சிவகங்கை அருகே கோவானூரில் 17ஆம் நூற்றாண்டை சேர்ந்த குமிழி மடைத்தூண் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் காளிராசா கூறிய தாவது: சிவகங்கை அருகே கோவானூரில் 17ஆம் நூற் றாண்டை சேர்ந்த குமிழி மடைத்தூண் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.
கோவானூர் பெரிய கண் மாய் என
அழைக்கப்படுகிற மேலக்கோவானூர் கண்மா யில் மக்களால் அளவைக்கல், குத்துக்கல்
என்று கூறப்படும் இரட்டைத்தூண் குமிழி மடை ஒன்று காணப்படுகிறது.
இத்தூண்களின் உள்பகுதி களில் கல்வெட்டு எழுத்து உள்ளது.
சோழர், பாண்டிய மன்னர்கள் காலந்தொட்டு
குமிழி மடை அமைப்பு ஏரி, குளங்கள் கண்மாய்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவை
நீரையும், வண்டலையும் தனித்தனியே வெளியேற்றுகிற வகையில் அமைக்கப்படும்.
பொதுவாக மடைகள் கரை யோரங்களில் காணப்படும். ஆனால் கோவானூரில் உள்ள
குமிழிமடை கண்மா யின் பள்ளமான நடுப்பகுதி யில் காணப்படுகிறது. மடைத் தூண்
சுமார் 10 அடி உயர முள்ளது. தூணின் வெளிப் புறத்தில் முகம் போன்ற அழ கிய
வடிவமைப்பு 2 தூண் களிலும் காணப்படுகின்றன என்றார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.