Saturday, September 7, 2019

மதம், ஜாதி அடையாளங்களை வாகனங்களில் வைத்திருந்தால் அபராதம்!


ராஜஸ்தானில் வாகனங்களில் ஜாதி, மத அடை யாளங்களைக் குறிக்கும் வகையில் எழுதப்பட்டோ, அல்லது படமாக  ஒட்டியிருந்தால் அபராதம் வசூ லிக்க போக்குவரத்து காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
புதிய மோட்டார் வாகன சட்டப்படி, பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதிக அளவில் விபத்துகள் ஏற்படுவதால் அதனை கட்டுப்படுத்தவும், உயிரிழப் புகளை தடுக்கவும், பழைய சட்டத் தில் சில முக்கிய திருத்தத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கான திருத்த மசோதா, அண் மையில் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது இரு அவை களிலும் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, 2019 மோட்டார் வாகனச் சட்டத் திருத்தத்தில் ஓட் டுநர் உரிமம் புதுப்பித்தல் 3 ஆண்டு களில் இருந்து 5 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே போல், ஓட்டுநர் உரிமம் காலாவதி யாகிவிட்டால் ஒரு மாதத்திற்குள் புதுப்பிக்க வேண்டும் என்ற நடை முறை ஒரு ஆண்டாக உயர்த்தப்பட் டுள்ளது.
இதுமட்டுமல்லாமல், போக்கு வரத்து விதிகளை மீறும் நபருக்கு அபராதக் கட்டணம் முன்பு இருந் ததைவிட பன்மடங்கு அபராதம் விதிப்பது போன்றவை புதிய மோட் டார் வாகனச் சட்டத்திருத்தத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநில போக்குவரத்துத் துறையினர் வாகனங்களில் மத, சாதிய குறியீடுகள் பெயர்கள், படங்கள் இருந்தால் அந்த வாகனத்திற்கும் அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
அதன்படி, ராஜஸ்தான் மாநிலத் தில் வாகனங்களில் ஜாதி, மதம், அரசியல் சார்ந்த அடையாளங்களை ஸ்டிக்கர்களாக ஒட்டிக்கொள்ளும் நடைமுறை மக்கள் மத்தியில் உள் ளது. சிலர் அந்த அடையாளங்களைப் பயன்படுத்தி விதிமீறலில் ஈடு படுவதால் அவற்றை தடுக்க இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இதைப்போன்ற அடை யாளங்கள் கொண்ட நம்பர் ப்ளேட் உள்ளிட்ட சில குறிப்பிட்ட இடங்களில் இருந்தால் வாகனங் களுக்கு 5 ஆயிரம் ரூபாய் வரையில் அபராதம் விதிக்கப்படும் என எச்ச ரித்துள்ளனர். மேலும் வன்முறை களை ஏற்படுத்தும் விதமாக வாசகம் எழுதியிருந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதாகவும் தெரிவிக் கப்பட்டுள்ளது. வாகனத்தில் பெயர், பதவி, படிப்பு போன்ற ஸ்டிக்கர் அல்லது எழுத்துகளுக்கு அபராதம் ஏதும் விதிக்கப்படாது என்றும் காவல்துறை விளக்கியுள்ளது. படங்கள் ஒட்டும் கலாச்சாரத்தை ஒழிப்பதற்கான முக்கியக் காரணமே அவை வாகன ஓட்டியின் பாது காப்பைக் கேள்விக்குறி ஆக்குவது தான் என்றும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.