Sunday, September 22, 2019

வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம்

வங்கித் துறையில் மிகப்பெரிய சீர்திருத்த மாக, பல்வேறு பொதுத் துறை வங்கிகளை இணைப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி அறிவித்தார். மத்திய அரசின் இந்த இணைப்பு நடவடிக்கைக்குப் பிறகு 12 பொதுத் துறை வங்கிகள் மட்டுமே இருக்கும். பொதுத்துறை வங்கிகளை சர்வதேச தரத்துக்கு மாற்றும் முயற்சியாகவும், வங்கி களின் கடன் வழங்கும் திறனை அதிகப்படுத்தவும் இந்த நடவடிக் கையை மத்திய அரசு மேற்கொண் டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட்டதற்கு வங்கி அதிகாரிகள் சங்கம் தங்களது கடும் எதிர்ப்பை பதிவு செய்தது. இந்த நிலையில், வருகிற செப் டம்பர் 26 மற்றும் 27ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் அறிவிக்கப் பட்டுள்ளது. அகில இந்திய வங்கி அலுவலர் கூட்டமைப்பு, அகில இந்திய வங்கி அலுவலர் சங்கம், இந்திய தேசிய வங்கி அலுவலர் மற்றும் வங்கி அதிகாரிகளின் தேசிய அமைப்பு இந்த போராட் டத்தை அறிவித்துள்ளன. பொதுத் துறை வங்கிகளை இணைத் தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற செப்டம்பர் 26 (வியாழன்) மற்றும் 27ஆம் (வெள்ளி) தேதி களில்,வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், செப்டம்பர் 28 மற்றும் 29ம் தேதி முறையே 4வது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தொடர்ச்சியாக 4 நாட்கள் வங்கிகள் செயல்படாத சூழ் நிலை ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.