Sunday, December 11, 2011

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையும் தீர்வும் ஆவணப்படம் திரையிடல்



தலைப்பு : முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையும் தீர்வும் (42நிமிடம்)


ஆக்கம் இயக்கம் : பொறியாளர் எஸ்.ஜெயராமன் B.E.,M.I.E



தயாரிப்பு : தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்கம்


வரவேற்புரை : மு.அ.கிரிதரன்,மாநில அமைப்பாளர், திராவிடர் கழக கலைத்துறை

தலைமை : சு. அறிவுக்கரசு,பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்

விளக்கவுரை : அ.வீரப்பன் முன்னாள் தலைமைப் பொறியாளர் தமிழ்நாடு 

பொதுப்பணித்துறை ,மாநிலச் செயலாளர், மூத்த பொறியாளர் சங்கம் 

பேராசிரியர் மு.சுப்பிரமணியம், புரவலர், நாம் தமிழ் மக்கள் பேரவை

நன்றியுரை : உடுமலை, பெரியார் வலைக்காட்சி


முல்லைப் பெரியாறு ஆவணப்படம் திரையிடல் கழக பொதுச்செயலாளர் சு.அறிவுக்கரசு பங்கேற்றார்

பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை சார்பில் நடைபெற்ற மாதாந்திர திரையிடலில், நாம் தமிழ் மக்கள் பேரவையின் புரவலர் பேராசிரியர் மு.சுப்பிரமணியத்திற்கும், தமிழ்நாடு பொதுப்பணித்துறையின் முன்னாள் தலைமை பொறியாளர் அ.வீரப்பனுக்கும் கழகப் பொதுச்செயலாளர் சு.அறிவுக்கரசு சிறப்பு செய்தார். (பெரியார் திடல் 11.12.2011) .
சென்னை, டிச.28-பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை சார்பில் நடைபெறும் மாதாந்திர திரையிடலின் இந்த மாத (11.12.2011) திரையிடலுக்கு தலைமை தாங்கிய திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் சு.அறிவுக்கரசு அவர்கள், 1979இல் தமிழ்நாட்டின் சார்பாக மலையாளிகளும், கேரள அரசின் சார்பாக மலையாளிகளும் சேர்ந்து கேரளா மாநில நலன்பற்றி உரையாடி 152அடியாக இருந்த முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 136அடியாக குறைத்தனர் என்று குறிப்பிட்டார்.

பெரியார் திடல், அன்னை மணியம்மையார் அரங்கத்தில் கடந்த ஞாயிறன்று பெரியார் சுயமரியாதை ஊடகத் துறையின் சார்பில் முல்லைப் பெரியாறு பிரச்சினையும்-தீர்வும் என்ற தலைப்பில் ஆவணப்படம் திரையிடப் பட்டது.

நிகழ்ச்சிக்கு தலைமையேற்றுப் பேசிய பொதுச்செயலாளர் சு.அறிவுக்கரசு அவர்கள், முல்லைப்பெரியாறு பிரச்சினை தொடங்கிய கால கட்டத்தை பற்றி குறிப் பிடும்போதுதான் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அதாவது, அப்போது, இந்தப் பிரச் சினைபற்றி தமிழக அரசின் சார்பில் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் தரப்பில் சென்ற தலைமைப் பொறியாளர் ஜார்ஜ் மேத்யூ ஒரு மலையாளி, பொதுப்பணித்துறை பொறியாளர் உன்னி கிருஷ்ணன் ஒரு மலையாளி, மதுரை மாவட்ட ஆட்சியர் சிறீயேக் ஒரு மலையாளி, பொதுப் பணித்துறை செயலா ளர் பத்மநாபன் நாயர் ஒரு மலையாளி, ஏன் அப்போது தமிழக முதல் வராக இருந்தவரும் ஒரு மலையாளி.

இவர்கள் தான் அன்றைக்கு தமிழக அரசின் சார்பில் பேசியவர்கள்? ஒரே ஒரு வர்தான் அதில் மலையாளி இல்லை. அவர் ராஜாமுகம்மது. அவர் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. அதிகாரிகள் அளவில் நடந்த ஒப்பந்தம் அது. அந்த சந்திப்பில் முதல்வர் கலந்துகொள்ளவில்லை என்று இந்த பிரச்சினையின் வரலாற்றை விளக்கியும். இந்தப் பிரச்சினையை உணர்வு பூர்வமாக அணுகாமல் அறிவுப் பூர்வமாக அணுக வேண்டும் என்றும் சுட்டிக்காட் டினார்.

அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு பொதுப் பணித்துறையின் முன்னாள் தலைமைப் பொறியாளரும், மூத்த பொறியாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளருமான ஏ.வீரப்பன் அவர்களை வழக்குரைஞர் தமிழன் பிரசன்னா அறிமுகம் செய்துவைத்துப் பேசினார்.

தொடர்ந்து பேசிய ஏ.வீரப்பன் தான் ஒரு பெரியார் தொண்டன் என்பதையும்,1969-1970இல் காரைக்குடியில் அறிவியக்கப் பேரவை சார்பில் பெரியாரை அழைத்து பேச வைத்ததையும், தான் அந்த அளவுக்கு உயர்ந்திருப்பதற்கு அடித்தளம் இட்டவர் தந்தை பெரியார் என்றும் நன்றியோடு நினைவு கூர்ந்தார்.பிறகு, முல்லைப்பெரியாறு அணைபற்றிய தொழில்நுட்பம் தொடர்பான செய்திகளை விளக்கிப் பேசி னார்.

பிறகு, நாம் தமிழ் பேரவையின் புரவலரும்,பேராசிரியருமான மு.சுப்பரமணி யத்தை திராவிடப் புரட்சி அறிமுகப்படுத்தி பேசினார்.அதைத் தொடர்ந்து பேசிய மு. சுப்பிரமணியம் முல்லைப்பெரியாறு தொடர்பாக ஊடகங்கள் எப்படி ஒரு சார்பாக இருக்கின்றன என்பது பற்றியும், நமது ஒற்றுமையின்மை பற்றியும் குறிப்பிட்டுவிட்டு, முல்லைப் பெரியாறு அணை Ancient Monument சட்டத்திற் குள்ளும் Heritage- வரிசையில் கொண்டு வந்து சட்டமியற்றினால் யாராலும் அணையை எதுவும் செய்துவிட முடியாது என்றார்.

இப்போது இருக்கின்ற சட்டங்களின் படியும், தீர்ப்பின்படியும், உரிமைகள் அடிப்படையிலும் அவர்களால் எதுவும் செய்துவிட முடியாது. இது போன்ற தகவல்கள் மக்களிடம் சென்று சேர வேண்டும் என்று குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியின் இறுதி, கேள்வி நேரத்திற் கென்று ஒதுக்கப்பட்டது. கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சிறப்பு அழைப்பாளர் இருவரும் பொறுமையாகவும், பொருத்தமாயும் பதில் கூறிசிறப்பித்தனர். 42 நிமிடம் ஒடக்கூடிய இந்த ஆவணப்படத்தை தயாரித்தது தமிழ்நாடு பொதுப்பணித்துறையின் மூத்த பொறியாளர் சங்கம்தான்.

பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்கினார். உடுமலை வடிவேல் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். நிகழ்ச்சிக்கு, பழனிகுமார், சங்கர், ஆண்டரூஸ், புருனோ, பெரியார் நூலக வாசகர் வட்டச் செயலாளர் சத்யநாராயணசிங், மணியம்மை ஆகியோர் உறுதுணையாக இருந்தனர்.

Wednesday, December 7, 2011

பெரியார் திரை குறும்படப்போட்டி 2011


பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை  பகுத்தறிவாளர் கழகம்
இணைந்து நடத்தும் பெரியார் திரை
குறும்படப்போட்டி 2011


பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை மற்றும் பகுத்தறிவாளர் கழகம் இணைந்து மூன்றாம் ஆண்டாக நடத்தும்  பெரியார் திரை குறும்படப் போட்டிக்காக குறும்படங்கள் வரவேற்கப்படுகின்றன.

போட்டிக்கான விதிமுறைகள்:
1.    பகுத்தறிவு, பெண்ணுரிமை, சமூகநீதி, ஜாதி ஒழிப்பு, மதவாத எதிர்ப்பு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைப்  பிரதிபலிப்பதாக குறும்படம் இருத்தல் வேண்டும்.
2.    குறும்படம் தமிழில் எடுக்கப்பட்டதாக 30 மணித்துளிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆங்கிலத் துணைத் தலைப்புகளுடன் (Subtitle) இருப்பின் நலம். தரமான DVD அல்லது CD வடிவில் குறும்படத்தின் இரண்டு பிரதிகள் அனுப்பப்பட வேண்டும்.
3.    ஒருவரே ஒன்றுக்கும் மேற்பட்ட குறும்படங்களையும் போட்டிக்கு அனுப்பலாம். ஒவ்வொன்றிற்கும் தனித்தனி விண்ணப்பங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.
4.    இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரமும், ஏற்கெனவே பரிசு பெற்றிருந்தால் அது பற்றிய விவரமும் இணைத்து அனுப்பப்பட வேண்டும்.
5. குறும்படத்தின் கதைச் சுருக்கம், முக்கியக் காட்சிகளின் ஒளிப்படங்கள் (Photos)  மற்றும் இயக்குநரின் ஒளிப்படம் ஆகியவை வரவேற்கப்படுகின்றன.
6.    போட்டியில் கலந்து கொள்ளுவதற்கான ஒப்புதல் கடிதம் படத்தின் உரிமையாளரிடமிருந்து பெறப்பட்டு இணைக்கப்பட வேண்டும். (அல்லது) போட்டிக்காக குறும்படத்தை அனுப்புகிறவர் எந்த உரிமையில் அதனை அனுப்புகிறார் என்பதைக் குறிப்பிட வேண்டும்.
7.    போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் குறும்படங்கள் அனைத்தும் பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை நடத்தும் திரையிடல் நிகழ்வுகளில் திரையிடப்படும்.
8.    குறும்படங்கள் 2009-2011 ஆம் ஆண்டுக்குள் எடுக்கப்பட்டனவாக இருக்க வேண்டும்.
9.    தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது.
10.    போட்டி முடிவுகள் விடுதலை, உண்மை இதழ்களிலும் பிற நாளிதழ்களிலும் செய்தியாக 2011 டிசம்பர் இறுதி / 2012 ஜனவரி முதல் வாரத்தில் வெளியிடப்படும்.
11.    ஆவணப்படங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.
12.    தேர்வு செய்யப்படாத குறும்படங்களைத் திருப்பி அனுப்புதல் இயலாது.
13.விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளை www.viduthalai.in,  www.periyarthirai.blogspot.com         ஆகியவற்றில் பதிவிறக்கிக் கொள்ளலாம்.
14.    போட்டியில் பங்கேற்க நுழைவுக் கட்டணம் எதுவும் இல்லை.
15. போட்டிக்கு குறும்படங்களை அனுப்ப வேண்டிய கடைசித் தேதி : டிசம்பர் 10, 2011.



முதல் பரிசு: ரூ.10,000
இரண்டாம் பரிசு: ரூ. 5,000
மூன்றாம் பரிசு: ரூ. 3,000
Download Application
மேலும் தொடர்புகளுக்கு:
செல்பேசி: 9444210999, 9940489230
periyarthirai@gmail.com
www.viduthalai.in, www.periyarthirai.blogspot.com

Friday, November 25, 2011

பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை: நான்காம் ஆண்டு தொடக்க விழா!


சென்னை, நவ. 25-பெரியார் சுயமரியாதை ஊடகத்துறையின் நான்காம் ஆண்டு தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வெங்காயம் திரைப்பட இயக்குநர், அய்யப்ப னுக்கு மாலையிட்ட நண்பர் களைக் கண்டால், எப்ப வேடம் போட்டீர்கள், எப்பொழுது வேடத்தை கலைப்பீர்கள் என்று கேட்க வேண்டும் என்று நகைச் சுவையாக பேசினார்.

19.11.2011 அன்று மாலை 6.30 மணிக்கு பெரியார் திடலில் அமைந்துள்ள, அன்னை மணியம் மையார் அரங்கத்தில், பெரியார் சுயமரியாதை ஊடகத்துறையின் நான்காம் ஆண்டு தொடக்க விழாவும், மகர ஜோதியின் மோசடிகளை அம்பலப்படுத்தும், மரணம் அய்யப்பா என்ற ஆவணப்பட வெளியீட்டு விழா வும் நடைபெற்றன.

நிகழ்ச்சியில் மாநில பகுத்தறி வாளர் கழக பொதுச்செயலாளர் குமரேசன், தலைமையேற்க, மாநில பகுத்தறிவாளர் கழக செயலாளர் பெரியார் சாக்ரடீஸ் முன்னிலை வகித்தார். வெங்காயம் திரைப் படத்தின் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்தார். பகுத்தறி வாளர் கழக மாநில செயலாளர் (வெளிநாட்டுத் தொடர்பு) பிரின்சு என்னாரெசு பெரியார் அனைவ ரையும் வரவேற்றுப் பேசினார்.

மரணம் அய்யப்பா!


அவர் தமது வரவேற்புரையில், ஊடகத்துறையில், நமது தோழர் களுக்கு வழிகாட்டவும், ஊக்கு விக்கவும் வேண்டும் என்கிற எண்ணத்தோடு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்  நான்கு ஆண்டுகளுக்கு முன்னால், இந்த ஊடகத்துறையைத் தொடங்கி வைத்தார்கள். முதல்திரையிடலாக இயக்குநர் சோமீதரன் இயக்கிய எரியும் நினைவுகள் என்கிற ஆவணப்படம் திரையிடப் பட்டது.

இது யாழ்ப்பாண நூலக எரிப்பு பற்றியதாகும். அதன் தொடர்ச்சியாக இந்தத்துறை பல அரிய பணிகளை தமிழர் தலைவரின் வழிகாட்டுதலில், செயல்பட்டு வருகிறது. அந்தத் தொடர் பணிகளில் ஒன்றாக மகர ஜோதியின் மோசடிகளை தோலுரித்துக் காட்டுகின்ற வகை யில், மலையாளத்தில், கேரளா அறிவியல், பண்பாட்டு அறக் கட்டளை (Kerala Science & Cultural trust)  சார்பில், சஜீவ் அந்திக்காடு இயக்கிய சாமியோ சரணம் அய்யப்பா என்கிற ஆவணப்படம், தமிழாக்கம் செய்யப்பட்டு, மரணம் அய் யப்பா என்ற பெயரில் பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை சார்பில் வெளியிடப்படுகிறது என்று தனது வரவேற்புரையில் குறிப்பிட்டுப் பேசினார்.

அதைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் இயக்குநர் ராஜ்குமார் அவர்களுக்கு பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச்செயலாளர் குமரேசன் சால்வை அணி வித்தார். அதைத் தொடர்ந்து பெரியார் சாக்ரடீஸ் குடிஅரசு தொகுதியை அளித்து சிறப்பு செய்தார். பிறகு, மரணம் அய்யப்பா குறுந்தகட்டை இயக்குநர் ராஜ்குமார் வெளியிட, குமரேசன் பெற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து  பெரியார் சாக்ரடீஸ், வாசகர் வட்ட செயலாளர் சத்யநாராயண சிங், பொறியாளர் (பிஎஸ். என்.எல்.,) ஆறுமுகம் ஆகியோர் பெற்றுக்கொண்டு சிறப்பித்தனர்.

சம்பிரதாயங்கள் சரியா?

பகுத்தறிவாளர் கழக மாநில செயலாளர் (வெளிநாட்டுத் தொடர்பு) பெரியார் சாக்ரடீஸ் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமாரை மக்கள் இயக்குநர் என்றும் எதார்த்தமாக காட்சி அமைப் பதில் இயக்குநர் பாரதிராஜாவை போன்றவர் என்றும். சிறந்த பகுத்தறிவாளர், நிறைய படித்தவர் என்றும் குறிப்பிட்டுவிட்டு, 7 ஆம் அறிவு மூலிகை, மஞ்சள் பற்றி பேசுகிறது. எல்லாம் சரி. அவர் எல்ல புத்தகத்தையும் படித்தார். ஆனால், மஞ்சை வசந்தன் எழுதிய சம்பிரதாயங் கள் சரியா? என்று ஒரு புத்தகம் இருக்கிறது. அதை படிக்காமல் விட்டுவிட்டார். அதுதான் சிக்கல். அந்த சிக்கல் இயக்குநர் ராச்கு மாரிடம் இல்லை என்று பாராட்டி அறிமுகம் செய்து பேசினார்.

பிறகு தலைமையுரை ஆற்றிய குமரேசன் அவர்கள், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மாறி வரும், சூழ்நிலையைக்கேற்ப, பகுத்தறிவு பிரச்சாரத்தில் ஒரு புதிய பிரச்சார அணுகுமுறையாக இதை பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை தமிழர் தலைவரின் வழிகாட்டுதலில் தொடங்கப் பட்டு, செயல்பட்டு வந்திருக் கிறது. காரணம், இந்த ஊடகம் மக்ளை பெருமளவு ஈர்த்துள்ளது.

ஊடகப்பயிற்சி

ஆகவே, நமது பிரச்சார அணுகு முறையும் மாறவேண்டி யது. அவசியம்.  ஆகவே, மக்களின் எதிர்பார்ப்புக்கேற்றவாறு நமது பிரச்சார முறையும் மாற வேண்டிய தேவை இருக்கின்றது. ஆகவே, இதில் ஆர்வமுள்ள தோழர்களுக்கு இது குறித்த ஒரு பயிற்சி கொடுக்க வேண்டும். அந்தப் பொறுப்பை பகுத்தறிவா ளர் கழகம் ஏற்றுக்கொள்ளும் என்று பலத்த கைதட்டலுக் கிடையே அறிவித்தார்.

ஆபத்தானவன் அய்யப்பன்

நிறைவாக, இயக்குநர் ராச்கு மார் தனது சிறப்புரையில் இந்த மரணம் அய்யப்பா சரியான தருணத்தில் வெளியிடப்பட்டி ருக்கிறது. இருந்தாலும் மற்ற கடவுள்களை எல்லாம்விட, கொஞ்சம் ஆபத்தானவன். இந்த அய்யப்பன் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். காரணம், மற்ற கடவுள்கள் எல்லாம் வெறும் ஆன்மிகத்தை மட்டுமே திணிப்ப வையாக இருந்தாலும், இந்த அய்யப்பன் ஆன்மிகத்தோடு ஆணாதிக்கத்தையும் சேர்ந்து திணிக்கின்ற கடவுளாக இருக் கிறான். (கைதட்டல்.)

பெண்கள் அந்தக் கோயி லுக்குச் செல்ல முடியாது.அதிலும் போனமாதம் வரை அவனை அந்த நாய்கூட மதித்திருக்காது. ஆனா, அந்த வேடத்தை போட்டுட்டு வந்துட்டா அவன் பெண்டாட்டி, அவனை சாமின்னு கும்பிடணும். இவையெல்லாம் திட்டமிட்டு கடவுள் பெயரில் பரப்படுகின்ற ஆணாதிக்கச் சிந்தனைகள். இந்தத் தருணத்தில் மரணம் அய்யப்பா வெளியிட்டிப்பது மிகுந்த ஆறுதலை கொடுத்திருக்கிறது. இது கருப்புச்சட்டைக்காரர் களுக்காக தயாரிக்கப்பட்ட படம் அல்ல. கருப்பு வேட்டிக்காரர் களுக்காக தயாரிக்கப்பட்ட படம் (கைதட்டல்).

இது எல்லா கருப்பு வேட்டிக் காரர்களுக்கும் போய்ச் சேர வேண்டும் என்று கூறும் போது தான். அய்யப்பனுக்கு மாலை போட்டவர்களை எப்போது வேடம் போட்டீர்கள் எப்போது வேடத்தை கலைக்கப் போகி றீர்கள் என்று அனைவரும் கேட்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து சிறப்புரையை நிறைவு செய்து விடைபெற்று சென்றார்.

சிறந்த இயக்குநர்

நாளை (20.11.2011) பரமத்தி வேலூரில் சிறந்த இயக்குநர் பட்டம் பெற இருக்கின்ற இந்த தருணத் திலும் இந்த நிகழ்ச்சி, அவர் தனது பயண நேரத்தை மாற்றி அமைத் துக்கொண்டு வருகை தந்து சிறப்பித்தது குறிப் பிடத்தக்கது. சிறப்புரையைத் தொடர்ந்து, மரணம் அயய்ப்பா ஆவணப்படம் திரையிடப் பட்டது.

பெரியார் திரை

இறுதியாக, நன்றியுரை ஆற்றிய உடுமலை வடிவேல் கடந்த மூன் றாண்டுகளில், பெரியார் சுய மரியாதை ஊடகத்துறையின் மூலமாக, 35 திரையிடல்கள் நடந்திருக்கின்றன என்றும், அதில் 50 குறும்படங்களும், 13 ஆவணப் பபடங்களும் திரையிடப்பட்டது என்றும், பெரியார் திடல் தவிர, வடசென்னை, குற்றாலம், மதுரை, பொன்னமராவதி, காரைக்குடி, காட்டங்குளத்தூர் ஆகிய இடங்களில் திரையிடல்கள் நடை பெற்றுள்ளன என்றும்,

இந்த அமைப்பின் இன்னொரு பரி ணாம வளர்ச்சியாக பெரியார் திரை எனும் பெயரில் ஆண்டு தோறும் பகுத்தறிவு குறும்படப் போட்டி திருவிழா நடத்தப் பெற்று கடந்த இரண்டாண்டு களாக ரூ.10,000, ரூ.5,000 ரூ.3000 மற்றும் ரூ.1000 தலா முதல், இரண்டு, மூன்று, சிறப்புப் பரிசு என்றும் இவை தவிர, சிறப்பு பரிசுகளாக ஆறு குறும்படங் களுக்கு தலா ரூ.500, சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன என்றும்,

அதன் தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக இந்த ஆண்டும் பெரியார் திரை குறும்பட போட்டி அறிவிக்கப் பட்டுள்ளது என்றும் பட்டிய லிட்டு, அனைவருக்கும் நன்றி கூறி நிறைவு செய்தார். இந்நிகழ்ச்சிக்கு சங்கர், பழனிகுமார், ஆண்ட்ரூஸ், பார்த்திபன், கலையரசன் ஆகி யோர் பெரிதும் துணை புரிந்தனர். சிறப்பு அழைப்பாளர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.

Friday, October 14, 2011

போரும் அமைதியும் (ஆவணப்படம்)

’அணுசக்தி’ தொடர்பான திரையிடல்
திரையிடப்படும் ஆவணப்படம்: 
போரும் அமைதியும் (தமிழ்)

இயக்கம்: ஆனந்த் பட்வர்தன்

நாள்: 14-10-2011, வெள்ளிக்கிழமை 

நேரம்: மாலை 6.00 மணி
இடம்: பெரியார் திடல், 

வேப்பேரி, சென்னை.  

நடத்தும் அமைப்புகள்:



பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை, 
பூவுலகின் நண்பர்கள், 
தமிழ் ஸ்டுடியோ குறும்படத் துறை

அணு சக்தி தொடர்பான திரையிடல்&கலந்துரையாடல் ..

Friday, August 5, 2011

வீதி நாடகத்தின் தந்தை பாதல் சர்க்கார் பற்றிய ஆவணப்படம்

திரையிடப்படும் ஆவணப்படம் :  வீதி நாடகத்தின் தந்தை பாதல் சர்க்கார்
இயக்கம்: அம்ஷன் குமார்
அறிமுகவுரை : இதழாளர் கவின் மலர்

நாள்: 08-07-2011, வெள்ளிக்கிழமை 
நேரம்: மாலை 6.30 மணி
இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், 

வேப்பேரி, சென்னை.  

நடத்தும் அமைப்பு :


பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை, 






Monday, February 21, 2011

பெரியார் திரை விருது வழங்கும் விழா

அன்புடையீர்,
பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை & பகுத்தறிவாளர் கழகம் இணைந்து நடத்திய ”பெரியார் திரை குறும்படப்போட்டி 2010”க்கான பரிசளிப்பு விழாவும், “பெரியார் திரை 2010” விருது வழங்கும் விழாவும் சென்னை பெரியார் திடலில் நடைபெறவிருக்கின்றன. குறும்பட, ஆவணப்பட, திரைப்பட, ஊடக நண்பர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் & சமூக ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

24.02.2011 | வியாழன்
மாலை 6.30 மணி
பெரியார் திடல், சென்னை-7

வரவேற்புரை: மானமிகு ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
(அமைப்பாளர், பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை)

தலைமை: மானமிகு கோ.சாமிதுரை
(பொருளாளர், திராவிடர் கழகம்)

முன்னிலை:
மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன்
(பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)
மானமிகு சு.அறிவுக்கரசு
(பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)
மானமிகு வீ.குமரேசன்
(பொதுச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்)
மானமிகு வீ.அன்புராஜ்
(தலைமை நிலையச் செயலாளர், திராவிடர் கழகம்)

அறிமுகவுரை: மானமிகு தி.பெரியார் சாக்ரடீசு
(மாநிலச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்)

இணைப்புரை: மானமிகு கவிஞர் ராஜசேகர்

வாழ்த்துரை:
மானமிகு வெற்றிமாறன்
(திரைப்பட இயக்குநர், பொல்லாதவன், ஆடுகளம்)
மானமிகு கவி பெரியதம்பி
(இசையமைப்பாளர், முத்துக்கு முத்தாக, அய்வர்)
மானமிகு சத்யா (ஒளிப்பதிவாளர், யுத்தம் செய்)

விருது மற்றும் பரிசுகள் வழங்கிப் பாராட்டுரை:
தமிழர் தலைவர்
மானமிகு கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)

நன்றியுரை:
மானமிகு உடுமலை
____________________________________________________________

பரிசு பெறும் குறும்படங்கள் விழாவில் திரையிடப்படும்.
அனைவரும் வருக!

Thursday, February 10, 2011

”விடியலை நோக்கி”

ஆவணப்படம் திரையிடல்
11.2.11 | வெள்ளி
இரவு 7 மணி
பெரியார் திடல், சென்னை-7

தமிழக மீனவர் படுகொலை தொடர்பான ”விடியலை நோக்கி” (Towards Dawn ) இயக்கம்: ஜோ டி குருஸ்

குறும்படம்: “வேண்டுகோள்’ இயக்கம்: விஜய பாஸ்கர்