இந்தியாவில் பொருளாதார மந்த நிலை யால்
சுமார் 1.50 கோடி பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக சி.அய்.
டி.யு. அமைப்பின் அகில இந்திய பொதுச் செயலர் தபன்சென் 21.9.2019 அன்று
கூறினார்.
காஞ்சிபுரம் அருணா மஹாலில் சி.அய்.டி.யு.
அமைப் பின் 14 -ஆவது மாநில மாநாடு செப்.19-இல் தொடங்கியது. மாநாட்டின்
3-ஆவது நாள் நிகழ்வாக பிரதிநிதிகள் விவா தம் நடைபெற்றதுடன் தீர் மானங்களும்
நிறைவேற்றப் பட்டன. இதில் பங்கேற்க வந்திருந்த அகில இந்திய பொதுச் செயலர்
தபன்சென் செய்தியாளர்களிடம் கூறி யதாவது:
உலக அளவில் பொருளா தார மந்த நிலை
ஏற்பட்டு உள்ளது. அது இந்தியாவை யும் விட்டு வைக்கவில்லை. இந்திய
மக்களிடையே வாங் கும் சக்தி குறைந்து விட்டது. வாங்கும் சக்தி குறைந்து
போனதால் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இத னால் இந்தியாவில் சுமார்
1.50 கோடி பேர் வேலையிழக்கும் அபாய நிலையில் உள்ளனர். இது தொடர்ந் தால்
மக்களின் வாங்கும் சக்தி மேலும் வீழ்ச்சியடைந்து விடும்.
பல தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் தற்காலிக மாகவும், நிரந்தரமாகவும் வேலையிழந்து வருகின்றனர்.
சுரங்கத் தொழிலில் ஈடு படுவோர்,
பாதுகாப்புத் துறையில் பணியாற்றுவோர், வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள்
சங்கத்தினர் உள் பட பலரும் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.
மத்திய அரசு முதலாளிகளுக்கு ஏற்றவாறு சலுகைகளை அறிவித்துக் கொண்டே
இருக்கிறது. சாதாரண மக்களைப் பற்றி கவலைப்படவில்லை.
மத்திய அரசின் இச்செய லைக் கண்டித்தும்,
இப்பிரச் சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வலியுறுத்தியும் வரும் 30-ஆம்
தேதி மாபெரும் போராட்டத்தை அறிவிக்க இருக்கிறோம் என்றும் தபன் சென்
தெரிவித்தார்.
நிகழ்வில், சி.அய்.டி.யு. மாநிலத் தலைவர்
அ.சவுந்தர ராஜன், காஞ்சிபுரம் மாவட் டத் தலைவர் எஸ்.கண்ணன், மாவட்டச்
செயலர் இ.முத் துக்குமார், விவசாயிகள் சங் கத் தலைவர் கே.நேரு உள் ளிட்ட
நிர்வாகிகள் பலர் உட னிருந்தனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.