Monday, September 9, 2019

மரங்களில் விளம்பர பேனர் வைத்தால் சிறைத் தண்டனை

சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கும் வகையில் மரங்களில் விளம்பர பேனர் வைத்தால் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக  அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பெருநகர சென்னை மாநக ராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பசுமை பரப்பளவை அதிகரிக்கும் வகையில் பிரதான சாலைகள் மற்றும் உட்புறத் தெருக்களில் பல்வேறு மரங்கள் நடப்பட்டு  மாநகராட்சியால் பராமரிக் கப்பட்டு வருகிறது. இம்மரங்கள் அனைத்தும் நல்ல முறையில் வளர வளமான மண், தண்ணீர், சூரிய ஒளி ஆகியவை முக்கிய காரணி ஆகும். எனினும், இயற் கைக்கு மாறாக மரங்களில் எவ்வித சேதாரமின்றி  பாதுகாக் கப்பட வேண்டியது பொது மக்களின் கடமை ஆகும்.
இந்நிலையில், சில தனியார்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அவர்களின் நிறுவனத்தின் விளம் பரங்களை அட்டை மற்றும் பலகைகள் போன்ற தேவையற்ற பொருட்களின் மூலம் மரங்களில் ஆணி அடித்து அல்லது கயிற்றால் கட்டி விளம்பரம்  செய்து வருகிறார்கள்.
மேலும் மரங்களில் பெயின்ட் அடித்தல், மின்சார அலங்கார விளக்குகள் அமைத்தல், கம்பிகள், கேபிள் ஒயர்கள், மற்றும் இதர பொருட்கள் மரங்களில் அமைக் கப்பட்டுள்ளன. இதுபோன்ற தேவையற்ற இயற்கைக்கு மாறான  நடவடிக்கைகளினால் மரங்கள் பட்டுப்போவதுடன் அதனுடைய வாழ்நாள் குறைந்து போகும்.
எனவே, மரங்களில் அமைக் கப்பட்டுள்ள தேவையற்ற விளம் பர பலகைகள், மின்சார அலங் கார விளக்குகள், கேபிள் ஒயர்கள் மற்றும் இதர பொருட்களை 10 தினங்களுக்குள் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள்  அவர்களாகவே அகற்ற வேண்டும். தவறும்பட்சத் தில், சம்பந்தப்பட்டவர்கள் மீது சென்னை மாநகராட்சி முனிசி பில் சட்டம் 1919ஆம் ஆண்டு 326 விதியின்படி, ரூ.25 ஆயிரம் வரை அதிகபட்ச அபராதம் மற்றும் மூன்று ஆண்டுகள் வரை சிறை  தண்டனை விதிக்கப்படும் என தெரிவித்து கொள்ளப்படுகிறது. இது குறித்த புகார்களை பொதுமக்கள் 1913 என்ற இலவச தொலைபேசி எண் வாயிலாக தெரிவிக்குமாறு கேட்டுக் கொள் ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.