிலும், தலா, 5 விளிம்புகள் இருந்தன. குழாயை உறுதியாக்கி, பாதுகாப்பான தண் ணீரை வழங்கும் வகையில் அமைக் கப்பட்டிருக்கும் இந்த விளிம்புகள், பார்வைக்கு, சுருள் வடிவத்தில் உள்ளன. இக்குழாய் ஒன்றின் வாய்ப் பகுதியில், வடிகட்டும் வகையில், மூன்று துளைகள் இடப்பட் டுள்ளன.
இந்த குழாய்களின் கீழ்ப்பகுதி யிலும், அகழாய்வு செய்யப்பட்டது. அப்போது, பீப்பாய் வடிவிலான, மூன்று, சுடுமண் குழாய்கள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு, ஒரே குழாயாக இருந்தது.
அதன் வாய்ப் பகுதியிலும், வடிகட்டி பொருத்தப்பட்டிருந்தது. வடி கட்டப்பட்ட நீர் செல்லும் குழாயின் இறுதிப் பகுதி, இரண் டடுக்கு பானைக்குள் செல்கிறது.
இவ்வாறு, ஒரே இடத்தில் அமைக்கப்பட்டிருக்கும், வெவ் வேறு விதமான இரண்டு சுடுமண் குழாய்களுக்கும், வெவ்வேறு பயன்பாடு இருந்திருக்க வேண்டும். இந்த வடிகால் குழாய்களின் கீழ்ப் பகுதியை அகழாய்வு செய்தபோது, சுடுமண் கூரை ஓடுகள் பதிக்கப்பட்ட தரைப்பகுதி காணப்பட்டது.
இது, தண்ணீரை எளிதாக வடிய வைக்கும் திறந்தவெளி அமைப்பாக இருக்கலாம்.தமிழக அகழாய்வு களில், இதுவரை கிடைக்காத வகையிலான, இந்த வடிகால் அமைப்பு களின் பயன்கள் குறித்து, அடுத்த கட்ட அகழாய்வுகளில் தான் தெரிய வரும். மேலும், அந்த பகுதியை தொடர்ந்து ஆய்வு செய்த போது, கூரை ஓடுகள் அடுக்கப்பட்ட நிலையில் இருந்தன. அவற்றின் தொடர்ச்சியில், செங்கல் கட்டடப் பகுதி இருந்தது.அது, இரண்டாம் கட்ட அகழாய்வின் போது கண்டறியப்பட்ட, கட்டடப் பகுதி யின் தொடர்ச்சி.
அதன் தொடர்ச்சி யை, அடுத்த கட்ட அகழாய்வில் தான் கண்டறிய முடியும்.
'கீழடி அய்ந்தாம் கட்ட அகழாய் வின் முடிவில் கண்டறியப்பட்டுள்ள, இந்த சுடுமண் குழாய்கள் மற்றும் கட்டடப் பகுதிகளை தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும்.'சங்க காலத்தில், வைகை நதிக்கரையில் வாழ்ந்த தமிழர்களின் நீர் மேலாண்மை, கட்டடக்கலை, தொழில்நுட்பம் உள்ளிட்டவை குறித்த, பல்வேறு தகவல்கள் வெளிப் படும்' என, தமிழக தொல்லியல் துறை அதிகாரிகள் நம்புகின்றனர்.
இது, தமிழக வரலாற்றின், புதிய திருப்பங்களுக்கு மிகப்பெரிய சான்றுகளாக இருக்கும் என்பதால், அடுத்தகட்ட அகழாய்வக்காக, வர லாற்று ஆய்வாளர்கள் எதிர் பார்ப்பில் உள்ளனர்.
மதுரை தமிழ் சங்கத்தில்கீழடி தொல்பொருட்கள்
கீழடி அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்களை, மதுரை தமிழ் சங்கத்தில் காட்சிப்படுத்த, தமிழக தொல்லியல் துறை முடிவு செய் துள்ளது.
சிவகங்கை மாவட்டம், கீழடியில், அய்ந்தாம் கட்ட அகழாய்வுப் பணி, சமீபத்தில் நிறைவடைந்தது; அக ழாய்வுக் குழிகள் மூடப்பட்டு விட் டன.
ஆறாம் கட்ட அகழாய்வுக்கான அனுமதியை, மத்திய தொல்லியல் ஆலோசனை வாரியத்திடம், தமிழக அரசு கோரியுள்ளது.
இந்நிலையில், கீழடியில் கிடைத்த தொல்பொருட்களை, அங்கேயே காட்சிப்படுத்த வேண் டும் என, பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர்.
அதையேற்ற தமிழக தொல்லியல் துறை, கீழடியில் கிடைத்த தொல் பொருட்களை, பலரும் பார்க்கும் வகையில், மதுரை தமிழ் சங்கத்தில் காட்சிப்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள், மும்முரமாக நடந்து வருகின்றன.
பார்வையாளர்களின் வருகை யை பொறுத்து, கண்காட்சி நடத்தும் நாட்களை முடிவு செய்ய, அதிகாரிகள் திட்ட மிட்டுள்ளனர்.

செவ்வாய்க் கோளில் உப்பு ஏரிகள் : ஆய்வில் தகவல்


செவ்வாய்க் கோளில் ஒரு காலத்தில் பூமியில் இருந் ததைப் போன்ற உப்பு ஏரிகள் இருந்ததாக ஆய்வில் கண்டறியப் பட்டுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் ஏ அண்ட் எம் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி யாளர்கள் ‘நேச்சர் ஜியோ சைன்ஸ்’ இதழில் வெளியிட்டுள்ள கட்டுரை யில் கூறியிருப்ப தாவது:
செவ்வாய்க்கோளில் 3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கேல் க்ரேட் டர் பள்ளத்தில் இருந்த ஏரி, 95 மைல் அகலமுள்ள ஒரு பெரிய பாறைப்படுகை, இது 2012 முதல் நாசா கியூரியா சிட்டி ரோவர் மூலம் ஆராயப்பட்டு வருகிறது. சுமார் 3.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய்க் கோளில் ஒரு விண்கல் தாக்கியபோது கேல் பள்ளம் உருவானது. செவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் உப்பு ஏரிகள் இருந் துள்ளன. அவை பூமியில் இருந் ததைப் போலவே ஈரமான மற்றும் வறண்ட கட்டங்களைக் கடந்து வந்துள்ளன. செவ்வாய்க் கோளின் காலநிலை நீண்ட காலமாக வறண்டு போய் இருக்கிறது. செவ்வாய்க் கோளின் வளிமண்டலம் மெல்லிய தாக மாறியதால் செவ்வாய்க் கோளில் திரவ நீர் நிலைத்திருக்காமல் ஆவியாகியுள்ளது என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.
மரியன் நாச்சன் கூறுகையில், கேல் க்ரேட்டர் அதன் வரலாற்றில் திரவ நீர் இருந்ததற்கான அறிகுறி களை வெளிப்படுத்துகிறது. இது நமக்குத் தெரிந்த நுண்ணுயிர் வாழ் வின் முக்கிய அங்கமாகும், வறண்ட காலங்களில் உப்பு ஏரிகள் இறுதியில் உருவாகின. இந்த ஏரிகள் எவ்வளவு பெரியவை என்று சரியாகச் சொல் வது கடினம். ஆனால் கேல் க்ரேட் டரில் உள்ள ஏரி நூற்றுக்கணக்கான ஆண்டுகள் முதல் பல்லாயிரக்கணக் கான ஆண்டுகள் வரை இருந்துள் ளது என்றார்.

சத்திஸ்கர் அரசின் முடிவு

சத்திஸ்கர் மாநிலத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) தேவையில்லை என்றும், வாக்குச் சீட்டுகளைக் கொண்டே தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறும் என்றும் மாநில முதல் அமைச்சர் பூபேஷ் பாகேல் அறிவித்து உள்ளார்.
வாக்குச்சீட்டு முறை தேர்தலுக்கு கடந்த சில ஆண்டுகளாக முடிவு கட்டிய தேர்தல் ஆணையம், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மூலம் வாக்குப்பதிவை செயல்படுத்தி வருகிறது. இந்த இயந்திர வாக்குப் பதிவில் தில்லுமுல்லு நடைபெறுவதாக காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த நிலையில், சத்திஸ்கர் மாநிலத்தில் நடைபெற உள்ள  உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் வாக்குச் சீட்டு வாக்குப் பதிவுக்கு ஆதரவாக ஈ.வி.எம்-களை அகற்றி விட்டு, மீண்டும் பழைய முறையான வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த மாநில அரச முடிவு செய்துள்ளது.
இதன் காரணமாக வாக்குச்சீட்டு முறையில் மீண்டும் தேர்தல் நடத்தும் முதல் மாநிலமாக சத்திஸ்கர் மாறி உள்ளது.
சத்திஸ்கர் மாநிலத்தில் ஏற்கெனவே உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான தேர்தல் விதிகள் ஆய்வு தொடர்பாக அமைச்சரவைக் குழு அமைக்கப் பட்டிருந்த நிலையில், நேற்று (அக். 22) முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையில், அமைச்சரவைக் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் உள்ளாட்சித் தேர்தல்களில் ஈ.வி.எம்-களுக்குப் பதிலாக வாக்குச் சீட்டைப் பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சத்திஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் தலைமையிலான அமைச்சரவை ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட பரிந்துரைகள் மாநில ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்துக் கூறிய மாநில அமைச்சர்,  "நகர்ப்புற உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் வாக்குச் சீட்டைப் பயன்படுத்துவதற்கும், மேயர் மற்றும் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல்களை நடத்துவதற்கும், நகராட்சித் தேர்தல் சட்டத்தைத் திருத்தும் வகையில் திருத்தம் செய்ய சத்திஸ்கர் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. நடைபெற உள்ள  உள்ளாட்சி அமைப்புத் தேர்தல்களில் வாக்குச் சீட்டைப் பயன்படுத்துவதை சம்பந்தப்பட்ட சட்டம் தடை செய்யாது" என்று தெரிவித்து உள்ளார்.
கடந்த ஆண்டு (2018)  சத்திஸ்கரில்  நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 15 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. இந்த நிலையில், இவிஎம் இயந்திரத்துக்குப் பதிலாக மீண்டும்  வாக்குச்சீட்டுத் தேர்தல் முறையை கொண்டு வர முயற்சி எடுத்துள்ளது.
இதுகுறித்துக் கூறிய  சத்திஸ்கர் மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் சஞ்சய் சிறீவாஸ்தவ், வாக்குச் சீட்டைப் பயன்படுத்துவதை எதிர்த்ததுடன்,  இது “காங்கிரசின்  சதி” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால், இதுகுறித்து கருத்துத் தெரிவித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சைலேஷ் திரிவேதி,  “சத்திஸ்கரில்  இவிஎம் இயந்திரம் குறித்த சர்ச்சைகள் ஏற்கெனவே வெடித்துள்ள நிலையில், அங்குள்ள வாக்காளர்கள்   உள்ளாட்சி அமைப்புத் தேர்தல்களில் வாக்குச் சீட்டைப் பயன்படுத்துவதற்கான முடிவை வரவேற்றுள்ளனர்" என்று கூறினார்.
அரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பா.ஜ.க. வேட்பாளர் கூறுகிறார், "எந்த பொத்தானை அழுத்தினாலும் தாமரைக்குத்தான் வாக்குப் பதிவாகும்" என்று கூறியுள்ளதைப் பார்த்தால் சத்திஸ்கர் மாநில அரசின் முடிவு சரியானதே என்றுதான் தோன்றுகிறது.
பிஜேபி என்று சொன்னாலே எதிலும் சந்தேகிக்க வேண்டியுள்ளது என்கிற அளவுக்கு அதன் சிந்தனைகளும், போக்குகளும், நடவடிக்கைகளும் அமைந்திருப்பதை யார்தான் மறுக்க முடியும்?

பாரத் பெட்ரோலியம் விற்கப்படுவதன் பின்னணி..!


இந்திய அரசை பின்னால் இருந்து இயக்கும் முக்கிய நிறுவனங்களுள் ஒன்றாக இருந்தும், சமீப காலமாக அதன் அடித்தளமே ஆட்டம்காண தொடங்கியிருக்கிறது அம்பானி குழுமத்திற்கு.
என்றாலும்.. அதை தூக்கி நிறுத்த தன்னால் இயன்ற மட்டும் முட்டுக் கொடுக்கிறது மத்திய அரசு.
தொடர்ந்து எட்டாவது முறையாக இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராக முடிசூட்டியிருக்கும் முகேஷ் அம்பானிக்கு இந்திய மற்றும் வெளிநாட்டு வங்கிகள், நிதி நிறுவனங்கள் கொடுத்துள்ள கடன் தொகை நான்கு லட்சத்து எண்பத்தி ஆறாயிரம் கோடி! (4,86,000 கோடி)
கிரெடிட் ஸ்யூஸை (Credit Suisse) என்ற நிதிநிலை மதிப்பிடும் பன்னாட்டு நிறுவனம் இனி அம்பானி குழுமத்துக்குக் கடன் கொடுப்பது ஆபத்து என்று அறிவித்ததோடு தன்னுடைய வாடிக்கையாளர்கள் மற்றும் துணை வங்கிகளும் இனி இவர்களுக்குக் கடன் தரமாட்டார்கள் என்று அறிவித்து விட்டது.
இந்த நிலையில்தான் உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான சவூதி அரேபியாவின் ஆரெம்கோ (Aramco)  நிறுவனம் ரிலையன்ஸில் 20 சதவீத பங்குகளை வாங்குவதோடு கொஞ்சம் முதலீடும் செய்ய முடிவெடுத்துள்ளது.  அதாவது கிட்டத்தட்ட 5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய ஆரெம்கோ நினைத்துள்ளது.
ஆரெம்கோவின் சொத்து மதிப்பான USD 1.1 Trillion-னோடு ஒப்பிடுகையில் அது அவர்களுக்கு சில்லரைக்காசு.    என்றாலும் இப்போது ரிலையன்ஸ் குரூப்பின் எந்த கம்பெனியுமே பெரிதாய் லாபம் ஈட்டும் நிலையில் இல்லை என்பதால் ஆரெம்கோ நிறுவனம் கொஞ்சம் தயங்கியது. இங்குதான் அம்பானியின் குள்ளநரித்தனமும், அரசின்மேல் அவருக்கிருக்கும் வலுவான பிடியும் வெளிப்படு கிறது.
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமி டெட்டை ரிலையன்சுக்கு விற்று விட்டால் ரிலை யன்ஸ் குழுமம் இன்னும் வலுப்பெறும். பாரத் பெட்ரோலியத்தின் மதிப்பு நான்கு லட்சம் கோடியைத் தாண்டும்.
நான்கு ரிஃபைனரீஸ், சிறிய மற்றும் பெரிய எண்ணெய் கிணறுகள் 100, பதினைந்துக்கு மேற் பட்ட எண்ணெய் சேமிக்கும் முனையங்கள், கிட்ட தட்ட பத்து ஸ்டேட் அலுவலகங்கள், அறுபதுக்கும் மேற்பட்ட டெரிட்டரி அலுவலகங்கள், 16,000-க்கும் அதிகமான பெட்ரோல் பங்குகள், அதிகாரிகள் குடியிருப்புகள் என நிறைய சொத்து மதிப்புடையது பாரத் பெட்ரோலியம்.
இதனுடைய மொத்த மதிப்பு நான்கு லட்சம் கோடிக்கு மேல் இருக்கும் என்பது தோராய கணிப்பு!
இந்த நிறுவனத்தின் அரசு கட்டுப்பாட்டில் உள்ள 54% பங்குகளின் மதிப்பு என்பது கிட்டத்தட்ட 2 லட்சம் கோடி ரூபாய் என மதிப்பிட்டுள்ளது அரசு. அதே வேளை, இந்த பங்குகளை வெறும் நாற்பதா யிரம் கோடிக்கு ரிலையன்சுக்கு விற்க முடிவெ டுத்துள்ளது.
ஆரெம்கோ நிறுவனம் ஒரு லட்சத்து அறுபதா யிரம் கோடியை ரிலையன்சுக்கு தனியாக தந்து விடும்.  ரிலையன்சும் தன்னுடைய கடனை வெகு வாக குறைத்துவிடும்.  இப்போது ரிலையன்சுக்கு லாபம் ஈட்டும் நிறுவனமாக பாரத் பெட்ரோலியம் அமைந்து விடுவதால் ஆரெம்கோ  நிறுவனத்திற்கு எந்த பிரச்சினையும் இல்லை.
கணிசமான தொகை கட்சிக்கோ ஆள்ப வர்களுக்கோ போய் சேர்ந்து விடும்.
இதுதான் பாரத் பெட்ரோலியம் விற்கப்படுவதின் பின்னணி..!
இந்திய அரசுக்கு சொந்தமான, இந்திய மக் களின் சொத்தான, 1976இல் தேசிய மயமாக்கப்பட்ட, உலகின் மிகப்பெரிய பெட்ரோலியம் கம்பெனி களுள் ஒன்று சப்தமில்லாமல் தனியாருக்கு தாரைவார்க்கப்பட இருக்கிறது.
நல்ல அரசு பற்றி சொல்லும் வள்ளுவர்...
"அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு" என்பார்..!
அப்படியொரு அறநெறி பேணும் அரசு இனி என்றேனும் அமையுமா..?
(வாட்ஸ் ஆப் தகவல்)

Tuesday, October 22, 2019

மொழிவழி மாநிலம் அமைந்த நவம்பர் முதல் நாளை தமிழ்நாடு நாள் என தமிழக அரசு கொண்டாட வலியுறுத்தல்

மொழிவழி மாநிலம் அமைந்த நவம்பர் முதல் நாளை "தமிழ்நாடு நாள்" - என தமிழக அரசு கொண்டாடவேண்டும், அரசு விடுமுறையாக அறி விக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து இந்திய ஸ்டேட் வங்கியின் முன்னாள் தொழிற்சங்க தலைவர்களின் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.பி.இராமன் அவர்கள் தமிழக, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மா.பா.பாண்டிய ராஜன் மற்றும் தமிழக அரசு தலைமைச் செயலாளர் ஆகி யோருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவில் மொழி வழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு 63 ஆண்டுகளை கடந்து 64ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இத்தருணம்; தமிழ் கூறும் நல்லுலகுக்கென தனி மாநிலம் அமைக்கப்பட்ட நாள்.
அத்தகைய சிறப்புமிக்க நாளை தமிழ் மொழியின் தொன்மை, தமிழர் தம் கலை, கலாச்சாரம், பண்பாடு ஆகி யவற்றை உயர்த்திப் பிடித்து, உலகறியச் செய்யும் நாளாக, நாடு தழுவிய அர்த்தமுள்ள கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யும் வகையில் ஆண்டுதோறும் (நவம்பர் முதல் நாளை) அரசு விடு முறை நாளாக அறிவித்திட தமிழக அரசை வேண்டுகிறோம்.
நமது அண்டை மாநில மான கருநாடகாவில் ஆண்டு தோறும் மொழிவழி மாநிலம் அமைந்த நவம்பர் முதல் நாளை விடுமுறை நாளாக அறிவித்து "கன்னட ராஜ்ய உற்சவம்" கொண்டாடுவதைப் போல, தமிழக அரசும் நவம்பர் மாதம் முதல் நாளை "தமிழ்நாடு நாள்" என அறிவித்து அரசு விடுமுறையாகவும் அறிவித்து செம்மொழியாம் நமது தமிழ் மொழியின் விழுமிய சிறப்புகளை உலகம் உணரச் செய்ய வேண்டுமென இந்திய ஸ்டேட் வங்கியின் முன்னாள் தொழிற்சங்கத் தலைவர்களின் கூட்டமைப்பு தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது என அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இணையதள மோசடியை தடுக்க புதிய திட்டம்

விழாக் காலத்தை முன்னிட்டு,  இ-காமர்ஸ் நிறுவனங்கள், பல்வேறு தள்ளுபடி சலுகைகளை அளித்து, வாடிக்கை யாளர்களை கவர்ந்து வருகின்றன. சைபர் குற்றவாளிகளின் கைவரி சையும் அதிகரித்திருப்பதால் இணையதளக் கொள்முதலில் பாது காப்பிலும், கவனம் செலுத்த வேண்டும்.
இதுகுறித்து காஸ்பெர்ஸ்கி நிறுவன மேலாளர் சிவசங்கர் கார்டே, கூறுகையில், "விழாக் காலத்தில், இ-காமர்ஸ் நிறுவனங்கள், தீவிர ஆர்வம் காட்டும் நிலையில், சைபர் குற்றவாளிகளும் கைவரிசை காட்ட, இதை ஒரு வாய்ப்பாகபயன்படுத்திக்கொள்ள முற்படுகிறது. ஆன்லைன் கொள்முதலை பாதுகாப்பான முறையில் மேற்கொள்வதில், கவனம் செலுத்த வேண்டும்.
ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு தயாரிப்பில் முதல் இடத்தில் இயங்கி வரும் ரஷ்ய நிறுவனமான காஸ்பெர்ஸ்கி, விழாக்காலத்தை முன்னிட்டு புதிய சலுகைகளையும் பரிசு திட்டங்களையும் அறிவித்துள்ளது.
இணைய வசதிபல்வேறு வங்கிகள் மற்றும் நிதிநுட்ப நிறுவனங் களுடனான கூட்டால், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் பயன்பாடு, இந்த காலத்தில் அதிகரிக்கும்என எதிர்பார்க்கப்படுவதால், சைபர் குற்றவாளிகள் வலைவிரிக்க காத்திருக்கின்றனர். இதனால் பாதுகாப் பான முறையில் இணைய தள பரிமாற்றத்தில் ஈடுபட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

‘தினமலரின்' சிறுமைப்புத்தி!


திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பேச்சை வெளியிட்டு, அதற்கு மேலே தனது கருத்தை ‘தினமலர் திரிநூல்' பதிவு செய்துள்ளது.
எந்தக் காரணமாக இருந்தாலும் சிறைக்கு ஒருவர் செல்வது அவமானமாம் - சொல்லுகிறது ‘தினமலர்'.
இதனைப் படித்தால் கோவணம் கட்டாத கோலி விளையாடும் சிறுவன்கூட வாயால் சிரிக்கமாட்டான்.
கொலைக் குற்ற வழக்கில் சிறைக்குச் சென்றார்களே காஞ்சீபுரம் இரண்டு சங்கராச்சாரிகள்; அதைப்பற்றி அவ்வாறு ‘தினமலர்' எழுதியதுண்டா?
விடுதலைப் போராட்டத்துக்காக சிறை சென்றவர் களையும் கொச்சைப்படுத்துகிறதா ‘தினமலர்?' வைக்கத்தில் தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு இருமுறை சிறை சென்றாரே தந்தை பெரியார், அதுவும் ‘எந்தக் காரணமாக இருந்தாலும்' என்ற தலைப்பின்கீழ் வருமா?
‘தினமலர்' கிருஷ்ணமூர்த்திமீதான வழக்கில் அவர் சிறை சென்றால், அவரும் அந்த இரகத்தில்தான் வருவாரா?
இன்றைய மத்திய உள்துறை அமைச்சர் ‘என்கவுண்ட்டர்' வழக்கில் சிறைக்குள் சென்றாரே அப்பொழுதெல்லாம் இதுபோல ‘தினமலர்' எழுதியதுண்டா?
‘மிசா'வில் இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின்மீது கொண்ட காழ்ப்பால் ஒட்டுமொத்தமாக சிறை சென்ற அனைவரையும் சிறுமைப்படுத்தும் பார்ப்பன ‘தினமலரை' அடையாளம் காண்பீர்!

Monday, October 21, 2019

ஈரான் அதிபரும், மோடியும்


துய்மைப் பணியில் ஈடுபட்ட ஈரான் அதிபர் பதவி விலகி 6 ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்கள் வெளியிட்ட படத்தால் வியந்த உலகம்
முகமது அகமதிஜாத் 2005 முதல் 2013-ஆம் ஆண்டுவரை ஈரானின் அதிபராக இருந்தவர், இவர் தன்னுடைய பதவிகாலத்தில் பொதுமக்கள் தன்னார் வலர் தூய்மைப்பணி அமைப்பு என்ற அமைப்பில் உறுப்பினராக இருந்தார். தான் அதிபராக இருந்த காலகட்டத் திலும் அவ்வப்போது அந்த அமைப்புகள் நடத்தும் தூய்மைப்பணி முகாம்களில் கலந்துகொண்டு பணியாற்றியுள்ளார்.
2013-ஆம் ஆண்டு பதவி விலகிய பிறகு முழுநேரமும் அவ்வமைப்பின் ஊழிய ராக பணியாற்றத் துவங்கி விட்டார்.  இவர் ஈரான் பல்கலைக்கழகத்தில் பகுதிநேர பொறியியல் பேராசிரியராக வும் உள்ளார்.  இவர் அதிபராக இருந்த போது தூய்மைப்பணி செய்ததை எந்த ஒரு பத்திரிகையும் படமாகவோ அல்லது காணொலியாகவோ பிடித்து முதல் பக்கத்தில் பெரிய படத்தோடு செய்தி களை வெளியிட வில்லை.   சமீபத்தில் முன்னாள் அதிபரின் பிறந்த நாளின் போது அவர் இணைந்திருந்த அமைப்பு அதிபராக இருந்த போது தங்களது குழு உறுப்பினர்களுடன் இருந்த போது எடுத்த படத்தை வெளியிட்டது.  இந்தப் படம் வெளியான பிறகுதான் அதிபர் தங்களது பகுதிக்கு வந்து தூய்மைப் பணியாற்றியிருந்தார் என்பதே அம் மக்களுக்கு தெரியவந்தது. அதிபரின் இந்த நடவடிக்கை பன்னாட்டு ஊடகங் களில் இன்று பேசும் பொருளாக மாறியுள்ளது.
அதே நேரத்தில் இந்தியப் பிரதமர் மோடியின் ஜோடனை தூய்மைப் பணியையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

குர்துக்களுக்கு துருக்கி அதிபர் எச்சரிக்கை

சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள குர்து படையினரை குறி வைத்து, துருக்கி ராணுவம் தொடர்ந்து 8 நாட்களாக தாக்குதல் நடத்தியது.
அமெரிக்கா கொடுத்த அழுத்தத்தை தொடர்ந்து, 5 நாட்களுக்கு சண்டை நிறுத் தத்தை துருக்கி அறிவித்தது. இந்த 5 நாட்களுக்குள் பாது காப்பு மண்டலம் என வரை யறுக்கப்பட்டுள்ள பகுதியில் இருந்து குர்துக்கள் வெளி யேற வேண்டும் என துருக்கி கூறுகிறது.
இந்த நிலையில், சண்டை நிறுத்தத்தை மீறி குர்து படை கள் ஆத்திரமூட்டும் தாக்கு தல்களை நடத்தியதாக துருக் கியின் பாதுகாப்பு அமைச்ச கம் நேற்று முன்தினம் குற்றம் சாட்டியது.
ஆனால் அதனை மறுத் துள்ள குர்துக்கள் துருக்கி ராணுவம்தான் ஒப்பந்தத்தை மீறி அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றம் சாட் டினர்.
இந்த நிலையில், செவ் வாய்க்கிழமை (நாளை) மாலைக் குள் குர்து போராளிகள் பின்வாங்கவில்லை என்றால் அவர்கள் கடுமையான பின் விளைவுகளை சந்திக்க நேரி டும் என துருக்கி அதிபர் தாயீப் எர்டோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறு கையில், “சண்டை நிறுத்த ஒப்பந்தத்தின்படி குர்து போரா ளிகள் நடந்து கொள்ள வில்லை என்றால், நாங்கள் புறப்பட்ட இடத்துக்கு திரும் புவோம். குர்துக்களின் தலையை நசுக்குவோம்” என்றார்.
மேலும் அவர், குர்துக்கள் மீதான தாக்குதல் தொடர் பாக அடுத்த வாரம் ரஷிய அதிபர் புதினுடன் பேச்சு வார்த்தை நடத்த இருப்பதா கவும், அந்த பேச்சுவார்த்தை ஒரு தீர்வை உருவாக்கவில்லை என்றால் துருக்கி தனது சொந்த திட்டங்களை செயல் படுத்தும் எனவும் கூறினார்.

அபுதாபியில் 8 ஆயிரம் ஆண்டுகள் பழமையான முத்து கண்டுபிடிப்பு

நவீன தொழில் நுட்பங்கள், விஞ்ஞான கண் டுபிடிப்புகள் என இன்றைய உலகம் நவநாகரிகத்தோடு விளங்கினாலும், மனிதனின் தோற்றம் மற்றும் பழமை யான நாகரிகங்களை பற்றி அறிவதில் உலக நாடுகள் மிகுந்த ஆர்வம் காட்டி வரு கின்றன. தமிழகத்தின் கீழடி முதல் உலக நாடுகள் அனைத் திலும் நடந்து வரும் தொல் பொருள் ஆய்வுகள் இதையே கட்டியம் கூறுகின்றன.
இந்த ஆய்வுகளில் அடிக் கடி கிடைக்கும் பழங்கால அரிய பொக்கிஷங்கள், அரசு களின் ஆவலை மேலும் தூண்டி விடுவதுடன், இத்தகைய ஆய் வுகளை மேலும் பரவலாக்கும் அவசியத்தையும் அளிக்கின் றன. அந்தவகையில் அய்க்கிய அரபு அமீரக தலைநகரான அபுதாபியில் 8 ஆயிரம் ஆண் டுகள் பழமையான முத்து ஒன்று சமீபத்தில் கிடைத்து உள்ளது.
அங்குள்ள மறவா தீவில் பல ஆண்டுகளாக தொல் பொருள் ஆய்வுகள் நடந்து வருகின்றன. இதில் கற்கா லத்தை சேர்ந்த கற்சிற்பங்கள், பீங்கான் பொருட்கள், ஓடு மற்றும் கற்களால் செய்யப் பட்ட மணிகள் என ஏராள மான பழங்கால பொருட்கள் கிடைத்து வருகின்றன.
இதில் மிகப்பெரிய பொக் கிஷமாக, பழமையான முத்து ஒன்றும் சமீபத்தில் கிடைத் தது. உலகின் பழமையான முத்து என கருதப்படும் இந்த இயற்கை முத்து சுமார் 8 ஆயி ரம் ஆண்டுகள் பழமையானது என தெரியவந்துள்ளது. குறிப் பாக கி.மு.5800 முதல் 5600 வரையிலான ஆண்டுகளுக்கு இடைப்பட்டதாக இருக்கும் என கண்டறியப்பட்டு உள் ளது. அதாவது கற்காலத்தின் கடைசி பகுதியை சேர்ந்தது என ஆய்வாளர்கள் தெரிவித் தனர்.
இந்த முத்து கண்டுபிடிக் கப்பட்டதால், அமீரக தொல் பொருள் ஆய்வாளர்களிடம் மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டு உள்ளது. ‘அபுதாபி முத்து’ என பெயரிடப்பட்டு உள்ள இந்த முத்து, அபுதாபியில் உள்ள லூவர் அருங்காட்சிய கத்தில் (பாரீசில் உள்ள புகழ் பெற்ற அருங்காட்சியகத்தின் கிளை) 30ஆம் தேதி முதல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வயதானவரை பராமரிக்கவில்லையா? எழுதிவைத்த சொத்து பறிபோகும் உயர்நீதிமன்றம் தீர்ப்பு

'வயதான காலத்தில், வாரிசுகள் கவனிக்க மறுத்தால், அவர்களுக்கு தானமாக வழங்கிய சொத்தை மீட்க முடியும்' என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சிங்கமணி நயினார் என்ப வரின் முதல் மனைவி ஞானமதி அம்மாளுக்கு குழந்தை இல்லாத தால் இரண்டாவதாக வசுந்தரையம்மாள் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு சரோஜாபாய் என்ற மகள் உள்ளார்.
கணவரின் மறைவுக்கு பின் சகோதரியின் மகள் சுகுணாபாய் வீட்டில் ஞானமதி அம்மாள் சிறிது காலம் இருந்தார். கடைசி வரை காப்பாற்றுவார் எனக் கருதி, சொத்துகளை சுகுணாபாய்க்கு எழுதி வைத்தார். அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சரோஜாபாய் வீட்டுக்கு ஞானமதி அம்மாள் வந்தார்.
சுகுணாபாய்க்கு தானமாக வழங்கியதை ரத்து செய்து அந்த சொத்துகளை சரோஜாபாய் பெயருக்கு எழுதினார். இதை எதிர்த்து செஞ்சி நீதிமன்றத்தில் சுகுணாபாய் வழக்கு தொடுத்தார். வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அதை எதிர்த்து, விழுப்புரம் நீதிமன்றத் தில் மேல்முறையீடு செய்தார். 'சரோஜாபாய்க்கு சொத்துகளை எழுதி வைத்தது செல்லாது' என விழுப்புரம் நீதிமன்றம் உத்தர விட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சரோஜாபாய் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி டீக்காராமன் அளித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: தன்னை பராமரிக்கவில்லை என்பதால் தன்னிச் சையாக முடிவெடுத்து சகோதரி மகள் சுகுணாபாய் ஒப்புதல் பெறாமல் 'செட்டில்மென்ட்' பத்திரத்தை ஞானமதி அம்மாள் ரத்து செய்துள்ளார்.
தன்னிச்சையாக பத்திரத்தை ரத்து செய்வதற்கு, சட்டப்படி அனுமதியில்லை என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. எனவே, விழுப்புரம் நீதிமன்ற உத்தரவில் குறுக்கிட தேவையில்லை; உறுதி செய்யப்படுகிறது. இம்மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு நல சட்டத்தின்படி, செட்டில்மென்ட் பத்திரம், தானப் பத்திரத்தை ரத்து செய்ய வகை செய்யப்பட்டுள்ளது. இதற்கு வருவாய் கோட்ட அதிகாரிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
வயதான காலத்தில் பெற்றோரை வாரிசுகள் மற்றும் உறவினர் கள் ஏமாற்றினால் செட்டில்மென்ட் பத்திரத்தை ரத்து செய்ய சட்டத்தில் வகை செய்யப்பட்டிருப்பது குறித்து சட்ட விழிப்பு ணர்வை ஏற்படுத்த வேண்டும்.  இது குறித்த சட்ட உதவியை மூத்த குடிமக்களுக்கு வழங்க வேண்டும். அதற்கான முயற்சிகளை சட்டப்பணிகள் ஆணையம் எடுக்க வேண்டும். இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்க மீண்டும் ஒரு சுதந்திரப் போர் தேவை

ஆர்.நல்லகண்ணு

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க இரண்டாம் சுதந்திரப் போர் தேவை என்ற நிலை தற்போது உருவாகியிருக்கிறது என்று மூத்த அரசியல்வாதி ஆர்.நல்லகண்ணு கூறினார்.
வங்கி ஊழியர் சங்க சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்ற ஆர்.நல்ல கண்ணு பேசியது:
மத்தியில் ஆளும் பாஜக, இரண்டாவது முறை ஆட் சிக்கு வந்தவுடன், பொறுப்பேற்ற 100 நாள்களில், 36 நாள்களில் மட்டும் 36 மசோதாக்களை நிறை வேற்றி இருக்கிறது. முந்தைய ஆட் சிக் காலத்தில், போதிய பெரும் பான்மை இல்லாததால், தேவையற்ற திட்டங் களைச் செயல்படுத்த மத்தியில் ஆளும் இந்த அரசு முனைப்புக் காட்டவில்லை.
ஆனால், மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அறுதிப் பெரும்பான்மை இருப்பதால், இவ் வாறான நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளனர். புதிய மசோ தாக்கள் மக்களுக்கு பயன் தரும் வகையில் இல்லை. அவை தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாகவே உள்ளன. பாஜக அரசு 5 ஆண்டு திட்டத்தை ரத்து செய்து, நிதி ஆயோக் என்பதை உருவாக்கியது. இதனால் புதிய திட்டங்கள் எதுவும் செயல்பாட்டுக்கு வரவில்லை.
5 ஆண்டு திட்டங்கள் நிறுத்தப்பட் டது, நாட்டின் வளர்ச்சிக்குத்தான் ஆபத்தாக மாறியுள்ளது.
பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க இரண்டாம் சுதந்திரப் போர் தேவை என்ற நிலை தற்போது உருவாகியிருக்கிறது. இதற்கு, மதச் சார்பற்ற கட்சிகளும், இடதுசாரி இயக்கங்களும், வெகு ஜன மக்களும் ஒருங்கிணைந்து போராட வேண் டும் என்றார்.

மாணவர்கள், பெற்றோர்களுக்கு துறை சார்ந்த தகவல்களுக்கு இலவச தொலைபேசி எண் 14417

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் சுடலைக்கண்ணன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:
மாணவர்கள், பெற்றோர்களுக்கு தேவையான கல்வி, வேலைவாய்ப்பு உட்பட துறை சார்ந்த தகவல்கள் மற்றும் உயர்கல்வி, உளவியல் ஆலோசனைகள் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் தருவதற்காக  இலவச தொலைபேசி எண் 14417 என்ற கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் செயல்பாட்டில் உள்ளது. ஆனாலும் பள்ளியில்  இலவச எண் குறித்து தலைமையாசிரியர்கள் மீண்டும் எடுத்துரைத்து மாணவர்களிடம் விழிப்புணர்வு உருவாக்க வேண்டும். 14417 எண்ணுக்கு வரும் புகார்கள், குறைகள் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு கல்வியியல் மேலாண்மை தகவல் முகமை (எமிஸ்) இணையதளம் மூலம் அனுப்பப்படும்.

Saturday, October 19, 2019

பகவான் இலட்சணம்!

கல்கி ஆசிரம சோதனையில் ரூ.93 கோடி சிக்கியது
விஜயகுமார் என்பவர் தன்னை கல்கி பகவான் என அறிவித்துக்கொண்டு, பூந்தமல்லி அருகே கல்கி ஆசிரமத்தை தொடங் கினார்.
ஆந்திரா, கருநாடகம் என இந்தியா முழுவதும் மட்டுமின்றி வெளிநாடுகளி லும் அவரது ஆசிரம கிளைகள் உதய மாயின. சென்னையில் மட்டுமே 20 கிளைகள் திறக்கப்பட்டன.
காணிக்கை என்ற பெயரிலும், பூஜை கட்டணம் என்ற பெயரிலும் பணம்  கொட்டியது. தங்க, வைர நகைகள் குவிந்தன. ஆனால் அரசுக்கு சேர வேண்டிய வரியை மட்டும் செலுத்த தயாரில்லை.
அவர் பெருமளவு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன. அதைத் தொடர்ந்து வருமான வரி அதிகாரிகள் குழு கடந்த 16-ஆம் தேதி தொடங்கி ஒரே நேரத்தில் சென்னை, அய்தரா பாத், பெங்களூரு, வரதய்யா பாளையம் ஆகிய பகுதிகளில் கல்கி பகவானுக்கு சொந்தமான ஆசிரமங்கள் உள்பட 40 இடங்களில் அதிரடி சோதனைகள் நடத்தினார்கள். இந்த சோதனைகளில் ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக சிக்கின.
இந்த நிலையில் வருமான வரி அதிகாரிகள் நடத்திய அதிரடி சோத னையில் என்னென்ன கைப்பற்றப்பட் டுள்ளன என்ற பட்டியலுடன் கூடிய அதிகாரப்பூர்வ அறிக்கையை வரு மான வரித்துறையின் மத்திய நேரடி வரிகள் வாரியம் நேற்று வெளியிட் டது. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:-
40 இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.43 கோடியே 90 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.
வெளிநாட்டு பணம் என்ற வகையில், 2லு மில்லியன் அமெரிக்க டாலர் சிக்கியது. இதன் இந்திய மதிப்பு சுமார் ரூ.18 கோடி ஆகும்.
88 கிலோ தங்க கட்டிகள், நகைகள் கைப்பற்றப்பட்டன. இதன் மதிப்பு ரூ.26 கோடி.
1,271 காரட் வைரக்கற்கள் சிக்கின. இவற்றின் மதிப்பு ரூ.5 கோடி.
கைப்பற்றப்பட்ட ரொக்கம், அமெரிக்க டாலர், தங்கம், வைரம் ஆகியவற்றின் மொத்த மதிப்பு ரூ.93 கோடி ஆகும்.
கணக்கில் காட்டாத வருமானம் ரூ.500 கோடிக்கு அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கல்கி பகவான் குழுமம், இந்தியா வில் மட்டுமல்லாது சீனா, அமெரிக்கா, சிங்கப்பூர், அய்க்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் உள்ள கம்பெனி களில் பெரிய அளவுக்கு முதலீடுகள் செய்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இன்னும் வருமான வரி சோதனைகள் தொடருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

கேரள அரசின் பாராட்டத்தக்க நடவடிக்கை: நாட்டிலேயே முதல் முறையாக தனியார் பள்ளி ஆசிரியைகள் பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு

நாட்டிலேயே முதல் முறையாக, மகப்பேறு நலன் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியைகள், பெண் ஊழியர்கள் அனைவருக்கும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கும் திட்டத்தை கேரள அரசு கொண்டு வர உள்ளது.
தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியைகளுக்கும் மகப்பேறு நலன் கள், பலன்கள் கிடைக்க வேண்டும் என்ற கேரள அரசு கொண்டு வந்த இந்த அறிவிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என கேரள அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கேரள அரசு வெளியிட்ட அறிவிப்பில்,
"கடந்த ஆகஸ்ட் மாதம் 29ஆ-ம் தேதி மாநில அமைச்சரவை கூடி எடுத்த முடிவான தனியார் பள்ளிகளில் பணிபுரியும் பெண் ஊழியர்கள், ஆசிரியை களுக்கும் மகப்பேறு நலன் சட்டத்தின் கீழ் பலன் கிடைக்க வேண்டும் என்று அனுமதி கோரி அனுப்பப்பட்ட அறிவிக்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்த உத்தரவு மூலம் மாநிலத்தில் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள், ஆசிரியைகள் 26 வாரங்கள் மகப்பேறு விடுப்பை, ஊதியத்துடன் எடுக்க முடியும்.
மேலும், மகப்பேறு காலத் தில் குழந்தை பிறக்கும் வரை மாதம் ரூ.ஆயிரம் மருத்துவச் செலவுக்காக வழங்கப்படும்
மகப்பேறு நலச்சட்டத்தின்கீழ் நாட்டிலேயே முதல் முறையாக தனியார் பள்ளிகளில் பணிபுரியும் பெண் ஊழியர்கள், ஆசிரியைகளுக் கும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்பட உள்ளது.
ஏற்கெனவே, தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு குறைந்தபட்சம் ஊதியம் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள் ளது" எனத் தெரிவித்துள்ளது
தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஊழியர்கள், ஆசிரியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக விடுத்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

உண்மைத்தன்மை அறியாமல் சமூகவலைத் தளங்களில் தகவல்களை பகிரக்கூடாது: காவல்துறை அறிவிப்பு

ஈரோடு மாவட்ட சைபர் க்ரைம் பிரிவில் இந்த ஆண்டு 373 மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:
வங்கி மேலாளர் பேசுவது போல பேசி ஏடிஎம் கார்டிலுள்ள 16 இலக்க எண் மற்றும் சிவிவி எண் மற்றும் ஓடிபி எண் ஆகிய விவரங் களை பெற்றும், போலியாக ஏடிஎம் கார்டை பயன்படுத்தியும் மனுதாரர்களின் வங்கிக் கணக்கிலி ருந்து மோசடி செய்தாக 158 புகார் மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நட வடிக்கை மூலம், ரூ.6.74 லட்சம் பணம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வங்கியின் மூலமாக திருப்பி கொடுக் கப்பட்டுள்ளது. செல்போன் தொலைந்த புகார்களின்பேரில், 79 போன்கள் கண்டறியப்பட்டு புகார் தாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
முகநூல், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களால் ஏற் பட்ட பாதிப்புகள் தொடர்பாக 24 புகார்கள் வரப்பெற்ற நிலையில், 14 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. தவறான எஸ்.எம்.எஸ். அனுப்பிய குற்றச்சாட்டில் நான்கு புகார்கள் மீது நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஈரோடு சைபர் க்ரைம் அதி காரிகள் கூறும்போது, அறிமுகம் இல்லாத நபர்கள் உங்களது செல் போனிற்கு தொடர்பு கொண்டு, வங்கி மேலாளர் பேசுவதாகக் கூறி ஏடிஎம் கார்டு விவரங்களைக் கேட்டால் பொதுமக்கள் வழங்கக் கூடாது.
சமூக வலைத்தளங்களின் மூலம் தங்களுக்கு வரும் செய்தியின் உண் மைத் தன்மை அறியாமல் அதை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம். சில பொய்யான தகவல்களை பகிர்வதன் மூலம் பொதுமக்களுக்கு தேவையற்ற வதந்திகளை பரப்பு வதற்கு நீங்கள் காரணம் ஆவது மட்டுமின்றி, சில சமயங்களில் நீங்களும் சட்டப்பூர்வமான நட வடிக்கைக்கு ஆளாவீர்கள் என்ப தால் பொது மக்கள் கவனமாக செய்திகளை பகிர வேண்டும், என்றனர்.

குஜராத்: தேர்வு எழுதிய 119 நீதிபதிகளும் தோல்வி!

குஜராத் மாநிலத்தில், மாவட்ட நீதிபதி பணியிடங்களுக்கான தேர்வை எழுதியவர்களில் ஒருவர் கூட தேர்ச்சி பெறாத அவலம் அரங்கேறியுள்ளது. அதிலும் தேர்வை எழுதிய வர்களில் 119 பேர் உரிமையியல் நீதிமன்ற நீதிபதிகளாக, நீதித்துறை அதிகாரிகளாக ஏற்கெனவே பணியாற்றி வரு பவர்களாக உள்ளனர்.
இவர்கள் தவிர ஆயிரத்து 372 வழக்குரைஞர்களும் தேர்வை எழுதி தோல்வி அடைந்துள்ளனர். குஜராத் மாவட்ட நீதிமன்றங்களில் மொத்தம் 40 நீதிபதி பணியிடங்கள் காலியாகஉள்ளன. விதிமுறைகளின்படி, மொத்த காலிப் பணியிடங்களில் 65 சதவிகித இடங்கள், மூத்த உரிமையியல் நீதிபதிகளைக் கொண்டும், 25 சதவிகிதம் வழக்குரைஞர்கள் மூலமாக வும், 10 சதவிகிதம் மாவட்ட கூடுதல் நீதிபதிகளில் இருந் தும் நிரப்பப்பட வேண்டும். இதன்படி கடந்த ஜூன், ஆகஸ்ட் மாதங்களில் தேர்வு கள் நடைபெற்றன. இறுதி யாக 494 வழக்குரைஞர்களும் 119 நீதிபதிகளும் களத்தில் இருந் தனர்.
கடந்த வாரம் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலை யில் நீதிபதிகள் தேர்வில் ஒரு வர் கூட தேர்ச்சிபெறவில்லை என்று அறிவிக்கப்பட்டுள் ளது. இது நீதித்துறை வட் டாரத்தில் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது.

Thursday, October 17, 2019

பசியால் வாடுவோர் இந்தியாவில் அதிகம்

உலகளாவிய பசி மற்றும் ஊட்டச்சத் தின்மை கொண்ட நாடுகள் பட்டியலில்  இந்தியா 102-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த ஆய்வு 117 நாடுகளில் நடத்தப்பட்டது. 2014 ஆம் ஆண்டில் 77 நாடுகளில் இந்தியா 55-ஆவது இடத்தில் இருந்தது.
உலகளாவிய, தேசிய மற்றும் பிராந்திய மட்டங் களில் பசி குறித்து  அளவிடு வதற்கும் கண்காணிப்பதற்கும், பசிக்கு எதிரான திட்டங்களில்  முன்னேற்றம் மற்றும் பின் னடைவுகளை மதிப்பிடுவ தற்கும் வருடாந்திர குறியீட்டு பட்டியல்  வடிவமைக்கப்படு கிறது.
தெற்காசிய நாடுகளில் இந்தியா இப்போது பாகிஸ் தான் (94) வங்காளதேசம்  (88), இலங்கை (66) ஆகியவற் றுக்கும்  கீழே உள்ளது.
இந்த பட்டியலில் இந்தி யாவில் குழந்தைகள் வீணாக் கும் உணவு 20.8 சதவீதம் என்று குறிப்பிட்டுள்ளது. இது மிக உயர்வான சதவீதம் என்று குறிப்பிட்டுள்ளது.
ஒவ்வொரு வருட பசி பட்டியலிலும் இந்தியா பின்னோக்கியே செல்கிறது  என்றும் குறிப்பிட்டுள்ளது. எனவே இந்தியா இன்னும் அதன் பசி அளவில் தீவிரமாக பின்னோக்கி செல்கிறது. இதை உடனடியாக கவனத் தில் கொள்வது அவசியம் என்று குறிப்பிட்டுள்ளது.
வெல்துங்கர்ஹில்ஃப் மற்றும் கன்சர்ன் வேர்ல் டுவைட் ஆகியவை  தயாரித்த அறிக்கையின்படி, கடுமை யான பசி  உள்ள 45  நாடுகளில் இந்தியாவும் உள்ளது.
2015-2016 நிலவரப்படி, 90 சதவீத இந்திய குடும்பங்கள் மேம்படுத்தப்பட்ட குடிநீர் ஆதாரத்தைப் பயன்படுத்தின. 39 சதவீத வீடுகளில் சுகாதார வசதிகள் இல்லை (அய்அய் பிஎஸ் மற்றும் அய்சிஎஃப் 2017)  என அந்த அறிக்கைகள் கூறுகின்றன.
பசியுடன் போராடுவதில் நேபாளம் மற்றும் பங்களா தேஷ் ஆகிய தெற்காசியா நாடுகளின் முயற்சிகளையும் இந்த அறிக்கை பாராட்டு கிறது. உலகளாவிய பசி குறி யீட்டில் இந்தியா பாகிஸ்தா னுக்கும், இலங்கைக்கும்  கீழே உள்ளது என்று அறிக்கை கூறுகிறது.

இந்திய அரசின் சாதனை இதுதான்!

இந்தியாவில் 5 வயதுக்கு உட்பட்ட 69 சதவீத குழந்தைகள் ஊட்ட சத்து குறைவால் உயிரிழப்பு
அய்.நா.வின் யுனிசெப் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இந்தியாவில் 5 வயதுக்கு கீழுள்ள குழந்தைகள் சில ஊட்டச்சத்து பற்றாக் குறைக்கு இலக்காகிறார்கள்.  42 சதவீத குழந்தைகளே (6 முதல் 23 மாதங்கள் வரையி லான வயது) போதிய அள வில் உணவை பெறுகிறார்கள்.  21 சதவீத அளவிலான குழந் தைகளே போதிய பல்வேறு வகையான உணவை பெறு கின்றனர்.
இந்திய பெண்களின் சுகா தாரத்தில், ஒவ்வொரு 2ஆவது பெண்ணும் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டு உள்ளார்.  5 வயதுக்கு உட்பட்ட குழந் தைகளில் பரவலாக ரத்த சோகை காணப்படுகிறது.  சிறுவர்களை விட சிறுமி களில் நோய் பாதிப்பு இரண்டு மடங்காக உள்ளது.
5 வயதுக்கு கீழுள்ள ஒவ் வொரு 5 குழந்தைகளில் ஒன்றுக்கு வைட்டமின் ஏ பற்றாக்குறை உள்ளது.  ஒவ் வொரு 3 குழந்தைகளில் ஒன்றுக்கு வைட்டமின் பி12 பற்றாக்குறையும், ஒவ்வொரு 5 குழந்தைகளில் 2 குழந் தைகளுக்கு ரத்த சோகையும் ஏற்பட்டு உள்ளது.
தேசிய ஊட்ட சத்து திட்டம்
இந்தியா முழுவதும் ஊட்ட சத்து காரணிகளை ஊக்குவிப்பதில் போஷான் அபியான் அல்லது தேசிய ஊட்ட சத்து திட்டம் பெரு மளவிலான பங்கு வகிக்கிறது என அந்த அறிக்கை தெரிவித்து உள்ளது.

உ.பி. பாஜகவினர் அதிர்ச்சி : மக்கள் ஆர்வம் காட்டாததால் பசுக்கள் பாதுகாப்பு திட்டம் தோல்வி

உத்தரப்பிரதேச பாஜக அரசு கொண்டு வந்த பசுக்கள் பாதுகாப்புத் திட்டத்தில் மக்கள் ஆர்வம் காட்டாததால் அந்த திட் டம் தோல்வி அடைந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் மாடுகள் பல ஆதரவின்றி தெருக் களில் விடப்பட்டன.  இந்த மாடுகள் அருகில் உள்ள விவசாய நிலங்களில் மேய்ந்து பயிர்களை அழித்தன.   இதனால் கோபமடைந்த விவசாயிகள் ஆங்காங்கு உள்ள பள்ளிகளில் இந்த மாடுகளைப் பிடித்து அடைத்தனர்.    இதனால் குழந்தைகள் வெளியில் அமர்ந்து படிக்க நேரிட்டது.   இந்த புகைப்படங்கள் பல உள்நாடு மற்றும் வெளிநாட்டு ஊடகங்களில் வெளியாகின.
இதையொட்டி உத்தரப் பிரதேச மாநில அரசு தெருவில் திரியும் அனைத்து மாடுகளையும் அரசு அமைத்துள்ள தற்காலிக முகாம்க ளில் அடைத்தது.  இவ்வாறு 1 லட் சத்துக்கும் மேற்பட்ட மாடுகள் குறிப்பாகப் பசு மாடுகள் அரசு தற்காலிக முகாம்களில் அடைக்கப் பட்டன.  இந்த பசுக்களுக்காக மாநி லத்தை ஆளும் பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒரு புதிய திட் டத்தை அறிவித்தார்.
பசுக்கள் பாதுகாப்புத் திட்டம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ் ஆதரவற்று திரியும் பசுக்களை மக்கள் தத்து எடுத்துப் பராமரிக்கலாம் என அரசு அறிவித்தது.   அவ்வாறு தத்து எடுக்கப் படும் ஒவ்வொரு பசுவுக்கும் தினம் ரூ.30 வீதம் மாதத்துக்கு ரூ.900 பராமரிப்புத் தொகை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அரசு முகாம்களில் உள்ள அனைத்து மாடுகளும் தத்து எடுக்கப்படும் என முதல்வர் யோகி நம்பிக்கை தெரிவித்தார்.
ஆனால் அவர் எதிர்பார்த்தது நடக்கவில்லை.  மாநில விலங்குகள் நலத்துறை தலைமை செயலர் பி.எல்.மீனா, “இதுவரை மக்கள் 9000 - 10000 மாடுகளை மட்டுமே தத்து எடுத்துள்ளனர்.   ஆகவே ஆதரவற்ற மாடுகளில் பல இன்னும் அரசு தற்காலிக முகாம்களில் உள்ளன.  எனவே தற்போதைய திட்டத்துக்கு மாற்றாக புதிய திட்டம் கொண்டு வர ஆலோசித்து வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
உ.பி. பாஜக முதல்வரின் திட்டம் தோல்வி அடைந்தது மாநில பாஜக வினருக்கு அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.

பிரதமர் அலுவலகத்தின் மூலம் இந்தியப் பொருளாதாரத்தை கையாள முடியாது: ரகுராம் ராஜன்

இந்தியப் பொருளாதாரம் மிகவும் பெரியது என்றும், அதை பிரதமர் அலுவலகத்திலிருந்து அதிகாரிகளின் வழியாக மட்டுமே  கையாள முடியாது என்றும் விமர்சித் துள்ளார் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன்.
அவர் கூறியுள்ளதாவது, “இந்தியப் பொருளாதாரத்தை பிரதமர் அலு வலகத்திலிருந்து கையாள முடியாது. ஏனெனில் அது மிகவும் பெரியது. தற் போதைய நிலையில் மத்திய அரசில் பெரிய அதிகாரக் குவிப்பு நிலவுகிறது.
தலைமையிடமே அனைத்து அழுத்தமும் குவிந்துள்ளது. தலைமையிடம் நிலைத்தன்மையும் தெளிவான தொலைநோக்கும் இல்லை. எனவே, பொருளாதார வளர்ச்சியை நோக்கி இவர்களால் நாட்டை செலுத்த முடியாது.
பிரதமர் அலுவலகம் என்பது அதி காரிகளை வைத்து செயல்படக்கூடி யது. இன்றைய நிலையில் மத்திய அமைச்சர்களுக்கு அதிகாரமில்லை. அவர்கள் முடிவெடுக்கும் இடத்தில் இல்லை.
சிவில் சர்வீஸ் அதிகாரிகளைப் பொறுத்தவரை, அவர்கள் தங்களின் சொந்த முடிவுகளை எடுக்கத் தயங்கு வார்கள். அவர்களிடம் பொருளாதார சீர்திருத்தத்திற்கான வலுவான யோச னைகள் கிடையாது. மோடி அரசிடம் அரசியல் தொலைநோக்கு இருப்ப தைப்போல் பொருளாதார தொலை நோக்குக் கிடையாது” என்று விமர் சித்தார் ரகுராம் ராஜன்.

மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபின் தினமும் 52 விவசாயிகள் தற்கொலை அவலம்

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தபின்னர் நாள்தோறும் 52 விவசாயிகள்வீதம் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று அகில இந்திய விவசாயிகள் சங்கம் கூறியுள்ளது.
சிவகங்கையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு மாநாடு மற்றும் விரிவடைந்த மாநிலக்குழு கூட்டம் 2 நாட்கள் நடந்தது. இதில் பங்கேற்க வந்த அகில இந்திய விவசாயி கள் சங்க பொதுச்செயலாளர் ஹன்னன்முல்லா கூறுகையில்,  ‘‘விவசாயிகளை தற்கொலைக்கு தூண்டும் நிலைமை தற்போது உள்ளது. இந்தியாவில் இதுவரை 4 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். நாள் ஒன்றுக்கு 52 விவசாயிகள் தற்கொலை செய்து கொள் கின்றனர். மோடி ஆட்சிக்கு வந்த பிறகுதான் விவசாயிகளின் தற்கொலை சதவீதம் அதிகரித்துக்கொண்டு செல்கிறது.
ஆட்சியாளர்கள் விவசாயிகளின் பிரச்சினையை தீர்க்க முன் வர வேண்டும். 44 ஆசிய பிராந்திய நாடு களிடையே வரியில்லாமல் வேளாண் பொருட்களை இறக்குமதி செய்வது என்ற ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட் டுள்ளது. இதில் வரும் நவ.4ஆம் தேதி மத்திய பாஜ அரசு கையெழுத்திட உள்ளது.
இதனால் இந்தியாவில் உள்ள விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் போகும் நிலை ஏற்படும். எனவே ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை கண்டித்து நவ.4இல் அனைத்து பகுதிகளிலும் போராட்டம் நடத்தப்பட உள்ளது’’ என்றார்.

குரூப்-2 புதிய பாடத்திட்டத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு

குரூப்-2 தேர்வுக்கான புதிய பாடத்திட்டத்தை ரத்து செய் யக் கோரும் மனுவை, அரசு கவனத்தில் கொண்டு உரிய முடிவெடுக்க வேண்டுமென உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை, தெற்கு மாரட் வீதியைச் சேர்ந்த வழக்குரைஞர் அப்பாஸ் மந்திரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 தேர்வு களுக்கான பாடத்திட்டத்தில் அரசு மாற்றம் கொண்டு  வந்துள்ளது. இதன்படி, தேர்வுகளில் 175 வினாக்கள் பொது அறிவு பிரிவிலிருந்தும், 25 வினாக்கள் கணிதத்தில் இருந்தும் கேட்கப்படும். இதனால், பழைய பாடத்திட்டத்தில் இருந்த 100 மதிப்பெண்ணிற்கு கேட்கப்பட்டி ருந்த  தமிழ் வினாக்கள் இனி  இருக் காது.இதேபோல் 100 மதிப் பெண்ணிற்கு மொழிபெயர்ப்பும் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், ஏற்கனவே குரூப்-2 போட்டித்தேர்வுக்கு தயாரான தமிழக இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட லட்சக்கணக்கானோர் பெரிதும் பாதிப்பர். 100  மதிப்பெண்ணிற்கான தமிழ் வினாக்கள் அகற்றப்பட்டதால் பெரிதும் பாதிப்பை சந்திப்பர். பலரால் உரிய இலக்கை அடைய முடியாத நிலை ஏற்படும். குறிப்பாக கிராமப்புறத்தை அடிப்படையாகக் கொண்ட மாணவர்கள் பெரிதும் பாதிப்பர். எனவே,  குரூப்-2 தேர்வுக் கான புதிய பாடத்திட்டத்தை ரத்து செய்தும், பழைய முறையிலேயே தேர்வை தொடர்ந்து நடத்த வேண்டு மெனவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை நேற்று முன்தினம் விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர், ‘‘மனுதாரர் குறிப்பிடும் விவகாரம் பணியாளர் நலன் சார்ந் தது. அரசு தரப்பு ஆய்வுக்கு பிறகே முடிவெடுத்திருக்கும். இது அரசின் கொள்கை  முடிவோடு தொடர் புடையது. நிபுணர்களின் பரிந் துரைகள் இருந்திருக்கும்.
எனவே, இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. அதேநேரம், மனுதாரரின் கோரிக்கை குறித்து பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீரமைப்புத்துறை  செயலர், டிஎன்பி எஸ்சி செயலர் ஆகியோர் கவனத்தில் கொண்டு உரிய முடிவெடுக்க வேண் டும். மனுதாரரின் மனு அடிப்படையில் இவர்கள் எடுக்கும் முடிவை, நீதிமன் றத்தின் இந்த உத்தரவு கட்டுப் படுத்தாது’’ என உத்தரவிட்டு மனுவை  முடித்து வைத்தனர்.

நிலவில் பயிர்ச்செய்கை

அமெரிக்கா மற்றும் ரஷ்யாவை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் சீனாவும் நிலவிற்கு விண்வெளி ஓடத்தினை அனுப்பியிருந்தது.இதில் புதிய முயற்சி ஒன்றினையும் சீனா மேற்கொண்டிருந்தது.அதாவது 2.6 கிலோ கிராம் எடை உடைய சிறிய உயிர்க்கோளம் ஒன்றினையும் வைத்து அனுப்பியிருந்தது.
குறித்த உயிர்க் கோளத்தில் பருத்தி விதை, தக்காளி விதை, ஈஸ்ட், பழ ஈக்களின் முட்டை,   எனப்படும் களை மற்றும் எண்ணெய் வித்துக்கள் என்பன உள்ளடக்கப்பட்டிருந்தது.
இந்த வித்துக்களை நிலவில் முளைக்க வைத்து பார்ப்பதே சீன ஆராய்ச்சியாளர்களின் நோக்கமாக இருந்தது.எனினும் தற்போது பருத்தி விதை மாத்திரம் முளைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அவ் விதையிலிருந்து ஒரு இலை மாத்திரம் வெளிவந்துள்ளதற்கான ஆதாரங்கள் காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட் டுள்ளது.
டைனோசர் மீன்
நார்வேயில் உள்ள மீன் பிடிக்கும் நிறுவனங் களுக்கு வழிகாட்டியாக இருப்ப வர் ஆஸ்கர். கடலில் எந்த இடத்தில் தூண்டில் வீசினால் மீன்கள் கிடைக்கும் என்று இவரால் துல்லியமாகச் சொல்ல முடியும். அதனால் மீன் பிடிப்பவர்களுக்கு மத்தியில் இவருக்கு செம மவுசு. சமீபத்தில் இவர் பிடித்த மீன் ஒன்று இணையத்தில் ஹாட் வைரலாகி விட்டது.  அந்த மீனின் தோற்றம் டை னோசர் வடிவில் இருப்பதால் டைனோசர் மீன் என்று அதனை அழைக்கின்றனர். கடலின் 800 மீட்டர் ஆழத்துக்குள் இந்த மீன் கிடைத் திருக்கிறது.

நிலவும் சுருங்கும்!

முதுமையின் காரணமாக மனிதனின் தோல் பகுதி சுருங்குவதை பார்த்திருப்போம். நமக்கும் அந்த அனுபவம் கிடைக்கும். மனிதனைப் போல நிலாவும் சுருங்குமா? ஆம்... என்கிறது நாசாவின் சமீபத்திய ஆய்வு.
ஆனால், நிலவு கொஞ்சம் கொஞ்சமாகத்தான் சுருங்கி வருகிறதாம். கடந்த ஆயிரம் கோடி ஆண்டுகளில் 50 மீட்டர் அளவுக்கே நிலவு சுருங்கியிருக்கிறது.
இப்படி நிலவு சுருங்குவதால் அதன் மேற்பரப்பில் மட்டும் சுருக்கம் விழுகிறது.
எப்படி திராட்சையின் மேற்பகுதி சுருங்கி உலர் திராட்சையாக மாறுகிறதோ அதே மாதிரி நிலவும் சுருங்குகிறது... என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
நிலவின் மய்யப்பகுதியின் வெப்ப நிலை குறைந்து அது குளிர்மை யடைவது தான் நிலா சுருங்குவதற்கு முக்கிய காரணம். இதனால் அதன் மேற்பரப்பில் விரிசல்கள் விழுகின்றன.
தவிர, நடுக்கம் கூட ஏற்படுகிறது. இதனை நிலா நடுக்கம் என்கின்றனர்.
இதனால் பூமிக்கு ஏதாவது ஆபத்து ஏற்படுமோ என்ற கோணத்தில் ஆராய்ச் சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

Friday, October 11, 2019

பொறியியலுக்கு எதற்கு பகவத் கீதை?

கொதிக்கும் கல்வியாளர்கள்!
தொடர் சர்ச்சையில் அண்ணா பல்கலைக் கழகம்


அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமத்தின் அறிவுறுத்தலின்பேரில், குரோம்பேட்டையில் உள்ள எம்.அய்.டி., ஏ.சி.டி., எஸ்.ஏ.பி., சி.இ.ஜி உள்ளிட்ட அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்வி அமைப் புகளில் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் தத்துவவியல் படிப்பும், பகவத் கீதை பாடமும் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மூன்றாவது செமஸ்டரில் இந்தப் படிப்பு சேர்க்கப்படும் என்றும் அறிவிப்பில் சொல்லப்பட்டுள்ளது.
இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பவே, "மேலை நாடுகளில் சாக்ரடீஸ், பிளாட்டோ உள்ளிட்ட தத்துவ மேதைகளின் தத்துவங்கள், பொறியியலில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில்தான் பகவத் கீதையை வைத்துள்ளோம். தவிர, அது விருப்பப் பாடம் மட்டுமே. விரும்புபவர்கள் படிக்கலாம்" என்று பத்திரிகையாளர்களிடம் விளக்கம் கொடுத்துள்ளார் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா. ஆனால், இது சப்பைக்கட்டு என்று கொந்தளிக் கிறார்கள் கல்வியாளர்கள்.
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமியிடம் பேசினோம். "பல்கலைக் கழகப் பாடத் திட்டத்தில் நன்னெறி தொடர்பான பாடத்திட்டத்தைக் கொண்டுவருவதில் தவறில்லை. நான் துணைவேந்தராக இருந்த காலத்தில்கூட அப்படி கொண்டு வந்திருக்கிறேன். ஆனால், அதில் மத அடையாளங்களைத் திணிக்கவில்லை. தற்போது பகவத் கீதையைச் சேர்த்திருப்பது தேவையற்ற செயல். பொறியியல் பாடத்திட்டத்தில் மதம்சார்ந்த நூல்களின் தேவை எங்கிருந்து வந்தது? பகவத் கீதை, நன்னெறி நூலே கிடையாது; இந்து மதம் சார்ந்த ஆவணம். பகவத் கீதையை அறிமுகப்படுத்த முடிவு எடுத்தால், குர்ஆனையும் பைபிளையும் சேர்த்து அறிமுகப்படுத்த வேண்டும். அதைவிடுத்து, பகவத் கீதையை மட்டும் படிக்கலாம் எனச் சொல்வது தவறு. தனது வரலாற்றில் மிகப்பெரிய தவற்றைச் செய்துள்ளது அண்ணா பல்கலைக்கழகம்" என்றார் கொதிப்புடன்.
பா.ஜ.க-வின் அறிவுசார் பிரிவின் தமிழகத் தலை வரும், ஓய்வுபெற்ற பேராசிரியருமான ராஜலட்சுமி யிடம் பேசினோம்.

"நான் கிறிஸ்துவ கான்வென்ட்டில்தான் கல்லூரிப் படிப்பை முடித்தேன். அங்கே மதபோதனையும் இருந்தது. அதற்காக நான் மதம் மாறிவிட்டேனா? தற்போது தத்துவவியலில் ஒரு பகுதியாக, விருப்பப் பாடமாகத்தான் பகவத் கீதை சேர்க்கப்பட்டுள்ளது. சிறுபான்மைக் கல்விக்கூடங்கள் உட்பட பெரும் பான்மையான கல்வி நிலையங்களில் தற்போது மதம்சார்ந்த போதனைகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. அத்தனை போதனைகளுமே மனிதன் நல்லவனாக வாழ வேண்டும் என்கிற ஒரே கொள்கையை மட்டும்தான் வலியுறுத்துகின்றன. அதனால் பல்கலைக் கழகத்தின் முடிவு தவறு இல்லை. இதை அரசிய லாக்குவதும் அதற்கு பா.ஜ.க-வை காரணம் காட்டுவதும் தவறு" என்றார்.
பேராசிரியர் கருணானந்தம், "பகவத் கீதையை, தத்துவமாக்க முயற்சி செய்கிறார்கள். கீதை தத்துவ மெனில், சைவ சித்தாந்தமும் தத்துவம்தான். ஆக, இவர்களுடைய நோக்கம் மதத்தையும் பண்பாட் டையும் கலந்து நம்மிடம் திணிப்பதுதான். 'சதுர்வர்ணம் மயா சிருஷ்டம்....' அதாவது, 'அந்தந்தத் தொழில் களைச் செய்ய வேண்டிய நான்கு வர்ணங்களை, நான் (கடவுள்) படைத்தேன்' எனக் கூறுகிறது பகவத் கீதை. இதுதான் தத்துவமா? சாக்ர டீஸை பகவத் கீதையுடன் ஒப்பிடுவதும் பொருந்தாது. மதம் என்றாலே, விவாதத் துக்கு அப்பாற்பட்டது என்று பொருள். ஆனால் கல்விக்கூடம் என்பது, விவாதம் நிகழ்த்தபட வேண் டிய இடம். அங்கே மதத்தைப் பாடமாகக் கொண்டு வருவது அப்பட்டமான ஜனநாயக அத்துமீறல். தொழில் நுட்பக் கல்விக்கும் மதபோதனைக்கும் என்ன தொடர்பு என்கிற சிந்தனையாவது கவுன் சிலைச் சேர்ந்தவர்களுக்கு இருந்திருக்க வேண்டும். புதிய கல் விக்கொள்கையில் அறிவிக்கப்பட்டதை அமல்படுத் துவதற்கு முன்பே இவர்கள் ஒவ்வொன்றாக நடை முறைப்படுத்தி வருகிறார்கள். துணைவேந்தராக இருக் கும் சூரப்பா, ஆளுநரின் பரிந்துரையில் நியமிக்கப் பட்டவர். அவர் அப்படித்தான் செயல்படுவார்" என்றார்.
பள்ளிக்கல்வித் துறை 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறிவித்தது, அண்மையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்போது விருப்பப்பாடப் பிரிவில் கீதையை அறிவித்துள்ளது அண்ணா பல்கலைக்கழகம். பள்ளிகளில் பொதுத்தேர்வும், பல்கலைக் கழகங்களில் விருப்பப்பட முறையும் புதிய கல்விக்கொள்கை வரைவில் குறிப்பிடப்பட்டிருந்தது கவனிக்கத்தக்கது!
- அய்ஷ்வர்யா

நன்றி: "ஜூனியர் விகடன்" 2-10-2019

அதிர்ச்சியூட்டும் தகவல் பணமதிப்பிழப்பால் வேலை இன்மை 3 சதவிகிதம் அதிகரிப்பு

பிரதமர் மோடி 2016 ஆம் ஆண்டு அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் 2 முதல் 3 சதவிகிதம் வரை வேலையின்மை ஏற்பட்டுள்ளதாக ஒரு புதிய ஆய்வறிக்கை கூறுகிறது.
மோடி 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி இரவு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்து ஒரே இரவில் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களைச் செல்லாததாக மாற்றினார்.   இந்த நடவடிக்கை மூலம் நாட்டில் புழக்கத்தில் இருந்த பணத்தில் 86 சதவிகிதம் செல்லாதவை ஆகியது.  கருப்புப் பணத்தை ஒழிக்கவும், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி உதவி அளிப்பதைத் தடுக்கவும், இந்திய வர்த்தகத்தை முன்னேற்றவும் இந்த நடவடிக்கை எடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து தங்களிடம் இருந்த பழைய நோட்டுக்களை மாற்றப் பல லட்சக்கணக்கான மக்கள் வரிசையில் நின்று அவதியுற்றனர்.   ஒரு சில முதியவர்கள் வரிசையில் நிற்கும் போது மரணம் அடைந்த செய்திகளும் வெளியாகின.     சமீபத்தில் இந்நிலை குறித்து ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் கேப்ரியல் சோடரொ மற்றும் அய் எம் எஃப் அய் சேர்ந்த கீதா கோபிநாத் ஆகியோர் ஒரு ஆய்வு நடத்தி அதன் முடிவை வெளியிட்டுள் ளனர்.
அந்த ஆய்வறிக்கையில்,
‘‘நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்துள்ளது.   இந்த நடவடிக்கையால் ரொக்கப் பணம் இல்லாத நிலையில் வேறு ரொக்கமற்ற பரிவர்த்தனைகள் அதிகரித்தன.   கருப்புப் பணத்தை ஒழிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை எனக் கூறப்பட்டாலும் புழக்கத்தில் இருந்த அத்தனை ரொக்கமும் மாற்றப்பட்டுள்ளன.
இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைகள் அமலில் இருந்த காலகட்டமான 2016 ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சுமார் 2- 3 சதவிகிதம் பேர் பணிகளை இழந்துள்ளனர்.   அதாவது வேலை இன்மை அதிகரித்துள்ளது.   இதற்கு முக்கிய காரணம் போதுமான அளவு ரொக்கம் புழக்கத்தில் இல்லாததே ஆகும்.    குறிப்பாக தினசரி ஊதியம் பெறுவோரில் பலர் இந்த நடவடிக்கையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த காலகட்டத்தில் ரிசர்வ் வங்கி போதுமான அளவு ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கவில்லை.    இந்த அறிவிப்பு வந்த உடனேயே பலரும் செல்லாத நோட்டுக்களை மாற்றச் சென்ற போது அவர்களுக்குத் தேவையான அளவு ரொக்கப்பணம் கிடைக்காத நிலை இருந்துள்ளது.    இந்த பணப்புழக்கம் சரியாக சில மாதங்கள் ஆன நிலையில்  அந்த மாதங்களில் மக்கள் பல விதங்களில் பாதிக்கப்பட்டுள்ளனர்” எனக் கூறப்பட்டுள்ளது.

மோடிக்கு எதிராக போராட்டம்

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வர்த்தகப் பிரிவு அறிவிப்பு

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பிரிவான ஸ்வதேசி ஜாக்ரன் மஞ்ச் மோடி அரசின் வர்த்தக ஒப்பந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 10 நாட்கள்  போராட்டத்தை அறிவித்துள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளான ஆசியன் குழுவுடன் ஆறு வர்த்தக நேச நாடுகள் இணைந்து ஒரு வர்த்தக ஒப்பந்தம் அமைக்க முடிவு செய்துள் ளன.   இந்த ஒப்பந்தத்தில் 10 தென் கிழக்கு ஆசிய நாடுகளும், ஆறு வர்த்தக நேச நாடுகளும் இடம் பெற்றுள்ளன.  இந்த ஆறு நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.  இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்நாடுகளுக்கு இடையே குறைந்த இறக்குமதி தீர்வை அல்லது இறக்குமதி தீர்வை அற்ற வர்த்தகம் நடைபெற உள்ளது.
கடந்த விஜயதசமி அன்று நடந்த ஆர்.எஸ்.எஸ். விழாவில் அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாக வத் இந்த ஒப்பந்தம் உள்நாட்டுப் பொருள்கள் விற்பனையை அழிக்கும் என எச்சரிக்கை விடுத்தார்.    இந்த நிகழ்வு நடந்த 3  நாள்களில்  ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கிளையான ஸ்வதேசி ஜாக்ரன் மஞ்ச் நேற்று இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த  அறிக்கையில் அமைப்பின் தலைவர் அஸ்வினி மகாஜன், “தற் போது நாடு உற்பத்தி மற்றும் விவசாயம் உள்ளிட்டவற்றில் கடும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது.  இதனால் பலர் வேலை இழந்துள் ளனர்.   இந்த உற்பத்திக் குறைவுக்குக் காரணம் ஒருங்கிணைந்த தொழில் கொள்கை ஆகும்.   இதனால் கடந்த 1991 முதல் இந்நிலை உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா ஏற்படுத்திய வர்த்தக ஒப் பந்தங்களால் வெளிநாட்டிலிருந்து மலிவான பொருட்கள் வெளிநாடு களிலிருந்து ஏராளமாக வரத் தொடங்கின.   இதன் மூலம் ஏற்பட்ட உற்பத்திக் குறைவு இன்றும் தொடர்கிறது.    அது மட்டுமின்றி இந்த ஒப்பந்தத்தால் இந்தியா கடந்த வருடம் மட்டும் 10,400 கோடி டாலர் அளவுக்கு வர்த்தகத்தை இழந்து ள்ளது.
20 ஆம் தேதி வரை...
நமது அமைப்பு இந்தியாவின் இந்த ஒப்பந்தத்தைக் கடுமையாக எதிர்க்கிறது.   இதனால் அரசு மட்டுமின்றி தனியார் துறைகளும் கடும் நஷ்டத்தை அடையும்.   எனவே இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து ஒவ் வொரு மாநிலத்திலும் உள்ள மாவட் டத் தலைநகர்களில் போராட்டம் நடைபெற உள்ளது.   இந்த போராட் டம் பத்து நாட்களுக்கு அதாவது அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி வரை நடைபெறும்'' எனத் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளது, கடந்த 4 ஆண்டுகளாக உள்நாட்டு தொழில் முழுவதுமே முடங்கி அன்றாடம் பயன்படுத்தும் தீப்பெட்டி முதல் வெங்காயம் வரை இறக்குமதி செய்யப்பட்டுக் கொண் டிருக்கிறது. உணவுப் பொருட்களான பருப்பு வகைகள் இறக்குமதி செய்ய சட்டத்தையே மாற்றி ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து கப்பல் கப்பலாக பருப்பு வகைகள் குஜராத் துறைமுகம் வந்து இறங்கி அங்கிருந்து அதானி உணவு நிறுவனத்தின் மூலம் அனைத்து வீடுகளுக்கும் சென்று கொண்டிருக்கிறது. இது எதுவுமே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கண் களுக்குத் தெரியவில்லை. எல்லாம் சுமூகமாக கையொப்பமிட்டு இந் தியாவிற்கு வந்து சேர்ந்த பிறகே இவர்கள் போராட்ட அறிவிப்பு விடுகிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

Thursday, October 10, 2019

உய்கர் முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை சீன அதிகாரிகளுக்கு அமெரிக்கா விசா மறுப்பு

வடமேற்கு சீனாவில் அமைந்துள்ள தன்னாட்சி பிரதேசம் ஜின்ஜியாங். இந்த பகுதியில் 10 மில்லியனுக்கு அதிகமான உய்கர் முஸ்லிம் சிறுபான்மையினர் வசிக்கிறார்கள்.
சீனாவில் ஆட்சியில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி நாத்திக கொள்கைகளை பின் பற்றுவதால். உய்கர் முஸ்லிம் மக்களுக்கும், அரசுக்கும் இடையில் அடிக்கடி மோதல் நடைபெற்று வந்தது.
சமீப காலமாக உய்கர் முஸ்லிம் மக்கள் மீது சீனா அரசு கடுமையான கட்டுப் பாடுகளை விதித்து வருகிறது. இதற்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வரு கின்றன.
இதையடுத்து சின்சியான் பிராந்தியத்தில் உய்கர் முஸ் லிம் மக்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக கூறி சீனாவின் 28 நிறுவனங்களை அமெ ரிக்கா கறுப்புப் பட்டியலில் இணைத்து தடை விதித்தது. பின்னர் சீன அதிகாரிகளுக்கு விசா கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமெ ரிக்க வெளியுறவு அமைச்சர் மைக்கேல் பாம்பியோ கூறிய தாவது:
சின்ஜியாங் உய்கர் தன் னாட்சி பகுதியில் வசிக்கும், உய்கர், கசக்ஸ், கிரிகிஸ் மற் றும் பிற முஸ்லிம் சிறுபான் மையினர் மீது சீன அரசு, அதிகளவு அடக்குமுறை களை கையாண்டு வருகிறது.
அப்பகுதியில் உள்ள சிறு பான்மையினரை காவலில் வைத்திருப்பவர்கள், அடக்கு முறையை கையாளும் அதி காரிகளுக்கு உடந்தையாக இருப்பவர்கள் போன்ற சீன அரசு மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரிகளுக்கு விசா கட்டுப்பாடுகள் விதிக்கப் படும்.
இந்த அடக்குமுறைகளை நிறுத்துவதுடன், காவலில் வைக்கப்பட்டிருப்பவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். வெளிநாட்டில் வசிக்கும் சீன முஸ்லிம் சிறு பான்மையினர், வலுக்கட்டா யமாக சீனாவிற்கு திரும்பி வர அந்நாடு மேற்கொள்ளும் முயற்சிகளை நிறுத்த வேண் டும். இவ்வாறு அவர் கூறி னார்.
அமெரிக்கா- சீனா இடை யேயான வர்த்தகப் போரை முடிவுக்குக் கொண்டு வர இரு நாடுகளும் 10 மாத காலமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இதற் கான அடுத்த கட்ட பேச்சு வார்த்தை நாளை நடை பெறுகிறது. இதில் சீன நிறு வன அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

ஈரானில் மைதானத்துக்கு சென்று கால்பந்து போட்டிகளை காண பெண்களுக்கு அனுமதி

ஈரானில் ஆண்கள் பங்கேற்கும் கால் பந்து உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளை மைதானத் துக்கு சென்று பார்க்க பெண் களுக்கு அனுமதி கிடையாது. இதனை மீறும் பெண்கள் கைது செய்யப்பட்டு, சிறை யில் அடைக்கப்படுவார்கள். 1981ஆம் ஆண்டு முதல் இந்த தடை அங்கு அமலில் இருக்கிறது.
இந்த நிலையில் சஹர் கோடயாரி என்ற இளம் பெண் கடந்த மார்ச் மாதம் தெக்ரானில் நடைபெற்ற கால்பந்து போட்டியை காண ஆண் வேடமிட்டு மைதா னத்துக்குள் நுழைய முயன் றார். ஆனால் மைதானத்தின் காவலாளிகள் அவரை அடையாளம் கண்டதால் கைது செய்யப்பட்டார்.
இது ஈரான் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத் தியது. சஹர் கோடயாரிக்கு ஆதரவாக போராட்டங்கள் வெடித்தன.
இந்த நிலையில், சஹர் கோடயாரி மீதான வழக்கின் இறுதி விசாரணை கடந்த மாதம் 12ஆம் தேதி நடந்தது. வழக்கில் சஹர் கோடயாரி குற்றவாளி என்று நிரூபிக்கப் பட்டால் அவருக்கு 6 மாதம் முதல் 2 வருடம் வரை சிறைத் தண்டனை வழங்கப்படலாம் என்று பேசப்பட்டது. இத னால் அச்சமடைந்த அவர் நீதிமன்றத்துக்குள்ளேயே தீக்குளித்து இறந்தார்.
இது ஈரான் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற் படுத்தியதோடு, விளையாட்டு மைதானங்களில் பெண்களை அனுமதிக்க கோரிய போராட் டமும் வலுப்பெற்றது. பல் வேறு கால்பந்தாட்ட அமைப் புகள் பெண்களுக்கு எதிரான ஈரானின் இந்த நடவடிக் கைக்கு கண்டனம் தெரிவித்தன.
மேலும் பன்னாட்டு கால் பந்தாட்ட அமைப்பு, ஈரான் தனது முடிவை திரும்பப் பெற்று பெண்களை மைதா னத்துக்குள் அனுமதிக்க வேண்டும் இல்லையென்றால் ஈரான் அணி நீக்கப்படும் என் றும் எச்சரிக்கை விடுத்தது.
இந்த நிலையில் ஈரானில் கால்பந்தாட்ட போட்டி களை மைதானங்களுக்கு சென்று பார்க்க பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள் ளது. சமூக செயல்பாட்டாளர் கள் மற்றும் பெண்ணியவாதி கள் இதனை வரவேற்று உள்ளனர்.

பிஜேபி ஆட்சியின் சாதனை இதுதான்!

உலக நாடுகள் தரவரிசையில் இந்தியாவுக்கு 68ஆவது இடம்!

உலக பொருளாதார மய்யம் தகவல்

கடந்த 2014ஆம் ஆண்டி லிருந்து இரண்டாம் முறையாக ஆட்சி அதிகாரத்தில் தொடர்ந்து கொண்டி ருக்கும் பாஜக அரசு குறைந்த நிர்வாகம், நிறைந்த ஆளுமை என்றும், வளர்ச்சி வளர்ச்சி என்றும், நல்ல நாள் என்று பல முழக்கங்களை முன்னிறுத்தி வந்துள் ளது.
ஆனால், நிர்வாகத்தில் பொருளா தார வல்லுநர்களின் ஆலோசனைகளை பின்னுக்குத்தள்ளிவிட்டு, பண மதிப் பிழப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக் கை களை முறைப்படி நாடாளுமன்றத்தில் அறிவித்து விவாதங்களை மேற்கொண்டு செயல்படுத்தாமல் திடீர் திடீர் அறிவிப்புகாளகவே செயல்படுத்தி வருகிறது.
தற்பொழுது உலக பொருளாதார மய்யம் வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியல் பாஜக அரசின் மோசமான அணுகுமுறையுடன் கூடிய நிர்வாகத்தின் நிலையை பறைசாற்றுவதாக அமைந் துள்ளது.
இந்தியா பின்னடைவை சந்தித்துள்ளது
உலகப் பொருளாதார மய்யத்தின் அறிக்கையின்படி, உலகளாவிய போட் டித்திறன் அட்டவணையில் இந்தியா வின் இடம் பின்னுக்குத் தள்ளப்பட் டுள்ளது. ஓராண்டில் 10 இடங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. முந் தைய ஆண்டில் 58ஆவது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 68ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. பிற நாடுகள் தங்களது பொருளாதார கட்டமைப்பில் முன்னேறிய நிலையில் இந்தியா பின்னடைவை சந் தித்துள்ளது. இந்த தகவலை உலகப் பொருளாதார மய்யம் வெளியிட்டு இருக்கிறது.
குறிப்பாக சுகாதாரமான வாழ்க்கை, தொழிலாளர் உரிமைகள் உள்ளிட்ட காரணங்களால் போட்டித்திறன் மதிப் பீட்டில் பின்னடைவை சந்தித்துள்ளது என்று உலகப் பொருளாதார மய்யம் வெளியிட்ட அறிவிப்பில் சுட்டிக்காட் டப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதாரம், தொழில் நுட்பம், உள்கட்டமைப்பு, புதிய கண்டு பிடிப்புகள், கல்வி, திறன், சுகாதாரம் உட்பட நாட்டின் வளர்ச்சிக்கான கார ணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த அட்டவணை உரு வாக்கப்படுகிறது. உலகளாவிய 141 நாடுகள் இதில் பட் டியலிடப்பட்டுள்ளன. அதில் இந்தியா 68ஆவது இடத்தில் உள்ளது.
இதுகுறித்து ஜெனிவா நகரில் உள்ள உலகப் பொருளாதாரம் மய்யம் வெளியிட்ட அறிவிப்பில்,
‘பேரியல் பொருளாதாரம், சந்தை அளவு அடிப்படையில் இந்தியா முன் னணி இடத்தில் இருக்கிறது. குறிப்பாக சந்தை அளவு அடிப்படையில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இருந்த போதிலும் அடிப்படை வசதிகள் வகை யில் இந்தியா மிகவும் பின் தங்கி உள்ளது. சுகாதாரம் அளவில் இந்திய மிக மோசமான இடத் தில் உள்ளது.
குடிமக்களுக்கு சுகாதாரமான வாழ்க் கையை உருவாக்கித் தர இந்தியா தவறியுள்ளது. தொழிலாளர்களுக்கான அடிப்படை உரிமை இந்தியாவில் முறை யாக வழங்கப்படுவதில்லை. இது போன்ற காரணங்களால் போட்டித் திறன் மதிப்பீட்டில் இந்தியா பின்ன டைவை சந்தித்துள்ளது. குடிமக்களின் ஆரோக்கியமான வாழ்க்கை அடிப் படையில், மொத்த முள்ள 141 நாடுகளில் இந்தியா 109 இடத்தில் உள்ளது. இது தவிர, திறன் அடிப்படையிலும் இந்தியா பின்தங்கி உள்ளது. போதிய திறன் கொண்ட பணியாளர்கள் இந்தியாவில் குறைவாக உள்ளனர். திறன் அடிப் படையில் 107ஆவது இடத்தில் உள்ளது. அதேபோல் பணிச்சூழல் அடிப்படை யில் பாலினப் பாகுபாடு இந்தியாவில் அதிக அளவில் நிலவுகிறது. ஆண் மற்றும் பெண் ஊழியர்களுக்கான வேறுபாடு அதிகமாக உள்ளது. பாலி னப் பாகுபாடு அடிப்படையில் இந்தியா 128ஆவது இடத்தில் உள்ளது. இவை அனைத்தையும் கணக்கில் கொண்டே உலகளாவிய போட்டித்திறன் தரவரிசை அளிக்கப்படுகிறது. அதன் அடிப்ப டையில் இந்தியா முந்தைய ஆண்டை விட 10 இடங்கள் சரிந்து 68ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இந் தியாவைத் தொடர்ந்து, அண்டை நாடுகளான இலங்கை(84), வங்க தேசம்(105), நேபாளம் (108), பாகிஸ் தான் (110) இடங்களில் உள்ளன.
கொலம்பியா, தென் ஆப் பிரிக்கா, துருக்கி ஆகிய நாடுகள் முந்தயை ஆண்டுகளில் இந்தியாவை விட பின் தங்கி இருந்தன. அந்நாடுகள் தற்போது தரவரிசையில் இந்தியாவை முந்தியுள் ளன.
இந்த தரவரிசையில் சிங்கப்பூர், அமெரிக்காவை பின்தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளது. அமெரிக்கா 2ஆவது இடத்திலும், சிறப்பு நிர் வாகத்துக்குகீழான ஹாங்காங் 3ஆவது இடத்திலும், நெதர்லாந்து 4ஆவது இடத்திலும், சுவிட்சர்லாந்து 5ஆவது இடத்திலும் உள்ளன. சீனா 28ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
குடிமக்களுக்கு சுகாதாரமான வாழ்க்கையை உருவாக்கித் தர இந்தியா தவறியுள்ளது. தொழிலாளர்களுக்கான அடிப்படை உரிமை இந்தியாவில் முறையாக வழங்கப்படுவதில்லை. இது போன்ற காரணங்களால் போட்டித் திறன் மதிப்பீட்டில் இந்தியா பின் னடைவை சந்தித்து உள்ளது என்று உலகப் பொருளாதார மய்யம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட் டுள்ளது.
பன்னாட்டு நிதியமும் எச்சரித்துள்ளது!
உலகின் 90 சதவீதம் நாடுகளில் பொருளாதார மந்தநிலை நிலவுவதாகவும், அதில், இந்தியா போன்ற வளரும் நாடுகளின் நிலைமை மோசமாக இருப்பதாக சர்வதேச நாணய நிதியத் தின் இயக்குநர் கிறிஸ்டலினா ஜியார்ஜிவா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவு ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவு காரணமாக ஆட்டோ மொபைல், உணவு உற்பத்தி உள்ளிட்ட நிறுவனங்கள் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவின், வாஷிங்டனில் இருக்கும் பன்னாட்டு நாணய நிதியத்தின் (அய்.எம்.எப்) தலைமையகத்தில் (9.10.2019) நடைபெற்ற நிகழ்வில் கிறிஸ்டலினா ஜார்ஜிவா நிகழ்ச்சி  பேசியுள்ளார். அப்போது, ஒருங்கிணைந்த மந்த நிலையை, உலகப் பொருளாதாரம் தற்போது சந்தித்து வருவ தாக அவர் தெரிவித்தார். மேலும், “நடப்பு 2019_20 நிதியாண் டில், 90 சதவிகிதநாடுகள் பொருளாதார மந்த நிலையை சந்தித்துவருகின்றனர். இந்த மந்த நிலைக்கு பிரெக்சிட் மற்றும் அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தகப் போர் ஆகியவைதான் காரணம். இந்த வர்த்தகப் போர் காரணமாக உலக அளவில், பொருளாதார வளர்ச்சி விகிதமானது, கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறையப் போகிறது. குறிப்பாக, இந்தியாவில், நடப்பாண்டில் பொருளாதார மந்த நிலை மிக கடுமையாக இருக்கும்” என்று கூறியுள்ள கிறிஸ்டலினா ஜியார்ஜிவா, “மந்த நிலையைத் தவிர்க்க வேண்டும் என்றால், உலக நாடுகள் ஒன்று சேர்ந்து வர்த்தகத் திறனைப் பெருக்க வேண்டும். உலகப் பொருளாதாரம் இன்னும் வளர்முகமாகவே உள்ளது. ஆனால், மிகவும் மெ துவாக வளர்கிறது. இந்த நிலையை சீர்திருத்தவும் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றவும் நாம் மெத்தனமாக இருந்து விட முடியாது. நாம் இணைந்து செயலாற்ற வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.
முன்னதாக இந்தியா குறித்து கடந்த செப்டம்பர் மாதமே பன்னாட்டு நாணய நிதியம் கூறுகையில், “இந்தியாவில் கார்ப்பரேட் ஒழுங்குமுறையில் நிச்சயமற்ற தன்மை, வங்கி சாரா நிதி நிறுவனங்களின் என பலவற்றுக்கும் இந்தியப் பொருளாதார வீழ்ச்சி காரணமாக அமைந்துள்ளது.
2017-ஆம் ஆண்டு ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு பன்னாட்டு நாணய நிதியம் “இந்தியாவின்  பொருளாதாரம் வரும் ஆண்டுகளில் கடுமையான சரிவைச் சந்திக்கும் இதனால் உலக முதலீட்டாளர்கள் தஙக்ளின் முதலீடுகளை திரும்ப பெற நேரும், இதன் மூலம் இந்தியாவில் தொழில் துறை கடு¬ மயான வீழ்ச்சியை சந்திக்கும் என்று எச்சரிக்கை செய்திருந்தது,
ஆனால் அந்த எச்சரிக்கையை அப்போதை நிதி அமைச் சராக இருந்த மறைந்த அருண் ஜெட்லி பன்னாடு நாணய நிதியகம் இந்தியாவின் பொருளாதர வளர்ச்சியை இங்குள்ள எதிர்கட்சிகளும் மோடியின் ஆட்சியைப் பிடிக்காதவர்களும் கொடுக்கும் புள்ளிவிபரங்களைப் பார்த்து அறிக்கை விடுகிறது, ஜிஎஸ்டிக்குப் பிறகு இந்திய பொருளாதார மி கவேகமாக வளர்ந்து வரும் என்றும் 2019 மற்றும் 2020-ஆம்  இந்தியப் பொருளாதார வளர்ச்சி என்பது வல்லரசு என்னும் குறிக்கோளை நோக்கி செல்லவதாக அமையும் என்று கூறியிருந்தார்.
அன்னிய முதலீடுகள் வேகமாக வெளியேறிக்கொண்டு இருக்கிறது, இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதித்துறையும் முடங்கிக்கிடக்கிறது, மோட்டார் வாகன தொழில்துறை முற்றிலும் இழப்பைச் சந்தித்து தங்களது நிறுவனங்களை மூடிவருகிறது. பன்னாட்டு நாணய நிதியம் ஏற்கெனவே எச்சரித்தது தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இன்றுவரை பொரு ளாதார சரிவு குறித்து மோடியோ அல்லது நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனோ எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை.

காஷ்மீரில் கல்லூரிகள் திறப்பு: மாணவர்கள் புறக்கணிப்பு

காஷ்மீர் மாநி லத்தில் கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்ட போதிலும் மாணவர்கள் யாரும் வர வில்லை. ஜம்மு காஷ்மீரில் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டப்பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது.
இதனை தொடர்ந்து, வன் முறைகள், அசம்பாவிதங்கள் நடப்பதை தடுக்க, தடை உத்தரவுகள் விதிக்கப்பட்டன. முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் வீட்டு சிறையில் வைக்கப்பட்டனர். பள்ளிகள், கல்லூரிகள், கடை கள், வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதன் காரணமாக அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தற்போது, இம்மாநிலத் தில் படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகின்றது. பள்ளத்தாக்கு முழுவதும் தரைவழி தொலைதொடர்பு சேவை தொடங்கியுள்ளது. சாலையோர கடைகள் திறக் கப்பட்டுள்ளன.
தனியார் வாகனங்களின் போக்குவரத்து அதிகரித் துள்ளது. 66ஆவது நாளான நேற்றும் நகரின் பெரும்பா லான பகுதிகளில் கடைகள் அதிகாலையிலேயே திறக்கப் பட்டன. காலை 11 மணி வரை மட்டுமே கடைகள் இயங்கு கின்றன. பின்னர், சிறப்பு  தகுதி நீக்கத்துக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் வியா பாரிகள் கடைகளை மூடிவிடு கின்றனர்.
இந்நிலையில், கடந்த வாரம் அறிவிக்கப்பட்டதை போன்று நேற்று அனைத்து கல்லூரிகளும் திறக்கப்பட் டன. பெரும்பாலான பேராசி ரியர்கள் பணிக்கு வந்திருந் தனர். ஆனால், மாணவர்கள் யாரும் கல்லூரிக்கு வர வில்லை.  பாதுகாப்பு கருதி பெற்றோர்கள் தங்கள் பிள் ளைகளை பள்ளி, கல்லூரி களுக்கு அனுப்ப தயக்கம் காட்டி வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீரில் வருகிற 24ஆம் தேதி உள்ளாட்சி அமைப்புக்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இது, சிறப்பு தகுதியை மத்திய அரசு ரத்து செய்த பின்னர் நடைபெறும் முதல் தேர்தலாகும். ஆனால், இந்த தேர்தலை புறக்கணிப்பது என ஜம்மு காஷ்மீர் காங்கி ரஸ் முடிவு செய்துள்ளது. இது குறித்து மாநில காங் கிரஸ் தலைவர் ஜி ஏ மிர் கூறுகையில், “ஜனநாயக அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என காங்கிரஸ் நம்புகிறது. எந்தவொரு தேர் தலில் இருந்தும் காங்கிரஸ் ஒருபோதும் விலகி செல்ல வில்லை. ஆனால், மாநில நிர் வாகத்தின் அலட்சியப் போக்கு மற்றும் மூத்த கட்சி தலைவர்கள் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு இருப் பதன் காரணமாக உள்ளாட்சி தேர்தல்களை புறக்கணிப்பது என முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் உள்ளது,” என்றார்.

’பாரத் மாதா கீ ஜே’ சொல்லாத நீங்கள் பாகிஸ்தானில் இருந்து வந்துள்ளீர்களா? பா.ஜ.க/ வேட்பாளரின் அடாவடிப் பேச்சு

"நீங்கள் எல்லோரும் பாகிஸ்தானிலிருந்து வந்துள்ளீர்களா? நீங்கள் இந்தியர்கள் என்றால் 'பாரத் மாதா கீ ஜே' என்று கூறுங்கள்.
'பாரத் மாதா கி ஜே' என்று முழக்கம் எழுப்ப முடியாத இந்தியர்களை நினைத்து நான் வெட்கப்படுகிறேன்" என்று அரியானாவில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் டிக்டாக் பிரபலம் சோனாலி போகாத் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். அரியானா மாநில சட்டமன்றத் தேர்தலுக் கான வாக்குப் பதிவு அக்டோபர் 21ஆ-ம் தேதி நடைபெற வுள்ளது. பா.ஜ.க, சார்பில் ஆதம்பூர் சட்டமன்றத் தொகுதி யில் டிக்டாக் பிரபலம் சோனாலி போகாத் போட்டியிடு கிறார். அவர், தற்போது பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார்.
பால்சமந்த் கிராமத்தில் பிரச்சாரம் செய்த அவர், கூடியிருந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்து 'பாரத் மாதா கி ஜே' என்று கூறி மீண்டும் மக்களை பதில் முழக்கம் எழுப்பச் சொல்லியிருக்கிறார். பலரும் பதில் முழக்கம் எழுப்பாமல் அமைதியாக இருந்துள்ளனர்.
அதனால், கோபமடைந்த அவர், ‘நீங்கள் எல்லாரும் பாகிஸ்தானிலிருந்து வந்துள்ளீர்களா? நீங்கள் இந்தியர்கள் என்றால் 'பாரத் மாதா கீ ஜே' என்று கூறுங்கள். நாட்டுக்காக ஜே என கூற முடியாத உங்களைப் போன்ற இந்தியர்களை நினைத்து நான் வெட்கப்படுகிறேன்.
பாரத் மாதா கீ ஜே என்று சொல்ல முடியாதவர்களின் வாக்குகளுக்கு மதிப்பில்லை’ என்று சர்ச்சைக் குரிய வகையில் பேசியுள்ளார். அவர், பேசிய காணொலி தற் போது வைரலாகிவருகிறது. மூன்று முறை காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினராக இருக்கும் குல்தீப் பிஸ்ஸோனாய்க்கு எதிராக இவர் போட்டியிடுகிறார்.
இவர் டிக்டாக் என்னும் கைப்பேசி காணொலியில் திரைப்படப் பாடல்களுக்கு ஆபாசமாக அசைவுகளைக் காட்டிப் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2,000 ஆண்டுகளுக்கு முந்தைய சமணர் படுக்கை கண்டுபிடிப்பு

இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன், சமணர்கள் உறங்குவதற்காக செதுக்கப்பட்ட கற்படுக்கை, நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே அமைந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே, சென்னால்கல் புதூரில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. அதன் கீழ்ப்புறம், 2,000 ஆண்டுகளுக்கு முன், தமிழ் சமணர்கள் உறங்குவதற்காக பாறைகளை அடுக்கடுக்காக செதுக்கி, கற்படுக்கை அமைத்துள்ளனர்.
பாறையில் செதுக்கப்பட்டுள்ள படுக்கை, சமண முனிவர்கள், இங்கு நீண்ட காலம் தங்கி தவமிருந்து வாழ்ந்தனர் என்பதை உணர்த்து கிறது. இப்பகுதியில் உள்ளவர்கள், இதை பஞ்ச பாண்டவர்கள் படுக்கை என்றும் கூறுகின்றனர். சமணர்கள் வாழ்ந்த காலத்தில், தாங்கள் செல்லும் பாதையில், எறும்பு உள்ளிட்ட சிறிய உயிர்கள் மிதிபட்டு துன்புறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, பாதையை மயில் இறகால் சுத்தம் செய்து கொண்டே செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். மேலும், தங்களது கொள்கைகளை மக்களிடையே பரப்பும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அதற்கு பல்வேறு வரலாற்று சான்றுகள் மற்றும் கல்வெட்டுகள் எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.
அப்பகுதி மக்கள் கூறுகையில், 'சமணப் படுக்கைகள், 2,000 ஆண்டுகளுக்கு முன் உரு வாக்கப்பட்டிருந்தாலும், தற்போது செதுக்கியது போல், வழவழப்பு தன்மை மாறாமல் காணப் படுகிறது.
'சமணர்கள் இப்பகுதியில், சமணப் பள்ளிகள் அமைத்து கல்வி, மருத்துவம், மதம் ஆகியவற்றை பரப்பி உள்ளனர். இந்த சமணப் படுக்கையை, பல்வேறு பகுதிகளை சேர்ந்த வர லாற்று ஆர்வலர்கள் வந்து பார்த்து செல்கின்றனர்' என்றனர்.

வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் விவசாயிகள் அளித்த விண்ணப்பங்கள் தூக்கி வீசப்பட்டுள்ளன

அறந்தாங்கி வட்டாட்சியர் அலுவலக வளாகத் தில்  ஊக்கத்தொகை பெறுவதற்காக விவசாயிகள் அளித்த மனுக்கள் தூக்கி வீசப்பட்டுள்ளன.
கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு பிரதமர் மோடி, ஏழை விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் ரூ.6 ஆயிரம் கவுரவ நிதி உதவி வழங்கும் திட்டத்தை அறிவித்தார்.
தொடர்ந்து இரண்டாவது முறையாக மோடி பிரதமர் ஆனபிறகு, அனைத்து  விவ சாயிகளுக்கு கவுரவ நிதி உதவி வழங்கப்படும் என திட்டத்தை மாற்றி அறிவித்தார். அதன்படி, பிரதமரின் விவசாயிகள் கவுரவ ஊக்கத்தொகை பெற விரும்பிய விவசாயிகள் ஒரு படி வத்தில் விபரங்களை பூர்த்தி செய்து,  விண்ணப்பத்தில் விவசாயியின் படத்தை ஒட்டி, அதனுடன் சுய உறுதிமொழி படிவம், ஆதார்நகல், நிலத்தின் சிட்டா காப்பி, வங்கிக் கணக்கு புத்தக முன்பக்க நகல் ஆகியவற்றை இணைத்து கொடுக்க வேண்டும்.
அவ்வாறு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை வரு வாய்த்துறையினரிடம் வழங்கினர். அந்த படிவங்களை வருவாய்த்துறையினர் ஆய்வு செய்து, அதன் அடிப் படையில் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2  ஆயிரம் வீதம் அனுப்பப்பட்டு வருகிறது.
அறந்தாங்கி வட்டாட்சியர் அலு வலகத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதற்காக பழைய தாலுகா அலுவலக வளாகம் (காவல்நிலையம், நீதிமன்றம், வட்டாட்சியர் அலு வலகம் இயங்கிய கட்டடங்கள்) இடித்து  அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
ஏற்கெனவே அறந்தாங்கி காவல் நிலையம் இயங்கி வந்த பகுதியில், காவல்துறை ஆய்வாளர் அறை ஆதார் சேர்க்கை மய்யமாக பயன் படுத்தப்பட்டு வந்தது. தற்போது அந்த கட்டடமும் இடிக்கப்பட்டு வருகிறது.
ஆதார் சேர்க்கை மய்யமாக இருந்த அறையும், தற்போது இடிக்கப் பட்டு வரும் நிலையில், அந்த அறையில் பிரதமரின் விவசாயிகள் கவுரவ ஊக்கத் தொகை பெறுவதற்காக விவசாயிகள் வழங்கிய நூற்றுக் கணக்கான விண்ணப்பப்படிவங்கள்  தூக்கி வீசப்பட்டு சிதறிக் கிடக் கின்றன.
இதுகுறித்து விவசாயிகள் கூறிய தாவது:
பிரதமரின் கவுரவ ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்திற்காக கொடுக் கப்பட்ட விண்ணப்பப்படிவங்கள் கேட்பாரற்று கிடக்கின்றன.
தூக்கி எறியப்பட்ட விவசாயிகளின் மனுக்களை சேகரித்து, அவர்களுக்கும்  பிரதம அமைச்சரின் கவுரவ ஊக்கத் தொகை கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Wednesday, October 9, 2019

சனி கிரகத்தின் 20 புதிய நிலவுகள் கண்டுபிடிப்பு

சூரியக் குடும் பத்தைச் சேர்ந்த சனி கிரகத் தைச் சுற்றி வரும் 20 புதிய நிலவுகளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இத்து டன், அந்தக் கிரகத்தைச் சுற்றி வரும் நிலவுகளின் எண் ணிக்கை 82-ஆக உயர்ந்துள் ளது. இதையடுத்து, அதிக நிலவுகளைக் கொண்ட சூரியக் குடும்பத்துக் கிரகம் என்ற பெருமையை சனி பெறுகிறது. இதுவரை 79 நிலவுகளைக் கொண்ட ஜூபி டரே அதிக நிலவுகளைக் கொண்ட கிரகமாக இருந்து வந்தது.
இதுகுறித்து பிரான்சி லுள்ள சர்வதேச விண்வெளி ஆய்வாளர்களின் அமைப் பில் விஞ்ஞானிகள் சமர்ப் பித்துள்ள அறிக்கையில், புதிதாகக் கண்டறியப்பட்ட 1 நிலா சனி கிரகத்தைச் சுற்றி வர 3 ஆண்டுகளுக்கும் மேல் எடுத்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

முடிவே இல்லாத போர்களுக்காக அமெரிக்க வீரர்கள் உயிர் இழப்பதை விரும்பவில்லை - டிரம்ப்

சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வந்த அய்.எஸ். பயங்கரவாதி களை ஒழிப்பதற்காக 2011ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா உத்தரவின்பேரில் அமெரிக்க படைகள் சிரியாவுக்கு அனுப்பி வைக் கப்பட்டன.
அந்நாட்டில் செயல்பட்டுவந்த உள்ளூர் குர்திஷ் போராளிகளுடன் இணைந்து அமெரிக்க படைகள், அய்.எஸ். பயங்கரவாதிகளை குறி வைத்து தரைவழி மற்றும் வான்தாக்கு தல்கள் நடத்தினர். இதனால் அய்.எஸ். பிடியில் இருந்த பல நகரங்கள் மீட் கப்பட்டு பெரும்பாலான பயங்கரவாதி கள் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து, சிரியாவின் வடக்கு எல்லை பகுதியில் உள்ள அமெரிக் கப்படைகளை திரும்பப்பெறுவதாக கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.
இதையடுத்து, சிரியாவின் வடகிழக்கு எல்லையில் இருந்து அமெரிக்கப் படைகள் நாடு திரும்ப தொடங்கி யுள்ளனர்.  அதிபர் டிரம்பின் இந்த முடிவுக்கு அமெரிக்க குடியரசு கட்சியை சார்ந்த உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்கப் படைகளை சிரியாவின் வடக்கு எல்லையில் இருந்து திரும்ப பெறுவதால் துருக்கி படைகள் குர்திஷ் போராளிகளை குறிவைத்து அழித்து விடுவார்கள். அமெரிக்காவிற்கு ஆதர வாக செயல்பட்ட குர்திஷ் போராளி களை நாம் துருக்கியிடம் இருந்து காப் பாற்ற வேண்டும் என குடியரசு கட்சி உறுப்பினர்கள் தெரிவித்து வருகின் றனர்.
இந்நிலையில், சிரியாவில் இருந்து அமெரிக்கப்படைகள் திரும்பபெறுவது குறித்து அதிபர் டொனால்டு டிரம்ப் கூறுகையில், “ அமெரிக்க படைகள் ஒன்றும் காவல்துறை படை கிடையாது. சிரியாவில் போர் தொடங்கி பத் தாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. முடிவே இல்லாத போர்களில் அமெ ரிக்க வீரர்கள் உயிரிழப்பதை நான் விரும்பவில்லை.
அமெரிக்க அதிபர் தேர்தலின் போது சிரியா, ஆப்கானிஸ்தான் நாடு களில் உள்ள அமெரிக்க படைகளை திரும்ப அழைப்பதாக வாக்குறுதி அளித் திருந்தேன். அதன்படியே சிரியாவில் இருந்து நமது படைகள் திரும்பி வர உத்தரவிட்டுள்ளேன். துருக்கி படைகள் ஒருவேளை குர்திஷ் போராளிகள் மீது தாக்குதல் நடத்தினால் அந்நாடு கடுமையான பொருளாதார சீரழிவை சந்திக்க நேரிடும்’’ என அவர் தெரிவித்தார்.

பென்னாகரம் அருகே 3 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய கல் வட்டங்கள் கண்டுபிடிப்பு

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே ஈச்சம்பாடி மலை குன்றுகளில் நூற்றுக்கணக்கான பெருங்கற்கால கல்வட்டங்கள் காணப்படுகின்றன.
இவை சுமார் 3000 ஆண்டுகள் முற்பட்டவையாக இருக்கலாம் என கருதப்படுகிறது. தர்மபுரி மாவட்டம் முழுவதும் இத்தகைய பெருங்கற்கால பண்பாட்டு ஈமக் குழிகள் ஏராளமாக கண்டறியப் பட்டுள்ளன.
ஏரியூர் பகுதியில் வரலாற்று ஆய்வு அறக்கட்டளை சார்பாக, தர்மபுரி அரசு கலைக்கல்லூரி வரலாற்று பேராசிரியர் சந்திரசேகர் தலைமையிலான குழுவினர் கள ஆய்வு மேற்கொண்டனர். இங்கு காணப்படும் பெருங்கற்கால கல்வட்டங்களில் பெரும்பாலானவை சிதைக்கப்பட்ட நிலையில் உள்ளன. அக்குழிகளில் புதையல் இருக்கும் என்ற நம்பிக்கையில், சமூக விரோதிகளால் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தர்மபுரி அரசு கலைக்கல்லூரி வரலாற்று பிரிவு பேராசிரியர் சந்திரசேகர் கூறுகையில்,
இப்பகுதியை ஆய்வு செய்ததில், இக்கால மக்கள் இறப்பிற்கு பிந்தைய வாழ்க்கைக்கு முக்கியத்துவம் அளித்து, கற்களால் ஆன குழிகளை அமைத்து அதன் மேல் பெரிய கல்லால் மூடி, சுற்றிலும் பெரிய பெரிய கற்களை வட்டமாக வைத்து குழிகள் ஏற்படுத்தி யுள்ளனர். இது கல்வட்டம் எனப்படும்.
மேலும், இறப்பிற்கு பிந்தைய வாழ்க்கைக்கு உடல் தேவை என்பதால், மிக நேர்த்தியாக அறிவியல் தொழில் நுட்பத்தோடு வெட்டி எடுக்கப்பட்ட நான்கு கற்பாறைகளை ஒன்றோடு ஒன்று தாங்கிப் பிடிக்கும் வகையில், ஸ்வஸ்திக் சின்னம் போல குழிகளை அமைத்து அதனுள் அவர்கள் பயன்படுத்திய மண்பாண்டங்கள், இரும்பு கருவிகள் மற்றும் உணவு பொருட்கள் போன்றவற்றை வைத்து புதைத்து விடுவர்.  இத்தகைய பெருங்கற்காலப் பண்பாடு இப்பகுதியில் கண்டறியப்பட்டதன் மூலம் சுமார் 3000 ஆண்டுக்கு முன்பிருந்தே, ஏரியூர் பகுதியில் மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் கண்டறியப்பட்டுள்ளன என்றார்.

கீழடியில் நடைபெற்ற 5ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் திடீர் நிறுத்தம்!

தமிழறிஞர்கள் - சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி!
கீழடியில் நடை பெற்று வந்த 5ஆம் கட்ட அகழாய் வுப் பணிகள் திடீர் என்று நிறுத்தப் பட்டுள்ளன. பணிக்கு வந்த தொழி லாளர்கள் அனைவரும் திருப்பி அனுப்பப் பட்டுள்ளனர். இதனால் தமிழனின் வரலாற்றை மூடி மறைக்கும் சூழ் நிலையில் எடப்பாடி அரசு ஈடுபட் டுள்ளது என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ள னர்.
கீழடி அகழாய்வு!
கீழடி அகழாய்வின் மூலம், இரண்டாயிரத்து அறுநூறு ஆண் டுகளுக்கு முன்பே தமிழனின் நாகரீகம் பார்போற்றும் வகையில் அமைந்திருக்கின்றது என்பதினை மெய்ப்பித்துக் கொண் டிருக்கின்றன. இந்த அகழாய்வு மூலம் ஆழ்ந்த அறிவாலும், உலகின் மூத்த இனம் நம் தமிழ் இனம் என்பதற் கான அரிய சான்றுகள் நமக்கு கீழடியில் கிடைத்து கொண்டு இருக்கின்றன.
கீழடியில் நடைபெற்று முடிந்த நான்கு கட்ட ஆய்வின் மூலம் தமிழரின் நாகரீகம் உலகத்துக்கே முன்னோடி நாக ரீகம் என்பதினை மெய்ப்பிக்கும் வகையில் அமைந் திருந்தன.
இந்நிலையில் 5ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் தமிழக தொல்லியல் துறை சார்பில் ஜூன் 13ஆம் தேதி அன்று தொடங் கப்பட்டது. அதில் தமிழன் 2600 ஆண்டுகளுக்கு முந்திய தமிழ் எழுத்து வடிவம், மனித உருவம் கொண்ட பொம்மைகள், தங்கம், வெள்ளி ஆபரணங்கள், இரும்பு போன்ற உலோகப் பொருட்களை பயன்படுத்தி இருக்கிறார்கள் என்ப தற்கு ஆதாரமாக நூற்றுக் கணக் கான பொருட்கள் கிடைத் துள்ளன. அன்றே நெசவுத் தொழிலை தமிழன் மேற்கொண்டு இருக்கிறான் என்ப தற்கான ஆதார மாக நெசவுத் தொழிலுக்கான நூல் நூற்ற கருவி யும் அகழாய்வில் கண்டெடுக்கப் பட்டுள்ளது.
இந்த அகழாய்வுப் பணி, செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் நிறைவடைய இருந்த நிலையில் மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்பட் டுள்ளதாக தமிழக அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் தெரிவித்து இருந்தார். அதன்படி அக்டோபர் 15ஆம் தேதிவரை இந்த அகழாய்வு நடைபெற வேண்டும்.
இந்நிலையில் 10 நாட்களுக்கு முன்பாகவே நேற்றுமுன்தினம்  (7.10.2019) முதல் அகழாய்வுப் பணிகள் திடீர் என்று நிறுத்தப் பட்டுள்ளன.
அகழாய்வுப் பணியில் ஈடுபட்ட 60க்கும் மேற்பட்ட பணியாளர்களை மீண்டும் பணிக்கு வரவேண்டாம் என்று தொல்லியல் துறை அதி காரிகள் உத்தரவிட்டதுடன் பணிக்கு வந்தவர்களையும் திருப்பு அனுப்பியுள்ளனர்.
அகழாய்வு பணிகள் நடைபெறும் இடத்தில் தற்போது அதிகாரிகள் மட்டுமே உள்ளனர். வேறு எந்தப் பணியும் அங்கு நடைபெறவில்லை.
கீழடியில் அகழாய்வுப் பணிகள் திடீர் என்று நிறுத்தப்பட்டுள்ளது தமிழறிஞர்களிடையே சமூக ஆர்வ லர்களிடமும் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.