Wednesday, September 25, 2019

நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னை போன்ற பெருநகரங் களில் காற்றில் ஏற்படும் மாசு காரணமாக நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அடையாறு புற்றுநோய் சிகிச்சை மய்ய மருத்துவர் அரவிந்த் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.மேலும், நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 55 சதவீதம் பேர் புகைப் பழக்கம் இல்லாதவர்கள் என்பது மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர் களிடம் டாக்டர் அரவிந்த் கிருஷ்ணமூர்த்தி செவ்வாய்க்கிழமை கூறியதாவது: எந்த வகை புற்றுநோயாக இருந்தாலும், ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால், அதனை குணப்படுத்த இயலும். நுரையீரல் புற்று நோயும் அப்படித்தான். ஆனால், கசப்பான உண்மை என்னவெனில், இறுதி நிலையில்தான் பெரும்பாலான நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர்.
இருமும்போது ரத்தம் வருதல், அதீதத் தலைவலி, சுவாசக் கோளாறு, நெஞ்சுவலி உள் ளிட்டவை நுரையீரல் புற்றுநோயின் அறிகுறிகள். அவற்றை அலட்சியப்படுத்தாமல், உடனடியாகப் பரிசோதனை மேற்கொண்டால் புற்றுநோய் உள்ளதா என்பதை அறிந்துகொள்ள முடியும். கீமோதெரபி, கதிரியக்க சிகிச்சைகள் இல்லாமல் சிறிய அறுவை சிகிச்சை மூலமாகவே நுரையீரல் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே குணப்படுத்த இயலும்.
சென்னை போன்ற பெருநகரங்களில் சமீபகால மாக நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படு வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புகைப் பழக்கம் அதற்கு முக்கியக் காரணம் என்றாலும், அப்பழக்கம் இல்லாதவர்களுக்கும் அதிக அளவில் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக, பெண்களுக்கு அந்த வகையான புற்றுநோய்  பாதிப்பு அதிகரித்துள்ளது.
இதற்கு காற்றில் உள்ள மாசுதான் முக்கியக் காரணம். இதுதொடர்பாக விரிவான ஆய்வு தேவைப்படுகிறது. எது, எவ்வாறாயினும், நுரை யீரல் புற்றுநோயைத் தடுக்க புகையிலை ஒழிப்பு பிரசாரத்தைத் தாண்டி அடுத்த கட்ட நடவடிக் கைகள் மேற்கொள்ள வேண்டிய தேவை எழுந் துள்ளது என்றார் அவர்.

வருங்கால வைப்பு நிதிக்கு 8.65% வட்டி மத்திய அரசு அறிவிக்கை வெளியீடு

தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதிக் கணக்குகளுக்கு (பிஎஃப்)  8.65 சதவீதம் வட்டி வழங்க மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த 2017-18 நிதியாண்டில் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு 8.55 சதவீத வட்டி வழங்கப்பட்டது. இந்த நிலையில், 2018-19 நிதியாண்டுக்கு 8.65 சதவீத வட்டி வழங்க கடந்த பிப்ரவரி மாதம் முடிவெடுக்கப்பட்டது. இதற்கு மத்திய நிதியமைச்சகம் கடந்த 19-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், அதற்கான அறிவிக்கையை மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
வருங்கால வைப்பு நிதிக்குக் கூடுதல் வட்டி வழங்கப்பட்டுள்ளதன் மூலம் 6 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயனடைய உள்ளனர். இது தொடர்பாக, மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் வெளியிட்ட அறிக்கையில், ""தொழிலா ளர்களின் வருங்கால வைப்பு நிதிக்குக் கூடுதல் வட்டி வழங்கு வதற்கான அறிவிக்கையை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். இதன் மூலம் 6 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் பயனடைய உள்ளனர். இதனால், அரசுக்கு ரூ.54,000 கோடி செலவாகும்'' என்று குறிப்பிட்டிருந்தார்.

வழிகாட்டுகிறது ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகம்

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல்களுக்கு இருக்கும் பரபரப்பிற்கு சிறிதும் குறையாதது ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் மாணவர் தலைவர்களுக்கான தேர்தல்கள் என்பதில் சிறிதும் சந்தேகமே இல்லை. சில பல சச்சரவுகளுக்கு மத்தியில் தேர்தல்கள் நடத்தப்பட்டு முடிவுகளும் அறிவிக்கப்பட்டு விட்டன.
இம்முறை நடைபெற்ற தேர்தலில் யுனைட்டட் லெஃப்ட் பேனல் முற்றிலுமாக வெற்றியை தங்களுக்கு சொந்தமாக்கிக் கொண்டார்கள். அப்பல்கலைக்கழக தலைவராக ஆயிஷ் கோஷ் தேர்வு செய்யப்பட்டார். 13 வருடங்களில் எஸ்.எஃப்.அய். எனப்படும் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த ஒருவர் தேர்வு செய்யப்படுவது இதுவே முதல் முறை. இதற்கு முன்பு 2006-2007 ஆண்டுகளில் தனஞ்ஜெய் திரிபாதி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் சங்கத் தலைவராக செயல்பட்டார்.
மொத்தம் பதிவான 5728 வாக்குகளில் கோஷ் 2,313 வாக்குகள் பெற்றார். துணைத் தலைவர் பதவியை டெமோக்ரெடிக் ஸ்டூடண்ட்ஸ் ஃபெடரேஷன் அமைப் பைச் சேர்ந்த சகேத் மூன் வென்றார். மொத்தம் 3,365 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட வலதுசாரிகளின் மாணவ அமைப்பைச் சேர்ந்த (ஏபிவிபி) ஸ்ருதி அக்னிஹோத்ரி பெற்றிருந்த வாக்குகளை விட 2.5 மடங்கு வாக்குகள் அதிகமாய் பெற்று வெற்றியை பதிவு செய்தார் சகேத் மூன்.
அனைத்திந்திய மாணவர்கள் சங்கத்தைச் சேர்ந்த (All India Students' Association (AISA)) சதீஷ் சந்திர யாதவ் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அவர் பெற்ற வாக்குகள் 2,518 ஆகும். அதே போன்று கூடுதல் செயலாளராக முகமது டானிஷ் 3,295 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவர் ஆல் இந்தியா ஸ்டூடெண்ட்ஸ் ஃபெடரேஷனை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நான்கு பதவிகளில் ஒன்றைக் கூட வலதுசாரி மாணவ அமைப்புகள் பெறவில்லை.
ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில்  எஸ்.எஃப்.அய். சங்கத்தினைச் சேர்ந்த மாணவர்கள் அதிகமான வாக்குகளை பெற்று வெற்றியை உறுதி செய்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். ஜெ.என்.யூ பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது. 2012ஆம் ஆண்டு அந்த தடை நீக்கப்பட்ட பின்பு, ஆல் இந்தியா ஸ்டூடெண்ட்ஸ் அசோசியேசன் மிகப்பெரிய அளவில் அங்கு வேர் ஊன்ற ஆரம்பித்தது. 2015ஆம் ஆண்டில் இருந்து எஸ்.எஃப்.அய் மற்றும் ஆல் இந்தியா ஸ்டூடெண்ட்ஸ் அசோசியேசன் கூட்டணியாக தேர்தலில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
ஆயிஷ் கோஷ் மேற்கு வங்கத்தைச்  சேர்ந்தவர். டில்லி பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த அவர் இண்டெர்நேசனல் ரிலேசன்ஸ் பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றார். அதே பாடப்பிரிவில் தற்போது இரண்டாம் ஆண்டு எம்.ஃபில் படித்து வருகிறார். 6ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. 8ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், இரண்டு மாணவர்கள் இந்த தேர்தலுக்கு எதிராக மனுக்கள் தாக்கல் செய்தனர். அதனைத் தொடர்ந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படக் கூடாது என டில்லி உயர்நீதிமன்றம்  அறிவித்திருந்த நிலையில்,  அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. பின்னர் தேர்தல் குழு முடிவுகளை அறிவித்தது.
கடந்த தேர்தலை விட 5% அதிக வாக்குகளை இடதுசாரி அமைப்புகள் பெற்று 50.15% என்ற அளவில் வாக்கு வங்கியை இந்த தேர்தலில் உறுதி செய்துள்ளனர். இம்முறையும் போட்டியிட்ட அனைத்துப் பதவிகளிலுமே ஏபிவிபி அமைப்பு தோல்வியை சந்தித்துள்ளது.
இந்தியாவின் தலைநகரம் இந்த வகையிலே வழிகாட்டியிருக்கிறது. அதிகார பலம், பண பலம் எல்லாம் இருந்தும்,  பிஜேபி ஆர்.எஸ்.எஸின் மாணவர் அமைப் பான ஏபிவிபி சார்பில் போட்டியிட்டவர்கள் தோற்கடிக் கப்பட்டுள்ளது நல்ல நம்பிக்கையை அளிக்கிறது.
இதன் பொருள் சமூகநீதி, மதச் சார்பின்மை என்னும் திசையில் மாணவர்கள் கம்பீரமாக நடைபோடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வகையில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் இந்தியாவுக்கே வழிகாட்டுகிறது. வெற்றி பெற்ற இடதுசாரி மாணவர்களுக்குப் பாராட்டும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்!

Tuesday, September 24, 2019

நுகர்வோர்களுக்கான சாதனங்கள் அறிமுகம்

வீட்டு பயன்பாடு சாதனங்கள் மற்றும் நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் துறையில் உலகளவில் முதலிடம் வகிப்பதோடு தொடர்ந்து 10 ஆண்டுகளாக மேஜர் அப்ளை யன்சஸ் பிரிவில் உலகின் நம்பர் 1 பிராண்டாக திகழும் ஹயர் புதிய HRF-622 சீரிஸ் அறிமுகத்தின் மூலம் சைடு--பை-சைடு ரெஃப்ரிஜிரேட்டர் அணிவரிசையை இன்னும் விரிவாக்கியிருக் கிறது. HRF-622 KS. HRF-622KG, HRF-622CG என்ற இந்த மூன்று சமீபத்திய வேரியண்ட்கள் இந்நிறுவன மேம்பட்ட தொழில்நுட்ப புத்தாக்கங்களைக் கொண்டதாகவும் மற்றும் நுகர்வோருக்கு கூடுதல் இயக்கவிருப்பத் தேர்வுகளை வழங்கு வதற்கானஒரு ஸ்மார்ட் டிஜிட்டல் கன்ட்ரோல் சிஸ்டம் கொண்டதாகவும் இருக்கின்றன.
இதுகுறித்து இந்நிறுவனத்தின் தலைவர் எரிக் பிரகான்ஸா இந்த புதிய அறிமுகம் குறித்து பேசுகையில், “இந்நாட்டில் நுகர்வோர் அனுபவத்தை மேம்படுத்துகின்ற மற்றும் “உத்வேகம் பெற்ற வாழ்க்கை" என்ற எங்களது வாக்குறுதியை பூர்த்தி செய்யும் வகையில் சமீபத்திய புத்தாக்கங்களைஅறிமுகம் செய்வதில் நாங்கள் ஒருபடிமுன்னே எடுத்து வைத்திருக்கிறோம்"

புத்தாக்கமான தொலைக்காட்சி சாதனங்கள் அறிமுகம்

இந்தியாவின் முன்னணி அலைப்பேசி - தொலைக்காட்சி சாதனங்களின்  பிராண்டான ஜியோமி, ஸ்மார்ட்டர் லிவிங் 2020 அறிமுகத்தில் புதிய ஸ்மார்ட் டிவி களையும், பரந்த அளவிலான ஸ்மார்ட் ஹோம் தயாரிப்பு களையும் இன்று அறிவித்துள்ளது. எம்‌அய் டி‌விஎக்ஸ் (65) புதிய எம்‌அய் டி‌வி எக்ஸ்தொடரின் முன்னணி ஆகும்.இது ஜியோமியின் இன்-ஹவுஸ் விபிஇ (விவிட் பிக்சர் எஞ்சின்) மற்றும் பலவற்றோடு 163.9 செ.மீ எச்டிஆர் எல்இடி டிஸ்ப் ளேயை கொண்டுள்ளது.
இதுகுறித்து விற்பனை பிரிவின் தலைவர் ரகு கூறியிருப்ப தாவது: “ஜியோமியில், நாங்கள் மிகச்சிறந்த தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக இருக்க விரும்புகிறோம், உலகின் மிகப்பெரிய வன்பொருள் இன்குபேட்டராக இருப்பது, புதிய வயது தயாரிப்புகளை அறிந்த, இணைக்கப்பட்ட மற்றும் அன்றாட வாழ்க்கையில் வசதியைக் கொண்டுவர உதவுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

மின்னணு இசைக்கருவி தயாரிப்பு

சென்னையில் யமஹா மியூசிக் நிறுவனத்தின் முதல் தொழிற்சாலை திறக்கப்பட்ட பின்னர், இந்த பிராண்ட் தனது முதல் உள்நாட்டு தயாரிப்பான கீ போர்ட் PSR-I500அய் அறிமுகம் செய்தது.
இப்பொழுது , யமஹா மீண்டும் இந்தியாவின் தொழிற் சாலையிலிருந்து PSS தொடருடன் புதிய கீ போர்ட் வகைகளை கொண்டுவந்துள்ளது. PSS தொடர் கச்சிதமானது மட்டுமல்ல, குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மற்றும் தொழில் வல்லுன ராக இல்லாதவர்களுக்கு இசைக் கருவியின் உண்மையான தரத்தை குறிக்கிறது.
PSS-A50 என்பது இளைஞர்களுக்கும் தொழில்முறை நிபுணர்களாக இல்லாதவர்களுக்குமான ஒரு மாதிரியாகும், மேலும் இது பயன்படுத்துபவருக்கு ஒரு சார்பு நிலை உணர்வைத் தருகிறது. செயல்திறன் முதல் பதிவு வரை, இந்த மொபைல் கீ போர்ட்டில் அனைத்தையும் செய்ய முடியும். கூல் எஃபக்ட் மற்றும் ஆக்கபூர்வமான கட்டுப்பாட்டுடன் ஒரு சிறிய உடலில் பெரிய சார்பு நிலை ஒலிகள். ஒரு இசைக் கலைஞருக்கு தேவையான சத்தம் அனைத்தும். உள்ளமைக்கப் பட்ட ஆர்பெஜியேட்டர் புதிய யோசனைகளை ஊக்குவிக்கி றது என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Monday, September 23, 2019

மாரடைப்பு வந்தால் என்ன செய்யவேண்டும்?

# பதற்றமடைய வேண்டாம், நோயாளியையும் பதற வைக்காதீர்கள். இது பிரச்சினையை அதிகப்படுத்தும்.
# உடனடியாகக் கொடுக்க வேண்டிய லோடிங் டோஸ் மருந்துகளை அவ சியம் ஒவ்வொருவர் வீட்டிலும் வைத் திருக்க வேண்டும். மயக்கம் அடைந்தி ருந்தால், தெரிந்தால் மட்டும் முதலுதவி செய்ய வேண்டும்.
# ஒரு வேளை சுவாசம் இல்லாமல், நாடித்துடிப்பும் இல்லாமல் இருப்பது தெரிந்தால் நின்ற இதயத்தை செயல் படுத்தும் முதலுதவி செய்ய வேண்டும்  பிறகு அனைத்து வசதிகளையும் கொண்ட அருகில் உள்ள மருத்துவ மனைக்கு உடனே அழைத்துச் செல்ல வேண்டும்
# ஒருவேளை கடுமையான நெஞ்சு வலியுடன் நினைவும் இருந்தால் நீங் களாகவே வாகனத்தை எடுத்துக் கொண்டு மருத்துவமனை செல்லா தீர்கள், துணையே இல்லாத நிலை ஏற்பட்டால் ஒழிய.
# எப்பொழுதும் நீங்கள் எடுக்கும் மருந்துகளின் பெயர்கள், அவசரக் காலத்தில் அழைக்கவேண்டிய மருத் துவர், குடும்ப உறுப்பினர்களின் கை பேசி எண்களை வைத்திருங்கள்
# இரவில் கழிவறை சென்றால் கதவைத் தாழிடாதீர்கள்
# மருத்துவர் பரிந்துரைக்கும் நாட்களில் முறையாகப் பரிசோதனை செய்துக்கொள்ளுங்கள்.

 மாரடைப்பு வராமல் இருக்க.... 

# வாழ்க்கை முறை மாற்றம்
# தினமும் முறையான உடற்பயிற்சி
# புகையிலைப் பயன்பாடு தவிர்ப்பு
# சிகரெட் குடிப்பதை நிறுத்த வேண்டும்
# உயரத்துக்கு ஏற்ப உடல் எடையை சீராகப் பராமரிக்க வேண்டும்
# ஆண்டுக்கு ஒரு முறை இதய நோய் சார்ந்த பரிசோதனை  செய்துகொள்ள வேண்டும்
# மன உளைச்சல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்  யோகா, தியானப் பயிற்சிகள் இதற்கு உதவும்.
# நீரிழிவு நோய், நாள்பட்ட வியாதிகள் இருந்தால் முறையான மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
உணவு முறை:
# நம் மண்ணில் விளைந்த பருவ காலத்துக்கு ஏற்ற பழங்கள், காய்கறிகளை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு 25  50 கிராம் நார்ச்சத்து உணவு தேவை.
# ஒமேகா 3 கொழுப்பு அமிலம் கொண்ட உணவு வகைகள் மிகவும் முக்கியம்.
# அசைவ உணவு, பால், பால் சார்ந்த உணவை குறைந்த அளவு உட்கொள்ள வேண்டும்.
# அதிக அளவு கொட்டை, பருப்பு வகைகளை உண்ண வேண்டும்.
# ஆளிவிதை, பாதாம், வால்நட், பூசணி விதை ஆகியவற்றை உணவில் அளவுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும்
மாரடைப்பு என்னும் பயங்கரவாதம் உங்கள் வீட்டில் நடக்காமல் இருக்க, ஆண்டுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனையை செய்துகொள் ளுங்கள்.
ரத்த அழுத்தம், நீரிழிவு நோயாளிகள் மாதம் ஒன்று அல்லது இரு முறை பரிசோதித்துக்கொள்வது, முறையான உடற்பயிற்சி, உணவு எடுப்பது வருமுன் காக்கும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.


பசித்து உண்ணுதல் வேண்டும்

 உடலால் புறச் செயல்களையும் அகச் செயல்பாடு களையும் ஒருசேர ஒரே நேரத் தில் செய்ய முடியாது. அகச் செயல் பாட்டைத் தூக்கத்தில் மட்டுமே உடலால் நிறைவேற்றிக் கொள்ள இயலும்.
நடைப் பயிற்சியோ உடற்பயிற்சியோ செய்து முடித்ததும் உடலில் களைப்புக்குப் பதிலாக உற்சாகமே தோன்ற வேண்டும். மாறாகக் களைப்பு ஏற்படுமானால் உடலை வருத்தியிருக்கிறோம் அல்லது தவறான முறையில் உடற்பயிற்சி செய்துள்ளோம் என்றே புரிந்துகொள்ள வேண்டும்.
பொதுவாகக் கருதுவதுபோல் உடற்பயிற்சி அல்லது சீரான உழைப்பு அதிகப் பசியைத் தூண்டுவதில்லை. உடலின் சீரான இயக்கமே தரமான செரிமானத்துக்குத் துணைசெய்யும். மரக் கிளையில் ஒரு பறவை வந்து அமர்வதுபோல பசி, நிதானமாக வந்து தனது இருப்பை மெலிதாக உணர்த்த வேண்டும். அந்த உணர்த்துதலுக்குப் பின்னரே நாம் உண்ணவும் வேண்டும்.
நல்ல பசி என்பது நிதானமாக வருவதுதானே தவிர, அடிக்கடி வருவதோ உலுக்கி எடுப்பதுபோல் வருவதோ அல்ல. பசி வந்து பின்பு உண்ணவில்லையெனில் மீண்டும் நினைவூட்டுவதற்குச் சில மணி நேரத்தை எடுத்துக்கொள்வதே நல்ல பசி. பசியைத் தொடர்ந்து பத்து நிமிடங்களில் தலையை வலிக்குமானால் உடனே தலை வலியை நிறுத்துவதற்காக உண்பதைவிட அரை மணி நேரமாவது ஓய்வெடுத்து தலைவலியைத் தணித்தாக வேண்டும். அதற்குப் பின்னர் பசியுள்ளதா என்பதைக் கவனித்து உண்பதே சரியானது.
வயிறு காலியாக இருக்கும் அந்த நேரத் தில் உடலின் உள்ளுறுப்புகள் தமது வேலை களை விரைவாகச் செய்துகொண்டிருக்கும். அப்போது குறைந்த அளவு ஆற்றல் இருப்பதால் பசியுணர்வு இருக்காது. உள்ளேயும் செரிமானத்துக்குரிய தயார் நிலை இருக்காது. எனவே, மறுபடியும் பசி வந்த பிறகு உண்பதே செரிமான உறுப்புகளுக்குப் பாதுகாப்பாகும்.
சாப்பாட்டுக்குக் காத்திருந்து காத்தி ருந்து பசியடங்கிவிட்டது என்று கூறுவது ஆழமாக உணர்ந்து சொன்ன உணர்வாகும். பசியுணர்வு தோன்றாமல் அப்போது பசி இருந்ததே என்று உண்டு வைக்கிற உணவு செரிக்கப்படாமல் நீண்ட நேரம் வயிற்றில் தங்கி இருக்கும். வயிற்றினுள் செரிக்கப்படாத உணவு, வேதி மாற்றங்களுக்கு உள்ளாகி உடலுக்குத் தகுதியற்ற நிலையிலேயே இருந்து, செரிமான உறுப்புகள் தயாரான பிறகு அடுத்த கட்ட பணிகள் நடக்கத் தொடங்கும். இப்படி வயிற்றில் தங்கும் உணவுதான் புளித்த ஏப்பமாக வருவது. புளித்த ஏப்பத்தை அடக்க சோடா, இனிப்பு நீர் போன்ற பானங்களைக் குடித்தால் உள்ளே உருவான வாயு வெளிப்பட்ட இலகு உணர்வு தோன்றுமே தவிர அப் போதும் புளிப்பேறிய உணவு, மேல்நோக் கியோ கீழ்நோக்கியோ உந்தப்படாமல் மேலும் மேலும் அமிலமாகவே மாறும்.
வாய்ப்புண்ணுக்கு ஏற்ற உணவு
அவ்வாறு தேங்கும் அமிலமே வயிற்றி லும் சிறுகுடலிலும் புண்களை ஏற்படுத் துகிறது. வயிற்றில், சிறுகுடலில் புண்கள் தோன்றுவதற்கு முன்னரே நாவிலும் புண்களை உருவாக்கி காரம், புளிப்புச் சுவையுணவை மறுத்து நம்மை எச்சரிக்கிறது உடல். வயிற்றுப் புண் வாய்ப்புண் ஏற்பட்டுள்ளபோது பொதுவாக தயிர்ச் சோற்றைப் பொருத்தமான உணவென்று கருதுகின்றனர். தயிர்ச் சோற்றால் வயிற்றில் புளிப்புத் தன்மை மிகுந்து புண்களை மேலும் அதிகமாக்குமே தவிரக் குறைக்க வாய்ப்பில்லை. அமிலத்தை முறிக்கச் சாத்தியமான மோர் சாதம், நார்த் தன்மை உடைய கைக்குத்தலரிசி கஞ்சி, காரமில்லாத நார்த்தங்காய் ஊறுகாய் போன்றவையே மிகவும் சிறந்தவை.
அமிலம் எப்போது சுரக்கும்?
பலரும் பொதுவாக நம்புவது போலச் சாப்பிடாத நேரத்தில் வயிற்றில் அமிலம் சுரந்து வயிற்றில் புண்கள் ஏற்படுவதில்லை. உணவைச் செரிப்பதற்கான நீர், பசி ஏற் பட்டதும் வயிற்றில் சுரந்து காத்திருப்ப தில்லை. உணவைக் கண்ணால் கண்ட பிறகு, அதன் வாசத்தை மூக்கினால் முகர்ந்த பிறகு, உணவில் கை வைத்த பிறகு உணவின் தன்மை, சுவை, மணம் ஆகியவற்றுக்கு ஏற்பவே சுரப்புகள் சுரக்கத் தொடங்கு கின்றன.
அய்ட்ரோ குளோரிக் அமிலம் போன் றவை செரிமானத்தில் இரண்டாம் மூன் றாம் கட்டங்களிலேயே சுரக்கின்றன. உணவை வாயில் மெல்லும்போது சுரக்கும் உமிழ்நீர், உணவைக் கூழாக்குவதோடு செரிமானத்திலும் பேரளவு துணை செய்கிறது. பொருத்தமான உணவைத் தேர்ந்து உண்டு, உணவு முழுமையாகச் செரிமானமாகுமெனில் நமக்கு உணவின் மீது பெருவேட்கை () ஏற்படாது. அடிக்கடி எதையாவது உண்டுகொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றாது.
பசியையும் உடலையும் முழுமையாகக் கவனித்துப் பார்த்தால் நல்ல பசி வருவதற்கு முன்னர் சிறுநீர் கழிப்பதற்கான உந்துதலும் ஏற்படும். சொல்லப்போனால் சிறுநீர் கழித்த பின்னரே முழுமையான பசி ஏற் படும். உணவை வாயில் மெல்லும் பொழுது சுரக்கும் உமிழ்நீர் தொடங்கி பல்வேறு விதமான செரிமான நீரைச் சிறுநீரகமே சுரந்தளிக்கிறது. செரிமானமும் உணவில் சத்துகளைக் கிரகிக்கும் பணியும் முழு மையாக நடைபெற வேண்டுமானால் நாம் சிறுநீரகத்தையும் செம்மையாகப் பராமரிப்பது அவசியம்.
முழுமையான பசியெடுத்த பின்னர் சாப்பிடுவதைப் பழக்கமாக வைத்திருந்தால் நுட்ப உணர்வும் ஆளுமைப் பண்பும் சிறப்பாக இருக்கும். செரிமானம் முழுமை யாக நடப்பதால் உண்ணக்கூடிய உணவின் அளவும் தானாகவே குறையத் தொடங்கும். வாயுத் தொல்லை, செரிமானம் தொடர்பாக உருவாகும் நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற நெடுங்கால நோய்களும் உருவாகாது. வாழ்வும் இனிதாக இருக்கும்.

மலேசிய உயர்கல்விக்கான உதவித் தொகை வழங்கும் திட்டம்


மலேசிய நாட்டின், சரவக் (Sarawak) நகரில் உள்ள சுவைன்பெர்ன் பல்கலைக்கழகம் (Swinburne University), அதன் பல்வேறு துறைப் பாடங்களில், பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயில விரும்பும் இந்திய மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப் போவதாக அறிவித்துள்ளது.
இந்தப் பல்கலைக்கழகத்தில், தொழில்துறைக்கான இன்றைய தேவைகளின்படி, பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு வாய்ப்புகள் - வர்த்தகம், கம்ப்யூட்டர், டிசைன், என்ஜினியரிங் மற்றும் அறிவியல் பாடங்களில் வழங்கப்படுகின்றன. இது தவிர, பிஸினஸ் நிர்வாகத்தில் பட்ட மேற்படிப்பும், ஆராய்ச்சிப் பணிகளில் முனைவர் பட்டங்களும் கூட வழங்கப்படுகின்றன.
மலேசிய நாட்டின் சுவைன்பெர்ன் பல்கலைக்கழகத்தின் பாடத் திட்டங்கள் மற்றும் அதன் கல்வி உதவித் தொகை திட்டங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வணிக மேலாளர் மற்றும் மாணவர் தேர்வு இயக்குனர்  ஜெகதீஷ் சிங், “எதிர்காலத்தின் தேவை களுக்கு ஏற்ற பட்டதாரி மாணவர்களை உருவாக்கும் பணியில் கவனம் செலுத்தும் எமது பல்கலைக்கழகம் எங்களுடன் உடன்பாடு மேற்கொண்டுள்ள தொழில் நிறுவனங்களுக்கு, அவர்களை அனுப்பி நேரடி தொழில் அனுபவ வாய்ப்பைப் பெற ஏற்பாடு செய்கி றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Sunday, September 22, 2019

இந்திய தேசியம் என்றால் அது இந்து ராஷ்டிரம்தானாம்: விஷத்தைக் கக்குகிறார் அமித் ஷா

பாஜக-வைப் பொறுத்த வரை இந்திய தேசியம் - என்பது, இந்து ராஷ்டிரம்தான் என்று அக்கட்சியின் தலைவர் அமித் ஷா, உண்மையைப் போட்டு உடைத்து உள்ளார்.
இதை ஆங்கிலத்திலோ மேற்கத் திய அறிவியல் மூலமாகவோ விளக்க முடியாது என்றும் அவர் கூறியுள் ளார்.
புதுடில்லியிலுள்ள ஜவஹர் லால் நேரு பல்கலைக்கழகத்தில், தூக்குத் தண்டனைக்கு, எதிராக கூட்டம் நடத்தியதற்காக, மாணவர் பேரவைத் தலைவர் கன்னய்ய குமாரையும் மற்றும் அவரது நண்பர்களையும் தேசத் துரோகச் சட்டத்தில் பாஜக அரசு கைது செய்தது: இந்த கைதைக் கண்டித்துப் பேசியதற்காக, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச்செயலா ளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் து.ராஜா, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் மீதும் மோடி அரசு தேசத்துரோக வழக்கு தொடர்ந்தது.
அதைத் தொடர்ந்து தேசபக்தி' என்ற சொல்லை வைத்து, பலரையும் தேசத்துரோகிகள் ஆக்கும் முயற்சி யில் பாஜக இறங்கியது. இந்து மதத் தின் கற்பனை கடவுளான துர்க் கையை வைத்து உருவாக்கப்பட்ட காவிக் கொடி ஏந்திய பாரத் மாதா' என்ற உருவகத்தை வாழ்த்தி பாரத் மாதா கி ஜே' என்று சொல்லாதவர் கள் எல்லாருமே தேசத் துரோகிகள் என்றும் ஆர்எஸ்எஸ் - பாஜக உள் ளிட்ட சங் பரிவாரங்கள் கூறினர். பாரத் மாதா கி ஜே சொல்லாதவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண் டும் என்றும் முழக்கமிட்டனர். சங்-பரிவாரத்தின் இத்தகைய பாசிச பிரச்சாரங்களுக்கு நாடு முழுவதும் இடதுசாரிகள், அறிவுஜீவிகள், மாணவர்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர். காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேயின் வழிவந்த வர்கள், தேச பக்தி" என்று பேசுவதே மோசடியானது என்றும் சாடிய துடன், இதை எதிர்த்துப் போராட் டங்களையும் நடத்தினர்
ஆனால் இதையெல்லாம் கண்டு கொள்ளாத முறையில், பாஜக தங் களின் கொள்கையான (இந்து) தேசியத்தை விமர்சிப்பவர்களை பொறுத்துக்கொள்ள முடியாது என்று பகிரங்கமான முறையில் பாசிஸ்ட்டுகளுக்கே உரிய வகையில் மிரட்டியுள்ளது. பாசிச கலாச்சாரத் தின். ஒரு பகுதியான தனி மனித வழிபாட்டை உயர்த்திப்பிடிக்கும் வகையில் கடவுள் இந்தியாவிற்கு அளித்த கொடைதான் மோடி என் றும். பிரச்சாரம் செய்யத் தொடங்கி யுள்ளனர். இதையே உறுதிப்படுத் தும் வகையில், அசாமில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பாஜக தலைவர் அமித்ஷா பத்திரிகையா ளர்களிடம் பேசுகையில், 'இந்திய தேசியம் என்பது இந்து ராஷ்டிரம் தான்' என்று கூறியுள்ளார்.
இந்திய தேசியம் என்ற சொல் வெளிப்படுத்தும் கருத்தை, ஆங்கில வார்த்தைகளின் மூலம் விளங்கிக் கொள்ள முடியாது; மேலும், சமயச் சார்பின்மை என்ற வார்த்தையும் இந்தியச் சூழலில் பொருந்தாது; சமயச் சார்பின்மை என்பது குழப் பத்தை ஏற்படுத்தும் வார்த்தை என்று கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2 தொகுதிகள் உட்பட 64 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல்


அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க் கடன்களை தள்ளு படி செய்யக் கோரும் வழக்கில், அதற் கான பரிசீலனை ஏதும் இருக்கிறதா என்பது குறித்த தமிழக அரசின் எழுத்துப்பூர்வ வாதங்கள் அடங்கிய பதிலை நான்கு வாரங்களுக்குள் தாக் கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட் டது.
இந்த தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ். போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் முத்துக்கிருஷ்ணன், தமிழக அரசின் விவசாயிகள் பயிர்க் கடன் தள்ளுபடி திட்டத்தில் முரண்பாடுகள் உள்ளன. அய்ந்து ஏக்கருக்கு மேல் சிறிது கூடுதலாக நிலம் வைத்திருக்கும் விவ சாயிகள் வறட்சி, வெள்ளம் உள் ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டபோதி லும், கடன் தள்ளுபடி நிவாரணத்தைப் பெற முடியவில்லை. அதேபோன்று, அரசு நிர்ணயித்த அளவைவிட அதிக ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிகள் 3 ஏக்கர் என குறைவான சாகு படி நிலத்தை விண்ணப்பத்தில் தெரிவித்திருந்தால் நிவாரணம் பெறும் நிலை உள்ளது. அதேவேளையில், அய்ந்து ஏக்கர் 2 சென்ட் நிலம் வைத் துள்ள விவசாயி சாகுபடி நிலத்தை குறிப்பிடாவிட்டால் நிவாரணம் பெற முடியாத நிலை உள்ளது. 2011 முதல் 2016 வரை தமிழகத்தில் வெள் ளம், புயல், வறட்சி போன்றவற்றால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப் பட்ட நிலையில், பயிர்க் கடன் தள்ளு படி திட்டத்தை அனைத்து விவசாயிகளுக்கும் நீட்டிக்க உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்று வாதிட்டார்.
அப்போது, நீதிபதி ஏ.எஸ். போபண்ணா, இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக அணுகினால் அது வேறுதிசையில் செல்லும். கருணை அடிப்படையில் நிலைமையை நீதி மன்றம் கருத்தில் கொண்டு பார்க் கிறது. இது தொடர்பாக மாநில அரசு பரீசிலித்து பதில் அளிக்க வேண்டும் என்றார்.
தமிழக அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம். நட்ராஜ், மூத்த வழக்குரைஞர்கள் பாலாஜி சிறீநிவாசன், வினோத் கன்னா ஆகியோர் ஆஜராகி, பயிர்க் கடன் தள்ளுபடி என்பது அரசின் கொள்கை முடிவு விவகாரமாகும். நபார்டு வங்கி இது தொடர்பாக கொள்கையை வடிவமைத்துள்ளது. பயிர்க் கடன் திட்டம் சிறு, குறு விவசாயிகளுக்கு மட்டுமே பொருந் தும். அதன்படியே தள்ளுபடி அளிக் கப்பட்டுள்ளது. நிலம் அதிகமாக வைத்திருப்பதால் தள்ளுபடித் திட்ட வரம்பில் பெரு விவசாயிகள் வர வில்லை. சிறு, குறு விவசாயிகள் அதி கமாக இருப்பதால் அவர்கள் பயன் பெறும் நோக்கிலேயே இத்திட்டத்தை அரசு செயல்படுத்தியது என்றனர்.
அப்போது, நீதிபதி ஆர்.பானுமதி, இத்திட்டத்தில் அய்ந்து ஏக்கருக்குள் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் மட்டுமே பயன்பெறும் நிலை உள் ளது. அதைவிட சில செண்ட் நிலம் கூடுதலாக வைத்திருக்கும் விவசாயிகள் பாதிக்கப்பட்டிருந்தால் கூட பயன் பெறாத நிலை உள்ளது. உதாரணத்திற்கு தஞ்சாவூரில் 5 ஏக்கர் வளமான நிலத்தை வைத்திருந்து மூன்று போகம் விளைவிக்கும் விவ சாயிக்கு பயிர்க் கடன் தள்ளுபடி திட்டத்தில் பயன்பெறும் நிலையில், வறட்சி சார்ந்த தருமபுரி, சேலம் பகுதியில் 10 ஏக்கர் நிலம் வைத்திருக் கும் விவசாயிக்கு திட்டப் பலன் கிடைக்காத நிலை ஏற்படும்தானே? எனவே, உயர்நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, அய்ந்து ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு வட்டித் தள்ளுபடி, அபராத வட்டித் தள்ளு படி போன்று ஏதாவது ஒரு பலன் அளிப்பது குறித்து தமிழக அரசு ஏதும் பரிசீலித்திருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நட்ராஜ், அது தொடர்பான விவரங்கள் ஏதும் இல்லை. இந்த விவகாரதத்தில் அர சின் நிதி நெருக்கடியும் சம்பந்தப் பட்டுள்ளது. அரசு நிதி ஆதாரங் களைக் கொண்டே கடன் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது அரசின் கொள்கை விவகாரமாகும். ஆகவே, இதுதொடர்பான விவரங்களைப் பெற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நான்கு வாரங்கள் அவகாசம் வேண் டும் என்றார்.
இதையடுத்து, நீதிபதிகள் அமர்வு, இந்த விவகாரத்தில் மற்ற விவசாயி களுக்கும் பலன் கிடைப்பது தொடர் பாக தமிழக அரசின் பரிசீலனை குறித்த விவரங்கள், மத்தியப் பிரதே சம், ஆந்திரம், மகாராட்டிரம் போன்ற மாநிலங்களில் செயல்படுத்தப்பட் டுள்ள திட்டங்களின் புள்ளி விவரங் கள் ஆகியவை அடங்கிய எழுத்துப் பூர்வ வாதங்களை நான்கு வாரங் களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசார ணையை அக்டோபர் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ஹாங்காங்கில் 16ஆவது வாரமாக தீவிர போராட்டம்


ஹாங்காங் கில் அரசுக்கு எதிரான போராட்டம் 16-ஆவது வார மாக நேற்றும் தொடர்ந்தது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டவர்களை சீனாவுக்கு நாடு கடத்த வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு எதிராகத் தொடங்கிய போராட்டங்கள், அந்த மசோதாவை திரும்பப் பெறுவதாக அரசு அறிவித்த பின்னரும் தொடர்ந்து நடை பெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, வார இறுதி நாளான நேற்று ஹாங்காங்கின் பல்வேறு இடங்களில் ஏராளமானவர் கள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் கண்ணீர் புகைகுண்டு களை வீசியும், ரப்பர் தோட் டக்களால் சுட்டும் போராட் டக்காரர்களை அங்கிருந்து விரட்டினர். போராட்டக்கா ரர்களில் சிலரும் காவல்துறையினர் மீது கற்களை வீசினர். ஒரு பெட்ரோல் குண்டும் காவல் துறையினரை நோக்கி வீசப் பட்டது.
அரசுக் கட்டடமொன்றில் பறந்து கொண்டிருந்த சீன தேசியக் கொடியை போராட் டக் குழுவினர் கழற்றி எரித் தனர் என்று தகவல்கள் தெரி விக்கின்றன.
இதற்கிடையே, போராட் டக்காரர்களுக்கு எதிராக ஹாங்காங் காவல்துறையினர் அடக்குமுறையைக் கையாள்வதாக பன்னாட்டு மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் குற்றம் சாட்டியுள்ளது.

இந்தியாவில் 1.50 கோடி பேர் வேலையிழக்கும் அபாயம்

இந்தியாவில் பொருளாதார மந்த நிலை யால் சுமார் 1.50 கோடி பேர் வேலையிழக்கும்  அபாயம் ஏற்பட்டிருப்பதாக சி.அய். டி.யு. அமைப்பின்  அகில இந்திய பொதுச் செயலர் தபன்சென் 21.9.2019 அன்று கூறினார்.
காஞ்சிபுரம் அருணா மஹாலில் சி.அய்.டி.யு. அமைப் பின் 14 -ஆவது மாநில மாநாடு செப்.19-இல் தொடங்கியது. மாநாட்டின் 3-ஆவது நாள் நிகழ்வாக பிரதிநிதிகள் விவா தம் நடைபெற்றதுடன் தீர் மானங்களும் நிறைவேற்றப் பட்டன. இதில் பங்கேற்க வந்திருந்த அகில இந்திய பொதுச் செயலர் தபன்சென் செய்தியாளர்களிடம் கூறி யதாவது:
உலக அளவில் பொருளா தார  மந்த நிலை ஏற்பட்டு உள்ளது. அது இந்தியாவை யும் விட்டு வைக்கவில்லை. இந்திய மக்களிடையே வாங் கும் சக்தி குறைந்து விட்டது. வாங்கும் சக்தி குறைந்து போனதால் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இத னால் இந்தியாவில் சுமார் 1.50 கோடி பேர் வேலையிழக்கும் அபாய நிலையில் உள்ளனர். இது தொடர்ந் தால் மக்களின் வாங்கும் சக்தி மேலும் வீழ்ச்சியடைந்து விடும்.
பல தொழிற்சாலைகளில்  தொழிலாளர்கள் தற்காலிக மாகவும், நிரந்தரமாகவும் வேலையிழந்து வருகின்றனர்.
சுரங்கத் தொழிலில் ஈடு படுவோர், பாதுகாப்புத் துறையில் பணியாற்றுவோர், வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கத்தினர் உள் பட பலரும் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். மத்திய அரசு முதலாளிகளுக்கு ஏற்றவாறு சலுகைகளை அறிவித்துக் கொண்டே இருக்கிறது. சாதாரண மக்களைப் பற்றி கவலைப்படவில்லை.
மத்திய அரசின் இச்செய லைக் கண்டித்தும், இப்பிரச் சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வலியுறுத்தியும் வரும் 30-ஆம் தேதி மாபெரும் போராட்டத்தை அறிவிக்க இருக்கிறோம் என்றும் தபன் சென் தெரிவித்தார்.
நிகழ்வில், சி.அய்.டி.யு. மாநிலத் தலைவர் அ.சவுந்தர ராஜன், காஞ்சிபுரம் மாவட் டத் தலைவர் எஸ்.கண்ணன், மாவட்டச் செயலர் இ.முத் துக்குமார், விவசாயிகள் சங் கத் தலைவர் கே.நேரு உள் ளிட்ட நிர்வாகிகள் பலர் உட னிருந்தனர்.

‘நீட்’ தேர்வு திணிப்பால் தொடரும் அவலம்

மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கையில் ஆள்மாறாட்டம், போலிச்சான்றிதழ்: மோசடிகள் அம்பலம்

தேனி மருத்துவக் கல்லூரி ‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்டம் சம்பவம் வெளிவரும் முன்பாகவே, மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் போலி மாணவர் சேர்க்கை சான்றிதழ் கொடுத்து ஆந்திரா, பீகாரைச் சேர்ந்த 2 மாணவர்கள் சேர முயன்ற விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த செப்.10ஆ-ம் தேதி மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்வ தற்கு ஆந்திராவைச் சேர்ந்த மாணவர் ரியாஷ் என்பவர், அவரது குடும்பத்தின ருடன் எம்பிபிஎஸ் சேருவதற்காக வந் துள்ளார். அவ ரது சான்றிதழ்களை பேராசிரியர்கள் சரிபார்த்ததில் அவரி டம் ‘நீட்’ தேர்ச்சி சான்றிதழும், ‘கவுன்சிலிங்’கில் பங் கேற்ற சான்றிதழும் இல்லை. போலி மாணவர் சேர்க்கை சான்றிதழ் கொண்டு வந்தது தெரிய வந்தது.
இதுதொடர்பாக கல்லூரி ‘டீன்’ வனிதா, மாணவர் ரியாஷை கையும் களவுமாக பிடித்து தல்லாக்குளம் காவல்துறையில் புகார் மனுவுடன் ஒப்படைத்துள்ளார். காவல்துறையினர் அவரிடம் விசாரித்தனர். மாணவர் ரியாஸ், ‘நீட்’ தேர்வு எழுதாமலே டில்லியில் உள்ள மோசடிக் கும்பலிடம் பணத்தைக் கொடுத்து, போலி மாணவர் சேர்க்கை தேர்ச்சி பெற்று, அதுதான் மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கான உண் மையான சான்றிதழ் என நம்பி மருத்துவக் கல்லூரியில் சேர முயற்சித் ததும் தெரியவந்தது.
மாணவரை ஏமாற்றிய கும்பல் டில்லியைச் சேர்ந்தவர்கள் என்ப தால், தல்லாக்குளம் காவல்துறையினர் அவரை மதுரை மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைத்த னர். அவர்கள் மாணவரிடம் விசாரித் தனர். அதற்கு அவர், தான் ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ய வில்லை, போலி சான்றை உண்மை யான சான்று என்று பணத்தை கொடுத்து ஏமாந்து விட்டதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர், டில்லி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துவிட்டு, அலட்சியமாக அவரை அனுப்பி வைத் துள்ளனர். மாணவர் ரியாஸ் தப்பித்தால் போதும் என்று ஆந்திராவுக்கு சென்று விட்டார்.
மற்றொரு மாணவர்
ரியாஸைபோல், அதற்கு முன்பு மதுரை மருத்துவக் கல்லூரிக்கு பீகாரைச் சேர்ந்த நிதிவர்மன் என்ற மாணவர், போலி மாணவர் சேர்க்கை சான்றிதழை கொண்டுவந்து சேர முயற் சித்ததாகவும், மருத்துவக் கல்லூரி நிர் வாகம் அவரை பிடித்து காவல் நிலை யத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்த போது அந்த மாணவர் தப்பிஓடிவிட் டார்.
தற்போது தேனி சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ளதால் மதுரை காவல்துறையினருக்கு, இந்த விவகாரம் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து மருத்துவக் கல்லூரி உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘போலி மாணவர் சேர்க்கை சான்று கொண்டு வந்த மாணவர்களுக்கு, ‘நீட்’ தேர்வு எழுத வேண்டும், அதில் தேர்ச் சிப்பெற்று கவுன்சிலிங்கில் கலந்தாய்வில் பங்கேற்றுதான் கல்லூரியை தேர்வு செய்ய வேண்டும் என்ற அடிப்படை புரிதல்கூட இல்லை. அறியாமையால் மோசடி கும்பலிடம் லெட்டர் பேடில் போலி மாணவர் சேர்க்கை சான்று பெற்று வந்து ஏமாற்றம் அடைந்துள் ளனர். இந்த மாணவர்களுக்கும், ‘நீட்’ தேர்வு விவகாரத்துக்கும் எந்த சம்பந் தமும் இல்லை’’ என்றார்.
டில்லியை சேர்ந்த கும்பலின் கைவரிசையாம்
மதுரை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கூறும்போது, ‘‘டில்லியைச் சேர்ந்த கும்பல்தான், மதுரை மருத்துவக் கல்லூரியில் சேர வந்த ஆந்திரா மாண வர் ரியாசையும் ஏமாற்றி உள்ளனர். அவர்கள்தான், ரியாசையும், மற் றொரு மாணவரையும் போலி சான்றிதழை கொடுத்து மருத்துவக் கல்லூரியில் சேர அனுப்பியுள்ளனர். இதற்காக மாண வர்கள் அந்த கும்பலிடம் ரூ.8 லட்சம் பணமும் கொடுத்து ஏமாந்துள்ளனர்.
இவர்கள் போலி மாணவர் சேர்க்கை சான்றுடன் வந்த நேரத்தில் மதுரை மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை முடிந்துவிட்டதால் எளிதாக சிக்கிக் கொண்டனர். இந்த தகவலை டில்லி காவல்துறையினருக்கு தெரிவித்தும் அவர்கள் இந்த விஷயத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளாததால் மாணவர் ரியாசை கைது செய்யாமல் அனுப்பி னோம். தற்போது அவர் தலைமறைவாகி இருக்கலாம்” என்றனர்.
தேனிக்கும் மதுரைக்கும் தொடர்பா?
தேனி மருத்துவக் கல்லூரியில் ஆள் மாறாட்டம் செய்து எம்பிபிஎஸ்சி-ல் சேர்ந்த உதித் சூர்யா விவகாரத்திலேயே காவல்துறையினரால் இன்னும் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. தற்போது மதுரை மருத்துவக் கல்லூரியிலும் 2 பேர் போலி சான்றிதழ் கொடுத்து சேர முயன்ற விவகாரமும் பெரிதாகி உள்ள தால், மருத்துவக்கல்வி அதிகாரிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதேபோல் நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்க முயற்சித்த, மாணவர் களை பெரிய அளவில் மோசடி கும்பல் ஏமாற்றி இருக்க வாய்ப்புள்ளதாகவும், அதன் பின்னணியில் மிகப் பெரிய நெட்வொர்க் செயல்பட்டு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
தலைமறைவான மாணவர்களைப் பிடித்து முழுமையாக விசாரித்தால் இந்த விவகாரத்தில் உண்மை தகவல்கள் வெளியாகும். இதற்கிடையில் காவல் துறையினர் மதுரை மருத்துவக் கல்லூ ரியில் சேர போலி சான்று வழங்கிய டில்லி கும்பலுக்கும், தேனி கல்லூரி சம்பவத்துக்கும் தொடர்பு இருக்கிறதா என விசாரிக்கத் தொடங்கியுள்ளனர்.


வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம்

வங்கித் துறையில் மிகப்பெரிய சீர்திருத்த மாக, பல்வேறு பொதுத் துறை வங்கிகளை இணைப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி அறிவித்தார். மத்திய அரசின் இந்த இணைப்பு நடவடிக்கைக்குப் பிறகு 12 பொதுத் துறை வங்கிகள் மட்டுமே இருக்கும். பொதுத்துறை வங்கிகளை சர்வதேச தரத்துக்கு மாற்றும் முயற்சியாகவும், வங்கி களின் கடன் வழங்கும் திறனை அதிகப்படுத்தவும் இந்த நடவடிக் கையை மத்திய அரசு மேற்கொண் டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட்டதற்கு வங்கி அதிகாரிகள் சங்கம் தங்களது கடும் எதிர்ப்பை பதிவு செய்தது. இந்த நிலையில், வருகிற செப் டம்பர் 26 மற்றும் 27ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் அறிவிக்கப் பட்டுள்ளது. அகில இந்திய வங்கி அலுவலர் கூட்டமைப்பு, அகில இந்திய வங்கி அலுவலர் சங்கம், இந்திய தேசிய வங்கி அலுவலர் மற்றும் வங்கி அதிகாரிகளின் தேசிய அமைப்பு இந்த போராட் டத்தை அறிவித்துள்ளன. பொதுத் துறை வங்கிகளை இணைத் தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற செப்டம்பர் 26 (வியாழன்) மற்றும் 27ஆம் (வெள்ளி) தேதி களில்,வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், செப்டம்பர் 28 மற்றும் 29ம் தேதி முறையே 4வது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தொடர்ச்சியாக 4 நாட்கள் வங்கிகள் செயல்படாத சூழ் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் ஒரு நாகரிகமாக "கீழடி நாகரிகம்" இருக்கும்: தொல்லியல் ஆய்வாளர்கள்

'கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்தக் குடி தமிழ்க்குடி' என்ற பழ மொழியை நிரூபித்துக்காட்டி யுள் ளது கீழடி அகழாய்வு. கங்கை நகர நாகரிகம் போன்று தமிழகத்தில் இரண் டாம் நகர நாகரிகம் இருந்ததற்கான பல்வேறு சான்றுகள் கீழடி அகழாய்வில் கிடைத்துள்ளன. தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் ஒரு நாகரிகமாக 'கீழடி நாகரிகம்' இருக்கும் என்று கூறுகின்றனர் தொல் லியல் ஆய்வாளர்கள்.
கீழடி கிராமம்: வைகை நதியின் தென்கரையில் மது ரையில் இருந்து தென்கிழக்கே சுமார் 20 கிமீ தொலை வில் உள்ளது சிவகங்கை மாவட் டம் கீழடி கிராமம். கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் நடத்தப் பட்ட அகழாய்வில் சங்க காலத் திற்கும் பழைமையான பொருட்கள் கண்ட றியப்பட் டுள்ளன.
கீழடி மூன்று கட்ட ஆய்வுகள்: இதற்காக, இந்திய தொல்லியல் துறை கடந்த 2014ஆம் ஆண்டு ஆய்வைத் தொடங்கியது. அமர்நாத் ராமகிருஷ் ணன் என்பவரது தலைமையில் முதல் இரண்டு கட்ட ஆய்வுகள் நடத்தப் பட்டன. இதில் கிடைத்த மண் பாண்டப் பொருட்கள், கல் மணிகள் உள்ளிட்டவை உலகில் பல்வேறு இடங்களில் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டன. கீழடியில் 2 முதல் 3 மீ அளவில் நிலத்திற்கடியில் கிடைத்த இந்தப் பொருட்கள் கி.மு.290 ஆண்டுகள் பழமை யானது என்று கூறப்பட்டது.
அடுத்ததாக நடைபெற்ற 3ஆம் கட்ட ஆய்வு முடிவில் கட்டுமானப் பணிகளுக்கானச் சான்று எதுவும் கிடைக்க வில்லை என்று சிறீதர் தலை மையிலான குழு அறிக்கை சமர்ப் பித்தது. இதன்பின்னர், கீழடி அகழாய்வை மத்திய அரசு கைவிட்டது.
கீழடி 4ஆம் கட்ட ஆய்வு: பின்னர், தமிழ் ஆர்வலர்கள் வலியுறுத்தலின் பேரில் தமிழக தொல்லியல் துறை இதனை கையில் எடுத்தது. 4ம் கட்ட அகழாய்வு ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. அதன் படி, 4ஆம் கட்ட அகழாய்வு முடிவின் அறிக்கையை தமிழக தொல்லியல் துறை சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முதல் மூன்று கட்ட அகழாய் வின்படி, கீழடியில் கிடைத்த பொருட்கள் 2200 ஆண்டு களுக்கு பழமையானவை என்று கருதப்பட்டது. ஆனால்,  4ஆம் கட்ட ஆய்வில் இது மேலும் 400 ஆண்டு களுக்கு பழமை யானது என்று தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து, 5ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் குறித்த ஆய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. 6ஆம் கட்ட அகழாய் வுக்கான இடம் தேர்வு செய்யும் பணிகளும் தொடங்கியுள்ளன. அடுத்த கட்டமாக கீழடிக்கு அருகில் உள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங் களில் அகழாய்வு செய்ய இருப்ப தாகவும், ஆதிச்சநல்லூரிலும் புதிதாக ஆய்வுகளைத் தொடங்க விருப்பதாக மாநில தொல்லியல் துறையின் செய லாளர் உதயச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். கங்கை நகர நாகரிகம் போன்று இரண் டாம் நிலை நகர நாகரிகம் தமிழகத்தில் இல்லை என்று கருதப்பட்ட நிலையில் கீழடி ஆய்வுகள், தென் இந்தியாவின் வர லாற்றை, முக்கியமாக தமி ழர்களின் வரலாற்றையே மாற்றி எழுதப் போகிறது என்று கூறுகிறார்கள் தொல் லியல் ஆய்வாளர்கள்.

Saturday, September 21, 2019

கல்வி நிலையங்களில் ஜாதிப் பாகுபாடு: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

கல்வி நிலையங்களில் ஜாதிப் பாகுபாட்டுடன் மாணவர்கள் நடத்தப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரி தாக்கல் செய்யபட்ட மனுக்கள் மீது 4 வாரங்களில் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அய்தராபாதில் உள்ள மத்திய பல்கலைக்கழக்கத்தில் ஆராய்ச்சி படிப்பை படித்து வந்த மாணவர் ரோகித் வேமுலா, ஜாதிய பாகுபாடு காரணமாக, கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தற்கொலை செய்து கொண்டார்.
இதேபோல், மும்பையில் உள்ள தோபிவாலா தேசிய மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த மாணவி பாயல் தாத்வியை 3 மருத்துவர்கள் ஜாதிய ரீதியில் துன்புறுத்தியதால், அவர் கடந்த மே மாதம் தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், உயர்கல்வி நிலையங்களில் நிலவும் ஜாதிப் பாகுபாட்டுக்கு முடிவுகட்ட வலியுறுத்தி ரோகித் வேமுலாவின் தாயாரும், பாயல் தாத்வியின் தாயாரும் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் என்.வி.ரமணா, அஜய் ரஸ்தோகி ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங் முன்வைத்த வாதம்:
ஜாதிப் பாகுப்பாட்டுடன் நடத்தப்படுவதால், பல்கலைக்கழக வளாகங்களில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்ந்து கொண்டிருக்கிறது. கல்லூரி வளாகத்துக்குள் மாணவ, மாணவியர்களை ஜாதிப் பாகுபாட்டுடன் நடத்தக் கூடாது என்று பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகளை வகுத்துள்ளது. ஆனால், அவை அமல்படுத்தப்படவில்லை. எனவே, கல்வி நிறுவனங்களில் வாழ்வுரிமை, சமத்துவ உரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை அளிக்க வேண்டும் என்று இந்திரா ஜெய்சிங் வாதிட்டார். அதைத் தொடர்ந்து, இந்த மனுக்கள் மீது 4 வாரங்களில் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தமனி நோய்க்கு சிறப்பு மருத்துவ சிகிச்சை மய்யம் தொடக்கம்

தமனி நோய்கள் விழிப்புணர்வு நாளான 19.9.2019 அன்று சென்னை சிம்ஸ்(SIMS) மருத்துவமனையில் 'தமனி நோய் சிகிச்சை மய்யம்' திறக்கப்பட்டது.
இந்நிகழ்வில் 'இந்து' என். ராம், சிம்ஸ் மருத்துவமனையின் துணைத் தலைவர் மருத்துவர் ராஜு சிவசாமி, இதயம் மற்றும் தமனி நோய் நிறுவன (ICAD) இயக்குநர்  மருத்துவர் வி.வி. பாஷி உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தார்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 3 முதல் 4 லட்சம் பேர் தமனி நோய்களால்  பாதிக்கப்படுகின்றனர். ஆனால், வெறும் 1,000 பேர் மட்டுமே சிகிச்சை பெறுகின்றனர். தமனி நோய் சிகிச்சை அளிக்கும் மய்யங்கள் மிகவும் குறைவாக இருப்பதே இதற்கு காரணம் என மருத்துவர்கள் இந்நிகழ்வில் தெரிவித்தனர்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு ‘மனித நேய வாழ்நாள் சாதனையாளர் விருது’

அமெரிக்க மனிதநேயர் சங்கம் வழங்குகிறது



அமெரிக்காவில் 75 ஆண்டுகளாக மனிதநேயத் திற்கு குரல் கொடுக்கிற, அறிவியல் மனப்பான்மை கொண்ட, அறம் சார்ந்த சுயநலமற்ற, பொதுநல நோக்குடைய அமைப்பு அமெரிக்க மனிதநேயர் சங்கம் (American Humanist Association).
இந்த அமைப்பின் சார்பில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு ‘மனித நேய வாழ்நாள் சாதனையாளர் விருது’ (Humanist Lifetime Achievement Award) வழங்கப்படவுள்ளது. அவரது சமூகநீதி மற்றும் சுயமரியாதை குறித்து மக்களிடம் 75 ஆண்டுகளுக்கு மேலாக விழிப்புணர்வு ஏற்படுத்தி அவற்றை அடை வதிலும், பெரியார் வழியில் மேற்கொண்டு ஆற்றிவரும் மனிதநேயத் தொண்டு களைப் பாராட்டி வழங்கப்படுகிறது.
இவ்விருது 1953ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. முதல் விருதினை ஆன்டன் ஜே கார்ல்சன் (Anton J. Carlson) பெற்றார். இவ்விருதினை ஜேம்ஸ் ரண்டி (James Randi), பால்கர்ட்ஸ் (Paul Kurtz) மற்றும் இர்னி சேம்பர்ஸ்  (Ernie Chambers) உள்ளிட்டோர் பெற்றுள்ளனர். 1996ஆம் ஆண்டு புகழ் பெற்ற உயிரியல் அறிஞர் ரிச்சர்ட் டாக்கின்ஸ் (Richard Dawkins) பெற்றுள்ளார். இவ்விருதினைப் பெறும் முதல் இந்தியர் ஆசிரியர் கி.வீரமணி என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அமெரிக்கா வாஷிங்டனில் இன்று (21.9.2019) தொடங்கி நாளை (22.9.2019)வரை இரண்டு நாள்கள்  பன்னாட்டு மனிதநேய - சுயமரியாதை மாநாடு நடை பெறுகிறது.
மாநாட்டின் இரண்டாம் நாளில் (22.9.2019) இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு (வாஷிங்டன் நேரப்படி காலை 9 மணி) இவ்விருது வழங்கப்படுகிறது. இவ் வமைப்பின் செயல் இயக்குநர் ராய் ஸ்பெக்ஹார்ட் விருதினை வழங்குகிறார். இந்நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உலகின் பல நாடுகளிலிருந்தும் மனிதநேய அமைப் பினர், பகுத்தறிவாளர்கள், அறிஞர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். இரண்டு நாள் மாநாட்டிலும் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி கலந்துகொண்டு உரையாற்றுகிறார். பல்வேறு பல் கலைக் கழகங்களின் மாண்பமை பேராசிரியர்கள், கல்வியாளர்கள், சமூகநீதி உணர்வாளர்கள் கலந்து கொள்கின்றனர். தமிழ்நாட்டிலிருந்து 50 பேராளர்கள் பங்கேற்கிறார்கள்.
சென்னை விமான நிலையத்தில் தமிழர் தலை வருக்கு வாழ்த்துகளை தெரிவிக்கும் விதமாக ஏராளமான திராவிடர் கழகத்தினரும் பொதுமக்களும் திரண்டு மகிழ்ச்சியோடு உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.

Thursday, September 19, 2019

"பா.ஜ.க. வுக்கு வாக்களிக்காத இஸ்லாமியர்கள் பாகிஸ்தான் ஆதரவாளர்களாம்!''

கூறுகிறார் கருநாடக பாஜக அமைச்சர்
பெங்களூரு, செப்.19 பா.ஜ.க-வுக்கு வாக்களிக்காத இஸ்லாமியர்கள் துரோகிகள்,பாகிஸ்தானுக்கு ஆதரவானவர்கள்''  என கருநாடக பா.ஜ.க.  அமைச்சர் கே.எஸ்.ஈஸ் வரப்பா சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்துள்ளார்.
பாஜக ஆட்சியில் சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறை அதிகரித்துள்ளது. பாஜ கவின் தலைமைப்பீடமாக கருதப் படும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங் பரிவார் அமைப்புகள் இஸ்லாமிய மக்கள் மீதான வன்மத்தை நாளுக்கு நாள் தொடுத்து வருகிறது.
பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் கள் மற்றும் அமைச்சர்கள் இஸ்லாமி யர்களுக்கு எதிரான கருத்தை தொடர்ந்து பேசிக்கொண்டே வருகின்றனர். இதனை பா.ஜ.க தலைமை கண்டிக்காமல் கைகட்டி வேடிக்கை பார்ப்பதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
இந்நிலையில், கருநாடக மாநி லத்தின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா இஸ் லாமிய மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் சில காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பா.ஜ.க. வில் சேருவதற்கு விருப்பம் தெரிவித்திருந்தனர்.
என்னுடைய தொகுதியில் 50 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் உள்ளனர். அவர்களிடம் நான் ஒருபோதும் வாக்குகேட்கவில்லை. ஆனாலும் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி பெறு கிறேன்'' என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், நான் இஸ்லாமியர்கள் குறித்து பேசுவதை ஊடகங்கள் செய்தியாக்க வேண்டும் என்பதால் தான் பொது இடத்தில் இப்படி பேசுகிறேன் என பகிரங்கமாக தெரிவித்த அவர், இந்தியாவின் மீது தேசப்பற்று உள்ள இஸ்லாமியர்கள் பா.ஜ.க. வுக்கு தான் வாக்களிப்பார்கள். அவ்வாறு வாக்களிக்காத இஸ்லாமி யர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவான வர்கள், அவர்கள் தேசத்துரோகிகள்' என்று தெரிவித்தார்.
முன்னதாக நடந்து முடிந்த நாடா ளுமன்றத் தேர்தல் பிரச்சாரக் கூட் டத்தில், இஸ்லாமியர்கள் பாஜகவின் வேட்பாளராக நிற்பதற்கு பா.ஜ.க அலுவலகத்தை 10 ஆண்டுகள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்றும் அவர் பேசியுள்ளார்.

'இரணியன் அல்லது இணையற்ற வீரன்' நாடகம் - ஒரு விமர்சனம்

*மயிலாடன்
'இரணியன் அல்லது இணையற்ற வீரன்' என்ற நாடகம் புரட்சிக்கவிஞர் - பாரதிதாசன் அவர் களால் எழுதப்பட்டதாகும்.
வரலாற்றில் ஆரியர் - திராவிடர் போராட்டம் என்பது தொடர்ந்து நடந்து கொண்டே வந்தி ருக்கிறது. ஆரியர்கள் பூதேவர்களாகவும், திரா விடர்கள் அசுரர்களாகவும், தஷ்யூக்களாகவும், இராட்சதர்களாகவும் சித்தரித்து இதிகாசங்களும், புராணங்களும் வேதங்களும் சித்தரிக்கப்பட்டுள்ளன.
இந்து மதக் கடவுள்களில் சிவன் அழித்தல் கடவுளாகவும், பிர்மா படைத்தல் கடவுளாகவும் மகா விஷ்ணு காத்தல் கடவுளாகவும் உரு வாக்கப்பட்டனர்.
இராமாயணத்தில்கூட மகா விஷ்ணுதான் இராமன் அவதாரம் எடுத்து அசுரர்களை வீழ்த்தினான் என்று சொல்லப்படவில்லையா?
அதே போல ஆரிய பார்ப்பனர் களைக் கடுமையாக எதிர்த்த இரணியனை - இரணியன் மகன் பிரகலாதனை மூளைச் சலவை செய்து, பெண் மூலம் மயக்கி ஆரியத்தின் வலையில் வீழச் செய்து, சூதாக இரணியனைப் பார்ப்பனர்கள் எப்படி கொன்றார்கள் என்பதுதான் புரட்சிக் கவிஞரின் 'இரணியன் அல்லது இணையற்ற வீரன்' எனும் ஒப்பற்ற நாடகம். மகாவிஷ்ணு நரசிங்க அவதாரம் (சிங்கம்) எடுத்து இரணியனைக் கொன்றான் என்கிறது ஆரியப் புராணங்கள்.
இந்த நாடகம் 1934இல் புரட்சிக் கவிஞரால் எழுதப்பட்டது. முதன் முதலாக தந்தை பெரியார் தலைமையில் 9.9.1934 அன்று அரங்கேற்றப்பட்டது.  குத்தூசி குருசாமி இரணியனாகவும், கே.எம். பாலசுப்பிரமணியம் பிரகலாதனாகவும் வேடந் தரித்து நடித்தனர்.
இந்த நாடகம் சென்னையில் அருங் காட்சியகக் கலையரங்கத்தில் கடந்த 16.9.2019 அன்று மாலை வெளிப்படை அரங்க இயக்கத் தினரால் சிறப்பாக நடத்தப்பட்டது. (1971ஆம் ஆண்டில் சேலத்தில் நடத்தப்பட்ட மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டன்று இரவும் இதே நாடகம் நடத்தப்பட்டதும் உண்டு)
புதிய தலைமுறையினருக்கு இந்தப் பழைய நாடகம் ஈர்ப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்தது என்பது உண்மைதான்.
ஆனால் நாடகத்தைப் பார்த்தவர்கள் ஏமாற்றமே அடைவார்கள். அந்த நாடகத்தை ஒரு மணி 45 நிமிடத்திற்குச் சுருக்கி, இந்த நவீனத்திற்கு ஏற்றாற் போல யுக்திகளைக் கையாண்டு,  வெகு நேர்த்தியாக நேரம் சென்றதே தெரியவில்லை என்கிற அளவுக்கு நாடகத்தைச் சுவை குன்றா மலும், விறுவிறுப்பாகவும் நடத்திய பாங்கு போற்றத்தக்கது. அரங்கமே நிரம்பி வழியும் அளவுக்குக் கூடிய பார்வையாளர்கள் இடை இடையே கரஒலி எழுப்பி தங்கள் இரசனையை - உணர்வை வெளிப்படுத்திக் கொண்டனர்.
நாடகத்தில் பங்கு கொண்டோர்
நெறியாளுகை: சி. இராமசாமி, நிகழ்கலைத் துறை - புதுவைப் பல்கலைக்கழகம், அய்.டி.அய். - சிங்கப்பூர் முன்னாள் மாணவர்
இனப் பெரும்பான்மைவாதமும் புராண இதிகாசக் கதைகளின் அடிப்படையில் கட்டமைக் கப்படும் சமூகப் பண்பாடும் விரைந்து தமது மேலாதிக்கக் கொடுங்கரங்களைப் பரப்பும் நெருக் கடியான நிகழ்காலச் சூழலில் பாவேந்தர் பாரதி தாசனின் 'இரணியன் அல்லது இணையற்ற வீரன்' நாடகம் நிகழ்த்தப்படவேண்டிய தேவை உணரப் படுகிறது. கொடிய அரக்கன் என்று அறியப்பட்ட இரணியனை தன்மானமும் இனப்பற்றும் மிகுந்த பெரும் வீரனாகச் சித்தரித்துள்ளார் புரட்சிக் கவிஞர். இத்தகைய சித்தரிப்பு தமிழ் மக்களின் சுயமரியாதை உணர்வை உயர்த்தும் வலிமை மிக்கது என்பதை உணர்ந்திருந்த தந்தை பெரியார் இந்நாடகத்தின் முதல் நிகழ்வினை தலைமை யேற்று 1934-இல் நடத்தினார், தானே பிரதியையும் அச்சேற்றினார். வரலாற்றிலும் தொன்மங்களிலும் ஆதிக்க / ஆளும் வர்க்கங்களால் வஞ்சிக்கப்பட்ட, எதிர்மறையான வர்களாக முத்திரை சாற்றப்பட்ட மாந்தர்களின் நியாயத்தைப் பேசுகிறது இந்த நாடகம். தமது சமூக, பண்பாட்டு, அரசியல் ஆதிக்கத்தை நிலைநிறுத்தி தக்கவைத்துக்கொள்ள ஆளும் வர்க்கங்கள் புரியும் துரோகங்கள், புரட் டுக்கள், மூளைச் சலவைகள், சூழ்ச்சிகள், கொலைகள் என இரணியனும் அவனது இனத்த வரும் எதிர்கொள்ளும் எல்லா நிகழ்வுகளும் இடம் மற்றும் கால எல்லைகளைக் கடந்து இன்றளவும் தொடர்ந்து கொண்டேதான் இருக் கின்றன. இந்த நாடகத்தின் சமகாலப் பொருத்தப் பாட்டையும்  பிரதியின் ஆழத்தில் காணக் கிடைக்கும் நுட்பமான அரசியல் பண்பாட்டு விமர்சனங்களையும் புதிய அரங்கப் பரிமாணத்தில் வெளிப்படுத்தும் முயற்சியாக இந்த நிகழ்த்துகை வடிவமைக்கப்பட்டுள்ளது.
நடிகர்கள்: அ. அறிவழகன், பிரேம்நாத், சுதன், டெல்ஃபின், மாணிக்கம், பாபு, அனுஷா, நேதாஜி ஆகியோர்.
நாடக அமைப்பு  (Dramaturgy): த. விவே கானந்தராசா, ஒத்திகை ஒருங்கிணைப்பு: ரெஜின் ரோஸ், இசை ஒருங்கிணைப்பு: சமனராஜா, பாடகர்: சமணராஜா, பர்க்கஷன் (Percussion): விநாயகம், கிட்டார் (Guitar): ஆனந்தன் ராசு.
தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு: சுதன், உடை, ஒப்பனை: அ. அறி வழகன், அரங்கப் பொருட்கள்: கார்த்தி, அறிவழகன், எழுத்தாக்கம்: கு. முருகானந்தன், மக்கள் தொடர்பு & நிர்வாகம்: ராஜா, சுரேஷ்.
தொடர்புக்கு: வெளிப்படை அரங்க இயக்கம், குருவிநத்தம், பாகூர், புதுச்சேரி. மின்னஞ்சல்: misaam.84@gmail.com
நாடகக் கலையில் முனைவர் பட்டங்களைப் பெற்றவர்கள் நாட கத் துறையில் பலதளங்களில் பணியாற்றிக் கொண்டு இருப்ப வர்கள் எல்லாம் இந்த நாடகத்தில் பங்கேற்று நடித்தனர் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
தமிழர் தலைவர் பாராட்டு
நாடகத்திற்கு வருகை தந்திருந்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள், இயக்குநரையும், முக்கிய கதாபாத்திரங்களாக நடித்தவர்களையும் பலபடப் பாராட்டி, அவர் களுக்கெல்லாம் சால்வை அணிவித்து உற்சாகப் படுத்தினார்.
இந்தக் கால கட்டத்தில் இந்த நாடகம் மிகவும் தேவையானது என்றும், நாட்டின் பல பகுதி களிலும் அரங்கேற்றப்பட வேண்டும் என்றும், திராவிடர் கழகம் இதற்கு எல்லா வகையிலும் உதவியாக இருக்கும் என்றும் தமிழர் தலைவர் பேசியது நாடகக் கலைஞர்களை மிகவும் உற்சாகப்படுத்தியது.
இராம ராஜ்ஜியத்தை உண்டாக்கப் போகி றோம் என்று ஒரு கூட்டம் கிளம்பியிருக்கிறது. இந்த நேரத்தில் இரணியன் அல்லது இணையற்ற வீரன்நாடகம் என்பது மிகப் பெரிய தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் என்பதில் அய்யமில்லை.
பாகவதம்

இரணியன் சொல்லுவதை கேளுங்கள்!
பாகவதத்தில் இரணியன் கதையில் சொல்லப்படுவதாவது: இரணிய கசிபு சொல் லுகிறான்:
"ஓ தானவர்களே! இந்த விஷ்ணு வின் - சகாயத்தால், நமது எதிரிகளும் அற்பர் களுமான தேவர்கள் என் சகோதரனைக் கொன்றார்கள். அந்த மகா விஷ்ணு ஒரு பட்ச பாதகன், தந்திரக்காரன், சிறுவன் போல் தம்மைப் போற்றுகிறவன். இஷ்டம் போல் நடப்பவன். இப்படிப்பட்டவனான அந்த விஷ்ணுவை வெட்டி வீழ்த்தப் போகிறேன். விஷ்ணுவைக் கொன்றால் தேவர்களும், தேவர்களின் கூட் டமும் வேரற்ற மரம் போல் வீழ்ந்து விடுவார்கள். ஆதலால் நீங்கள் முதலில் பிராமணர்கள் இருக்கும் இடம் சென்று அவர்களது தபசு, யாகம்,வேதம் அத்யயனம், விரதம், தானம், முதலாகிய இவைகளைச் செய்பவர்களைக் கொல்லுங்கள்...
பிராமணர்களால் செய்யப்படும் அனுஷ் டானம் யாகம் மகாவிஷ்ணு இருப்பதற்குக் காரணமாயிருக்கிறது. ஆகையால் எந்த எந்த தேசத்தில் பிராமணர்கள் இருக்கிறார்களோ, எங்கெங்கு வேதாந்தியானம் செய்யப் படுகிறதோ எந்த தேசத்தின் வருணாச்சிரமத்திற்கு உரிய கர்மங்கள் அனுஷ்டிக்கப்படுகின்றதோ அந்த தேசத்திற்குச் சென்று அவர்களை அக்கினியை வைத்துக் கொளுத்துங்கள், நாசஞ் செய்யுங்கள், என்றான். உடனே தானவர்கள் சென்று பிராமணர்கள் இருக்கும் பட்டணங்கள், கிராமங்கள், ஆச்சிரமங்கள்... முதலிய அனைத்தையும் கொளுத்தினார்கள். சிலர் கோடாலியையும், மண்வெட்டிகளையும் எடுத்துப்போய் கோவில்களையும், பிரகாரங்களையும், கோபுரங்களையும் இடித்துத் தள்ளினார்கள். சிலர் கொள்ளிகளைக் கொண்டு வீடுகளை எரித்தார்கள். இதனால் தேவர்கள் மறைந்து சஞ்சரித்தார்கள் என்று பாகவதம் 7ஆவது ஸ்கந்தம். 2ஆவது அத்தியாயத்தில் 715, 716ஆவது பக்கங்களில் இருக்கின்றது.
இரணியன்

புவிப் பெண்ணாள் கழுத்தினிலே
புரளுகின்ற முத்துவடம் தென்னாடு!
எடுத்து மீட்டுகின்ற எழில் வீணை!
கவிக்கூட்டம் பாமாலை கட்டுகின்ற கலைச்சோலை!
காசினியோர் காணிக்கைக் கப்பங் கட்டிக்
குவிக்கின்ற கரம்போல இலங்கைத் தீவு!
செவிக்கினிய தேமதுரத் தமிழோசை
செகமெங்கும் தமிழ் வீரம் பரப்புகின்ற பழைய நாளில்...
இருமலையைத் தோளாகப் பெற்ற வீரன்
திருமலியும் தேகங்கொண்டோன்
திராவிடர்க்குத் தேனாய் - நிலவாய்த் -
தீந்தமிழ்க்கோர் படைக்கலனாய்த் திகழ்ந்த பெரியோன்!
போர் வாட்கள் உறங்குகின்ற உறைபோல மீசையுண்டு!
புவிமெச்ச வாழவேண்டும் தமிழ் நிலம் என்பதிலும் தணியாத ஆசை உண்டு
புல்லேந்திப் படையெடுத்த ஆரியரைக் கண்டு விட்டால்
குரலில் சிங்கத்தின் ஒசை உண்டு!
இந்தத் தரங்குன்றாத் தமிழனுக்குப்
பெற்றோர்கள் இட்ட பெயர் பெருந்தகை வேந்து!
இழிகுலத்தார் ஆரியர்கள் இட்ட பெயர் இரணியனாம்
- கலைஞர்

Wednesday, September 18, 2019

வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.65 சதவீதமாக உயர்வு

வருங்கால வைப்பு நிதிக் கணக்குகளுக்கு (பிஎஃப்) கடந்த நிதியாண்டுக்கு 8.65 சதவீத வட்டி வழங்கப்படும் என மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் தெரிவித்தார்.
டில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேசிய பாதுகாப்பு விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர் களிடம் மேலும் கூறியதாவது:
கடந்த 2018-19ஆம் நிதியாண்டுக்கு வருங்கால வைப்பு நிதிக்கு 8.65 சதவீத வட்டி வழங்கும் திட்டத்துக்கு, இபிஎஃப்ஓ உறுப்பினர்களின் மத்திய குழு  நடப்பாண்டு பிப்ரவரி 21-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது.
பின்னர் இந்தத் திட்டம்  நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.  இன்னும் ஒரு சில தினங்களில் இதற்கான ஒப்புதல் நிதி அமைச்சகத்திடமிருந்து கிடைத்து விடும். அதன்பிறகு, கடந்த நிதியாண்டுக்கு வருங்கால வைப்பு நிதிக்கு 8.65 சதவீத வட்டி சந்தாதாரர்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு விடும்.
கடந்த 2017-18 நிதியாண்டில் வருங்கால வைப்பு நிதிக்கு 8.55 சதவீத வட்டி மட்டுமே வழங்கப்பட்டது. இந்த நிலையில், 2018-19 நிதியாண்டுக்கு கூடுதலாக 0.10 சதவீத வட்டியைப் பெறுவதன் மூலம் இபிஎஃப்ஓவில் சந்தாதாரர்களாக உள்ள 6 கோடி பேர் பயனடைவார்கள் என்றார் அவர்.

Monday, September 16, 2019

திருவிதாங்கூர் கொடுமை - சர்வம் பார்ப்பன மயம்



1938 ஏப்ரல் 10ஆம் தேதி "குடி அரசு" எழுதியிருப்பதாவது


(வாசக நேயர்களே,

ஊன்றிப் படித்துப் பயன்பெற வேண்டிய முக்கியப் பகுதி இது.

இதுபற்றி தங்களது கருத்தினை சுருக்கமாக எழுதி அனுப்புமாறு வேண்டுகிறோம்.

திராவிடர் இயக்கம் - 80 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாடு அரசியல் களத்தின் முக்கிய நிகழ்வுகள் - வரலாறு பற்றிய காலக்கண்ணாடியாக - திராவிடத்தின் தேவைக்கான நுண்ணாடியாக இது அமையும் ஒன்று. இதற்கான தேவை - பயன் - நுகர்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் பெரிதும் வரவேற்கப்படுகிறது. - ஆசிரியர்)


திருவிதாங்கூரில் ஸர். சி. பி. ராமசாமி அய்யர் அவர்களது ஆட்சி இன்று ஒரு குட்டி ஹிட்லர் ஆட்சியாக நடைபெற்று வருகிறது. அங்கு அடக்குமுறை தாண்டவமாடுவது மாத்திர மல்லாமல் அது ஒரு பார்ப்பன ராஜ்யமாகவே ஆக்கப்பட்டு வருவதாகவும் தெரிய வருகிறது. அதன் முழு விபரத்தையும் அங்கு நடக்கும் பார்ப்பன கோலாகலங்களையும் வெளி ஜனங்கள் அறிய முடியாமல் செய்வதற்கு எவ்வளவு சூழ்ச்சி செய்யலாமோ அவ்வளவும் செய்யப்பட்டு வருகிறது. அங் குள்ள பத்திரிகைகள் உள்ள விஷயங்களை வெளியிட்ட தற்கு ஆக ஜாமீன் பறிமுதல் செய்யப்பட்டதோடு பத்திரிகை நடத்த கொடுத்திருந்த அநுமதியையும் கேன்சல் (தள்ளுபடி) செய்யப்பட்டு வருகிறது. அசோசியேட் பிரஸ் என்னும் இந்தியப் பத்திரிகை செய்தி ஸ்தாபனத்தையும் விலைக்கு வாங்கப்பட்டோ அல்லது வேறு வழியில் கைவசப்படுத்தப் பட்டோ அதன் மூலம் விஷயம் வெளியாக்கப்படாமல் தடுக்கப்பட்டு வருகிறது. சென்னைத் தினசரிப் பத்திரிகைகள் பெரிதும் பார்ப்பனப் பத்திரிகைகளானதாலும் பார்ப்பன நிருபர்களையே கொண்டவைகளானதாலும் விஷயங்கள் வெளியாகாமல் அடக்கிவிடப்படுகின்றன.

சர்வம் பார்ப்பன மயம்

இந்நிலைமையில் திருவிதாங்கூர் பிரஜைகள் வதைக்கப் படுகிறது ஒருபுறம் இருக்க அதிகார ஸ்தானம், பெரும் பெரும் உத்தியோகம் மற்றும் பெருத்த வியாபாரத்துறை முதலியவை பார்ப்பன மயமாகி பகற்கொள்ளைக்கு லைசென்சு பெற்ற மாதிரி திருவிதாங்கூர் சர்க்கார் பொக் கிஷமும் மிகவும் கொள்ளை போவதாகச் சொல்லப்படுகிறது. மகாராஜா புத்திசாலியானாலும் இளம்பருவம், உலக அனு பவம் இல்லை. மகாராணியார் சமஸ்தான விஷயங்களில் கவலையற்றவர் போல் இருந்து வருகிறாராம். ஏனெனில் பெரிய மகாராணியார் கையிலிருந்த ராஜ்ய பாரத்தை தனக்கு வாங்கிக் கொடுத்தவர் ஸர்.சி. பி. தான் என்கின்ற நம்பிக்கையினால் அவர் இஷ்டப்படி காரியங்கள் நடத்து வதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

ஸர்.சி.பி. திருவிதாங்கூருக்கு திவானாகப் போனது முதல் அதிகாரமும், செல்வமும் அய்யர்மார் ஏகபோக உரிமையாகி விட்டதாக மேலே குறிப்பிட்டோம்.

வர்த்தகத் துறையிலும் பூணூல்

அதாவது 5 லட்ச ரூபாய் முதலீடு வைத்து சர்க்கார் நடத் திய ரப்பர் தொழிற்சாலை ஒரு சாமிநாதய்யர் கம்பெனிக்கு வாடகைக்கு கொடுக்கப்பட்டு விட்டதாம்.

மற்றும் தக்கலையில் ஏற்படுத்தப்பட்டிருந்த ஒரு பெரிய சர்க்கரை ஆலைக் கம்பெனியை ஒரு ஐரோப்பிய கம் பெனிக்கு கொடுக்கப்பட்டு விட்டதாம். சாராயம் காய்ச்சும் கம்பெனியும் வேறு ஒரு கம்பெனிக்கு கொடுக்கப்பட்டு விட்டதாம். ஒரு பார்ப்பனரல்லாதார் கம்பெனியால் பெரிதும் நடத்தப்பட்ட போக்குவரத்து பஸ் சர்வீசை சர்க்கார் மயமாக்குவது என்னும் பேரால் ஒழித்து சர்க்கார் ஏற்று நிர்வாகம் செய்வதில் பெரிதும் பார்ப்பன மயமாக்கி 10 லக்ஷ ரூபாய் போல் மோட்டார் பஸ்கள் வாங்கி கமிஷன் அபேஸ் ஆகிவிட்டதாம். ஸர்.ஸி.பி. மகன் சம்மந்தப்பட்ட கம்பெனி களுக்கு பெரிய கண்ட்ராக்டுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன வாம்.

உத்தியோக மண்டலத்தில் உச்சிக் குடுமிகள்

உத்தியோக நியமன விஷயமும் மோசமானதெனவே சொல்லப்படுகிறது. ஆயிரக்கணக்கான ரூபாய் சம்பளமுள்ள பொருளாதார காரியதரிசி ஒரு பார்ப்பனர், இன்கம்டாக்ஸ் அதிகாரி ஒரு பார்ப்பனர், பாரஸ்ட் நிபுணர் என்பவரும் ஒரு அய்யர், அவர் ஒரு மாஜி திவான் மாப்பிள்ளையாம். இவருக்கு 1800 ரூபாய் சம்பளம், மற்றும் பப்ளிசிட்டி ஆபீசர் ஒரு பார்ப்பனர், இவர் மெட்ரிகுலேஷன் பரீக்ஷை கூட பாஸ் செய்தது கிடையாது. வயது 45 -க்கு மேலான பிறகு உத்தி யோகம் கொடுக்கப்பட்டது. சம்பளமோ 400. மற்றும் தோழர் பரமேஸ்வரய்யர் என்பவர் யுனிவர்சிட்டி சம்மந்தமுள்ளவர். இவருக்கு சம்பளம் ரூ.1500. இரண்டு சட்ட கலாசாலை பிரின்சி பால்களும் பார்ப்பனர்கள், கல்வி இலாகா அதிகாரிகள் (இன்ஸ்பெக்டர் ஆப் ஸ்கூல்) 3 பேரும் பார்ப்பனர்கள். சர்க்கார், போட்டகிராபர் கூட பார்ப்பனர். இம்மாதிரி பெரிய பெரிய 1000, 1500, 2000 ரூபாய் சம்பளமுள்ள உத்தியோகங்கள் பார்ப்பன மயமாக்கப்பட்டவை தவிர இனியும் பல பெரிய உத்தியோகங்கள் அட்வொகேட் ஜனரல் என்றும், சர்ஜன் ஜனரல் என்றும், புரோசேன்ஸல்லர், வைஸ்சேன்ஸலர் என் றும், லாமெம்பர் என்றும் இப்படியாக மற்றும் மாதம் 1000, 2000 ரூபாய் சம்பளமுள்ள பல புதிய உத்தியோகங்களைச் சிருஷ்டித்து பெரிதும் பார்ப்பனர்களுக்கே கொடுக்கப்படப் போவதாலும் மற்றும் இது போன்ற காரணங்களாலும் திருவிதாங்கூர் பொக்கிஷம் காலியாகி கடனும் ஏற்பட்டு அரைகோடி ரூபாய் கடனும் வாங்கப்பட்டு விட்டதாம்.

சென்னை மாதிரி திருவிதாங்கூரும்

சென்னை மாகாணத்தில் ஆச்சாரியார் ஆட்சியில் சென்ற வருஷம் ஒன்றரைக் கோடி ரூபாய் கடன் இவ் வரு ஷம் ஒன்றே முக்கால் கோடி ரூபாய் கடன், அடுத்த வருஷம் காங்கிரஸ் ஆட்சி இருந்தால் 2 கோடி ரூபாய் கடன் ஆகும் என்பது போல், ஸர்.சி.பி. திவானாவதற்கு முன் தங்கப்பாளங் களும், வைரம், சிவப்பு, பச்சை ஆகிய ரத்தினங்களும் வண்டி வண்டியாய் குவிந்து கிடந்த திருவிதாங்கூர் பொக் கிஷம் அய்யர் கால் வைத்த உடன் இறகு முளைத்துக் கடல் தாண்டிப் பறந்து விட்டதால் பாப்பராகி இவ்வருஷம் அரை கோடி, அடுத்த வருஷம் ஒரு கோடி என கடன் ஏறி 40 லட்சம் ஜனங்களுக்கு மூன்றரை கோடி வருஷ வருமான முள்ள திருவிதாங்கூர் சமஸ்தானம் அழுத்தப்படுவதைப் பார்த்த திருவிதாங்கூர் பிரஜைகளான, வரிசெலுத்துவோரான பார்ப்பனரல்லாத மக்கள் இனி தங்கள் நாடு என்றென்றும் தலையெடுக்க முடியாமல் அழியப் போகிறதே என்று கருதி மனம் பதறி வயிறு வெந்து ஆத்திரப்பட்டு, மாரடித்துக் கொண்டு அழுது ஓலமிடும் காட்சி நமது ஸர்.சி.பி. அய்யர் அவர்களுக்கு ராஜத்துரோகமாய் வகுப்புத் துவேஷமாய் காணப்பட்டு மிருகப்பாய்ச்சல் பாய்ந்து ஒரே அடியில் அடக்கி ஒடுக்கி அழித்து விடப் பார்க்கிறார் போலும்.

தர்மராஜ்ய தர்ம தேவதை தாண்டவமே இப்படி இருந் தால் இனி மற்ற ஆட்சி எப்படி இருக்கும் என்பதை நினைக் கவே பயமாய் இருக்கிறது.

நாராயணபிள்ளை கதி

இவற்றை வெளிப்படுத்த முயற்சி எடுத்துக் கொண்ட திருவனந்தபுரம் ஹைக்கோர்ட்டு வக்கீல் தோழர் நாராயண பிள்ளை அவர்கள் ஏதோ ஒரு பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதினார் என்பதற்காக அவர் மீது ராஜத்துரோக குற்றம் சாட்டப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட முறையைவிட குற்ற வாளி நடத்தப்பட்ட முறையும் அக்கிரமமாக விசாரணை நடத்தப்பட்ட முறையும் நீதி வழங்கப்பட்ட முறையும் தான் நாம் மிகுதியும் கவனிக்கத்தக்கவையாகும். இதை உணர்ந்து, பார்த்து, ஊன்றி கவனித்தால் திருவிதாங்கூரில் இன்று நீதி, நிர்வாக ஆட்சி நடக்கின்றதா அல்லது டையர் ஓட்வியர் ராணுவ ஆட்சி நடக்கின்றதா என்று சந்தேகம் கொள்ள வேண்டி இருக்கும்.

- தொடரும்

- விடுதலை, 16.4.1938