Wednesday, October 23, 2019

காரில் பதிவு எண்ணுக்கு பதில் ஆந்திர பிரதேச முதல்அமைச்சர் பெயராம்!

தெலங்கானாவில் அய்தராபாத் நகரில் கார் ஒன்றின் முகப்பு பகுதியில் பதிவு எண் இருப்பதற்கு பதிலாக, ஆந்திர பிரதேச முதல்அமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் பெயரை குறிப்பிடும் வகையில், ஏ.பி. சி.எம். ஜெகன் என ஆங்கில எழுத்துகளால் எழுதப்பட்ட வெள்ளை நிற நம்பர் பிளேட் இருந்தது.
அந்த காரை ஓட்டி வந்த நபரிடம் வாகன சோதனையில் ஜீடிமெட்லா காவல்துறையினர் இதுபற்றி விசாரணை மேற்கொண்டனர்.
அந்த வாகனம் ஏசு ரெட்டி என்பவரது பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதும், அதனை ராகேஷ் என்பவர் பயன்படுத்தி வந்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
காரை ஓட்டிய நபர், சுங்க சாவடி கட்டணம் செலுத்துவது மற்றும் காவல் துறையினர் சோதனையை தவிர்ப்பதற்காக வாகன பதிவு எண்ணுக்கு பதில் ஆந்திர பிரதேச முதல்அமைச்சர் ஜெகன் பெயரை பயன்படுத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.