Monday, November 18, 2019

பன்னாட்டு குழந்தைகள் திரைப்பட விழா

பன்னாட்டு குழந்தைகள் திரைப்பட திருவிழா (Dell-IKFF) என்பது, இவ்வகையினத்தில் முதன் முறையாக, பள்ளிகளில் திரையிடப்பட்டு கொண்டாடப்படும் ஒரு பன்னாட்டு திரைப்பட திருவிழாவாகும்.  தற்போது மூன்றாவது பதிப்பாக நடைபெறுகின்ற இத்திருவிழா, திரைப்படங்களின் மேஜிக்கை சிறார்களுக்கு அறிமுகம் செய்யவும், அதன் ஆற்றலைப் பயன்படுத்தி கற்பிக்கவும, உத்வேகமளிக்கவும் முற்படுகிறது.
IKFF 2019 நிகழ்வானது, 40 நாடுகளில் 2 மில்லியனுக்கும் அதிகமான பள்ளிமாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை இலக்காக கொண்டு பள்ளிகளில் நடத்தப்படுகின்ற உலகின் மிகப்பெரிய திரைப்பட திருவிழாவாகும்.
டெல் ஆரம்ப் திட்டத்தின் வழியாக கணினி கற்றலை ஆசிரியர்களுக்கும், தாய்மார்களுக்கும் மற்றும் ஆயிரக்கணக்கான பள்ளிகளின் மாணவர்களுக்கும் டெல் கொண்டு சென்றிருக்கிறது. தொழில்நுட்ப கல்வியறிவானது, எதிர்கால தொழில்முறை பணியாளர்கள் குழுவில் இணையவிருக்கின்ற சிறார்களுக்கு நிச்சயமாக தேவைப்படுகின்ற அடிப்படைஅம்சமாக இருக்கிறது என்ற பகிரப்படுகின்ற நம்பிக்கையிலிருந்தே IKFF 2019 உடனான எமது கூட்டுவகிப்பு செயல்பாடு உருவாகியிருக்கிறது, என்று CSB    டெல் டெக்னாலஜிஸ், இயக்குனர் ரீத்துகுப்தாகுறிப்பிட்டுள்ளார்.

Thursday, November 14, 2019

புதிய கருந்துளை கண்டுபிடிப்பு

சூரியனைப் போன்று வெறும் 3.3 மடங்கு மட்டுமே நிறையுடன் கூடிய புதிய கருந்துளையைக் கண்டுபிடித்துள்ள ஆராய்ச்சியாளர்கள், இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட திலேயே இது தான் மிகச்சிறியது எனத் தெரிவித்துள்ளனர். உருவில் பெரிய நட்சத்திரமானது தனது ஆற்றலை இழந்து உருக்குலைந்து வெடித்துச் சிதறும் போது அதீத ஈர்ப்பு விசையைக் கொண்ட கருந்துளையாவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதேவேளையில் வெடித்துச் சிதறும் போது நியூட்ரான் நட்சத்திரங்களாவதாகவும் அவர்கள் குறிப்பிடு கின்றனர். ஆனால் இந்த நியூட்ரான் நட்சத்திரங்கள் சூரிய னுடன் ஒப்பிடுகையில் 2 முதல் 3 மடங்கு மட்டுமே அளவில் பெரியதாக இருக்கும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
சூரியனுடன் ஒப்பிடுகையில் 4000 கோடி மடங்கு பெரியது தொடங்கி குறைந்தது 5 முதல் 15 மடங்கு பெரிய கருந்து களைகளை இதுவரை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த நிலையில், சூரியனை விட 3.3 மடங்கு மட்டுமே அளவில் பெரிய கருந்துளையை ஓகியோ மாநில பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டுபிடித்துள்ளது. இதற்கு முன் சூரியனை விட 3.8 மடங்கு பெரிய கருந்துளை கண்டு பிடிக்கப்பட்டிருந்தது.
நியூட்ரான் நட்சத்திரத்திற்கு இவ்வளவு பெரிய நிறை இல்லாத போது, இந்த சிறிய கருந்துளை உண்டானது எப்படி என விஞ்ஞானிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்தக் கேள்வியானது நட்சத்திரங்களின் வாழ்க்கைச் சுழற்சி பற்றிய மறுவரையறைக்கு வழிவகுத் திருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்

இந்தியாவில் எதிர்காலத்தில் தொழில் செய்வது கஷ்டம் வோடபோன் தலைவர் பரபரப்பு

இந்தியாவில் தொலைதொடர்பு துறையில் உள்ள நிறுவனங்களுக்கு சிக்கல் தான். இனி தொழில் நடத்த  முடியாத சூழ்நிலை காணப்படுகிறது என்று வோடபோன் தலைவர் கூறி யுள்ளார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல வோடபோன் நிறுவ னத்தின் சிஇஓ நிக் ரீடு நேற்று டில்லியில் பேட்டியளித் தார்.  அவர் கூறியதாவது: இந்தியாவில் தொழில் முதலீடு மற்றும் வாய்ப்பு மிகவும் மோசமான நிலையை நோக்கி சென்று கொண்டி ருக்கிறது. எனினும், நம்பிக் கையுடன் இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டும் என்று உறுதியாக இருக்கிறோம்.
அதற்கான சந்தையும் இருப்பதை கணித்துள்ளோம். சந்தையில் கடுமையான தொழில் போட்டியை சமா ளிக்க வேண்டியது இருக்கும் என்பதும் எங்களுக்கு தெரி யும். அதற்கு நாங்கள் சமா ளிக்க தயாராக இருக்கிறோம்.
கடும் போட்டி நிலவு வதால் இந்தியாவில் இருந்து வோடபோன் வெளியேற உள்ளது என்ற வதந்தி சமீப காலமாக பரப்பப்பட்டு வரு கிறது. இதில் உண்மை இல்லை. இந்த வதந்தியை நம்ப வேண்டாம். வோடபோன் நிறுவனம் தனது சேவையை தொடர்ந்து அளிக்கும் அதில் எந்த சந்தேகமும் இல்லை. தொழில் போட்டியை சமா ளிக்க தகுந்த உத்திகளை கையாள்வது குறித்து ஆலோ சித்து வருகிறோம்.இந்திய அரசுடன் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறோம். தொழில் போட்டியில் சீரான அணுகு முறையை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் எடுத்துக் கூறியுள் ளோம்.
வோடபோன்-அய்டியா ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து இந்தியாவில் தொலைத் தொடர்பு சேவையை செய்து வுகின்றன. இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அளிக்கும் சலுகைகள் மற்றும் கூடுதல் வசதிகள் மற்ற நிறுவனங்க ளின் வர்த்தகத்தை  கடுமை யாக பாதிக்கிறது.
இதனால் அவை தொழில் போட்டியை சமாளிக்க முடி யாமல் திணறிவருகின்றன.  இவ்வாறு வோடபோன் தலைவர் நிக் ரீடு கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் பெண்களுக்காக 150 நவீன இ-கழிப்பறைகள்

சென்னை யில் பெண்களுக்காக ரூ.8 கோடி செலவில் 150 நவீன இ--கழிப்பறைகளை அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
சென்னை மாநகரப் பகு தியில் 74 லட்சம் பேர் நிரந்த ரமாக வசித்து வருகின்றனர். மேலும், சென்னைக்கு தின மும் வந்து செல்வது, சில நாட்கள் தங்கிச் செல்வது என 20 லட்சத்துக்கும் மேற் பட்டோர் உள்ளனர். சென் னையில் பயணம் செய்வோ ருக்கு ஏற்ற வகையிலும், குடி சைப் பகுதிகளுக்கு அருகில் 853 இடங்களில் 6,701 இருக் கைகளை கொண்ட பொதுக் கழிப்பிடங்களை சென்னை மாநகராட்சி அமைத்துள் ளது. தூய்மை இந்தியா திட் டத்தின்கீழ் அந்த கழிப்பி டங்கள் தூய்மையாக பரா மரிக்கப்பட்டு வருகின்றன. இதில் மகளிருக்கான கழிப் பறைகளை அதிகப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
இது தொடர்பாக மாநக ராட்சி அதிகாரிகள் கூறியதா வது:
வெளியில் செல்லும் பொது மக்கள் தங்கள் இயற்கை உபா தைகளை கழிக்க போதிய இடவசதியின்றி அவதிப்படு கின்றனர். குறிப்பாக ஆண் களை விட, பெண்கள் அதிக சிரமத்துக்கு ஆளாகின்றனர். அதனால் அவர்களின் சிர மத்தை போக்கும் வகையில் மாநகராட்சியில் அனைத்து மண்டலங்களிலும், பல்வேறு இடங்களில் ரூ.8 கோடி செலவில் மகளிருக்கான 150 நவீன இ-கழிப்பறைகளை கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இந்த கழிவறைகளை இணையத்தில் கண்காணிக்க முடியும். நீர் இருப்பு, மின் வசதி போன்ற விவரங்களை கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே பெற முடியும். மேலும் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த நவீன இ-கழிப்பறைகள் அமைக்கப் பட உள்ளன.
பொதுமக்கள் தங்கள் அருகில் உள்ள பொதுக் கழிப்பிடங்களின் இருப்பி டங்களை அறிந்துகொள்ள ஏதுவாக, அனைத்து பொது கழிப்பிடங்களும் கூகுள் வரைபடத்தில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ளன.
மத்திய அரசு, சென்னை மாநகராட்சி மற்றும் கூகுள் வரைபடம் ஆகியவை இணைந்து இதற்கான நடவ டிக் கையை மேற்கொண்டனர். கூகுள் வரைபடத்தில் ‘ஜிஷீவீறீமீt’ என தட்டச்சு செய்தால், தங்களின் அருகில் உள்ள பொதுக்கழிப்பிடங்களின் விவரங்கள் கிடைக்கும். இவ் வாறு அதிகாரிகள் கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்து முன்னணியின் அராஜகம்

திருப்பூரில் "ஜிம்" பயிற்சி கூடத்திற்குள் புகுந்து பயிற்சியாளர் மீது இந்து முன்னணி கும்பல் சரமாரி தாக்குதல் நடத்தி யதில் பயிற்சியாளர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக 2 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர் பாண்டியன் நகர்ப்பகுதியில் திருமுருகன்பூண்டி காவல்நிலையத்திற்குட்பட்ட அம்மன் நகரில் "கவின் ஃபிட்னஸ் ஜிம்" என்ற உடற்பயிற்சி கூடத்தை ஜெயமுருகன் என்பவர் கடந்த 20 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.இவரது உடற்பயிற்சிக் கூடத் தில் திருப்பூர் பிச்சம்பாளையம் பகுதியைச் சார்ந்த வில்சன் டேனியல் (வயது 23) என்பவர் பயிற்சியாளராகப் பணியாற்றி வருகிறார்.
கடந்த 2 மாதங்களுக்கு முன் அப்பகுதியில் இருக்கும் இந்து முன்னணி என்ற அமைப்பைச் சார்ந்த சிலர் உடற்பயிற்சி கூடத்தில் சேர வந்துள்ளனர்.பயிற்சியாளர் வில்சன் டேனியல் பயிற்சிக் கட்டணம் குறித்த நடைமுறையைக் கூறியுள்ளார்.இதுதொடர்பாக பயிற்சியாளர் வில்சன் டேனியலுக்கும்,இந்து முன்னணி என்ற அமைப்பைச் சார்ந்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இந்த முகாந்திரத்தின் அடிப்படையில் கடந்த திங்கட்கிழமை பயிற்சியாளர் வில்சன் டேனியலை பொது இடத்தில் வைத்து இந்து முன்னணி என்ற அமைப்பைச் சார்ந்தவர்கள் ஜாடை,மாடையாக தகாத வார்த்தைகள் பேசி வம்புக்கு இழுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை 8.45 மணியள வில் இந்து முன்னணி என்ற அமைப்பைச் சார்ந்த 30-க்கும் மேற்பட்டோர் வெளியே வா,வெளியே வா என்று கூச்சலிட்டபடி  அத்துமீறி உடற்பயிற்சிக் கூடத்திற்கு நுழைந்து அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளனர்.இதன் காரணமாக உடற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி மேற்கொண்டிருந்த நபர்கள் சிதறி வெளியேறியுள்ளனர்.
இதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட இக்கும்பலின் ஒருதரப்பினரான சந்தோஷ்,கார்த்தி,தமிழ், குட்டிவிஷ்வா, அருண், ஆறுச்சாமி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் பயிற்சியாளர் வில்சன் டேனியலை சூழ்ந்து கொண்டு மிரட்டியுள்ளனர்.அப்போது வெளியே இருந்து யாரும் உள்ளே வந்திராதபடி மற்றொரு தரப்பினர் சினிமாவில் ரவுடிக் கும்பல் அணிவகுத்து நிற்பதைப் போல் வழியை ஆக்கிரமித்து நின்றுள்ளனர்.பயிற்சியா ளர் வில்சன் டேனியலை சூழ்ந்து கொண்டிருந்த கும்பல் திடிரென அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.இக்காட்சிகள் யாவும் அங்கு சம்பவம் நிகழ்ந்தபோது எடுக்கப்பட்ட காணொலிக் காட்சி பதிவுகள் மூலம் தெரியவருகிறது.
இந்து முன்னணி என்ற ரவுடிக் கும்பலால் தாக்கப்பட்ட "ஜிம்" பயிற்சியாளர் வில்சன் டேனியலுக்கு தலையில் பலத்த அடிபட்டதில் அவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாகச் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.அவர் அளித்த புகாரைப் பெற்றுக் கொண்ட திருமுருகன்பூண்டி காவல்துறையினர் இச்சம்ப வத்தில் தொடர்புடைய இந்து முன்னணியைச் சார்ந்த 30-க்கும் மேற்பட்டவர்களில் 10 பேர் மீது மட்டுமே வழக்குப் பதிவு செய்து சந்தோஷ், ஆறுச்சாமி என்ற 2 பேரை மட்டுமே கைது செய்து உள்ளனர்.மற்றவர்களை தேடி வருவதாக கூறி வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிக்கு நன்கொடை தரவில்லை என்ற காரணத்திற்காக கடந்த 5.9.2019 அன்று திருப்பூர் அங்கேரிபாளை யம் சாலை ஜீவா காலனியிலுள்ள வீ.கே.கார்மெண்ட்ஸ் என்ற பின்னலாடை நிறுவனத்திற்குள் புகுந்து இந்து முன்னணி என்ற அமைப்பைச் சார்ந்த 60-க்கும் மேற்பட்டோர் தாக்குதல் நடத்தியதில் அங்கிருந்த தொழிலாளர்கள் காயம் அடைந்தனர்.உடைமைகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது.இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அரசியல் அமைப்புகள்,அரசியல் சார்பற்ற அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திரண்டு "இந்து முன்னணி என்ற அமைப்பை தடை செய்யவேண்டும்" என்ற ஒற்றை முழக்கத்தோடு இருபெரும் ஆர்ப்பாட்டங்களை திருப்பூரில் நடத்தியுள்ள நிலை யில் மீண்டும் திருப்பூர் பாண்டியன் நகர் பகுதி அம்மன் நகரில் 30-க்கும் மேற்பட்ட இந்து முன்னணியைச் சார்ந்தவர்கள் உடற்பயிற்சிக் கூடத்திற்குள் புகுந்து சேதம் விளைவித்து,பயிற்சியாளரைத் தாக்கியுள்ள இச்சம்பவம் "இந்து முன்னணியை தடை செய்யக் கோரி" தொடர் போராட்டத்தை திருப்பூரில் தோற்றிவிக்கும் என்று சொன்னால் அது மிகையல்ல!!

Wednesday, November 13, 2019

இந்தியாவில் காற்று மாசால் இதய பாதிப்பு, பக்கம் வாதம் ஏற்படும் ஆபத்து அதிகம்!

டில்லியில் காற்று தர குறியீடு 500க்கும் மேல் உள்ளது.  இது மித அளவை விட 5 மடங்கு அதிகம்.  பஞ்சாப், அரியானா மாநிலங்களில் காய்ந்த பயிர்களை எரிப்பதால் 40 சதவீதமும், டில்லியில் கட்டுமான பணிகள், இடிக்கும் பணிகள் மற்றும் குப்பைகளை எரிப்பதால் 60 சதவீதமும் காற்று மாசு ஏற்படுகிறது என்று டில்லி அரசு தரப்பில் கூறப்பட்டது.
டில்லியில் காற்று மாசு அதிகரித்து இருப்பது தொடர்பாக டில்லி, பஞ்சாப், அரியானா மாநிலங்களுக்குஉச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களை கொண்ட நாடான இந்தியாவில் காற்று மாசுபாட்டால் பொதுமக்களுக்கு ஏற்பட்டு உள்ள பாதிப்பு பற்றி ஸ்பெயின் நாட்டில் உள்ள உலக சுகாதார பார்சிலோனா அமைப்பின் குழுவினர் தலைமையில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
இதற்காக அய்தராபாத் மற்றும் தெலுங்கானாவின் புறநகர் பகுதிகளை ஒட்டிய இடங்களில் 3,372 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வில், பக்கவாதம் அல்லது இதய பாதிப்பு போன்ற கார்டியோவாஸ்குலார் வியாதிகள் ஏற்படும் ஆபத்து மக்களிடம் அதிக அளவில் உள்ளது தெரிய வந்தது.  ஏனெனில், காற்று மாசுபாட்டால், இதயத்தின் தமனிகள் தடிமன் அடைந்து விடும்.  இது சி.அய்.எம்.டி. குறியீடு என அளவிடப்படுகிறது.
இந்த காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்ட மக்களிடம் சி.அய்.எம்.டி. குறியீடு அதிக அளவில் இருந்துள்ளது.
காற்றில் மாசுபாடு ஏற்படுத்தும் நுண்துகள்களின் அளவு பற்றிய உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ள அதிகபட்ச அளவானது ஒரு கன சதுர மீட்டருக்கு 10 மைக்ரோ கிராம் ஆகும்.  ஆனால் இந்தியாவில் ஆண்டு சராசரி அளவானது ஒரு கன சதுர மீட்டருக்கு 32.7 மைக்ரோ கிராம் என்ற அளவில் இந்தியாவில் உள்ளது.
இந்த ஆய்வு முடிவில் சி.அய்.எம்.டி. குறியீடானது, கார்டியோமெட்டாபாலிக் ஆபத்து காரணிகளை கொண்ட அல்லது 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் அதிகம் உள்ளதும், மர கட்டைகள் போன்றவற்றை சமையல் எரிபொருளாக பயன்படுத்தும் பெண்களிடம் அதிகம் உள்ளதும் தெரிய வந்துள்ளது.
இதனால் உயர் ரத்த அழுத்தம், டையாபடீஸ் மற்றும் உடல்பருமன் போன்ற நோய் தாக்கங்கள் ஏற்படும் ஆபத்தும் அதிகரித்து உள்ளது என ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது.

Thursday, November 7, 2019

குரூப்-2 தேர்வு: புதிய நடைமுறைக்கு எதிர்ப்பு பட்டதாரி இளைஞர்கள் போராட்டம்

புதிய தேர்வு நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலு வலகத்தை முற்றுகையிட முயன்ற பட்டதாரி இளைஞர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அதனைத்தொடர்ந்து அவர்கள் மனு அளித்துச் சென்றனர்.
சென்னை பார்க் டவுனில் உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.) அலுவலகத்தை முற்றுகை யிடுவோம் என்று பட்டதாரி இளைஞர்கள் சார்பில் அறிவிப்பு வெளியானது. இதனைத்தொடர்ந்து அலுவலகம் மற்றும் அச்சாலை முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப் பட்டனர்.
இந்தநிலையில் நேற்று பகல் 12 மணிக்கு கிராமப்புறங்களை சேர்ந்த பட்டதாரி இளைஞர்- இளம்பெண்கள் நூற்றுக்கணக்கானோர் கையில் மனுக்களுடன் ஊர்வலமாக டி.என்.பி.எஸ்.சி. அலுவலகம் நோக்கி வந்தனர். முற்றுகையில் ஈடுபட முயன்ற அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
அதனைத்தொடர்ந்து அவர்கள் அங்கேயே அமர்ந்து முழக்கமிட்டனர். பின்னர் ஊர்வலமாக வந்தவர்களில் 4 பேர் மட்டும் டி.என்.பி.எஸ்.சி. அலுவலகம் சென்று, அங்குள்ள அதிகாரி களிடம் மனு அளித்துவிட்டு சென்றனர். இதுகுறித்து பட்டதாரி இளைஞர் செந்தில்முருகன் என்பவர் கூறியதாவது:-
டி.என்.பி.எஸ்.சி. அறிவித்திருக்கும் புதிய பாடத்திட்டம் ஏழை மாணவர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுகள் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே வருடத்துக்கு டி.என்.பி.எஸ்.சி. 4 தேர்வுகள் நடத்தி கொண்டிருந்தது. தற்போது அதையும் ஒருங்கிணைந்த தேர்வாக நடத்துவோம் என்று அறிவித்திருக்கிறார்கள்.
முதல்நிலை தேர்வில் இருந்த 100 கேள்விகள் முற்றிலும் நீக்கி, புதிய பாடத்திட்டத்தில் 8 மற்றும் 9-வது யூனிட்களில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிப்போம் என்கிறார்கள். முதன்மை தேர்வில் ஆங்கில மொழிபெயர்ப்பு இருக்கிறது. இது ஆங்கில வழி மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதாகவே உள்ளது. இந்த நடைமுறைகளை எதிர்த்தும், பழைய பாடத்திட்டத்தையே மீண்டும் செயல்படுத்த கோரியும் மனு அளித்திருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

தென் இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னை விமான நிலைய தீயணைப்பு நிலையத்தில் பெண் நியமனம்


சென்னை விமான நிலைய தீயணைப்பு நிலையத்தில் முதல்முறையாக பெண் பணியா ளர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில், விமான நிலைய ஆணையகத்தின் கட்டுப் பாட்டில் தீயணைப்பு துறை செயல் பட்டு வருகிறது. சென்னை விமான நிலைய தீயணைப்பு நிலையத்தில் முதல்முறையாக ரம்யா சிறீகண் டன் என்ற பெண் பணியாளர் நிய மிக்கப்பட்டு உள்ளார்.
இவர், விமான நிலைய ஆணையகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள விமான நிலையங்களில் தென்னிந்தியாவில் முதல் பெண் தீயணைப்பு பணியாளராகவும், இந்திய விமான நிலைய ஆணையத்தின் 3ஆவது பெண் பணியா ளராகவும் சென்னை விமான நிலைய தீயணைப்பு நிலையத்தில் இளநிலை உதவியாளர் பணியில் சேர்ந்து உள்ளார். இவர் பணியில் சேருவதற்கு முன்பாக டில்லியில் உள்ள தீயணைப்பு பயிற்சி மய்யத்தில் 4 மாதம் கடும் பயிற்சி மேற்கொண்டார்.
இது குறித்து ரம்யா கூறும்போது, தீயணைப்பு பணி மிகவும் சவால் மிகுந்தது. துணிச்சலுடன் பணியாற்றுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. வருங்காலத்தில் தீயணைப்பு துறையிலும் அதிக அளவில் பெண்கள் பங்கேற்பார்கள் என்றார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த இவர், முதுநிலை பொறியியல் பட்டதாரி ஆவார். இவர், 2 வயது குழந்தையின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக அரசின் நிலைப்பாடு என்ன?

திருவள்ளுவருக்கு காவி ஆடை போர்த்தி நெற்றியிலும், கைகளிலும் திருநீற்றுப் பட்டை போட்டு ஒரு சர்ச்சையை அதிகாரப் பூர்வமாக பா.ஜ.க. தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு அவமானப்படுத்தியிருக்கிறதே - இதுகுறித்து ஆளும் அண்ணா திமுகவின் நிலைப்பாடு என்ன?
அதிமுகவை நோக்கிய கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடை என்ன?
1) திருக்குறள்  எல்லா மதங்களையும் கடந்த அறநெறி நூல் என்பதில் அ.இ.அ.தி.மு.க.வுக்கு உடன்பாடு உண்டா இல்லையா?
2) திருக்குறள் ஒரு இந்து மத நூல் என்று சாதிக்க முற்படும் பா.ஜ.க.வின் நிலைப்பாடு பற்றி என்ன கருத்து?
3) திருக்குறளுக்கு திராவிட இயக்கம் ஒன்றும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை ஏற்கிறதா?
4) 'தீக்குறளைச் சென்றோதோம்' என்ற ஆண்டாளின் பாசுரத்திற்கு 'தீய திருக்குறளை ஓத மாட்டோம்' என்று காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சொன்ன தெல்லாம் தெரியுமா? தெரிந்தால் பதிலடி கொடுத்திருக்க வேண்டாமா?
5) அதிமுக அமைச்சரவையில் உள்ள அமைச்சரான மாபா. பாண்டியராஜன் என்பவர் "திருவள்ளுவர் எல்லா மதங்களுக்கும் சொந்தக்காரர் - அதனால் எந்த மதக்காரர்களும் தங்கள் அடையாளத்தை அவர்மீது சாத்தலாம்; திருவள்ளுவர் நாத்திகர் அல்லர்" என்று கூறியுள்ள கருத்து அதிமுகவுக்கு உடன்பாடுதானா? உடன்பாடு இல்லையென்றால் கட்சியின் சார்பில் ஏன் மறுப்புத் தெரிவிக்கவில்லை?
6) திருவள்ளுவர் பெயரில் ஒரு மதச் சர்ச்சையை உண்டாக்கிக் குளிர் காயலாம் என்ற பா.ஜ.க.வின் சூட்சமம் ஆளும் அதிமுக அரசுக்குத் தெரியுமா  - தெரியாதா?
7) தஞ்சையையடுத்த பிள்ளையார்ப்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலைமீது சாணி வீசியவர்களைப் பிடிக்க கால தாமதம் ஏன்?
8) உணர்ச்சிப் பூர்வமான மனநிலை மக்கள் மத்தியில் நிலவும் ஒரு சூழ்நிலையில் காவல்துறை நிறைந்திருக்கும் பிள்ளையார்பட்டியில்  இந்து மக்கள் கட்சிக்காரர்கள் படிக் கட்டுகள் மூலம் திருவள்ளுவர் சிலை பீடத்தில் ஏறி அபிஷேகம் செய்ததும், உருத்திராட்ச மாலை அணிவித்ததும் எப்படி? அதனை அனுமதித்தவர்கள் யார்? யார்?
9) அது இருக்கட்டும், இந்த செயலை செய்ததற்காக அவரை மூன்று குற்றப் பிரிவுகளின் அடிப்படையில் கைது செய்து, உடனே விடுவித்தது ஏன்? அரசியல் தலையீடா?
10) மத்தியில் ஆளும் பா.ஜ.க.வின் தொங்கு சதையாக பின்னிப் பிணைந்தநிலையில் பா.ஜ.க.வோ, சங்பரிவாரோ எது செய்தாலும் கண்டு கொள்வதில்லை என்று அதிமுக அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்து விட்டதா?
11) அண்ணாவின் பெயரைக் கட்சியிலும், கட்சிக் கொடியிலும் வைத்துள்ள அண்ணா திமுக அண்ணாவின் கொள்கைகளைக் காற்றில் பறக்க விட்டு விட்டு அல்லது வேண்டுமென்றே புறக்கணித்தது வெட்கக் கேடு அல்லவா? சரியானது தானா?
12) தந்தை பெரியாரையும், அறிஞர் அண்ணாவையும், திராவிட இயக்கத்தையும் சங்பரிவார் கொச்சைப்படுத்தும் போது, இழிவுபடுத்திப் பேசும்போது, எழுதும்போது அவற் றைக் கண்டு கொள்ள மறுப்பது ஏன்? பெரியார், அண்ணா ஆகியோரின் கொள்கைகள் முற்றிலும் துடைத்து எடுக்கப் பட்ட கட்சியாக அதிமுக உருக்குலைந்து போய் விட்டதா?
13) அய்யா, அண்ணா கொள்கைகள், திராவிட இயக்கக் கோட்பாடுகள் இவை சற்றும் இல்லாமலும் வெறும் பதவிப் பசி கட்சியாக மாறிப் போய் விட்டதா அதிமுக?
14) பா.ஜ.க.வோடு ஒட்டி உறவாடுவதால் சிறுபான்மை யினருக்கு எதிரானது அதிமுக என்ற எண்ணம் பொதுவாக ஏற்பட்டிருப்பதை அதிமுக உணர்ந்துள்ளதா?
15) பகுத்தறிவுச் சிந்தனையோடும், இனமான உணர்வோடும் இருக்கக் கூடிய ஒரே ஒருவர்கூட இல்லாது - அற்றுப் போன கூடாரமாக அஇஅதிமுகவைக் கருதலாமா?
இதுபோன்ற கேள்விகள் இன்னும் இருக்கத்தான் செய் கின்றன. இவற்றைப் பற்றி எல்லாம் கிஞ்சிற்றும் கவலைப்படாத, அக்கறை செலுத்தாத இந்தக் கட்சி அண்ணா பெயரையும், அவரது உருவத்தையும் நீக்கி விடுவதுதானே மரியாதை?
அண்ணா திமுகவில் திராவிட இயக்கவுணர்வும், இனவுணர்வும், பகுத்தறிவுச் சிந்தனையும் உள்ள ஒரே ஒருவர் இருந்தால்கூட, இந்த வினாக்களை கட்சி மட்டத்தில் எழுப் பினால், அத்தகைய ஒருவரை எந்தளவு வேண்டுமானாலும் பாராட்டி மகிழலாம்.
எங்கே பார்ப்போம்?

Monday, November 4, 2019

ஜம்மு, சிறீநகர் மற்றும் லே வானொலி நிலையங்கள் பெயர் மாற்றம்


இந்திய அரசி யலமைப்பு சட்டத்தின் 370-ஆவது பிரிவின் கீழ் காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்புத் தகுதியை மத்திய அரசு கடந்த ஆகஸ்டு 5 ஆம் தேதி ரத்து செய்தது.
மேலும் அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிர தேசங்களாகவும் பிரித்தது.
இந்த சட்டம் நிறைவேறி சுமார் 3 மாதங்கள் ஆன நிலையில், காஷ்மீர் தொடர் பான நடவடிக் கைகள் நவ.1 முதல் அமலுக்கு வந்துள் ளன.  கிரிஷ் சந்திராமர்மு மற்றும் ஆர்.கே.மாத்தூர் இருவரும் முறையே ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்களாக  பதவியேற்றனர்.
இதனை தொடர்ந்து ஜம்மு, சிறீநகர் மற்றும் லே  ஆகிய பகுதிகளில் உள்ள வானொலி நிலையங்களின் பெயர்கள் முறையே ‘ஆல் இந்தியா ரேடியோ-ஜம்மு’, ‘ஆல் இந்தியா ரேடியோ- சிறீநகர்’ மற்றும் ‘ஆல் இந்தியா ரேடியோ- லே’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதற்கு முன் இந்த வானொலி நிலையங்கள் ‘ரேடியோ காஷ்மீர்’ என்ற பெயரில் இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.

"வேலை வாய்ப்பினை உருவாக்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்"

படித்த இளைஞர் களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கும் திட்டத்துக்கு விண்ணப் பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
திருவண்ணாமலை மாவட்ட தொழில் மய்யம், படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர் களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்தி கொண்டு இருக்கிறது.
தமிழக அரசு இந்த திட்டத்தின் கீழ் சேவை மற்றும் வியாபார தொழில்களுக்கு ரூ.1 லட்சம் மற்றும் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி உள்ளது. உற்பத்தி தொழிலுக்கு எந்தவித மாற்றமும் செய்யப்பட வில்லை. அதேபோல் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புபவர்கள் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று 18 வயது முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
www.msmeonline.tn.gov.in/uyegp  என்ற இணையதளத்தில் விண்ணப்பம் செய்து விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இதன் நகல், மாற்று சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதி சான்று, விலைபுள்ளி மற்றும் நிழல்படம் ஆகியவற்றுடன் மாவட்ட தொழில் மய்யம் திருவண்ணாமலை அலுவலகத்திற்கு நேரில் வருகிற 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் வரும்படி கேட்டு கொள்ளப்படுகிறது.
மேலும் விபரங்கள் பெற 8668147561, 9486494621 ஆகிய தொலைபேசியில் வேலை நாட்களில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய கின்னஸ் புத்தகத்தில் இந்தியர்கள் 80பேருக்கு இடம்

‘கின்னஸ் உலக சாதனைகள் -2020’ என்ற புதிய புத்தகம் வெளியாகியுள்ளது. இதில் பல பிரிவுகளில் புதிய சாதனை படைத்தஇந்தியாவைச் சேர்ந்த 80 பேர் இடம் பெற்றுள்ளனர். நிலான்ஸி படேல் என்ற 16 வயது சிறுமியின் தலைமுடி 5 அடி 7 அங்குலம் நீளம் உள்ளது. டீன் ஏஜ் வயதில் மிக நீளமான முடி கொண்ட பெண்ணாக இவர் இடம் பெற்றுள்ளார்.
நாக்பூரைச் சேர்ந்த ஜோதி அமேஜ் என்ற பெண்ணின் உயரம் 24.7 அங்குலம். மிகவும் குள்ளமான பெண்ணாக இவர் இடம் பிடித்துள்ளார். புனேவைச் சேர்ந்த தர் சில்லல் என்பவருக்கு இடது கையில் உள்ள நகம் 909.6 செ.மீ நீளம் உள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த சங்கர நாராயணன் என்பவர் 736 வகையான பேப்பர் கப்களை சேர்த்து வைத்துள்ளதற்காக இடம் பிடித்துள்ளார். இதுபோல், பலர் புதிய கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர்.


குணாதிசயம் சொல்லும் குரோமாசோம்

கருப்பையில் வளரும் சிசுவின் வளர்ச்சி சரியாக இருக்கிறதா என்பதை அறிய கர்ப்பிணிகளுக்கு வயிற்றில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை செய்யப்படுவது பலருக்குத் தெரிந்திருக்கும். சில கர்ப்பிணிகளுக்கு மட்டும் மருத்துவர்கள் கேரியோ டைப்  என்னும் சிறப்புப் பரிசோதனையை மேற் கொள்ளச் சொல்கிறார்கள். இது ஏன், எதற்கு, இதை எப்படிச் செய்கிறார்கள்?
மரபியல் நினைவகம் என்பது என்ன?
நமது உடல் கோடிக்கணக்கான செல்களால் ஆனது. ஒவ்வொரு செல்லுக்குள்ளேயும் 23 இணை குரோமோசோம்கள் வீதம் மொத்தம் 46 குரோமோசோம்கள் இருக்கின்றன. இவற்றில் 23 குரோமோசோம்கள் அப்பாவிடமிருந்தும் அடுத்த 23 குரோமோசோம்கள் அம்மாவிட மிருந்தும் வருகின்றன. இந்த 46 குரோமோசோம்களில் எக்ஸ், ஒய் குரோமோசோம்கள் நம் பாலினத்தை நிர்ணயிப்பவை. ஒருவருக்கு எக்ஸ் குரோமோசோமும் இருக்கிறது; ஒய் குரோமோசோமும் இருக்கிறது என்றால் அவர் ஆண்; மாறாக, ஒய் குரோமோசோம் இல்லை; இரண்டுமே எக்ஸ் குரோமோசோம்களே என்றால் அவர் பெண்.
இந்த குரோமோசோம்களில்தான் மரபணுக் களைக் கொண்ட டி.என்.ஏ. மூலக்கூறுகள் இருக் கின்றன. இவற்றில் காலம் காலமாய் நம் மரபில் வரும் குணாதிசயங்கள் பொதிந்திருக்கின்றன. ஆகவே, இவற்றை மரபியல் நினைவகம் என்கிறோம். ஒரு குழந்தைக்கு அம்மாவின் கண், அப்பாவின் மூக்கு, தாத்தாவின் உயரம், பாட்டியின் நினை வாற்றல், முப்பாட்டனின் முன்கோபம், முப்பாட்டி யின் முடி என்று எல்லாமே சேர்ந்திருப்பதற்கு இதுதான் காரணம்.
******
நிலவேம்பு கசாயத்தில் கல்லீரல் வீக்கத்தை குறைக்கும் ஆற்றல் உள்ளது
* பால் ஒவ்வாமை உள்ளவர்கள் பருத்தி பாலை குடிப்பதால் போதிய சத்துக்களை பெறலாம்
* தேங்காய் உடலில் பரவியுள்ள நுண்கிருமி களை அழித்து, உடலை தூய்மை செய்கிறது.
* அல்சர், குடலில் ஏற்படும் புண்களை ஆற்றும் ஆற்றல் பெற்றது கொய்யா பழம்.
* சுண்டைக்காய் நரம்பு மண்டலத்துக்கு சக்தி கொடுத்து பார்வைத் திறனை அதிகரிக்கும், நினைவாற்றல் கூடும்.

மாலி தாக்குதலுக்கு அய்.எஸ். பொறுப்பேற்பு

மாலி நாட் டின் மேனகா பிராந்தியத்தில், இன்தெலிமான் என்ற இடத் தில் ராணுவ சாவடியில் கடந்த 1ஆம் தேதி பயங்கர வாதிகள் புகுந்து துப்பாக்கி யால் சுட்டும், குண்டுகளை வெடித்தும் நடத்திய அதி பயங்கர தாக்குதல்களில் 53 வீரர்கள் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் கூறின.
இந்த தாக்குதலில் பிரான்ஸ் வீரர் ஒருவரும் பலியாகி இருப் பது இப்போது அம்பலத்துக்கு வந்துள்ளது. இது தொடர் பாக  மாலி அரசுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக பிரான்ஸ் ஆயுதப் படைகள் துறை அமைச்சர் புளோரன்ஸ் பார்லி, மாலிக்கு செல்ல உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

பிரேசில் நாட்டில் அமேசான் காடுகள் பாதுகாப்பு ஆர்வலர் சுட்டுக்கொலை


பிரேசில் நாட்டில் அமேசான் காடுகள் ஆர்வலராக விளங்கியவர், பூர்வகுடியைச் சேர்ந்த பவுலோ பவுலினோ குவாஜாஜாரா. அங்கு காடுகளில் உள்ள மரங்களை வெட்டி கடத்து கிற கும்பல்களை எதிர்த்து போராடுகிற வன பாதுகாவ லர்கள் அமைப்பின் உறுப்பி னராக இருந்து வந்தார்.
இவர் அங்குள்ள மரான் ஹாவோ மாகாணத்தில், அராரிபோயா காட்டுப்பகுதி யில் கடந்த 1ஆம் தேதி வேட் டையாடிக் கொண்டிருந்த போது, சட்ட விரோத மர கடத்தல் காரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பவுலோவின் படுகொலை, அமேசான் காடுகளின் பாது காவலர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசிலில் தனிமைப்படுத் தப்பட்டுள்ள சமூகங்களுக் காக போராடி வருகிற லாப நோக்கற்ற சர்வைவல் இன் டர்நேஷனல் அமைப்பு, இதற்கு முன்பும் கூட அமே சான் காடுகள் ஆர்வலர்கள் 3 பேர் தங்கள் உறவினர்களு டன் கொல்லப்பட்டுள்ளதாக கூறுகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் டபாடிங்கா நகரில் பூர்வ குடி மக்களை பாதுகாப்பதற்காக பணியாற்றிய அதிகாரி ஒரு வர் கொல்லப்பட்டது நினைவு கூரத்தக்கது.
அமேசான் காடுகளின் பாதுகாவலர்கள் கொல்லப் பட்டு வருகிற சம்பவங்கள், பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சொனாரோவுக்கு எதி ராக உள்நாட்டிலும், வெளி நாடுகளிலும் கடும் விமர்சனங் களுக்கு வழிவகுத்துள்ளன.
பவுலோ படுகொலை தொடர்பாக காவல்துறையி னர் விசாரணை நடத்துகின் றனர்.
குற்றவாளிகளை பிடித்து நீதியின் முன் நிறுத்துவோம் என்று பிரேசில் நீதித்துறை அமைச்சர் செர்கியோ மோரோ கூறி உள்ளார்.

மத்திய அரசின் உளவு நடவடிக்கைகள்

மனித உரிமை ஆர்வலர்கள், பகுத்தறிவாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள்  வாட்ஸ் - அப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பகிரும் தகவல்களை மத்திய அரசாங்கம் உளவுபார்க்கிறதோ என்ற அய்யம் ஏற்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
இஸ்ரேலின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலமாக கணினி வழியே சமூக ஆர்வலர்கள், வழக்குரைஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்களது நடவடிக்கைகள் களவாடப்பட்டிருப்பதற்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், வாட்ஸ்அப் நிறுவனம், இந்தியாவின் 40 பேர் உட்பட உலக அளவில் 1400 பேரின் தகவல்கள் குறிவைத்து கள வாடப்பட்டிருக்கின்றன என்று ஒப்புக் கொண்டி ருக்கிறது.
இது தனிநபர்களின் ஸ்மார்ட்போன் அல்லது கணினிகளில் உரிய அனுமதியின்றி ஊடுருவப் படுமானால் அது உச்சநீதிமன்றத்தால் வரையறுக்கப் பட்டுள்ள, தனிநபரின் அந்தரங்கங்கள் என்கிற அடிப்படை உரிமையை மீறும் செயலாகும். பெகாசஸ் போன்ற உளவு மென்பொருளைப் பயன்படுத்துவது, ஒருவரின் தனிப்பட்ட தரவு மற்றும் தகவல்களை அவருக்கும் தெரியாமல் சட்டவிரோதமாக சோதனை செய்வதற்கு இணையானதாகும்.
பெகாசஸ் மென்பொருளின் உரிமையாளர், இந்த மென்பொருளைத் தாங்கள் அரசாங்க ஏஜென்சி களுக்கு மட்டும்தான் விற்கிறோம் என்று அறிவித் திருக்கிறார். இது இந்தக் களவு வேலைகளையெல்லாம், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் வழக்குரைஞர்களைக் குறிவைத்து, அரசாங்கம்தான்  உளவு பார்க்கிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
"அரசாங்கம், தன்னுடைய ஏஜென்சி ஏதாவது இந்த வேலைகளில் ஈடுபட்டிருக்கிறதா என்பதற்குப் பதில் சொல்லியாக வேண்டும். சட்டத்தின்படி, மக்களுடைய தொலைபேசிகளை ஊடுருவுவது என்பது சைபர் குற்றமாகும். பெகாசஸ் மென் பொருளை அரசாங்கம் பயன்படுத்தவில்லை என்றால், பின் ஏன் அது இது தொடர்பாக ஒரு முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து, அதனை யார் பயன்படுத்துகிறார்கள் என்று புலனாய்வு செய்திடக் கூடாது?.
மத்திய உள்துறை விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சைபர் மற்றும் தகவல் பாதுகாப்பு பிரிவு பெகாசஸ் மென்பொருளை வாங்கவில்லை என்று கூறி மறுத்திருக்கும் அதே சமயத்தில், அரசாங்கம் தன் கீழ் இயங்கும் என்.டி.ஆர்.ஓ, சி.பி.அய் அல்லது ஆர்.ஏ.டபிள்பு (NTRO, CBI, RAW) போன்று வேறெந்த துறையும் வாங்கவில்லை என்று இன்னமும் தெரிவிக்கவில்லை.
இந்தப் பிரச்சினை மீது கிரிமினல் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேலும் குடிமக்களின் அந்தரங்கம் மற்றும் உரிமைகளைப் பாதுகாக்கும் வண்ணம் ஓர் ஒருங்கிணைந்த தரவு பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு அறிக்கை கோரியுள்ளது.
உண்மையிலே இது அபாயகரமான பிரச்சினை யாகும் - வெளிநாடுகளில் இது நடந்திருந்தால் ஆட்சிக்கேகூட ஆபத்தாக முடிந்திருக்கும்.
1972இல் அமெரிக்காவில் என்ன நடந்தது?
வாட்டர்கேட் மாளிகையில் இரகசியமாக ஒலிப்பதிவு கருவிகளை பொருத்தி அங்கு நடை பெறும் உரையாடல்களை தேர்தல் வியூகங்களைத் தெரிந்து கொண்டார் என்று அதிபர் நிக்சன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில் பதவியை ராஜினாமா செய்தாரே - அந்த நாகரிகத்தை இந்தியாவில் அதுவும் பிஜேபிஆட்சியில் எதிர்பார்க்க முடியுமா?

Wednesday, October 23, 2019

காரில் பதிவு எண்ணுக்கு பதில் ஆந்திர பிரதேச முதல்அமைச்சர் பெயராம்!

தெலங்கானாவில் அய்தராபாத் நகரில் கார் ஒன்றின் முகப்பு பகுதியில் பதிவு எண் இருப்பதற்கு பதிலாக, ஆந்திர பிரதேச முதல்அமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் பெயரை குறிப்பிடும் வகையில், ஏ.பி. சி.எம். ஜெகன் என ஆங்கில எழுத்துகளால் எழுதப்பட்ட வெள்ளை நிற நம்பர் பிளேட் இருந்தது.
அந்த காரை ஓட்டி வந்த நபரிடம் வாகன சோதனையில் ஜீடிமெட்லா காவல்துறையினர் இதுபற்றி விசாரணை மேற்கொண்டனர்.
அந்த வாகனம் ஏசு ரெட்டி என்பவரது பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதும், அதனை ராகேஷ் என்பவர் பயன்படுத்தி வந்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
காரை ஓட்டிய நபர், சுங்க சாவடி கட்டணம் செலுத்துவது மற்றும் காவல் துறையினர் சோதனையை தவிர்ப்பதற்காக வாகன பதிவு எண்ணுக்கு பதில் ஆந்திர பிரதேச முதல்அமைச்சர் ஜெகன் பெயரை பயன்படுத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நாட்டிலேயே அதிக குற்றங்கள் நடக்கிற மாநிலம் பிஜேபி ஆளும் உத்தரபிரதேசம்: தமிழ்நாட்டுக்கு 7ஆவது இடம்

நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள், யூனியன் பிர தேசங்களில் 2017ஆ-ம் ஆண்டு நடந்துள்ள குற்றச்சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்பான புள்ளி விவர பட்டியலை தேசிய குற்ற ஆவண காப்பகம் (என்.சி.ஆர்.பி.) வெளியிட்டுள்ளது.
2017ஆ-ம் ஆண்டில் நாடு முழு வதும் 30 லட்சத்து 62 ஆயிரத்து 579 குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன. 2016இ-ல் இந்த எண்ணிக்கை 29 லட்சத்து 75 ஆயிரத்து 711 ஆக இருந்தது.
2015-ஆம் ஆண்டு இது 29 லட்சத்து 49 ஆயிரத்து 400 ஆகும்.
நாட்டிலேயே பெரிய மாநிலம் என்ற சிறப்பை பெற்றுள்ள உத்தர பிரதேசம்தான், குற்றச்சம்பவங் களிலும் முதல் இடத்தில் உள்ளது.
இந்த மாநிலத்தில் 2017ஆ-ம் ஆண்டில் 3 லட்சத்து 10 ஆயிரத்து 84 குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன. இது நாட்டில் 10.1 சதவீதம் ஆகும்.
இங்கு 2016-ஆம் ஆண்டில் 2 லட்சத்து 82 ஆயிரத்து 171 குற்ற வழக்குகளும், 2015ஆ-ம் ஆண்டு 2 லட்சத்து 41 ஆயிரத்து 920 வழக்கு களும் பதிவாகின.
மராட்டிய மாநிலம், அதிக எண் ணிக்கையிலான குற்றச்சம்பவங்கள் நடந்துள்ள 2-ஆவது மாநிலம் என்ற பெயரை பெறுகிறது.
இங்கு 2017-இல் 2 லட்சத்து 88 ஆயிரத்து 879 வழக்குகள் பதிவாகி உள்ளன. இது 9.4 சதவீதம் ஆகும்.
மத்திய பிரதேசத்துக்கு மூன் றாவது இடம்.
இந்த மாநிலத்தில் 2 லட்சத்து 69 ஆயிரத்து 512 குற்ற வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. இது 8.8 சதவீதம் ஆகும்.
4-ஆவது இடம், கேரள மாநிலத் துக்கும், 5-ஆவது இடம் டில்லிக்கும், 6ஆ-வது இடம் பீகாருக்கும் கிடைத் துள்ளது.
குற்றச்சம்பவங்களின் எண்ணிக் கையில் தமிழ்நாடு 7-ஆவது இடத்தில் உள்ளது.
தமிழ்நாட்டில் 2017-ஆம் ஆண்டு 1 லட்சத்து 78 ஆயிரத்து 836 வழக்குகள் பதிவாகி உள்ளன.
இது 5.8 சதவீதம் ஆகும். 2016-ஆம் ஆண்டு, 1 லட்சத்து 79 ஆயிரத்து 896 குற்ற வழக்குகளும், 2015-ஆம் ஆண்டு, 1 லட்சத்து 87 ஆயிரத்து 558 குற்ற வழக்குகளும் பதிவாகி உள்ளன.
இந்த வகையில் தமிழ்நாட்டில் குற்றங்களின் எண்ணிக்கை குறைந் துள்ளது.

2020ஆம் ஆண்டின் தமிழக அரசு விடுமுறை பட்டியல் பாரீர்!


தமிழக அரசு, 2020இல் 23 நாட்களை பொது விடுமுறை நாட்களாக அறிவித்துள்ளது.
தமிழக அரசு, 2015இல் 24 நாட்கள், 2016இல் 23, 2017இல் 22; 2018இல், 23, 2019இல் 23 நாட்களை பொது விடுமுறை நாட்களாக அறிவித்திருந்தது. அடுத்த 2020ஆம் ஆண்டிற்கும் நடப்பு ஆண்டை போலவே, 23 நாட்களை பொது விடுமுறை நாட்களாக அறிவித்துள்ளது. பொது விடுமுறை நாட்களில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அலுவலகங்களும், மூடப்பட வேண்டும். அனைத்து, சனி, ஞாயிற்று கிழமைகளும், விடுமுறை நாட்கள் ஆகும்.

ஜனவரி மாதத்தில் 5 நாட்களும், ஏப்ரல் மாதத்தில் 4 நாட்களும், ஆகஸ்ட் மாதத்தில் 5 நாட்களும், அக்டோபர் மாதத்தில் 4 நாட்களும்  பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

ரஷ்யாவும், கியூபாவும் இணைந்து பல்நோக்கு கதிர்வீச்சு மய்யம் அமைப்பு


இந்தியாவைப் போன்ற தனி சுதந்திர குடியரசு நாடான கியூபாவில், பல்வேறு பணிகளுக்கு பயன் படுத்தும் நோக்கிலான கதிர்வீச்சு மய் யம் ஒன்றை அமைக்க கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி ஒப்பந்தம் கையெழுத்தானது. கியூபாவின் தலைநகர் ஹவானாவில் இதற்காக நடைபெற்ற நிகழ்வில் பங் கேற்று, கூட்டு ஒப்பந்தத்தில் ரசியா கையொப்பமிட்டது.
கியூபாவின் சார்பில் அந்நாட்டின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுப்புறச் சூழல் துறைகளுக்கு பொறுப்பு வகிக்கும் துணை அமைச்சர் ஜோஸ் ஃபிடல் சந்தனா அவர்களும், ரஷ்யாவின் சார்பில், அந்நாட்டு அணு மின் சக்திக் கழகமான ரொசாட்டம் நிறுவனத்தின் துணை தலைமை இயக்குனர் நிக்கோலே ஸ்பாஸ்கை அவர்களும் இந்த ஒப்பந் தத்தில் கையொப்பமிட்டனர்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், ரசிய அணுமின் கழகமான ரொசாட்டம் நிறு வனம் சார்பில் கியூபாவிற்கு வழங்கப் படும் நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு, ரொசாட்டம் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜே.எஸ்.சி. ரொசாட்டம்  ஹெல்த்கேர் வடிவமைத்து உருவாக்கும் பல்நோக்கு கதிர்வீச்சு மய்யம் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகின்றன.
தற்போது அமைக்கப்படும் முதல் மய்யம் வெற்றிகரமாக அமைந்தால், இந்த இரு நாடுகளும் இணைந்து கியூபா வில் மேலும் பல இடங்களில் இது போன்ற மய்யங்களை அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் எனவும் தெரிகிறது.

கனடா நாடாளுமன்ற தேர்தல் மீண்டும் பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ


நிலப் பரப்பில் உலகின் 2ஆவது மிகப்பெரிய நாடாக விளங் கும் கனடாவில் 338 தொகு திகளை கொண்ட நாடாளு மன்றத்துக்கு நேற்று முன் தினம் தேர்தல் நடைபெற்றது.
இதில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சிக்கும், ஆண்ட்ரூ ஷீர் தலைமையிலான கன்சர் வேட்டிவ் கட்சிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது. நேற்று மாலை வாக்குப்பதிவு முடிந்தவுடன், வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.
இந்த தேர்தலில் எந்த கட் சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனாலும், ஜஸ்டின் ட்ரூடோவின் லிப ரல் கட்சி, 157 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. கன்சர் வேட்டிவ் கட்சிக்கு 121 இடங்கள் கிடைத்துள்ளன. ஆட்சி அமைக்க 170 இடங் கள் தேவை என்கிற நிலையில், ஜஸ்டின் ட்ரூடோவுக்கு 13 நாடாளுமன்ற உறுப்பினர் களின் ஆதரவு மட்டுமே தேவைப்படுகிறது.
அந்த வகையில் இந்திய வம்சாவளி சீக்கியரான ஜக் மித் சிங்கின், புதிய ஜனநாயக கட்சி ஆதரவுடன், ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் ஆட்சிய மைப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் மத்தி யில் அதிகம் வரவேற்பை பெற்ற புதிய ஜனநாயக கட்சி 20 இடங் களை கைப்பற்றி யுள்ளது.
கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைப்ப தன் மூலம் ஜஸ்டின் ட்ரூடோ தொடர்ந்து 2ஆவது முறை யாக பிரதமராகிறார். இதற் கிடையே நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்கு ஜஸ்டின் ட்ரூடோவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சமூக நீதிக்கு மரண அடி!: பல்கலைக்கழகம், கல்லூரி படிப்பில் சேர உயர்கல்விக்கு ஒரே நுழைவு தேர்வாம்! சமூக நீதிக்கு மரண அடி!: பல்கலைக்கழகம், கல்லூரி படிப்பில் சேர உயர்கல்விக்கு ஒரே நுழைவு தேர்வாம்!

ஒரே தேர்தல், ஒரே உணவுப் பங்கீட்டு அட்டை பாணியில், பல்கலைக்கழகம், கல்லூரிகளில் கலை, அறிவியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக நாடு முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வை கொண்டு வர மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
இது தொடர்பாக, புதிய தேசியக் கல்விக் கொள்கை இறுதி வரைவில் பரிந்துரைக்கப்பட இருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை  அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
மருத்துவ படிப்புக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான நீட் நுழைவுத்தேர்வு கொண்டு வரப்பட்டது. கடந்த மே மாதம் வெளியிடப்பட்ட புதிய தேசிய கல்விக் கொள்கையில், கலை அறிவியல் உட்பட அனைத்துபட்டப் படிப்புகளுக்கும் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டுமென பரிந்துரைக்கப் பட்டது.
இதற்கு பல தரப்பிலும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின.
ஆனாலும், பட்டப்படிப்புக்கு ஒரே நுழைவுத் தேர்வை கொண்டு வருவதில் மத்திய அரசு தீவிரமாக இருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தற்போது கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
நாடு முழுவதும் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் கலை, அறிவியல் படிப்புகளில் சேர, பாடவாரியாக ஒரே நுழைவுத் தேர்வை கொண்டு வருவது குறித்து புதிய தேசிய கல்விக் கொள்கையின் இறுதி வரைவில் பரிந்துரைக்கப்படும். மாணவர்களின் சிரமத்தை போக்க, இத்தேர்வு ஆண்டுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட முறை நடத்தப்படும். இத்தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தும். தற்போது, பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் சேர மாணவர்கள் தனித்தனியாக நுழைவுத் தேர்வு எழுதி வருகின்றனர். ஒரே நுழைவுத்தேர்வு கொண்டு வருவதின் மூலம் மாணவர்களுக்கு ஏற்படும் நெருக்கடி குறையும். புதிய தேசிய கல்விக் கொள்கையின் இறுதி வரைவு குறித்து 2 லட்சம் பரிந்துரைகள் ஆய்வு செய்யும் பணி முடிந்துள்ளது.
இதனால், இறுதி வரைவு விரை வில் தயாராகி விடும். இதற்கான பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன. உயர்கல்விக்கான பரிந் துரைகளை ஆய்வு செய்ய பெங்களூ ருவில் ஓர் அலுவலகம் அமைக்கப் பட்டது. பள்ளி கல்விக்காக, சிபிஎஸ்இ தலைவர் அனிதா கர்வாலின் கீழ் ஒரு குழு அறிக்கையை இறுதி செய்தது.
புதிய தேசிய கல்விக் கொள்கை, முற்போக்கான, முற்றிலும் இந்தியாவை மய்யமாக கொண்ட கொள்கையாக இருக்கும் என நம்புகிறேன். இறுதி வரைவுக்கு பிரதமர் மோடியின் ஒப்புதல் கிடைத்ததும், அதை விரைவில் அறிவிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தற்போது, பொறியியல், வேளாண்,  மருத்துவம், மேலாண்மை உள்ளிட்ட சில பட்டப்படிப்பு களுக்கு மட்டுமே நுழைவுத்தேர்வு இருந்து வருகிறது. கலை, அறிவியல் பட்டப் படிப்பில் சேர நுழைவுத் தேர்வு கிடையாது. ஆனால் புதிய கல்விக் கொள்கையில், கலை, அறிவியல் பட்டப்படிப்புக்கும் ஒரே நுழைவுத்தேர்வு கொண்டு வரப் படும் என்பது கிராமப்புற மாண வர்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தும் என கல்வியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கீழடி அகழாய்வில் சுடுமண் குழாய் கண்டுபிடிப்பு


கீழடி அகழாய்வுக் குழிகளை மூடும்போது, மேம்பட்ட சுடுமண் குழாய் அமைப்புகள் கண்டுபிடிக்கப்பட் டுள்ளன.
சிவகங்கை மாவட்டம், கீழடியில், இதுவரை, அய்ந்து கட்டங்களாக அகழாய்வுகள் செய்யப்பட்டு உள்ளன. முதல் மூன்று கட்ட அகழாய்வுகளை, மத்திய தொல் லியல் துறையும், அடுத்த, இரண்டு கட்ட அகழாய்வுகளை,தமிழக தொல்லியல் துறையும் மேற்கொண் டன. அய்ந்தாம் கட்ட அகழாய்வு பணிகள், கடந்த வாரத்தில் முடிந்தன. அதனால், அகழாய்வுக் குழிகளை, தார்ப்பாய்களால் மூடி, மண் கொட்டும் பணிகள் நடந்தன.
அப்போது, அகழாய்வுக் குழி ஒன்றின், 52 செ.மீ., ஆழத்தில், 20 செ.மீ., விட்டமுள்ள வாய்ப் பகுதி யுடன் கூடிய, 60 செ.மீ., நீளமுள்ள, சுடுமண் குழாய் கண்டுபிடிக்கப் பட்டது.
அது, இரண்டு குழாய் களால் இணைக்கப்பட்டிருந்தது. அதன் ஒவ்வொன்றிலும், தலா, 5 விளிம்புகள் இருந்தன. குழாயை உறுதியாக்கி, பாதுகாப்பான தண் ணீரை வழங்கும் வகையில் அமைக் கப்பட்டிருக்கும் இந்த விளிம்புகள், பார்வைக்கு, சுருள் வடிவத்தில் உள்ளன. இக்குழாய் ஒன்றின் வாய்ப் பகுதியில், வடிகட்டும் வகையில், மூன்று துளைகள் இடப்பட் டுள்ளன.
இந்த குழாய்களின் கீழ்ப்பகுதி யிலும், அகழாய்வு செய்யப்பட்டது. அப்போது, பீப்பாய் வடிவிலான, மூன்று, சுடுமண் குழாய்கள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு, ஒரே குழாயாக இருந்தது.
அதன் வாய்ப் பகுதியிலும், வடிகட்டி பொருத்தப்பட்டிருந்தது. வடி கட்டப்பட்ட நீர் செல்லும் குழாயின் இறுதிப் பகுதி, இரண் டடுக்கு பானைக்குள் செல்கிறது.
இவ்வாறு, ஒரே இடத்தில் அமைக்கப்பட்டிருக்கும், வெவ் வேறு விதமான இரண்டு சுடுமண் குழாய்களுக்கும், வெவ்வேறு பயன்பாடு இருந்திருக்க வேண்டும். இந்த வடிகால் குழாய்களின் கீழ்ப் பகுதியை அகழாய்வு செய்தபோது, சுடுமண் கூரை ஓடுகள் பதிக்கப்பட்ட தரைப்பகுதி காணப்பட்டது.
இது, தண்ணீரை எளிதாக வடிய வைக்கும் திறந்தவெளி அமைப்பாக இருக்கலாம்.தமிழக அகழாய்வு களில், இதுவரை கிடைக்காத வகையிலான, இந்த வடிகால் அமைப்பு களின் பயன்கள் குறித்து, அடுத்த கட்ட அகழாய்வுகளில் தான் தெரிய வரும். மேலும், அந்த பகுதியை தொடர்ந்து ஆய்வு செய்த போது, கூரை ஓடுகள் அடுக்கப்பட்ட நிலையில் இருந்தன. அவற்றின் தொடர்ச்சியில், செங்கல் கட்டடப் பகுதி இருந்தது.அது, இரண்டாம் கட்ட அகழாய்வின் போது கண்டறியப்பட்ட, கட்டடப் பகுதி யின் தொடர்ச்சி.
அதன் தொடர்ச்சி யை, அடுத்த கட்ட அகழாய்வில் தான் கண்டறிய முடியும்.
'கீழடி அய்ந்தாம் கட்ட அகழாய் வின் முடிவில் கண்டறியப்பட்டுள்ள, இந்த சுடுமண் குழாய்கள் மற்றும் கட்டடப் பகுதிகளை தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும்.'சங்க காலத்தில், வைகை நதிக்கரையில் வாழ்ந்த தமிழர்களின் நீர் மேலாண்மை, கட்டடக்கலை, தொழில்நுட்பம் உள்ளிட்டவை குறித்த, பல்வேறு தகவல்கள் வெளிப் படும்' என, தமிழக தொல்லியல் துறை அதிகாரிகள் நம்புகின்றனர்.
இது, தமிழக வரலாற்றின், புதிய திருப்பங்களுக்கு மிகப்பெரிய சான்றுகளாக இருக்கும் என்பதால், அடுத்தகட்ட அகழாய்வக்காக, வர லாற்று ஆய்வாளர்கள் எதிர் பார்ப்பில் உள்ளனர்.
மதுரை தமிழ் சங்கத்தில்கீழடி தொல்பொருட்கள்
கீழடி அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்களை, மதுரை தமிழ் சங்கத்தில் காட்சிப்படுத்த, தமிழக தொல்லியல் துறை முடிவு செய் துள்ளது.
சிவகங்கை மாவட்டம், கீழடியில், அய்ந்தாம் கட்ட அகழாய்வுப் பணி, சமீபத்தில் நிறைவடைந்தது; அக ழாய்வுக் குழிகள் மூடப்பட்டு விட் டன.
ஆறாம் கட்ட அகழாய்வுக்கான அனுமதியை, மத்திய தொல்லியல் ஆலோசனை வாரியத்திடம், தமிழக அரசு கோரியுள்ளது.
இந்நிலையில், கீழடியில் கிடைத்த தொல்பொருட்களை, அங்கேயே காட்சிப்படுத்த வேண் டும் என, பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர்.
அதையேற்ற தமிழக தொல்லியல் துறை, கீழடியில் கிடைத்த தொல் பொருட்களை, பலரும் பார்க்கும் வகையில், மதுரை தமிழ் சங்கத்தில் காட்சிப்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள், மும்முரமாக நடந்து வருகின்றன.
பார்வையாளர்களின் வருகை யை பொறுத்து, கண்காட்சி நடத்தும் நாட்களை முடிவு செய்ய, அதிகாரிகள் திட்ட மிட்டுள்ளனர்.

செவ்வாய்க் கோளில் உப்பு ஏரிகள் : ஆய்வில் தகவல்


செவ்வாய்க் கோளில் ஒரு காலத்தில் பூமியில் இருந் ததைப் போன்ற உப்பு ஏரிகள் இருந்ததாக ஆய்வில் கண்டறியப் பட்டுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் ஏ அண்ட் எம் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி யாளர்கள் ‘நேச்சர் ஜியோ சைன்ஸ்’ இதழில் வெளியிட்டுள்ள கட்டுரை யில் கூறியிருப்ப தாவது:
செவ்வாய்க்கோளில் 3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கேல் க்ரேட் டர் பள்ளத்தில் இருந்த ஏரி, 95 மைல் அகலமுள்ள ஒரு பெரிய பாறைப்படுகை, இது 2012 முதல் நாசா கியூரியா சிட்டி ரோவர் மூலம் ஆராயப்பட்டு வருகிறது. சுமார் 3.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய்க் கோளில் ஒரு விண்கல் தாக்கியபோது கேல் பள்ளம் உருவானது. செவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் உப்பு ஏரிகள் இருந் துள்ளன. அவை பூமியில் இருந் ததைப் போலவே ஈரமான மற்றும் வறண்ட கட்டங்களைக் கடந்து வந்துள்ளன. செவ்வாய்க் கோளின் காலநிலை நீண்ட காலமாக வறண்டு போய் இருக்கிறது. செவ்வாய்க் கோளின் வளிமண்டலம் மெல்லிய தாக மாறியதால் செவ்வாய்க் கோளில் திரவ நீர் நிலைத்திருக்காமல் ஆவியாகியுள்ளது என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.
மரியன் நாச்சன் கூறுகையில், கேல் க்ரேட்டர் அதன் வரலாற்றில் திரவ நீர் இருந்ததற்கான அறிகுறி களை வெளிப்படுத்துகிறது. இது நமக்குத் தெரிந்த நுண்ணுயிர் வாழ் வின் முக்கிய அங்கமாகும், வறண்ட காலங்களில் உப்பு ஏரிகள் இறுதியில் உருவாகின. இந்த ஏரிகள் எவ்வளவு பெரியவை என்று சரியாகச் சொல் வது கடினம். ஆனால் கேல் க்ரேட் டரில் உள்ள ஏரி நூற்றுக்கணக்கான ஆண்டுகள் முதல் பல்லாயிரக்கணக் கான ஆண்டுகள் வரை இருந்துள் ளது என்றார்.

சத்திஸ்கர் அரசின் முடிவு

சத்திஸ்கர் மாநிலத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) தேவையில்லை என்றும், வாக்குச் சீட்டுகளைக் கொண்டே தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறும் என்றும் மாநில முதல் அமைச்சர் பூபேஷ் பாகேல் அறிவித்து உள்ளார்.
வாக்குச்சீட்டு முறை தேர்தலுக்கு கடந்த சில ஆண்டுகளாக முடிவு கட்டிய தேர்தல் ஆணையம், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மூலம் வாக்குப்பதிவை செயல்படுத்தி வருகிறது. இந்த இயந்திர வாக்குப் பதிவில் தில்லுமுல்லு நடைபெறுவதாக காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த நிலையில், சத்திஸ்கர் மாநிலத்தில் நடைபெற உள்ள  உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் வாக்குச் சீட்டு வாக்குப் பதிவுக்கு ஆதரவாக ஈ.வி.எம்-களை அகற்றி விட்டு, மீண்டும் பழைய முறையான வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த மாநில அரச முடிவு செய்துள்ளது.
இதன் காரணமாக வாக்குச்சீட்டு முறையில் மீண்டும் தேர்தல் நடத்தும் முதல் மாநிலமாக சத்திஸ்கர் மாறி உள்ளது.
சத்திஸ்கர் மாநிலத்தில் ஏற்கெனவே உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான தேர்தல் விதிகள் ஆய்வு தொடர்பாக அமைச்சரவைக் குழு அமைக்கப் பட்டிருந்த நிலையில், நேற்று (அக். 22) முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையில், அமைச்சரவைக் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் உள்ளாட்சித் தேர்தல்களில் ஈ.வி.எம்-களுக்குப் பதிலாக வாக்குச் சீட்டைப் பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சத்திஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் தலைமையிலான அமைச்சரவை ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட பரிந்துரைகள் மாநில ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்துக் கூறிய மாநில அமைச்சர்,  "நகர்ப்புற உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் வாக்குச் சீட்டைப் பயன்படுத்துவதற்கும், மேயர் மற்றும் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல்களை நடத்துவதற்கும், நகராட்சித் தேர்தல் சட்டத்தைத் திருத்தும் வகையில் திருத்தம் செய்ய சத்திஸ்கர் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. நடைபெற உள்ள  உள்ளாட்சி அமைப்புத் தேர்தல்களில் வாக்குச் சீட்டைப் பயன்படுத்துவதை சம்பந்தப்பட்ட சட்டம் தடை செய்யாது" என்று தெரிவித்து உள்ளார்.
கடந்த ஆண்டு (2018)  சத்திஸ்கரில்  நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 15 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. இந்த நிலையில், இவிஎம் இயந்திரத்துக்குப் பதிலாக மீண்டும்  வாக்குச்சீட்டுத் தேர்தல் முறையை கொண்டு வர முயற்சி எடுத்துள்ளது.
இதுகுறித்துக் கூறிய  சத்திஸ்கர் மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் சஞ்சய் சிறீவாஸ்தவ், வாக்குச் சீட்டைப் பயன்படுத்துவதை எதிர்த்ததுடன்,  இது “காங்கிரசின்  சதி” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால், இதுகுறித்து கருத்துத் தெரிவித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சைலேஷ் திரிவேதி,  “சத்திஸ்கரில்  இவிஎம் இயந்திரம் குறித்த சர்ச்சைகள் ஏற்கெனவே வெடித்துள்ள நிலையில், அங்குள்ள வாக்காளர்கள்   உள்ளாட்சி அமைப்புத் தேர்தல்களில் வாக்குச் சீட்டைப் பயன்படுத்துவதற்கான முடிவை வரவேற்றுள்ளனர்" என்று கூறினார்.
அரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பா.ஜ.க. வேட்பாளர் கூறுகிறார், "எந்த பொத்தானை அழுத்தினாலும் தாமரைக்குத்தான் வாக்குப் பதிவாகும்" என்று கூறியுள்ளதைப் பார்த்தால் சத்திஸ்கர் மாநில அரசின் முடிவு சரியானதே என்றுதான் தோன்றுகிறது.
பிஜேபி என்று சொன்னாலே எதிலும் சந்தேகிக்க வேண்டியுள்ளது என்கிற அளவுக்கு அதன் சிந்தனைகளும், போக்குகளும், நடவடிக்கைகளும் அமைந்திருப்பதை யார்தான் மறுக்க முடியும்?

பாரத் பெட்ரோலியம் விற்கப்படுவதன் பின்னணி..!


இந்திய அரசை பின்னால் இருந்து இயக்கும் முக்கிய நிறுவனங்களுள் ஒன்றாக இருந்தும், சமீப காலமாக அதன் அடித்தளமே ஆட்டம்காண தொடங்கியிருக்கிறது அம்பானி குழுமத்திற்கு.
என்றாலும்.. அதை தூக்கி நிறுத்த தன்னால் இயன்ற மட்டும் முட்டுக் கொடுக்கிறது மத்திய அரசு.
தொடர்ந்து எட்டாவது முறையாக இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராக முடிசூட்டியிருக்கும் முகேஷ் அம்பானிக்கு இந்திய மற்றும் வெளிநாட்டு வங்கிகள், நிதி நிறுவனங்கள் கொடுத்துள்ள கடன் தொகை நான்கு லட்சத்து எண்பத்தி ஆறாயிரம் கோடி! (4,86,000 கோடி)
கிரெடிட் ஸ்யூஸை (Credit Suisse) என்ற நிதிநிலை மதிப்பிடும் பன்னாட்டு நிறுவனம் இனி அம்பானி குழுமத்துக்குக் கடன் கொடுப்பது ஆபத்து என்று அறிவித்ததோடு தன்னுடைய வாடிக்கையாளர்கள் மற்றும் துணை வங்கிகளும் இனி இவர்களுக்குக் கடன் தரமாட்டார்கள் என்று அறிவித்து விட்டது.
இந்த நிலையில்தான் உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான சவூதி அரேபியாவின் ஆரெம்கோ (Aramco)  நிறுவனம் ரிலையன்ஸில் 20 சதவீத பங்குகளை வாங்குவதோடு கொஞ்சம் முதலீடும் செய்ய முடிவெடுத்துள்ளது.  அதாவது கிட்டத்தட்ட 5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய ஆரெம்கோ நினைத்துள்ளது.
ஆரெம்கோவின் சொத்து மதிப்பான USD 1.1 Trillion-னோடு ஒப்பிடுகையில் அது அவர்களுக்கு சில்லரைக்காசு.    என்றாலும் இப்போது ரிலையன்ஸ் குரூப்பின் எந்த கம்பெனியுமே பெரிதாய் லாபம் ஈட்டும் நிலையில் இல்லை என்பதால் ஆரெம்கோ நிறுவனம் கொஞ்சம் தயங்கியது. இங்குதான் அம்பானியின் குள்ளநரித்தனமும், அரசின்மேல் அவருக்கிருக்கும் வலுவான பிடியும் வெளிப்படு கிறது.
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமி டெட்டை ரிலையன்சுக்கு விற்று விட்டால் ரிலை யன்ஸ் குழுமம் இன்னும் வலுப்பெறும். பாரத் பெட்ரோலியத்தின் மதிப்பு நான்கு லட்சம் கோடியைத் தாண்டும்.
நான்கு ரிஃபைனரீஸ், சிறிய மற்றும் பெரிய எண்ணெய் கிணறுகள் 100, பதினைந்துக்கு மேற் பட்ட எண்ணெய் சேமிக்கும் முனையங்கள், கிட்ட தட்ட பத்து ஸ்டேட் அலுவலகங்கள், அறுபதுக்கும் மேற்பட்ட டெரிட்டரி அலுவலகங்கள், 16,000-க்கும் அதிகமான பெட்ரோல் பங்குகள், அதிகாரிகள் குடியிருப்புகள் என நிறைய சொத்து மதிப்புடையது பாரத் பெட்ரோலியம்.
இதனுடைய மொத்த மதிப்பு நான்கு லட்சம் கோடிக்கு மேல் இருக்கும் என்பது தோராய கணிப்பு!
இந்த நிறுவனத்தின் அரசு கட்டுப்பாட்டில் உள்ள 54% பங்குகளின் மதிப்பு என்பது கிட்டத்தட்ட 2 லட்சம் கோடி ரூபாய் என மதிப்பிட்டுள்ளது அரசு. அதே வேளை, இந்த பங்குகளை வெறும் நாற்பதா யிரம் கோடிக்கு ரிலையன்சுக்கு விற்க முடிவெ டுத்துள்ளது.
ஆரெம்கோ நிறுவனம் ஒரு லட்சத்து அறுபதா யிரம் கோடியை ரிலையன்சுக்கு தனியாக தந்து விடும்.  ரிலையன்சும் தன்னுடைய கடனை வெகு வாக குறைத்துவிடும்.  இப்போது ரிலையன்சுக்கு லாபம் ஈட்டும் நிறுவனமாக பாரத் பெட்ரோலியம் அமைந்து விடுவதால் ஆரெம்கோ  நிறுவனத்திற்கு எந்த பிரச்சினையும் இல்லை.
கணிசமான தொகை கட்சிக்கோ ஆள்ப வர்களுக்கோ போய் சேர்ந்து விடும்.
இதுதான் பாரத் பெட்ரோலியம் விற்கப்படுவதின் பின்னணி..!
இந்திய அரசுக்கு சொந்தமான, இந்திய மக் களின் சொத்தான, 1976இல் தேசிய மயமாக்கப்பட்ட, உலகின் மிகப்பெரிய பெட்ரோலியம் கம்பெனி களுள் ஒன்று சப்தமில்லாமல் தனியாருக்கு தாரைவார்க்கப்பட இருக்கிறது.
நல்ல அரசு பற்றி சொல்லும் வள்ளுவர்...
"அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு" என்பார்..!
அப்படியொரு அறநெறி பேணும் அரசு இனி என்றேனும் அமையுமா..?
(வாட்ஸ் ஆப் தகவல்)

Tuesday, October 22, 2019

மொழிவழி மாநிலம் அமைந்த நவம்பர் முதல் நாளை தமிழ்நாடு நாள் என தமிழக அரசு கொண்டாட வலியுறுத்தல்

மொழிவழி மாநிலம் அமைந்த நவம்பர் முதல் நாளை "தமிழ்நாடு நாள்" - என தமிழக அரசு கொண்டாடவேண்டும், அரசு விடுமுறையாக அறி விக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து இந்திய ஸ்டேட் வங்கியின் முன்னாள் தொழிற்சங்க தலைவர்களின் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.பி.இராமன் அவர்கள் தமிழக, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மா.பா.பாண்டிய ராஜன் மற்றும் தமிழக அரசு தலைமைச் செயலாளர் ஆகி யோருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவில் மொழி வழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு 63 ஆண்டுகளை கடந்து 64ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இத்தருணம்; தமிழ் கூறும் நல்லுலகுக்கென தனி மாநிலம் அமைக்கப்பட்ட நாள்.
அத்தகைய சிறப்புமிக்க நாளை தமிழ் மொழியின் தொன்மை, தமிழர் தம் கலை, கலாச்சாரம், பண்பாடு ஆகி யவற்றை உயர்த்திப் பிடித்து, உலகறியச் செய்யும் நாளாக, நாடு தழுவிய அர்த்தமுள்ள கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யும் வகையில் ஆண்டுதோறும் (நவம்பர் முதல் நாளை) அரசு விடு முறை நாளாக அறிவித்திட தமிழக அரசை வேண்டுகிறோம்.
நமது அண்டை மாநில மான கருநாடகாவில் ஆண்டு தோறும் மொழிவழி மாநிலம் அமைந்த நவம்பர் முதல் நாளை விடுமுறை நாளாக அறிவித்து "கன்னட ராஜ்ய உற்சவம்" கொண்டாடுவதைப் போல, தமிழக அரசும் நவம்பர் மாதம் முதல் நாளை "தமிழ்நாடு நாள்" என அறிவித்து அரசு விடுமுறையாகவும் அறிவித்து செம்மொழியாம் நமது தமிழ் மொழியின் விழுமிய சிறப்புகளை உலகம் உணரச் செய்ய வேண்டுமென இந்திய ஸ்டேட் வங்கியின் முன்னாள் தொழிற்சங்கத் தலைவர்களின் கூட்டமைப்பு தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது என அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இணையதள மோசடியை தடுக்க புதிய திட்டம்

விழாக் காலத்தை முன்னிட்டு,  இ-காமர்ஸ் நிறுவனங்கள், பல்வேறு தள்ளுபடி சலுகைகளை அளித்து, வாடிக்கை யாளர்களை கவர்ந்து வருகின்றன. சைபர் குற்றவாளிகளின் கைவரி சையும் அதிகரித்திருப்பதால் இணையதளக் கொள்முதலில் பாது காப்பிலும், கவனம் செலுத்த வேண்டும்.
இதுகுறித்து காஸ்பெர்ஸ்கி நிறுவன மேலாளர் சிவசங்கர் கார்டே, கூறுகையில், "விழாக் காலத்தில், இ-காமர்ஸ் நிறுவனங்கள், தீவிர ஆர்வம் காட்டும் நிலையில், சைபர் குற்றவாளிகளும் கைவரிசை காட்ட, இதை ஒரு வாய்ப்பாகபயன்படுத்திக்கொள்ள முற்படுகிறது. ஆன்லைன் கொள்முதலை பாதுகாப்பான முறையில் மேற்கொள்வதில், கவனம் செலுத்த வேண்டும்.
ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு தயாரிப்பில் முதல் இடத்தில் இயங்கி வரும் ரஷ்ய நிறுவனமான காஸ்பெர்ஸ்கி, விழாக்காலத்தை முன்னிட்டு புதிய சலுகைகளையும் பரிசு திட்டங்களையும் அறிவித்துள்ளது.
இணைய வசதிபல்வேறு வங்கிகள் மற்றும் நிதிநுட்ப நிறுவனங் களுடனான கூட்டால், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் பயன்பாடு, இந்த காலத்தில் அதிகரிக்கும்என எதிர்பார்க்கப்படுவதால், சைபர் குற்றவாளிகள் வலைவிரிக்க காத்திருக்கின்றனர். இதனால் பாதுகாப் பான முறையில் இணைய தள பரிமாற்றத்தில் ஈடுபட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

‘தினமலரின்' சிறுமைப்புத்தி!


திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பேச்சை வெளியிட்டு, அதற்கு மேலே தனது கருத்தை ‘தினமலர் திரிநூல்' பதிவு செய்துள்ளது.
எந்தக் காரணமாக இருந்தாலும் சிறைக்கு ஒருவர் செல்வது அவமானமாம் - சொல்லுகிறது ‘தினமலர்'.
இதனைப் படித்தால் கோவணம் கட்டாத கோலி விளையாடும் சிறுவன்கூட வாயால் சிரிக்கமாட்டான்.
கொலைக் குற்ற வழக்கில் சிறைக்குச் சென்றார்களே காஞ்சீபுரம் இரண்டு சங்கராச்சாரிகள்; அதைப்பற்றி அவ்வாறு ‘தினமலர்' எழுதியதுண்டா?
விடுதலைப் போராட்டத்துக்காக சிறை சென்றவர் களையும் கொச்சைப்படுத்துகிறதா ‘தினமலர்?' வைக்கத்தில் தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு இருமுறை சிறை சென்றாரே தந்தை பெரியார், அதுவும் ‘எந்தக் காரணமாக இருந்தாலும்' என்ற தலைப்பின்கீழ் வருமா?
‘தினமலர்' கிருஷ்ணமூர்த்திமீதான வழக்கில் அவர் சிறை சென்றால், அவரும் அந்த இரகத்தில்தான் வருவாரா?
இன்றைய மத்திய உள்துறை அமைச்சர் ‘என்கவுண்ட்டர்' வழக்கில் சிறைக்குள் சென்றாரே அப்பொழுதெல்லாம் இதுபோல ‘தினமலர்' எழுதியதுண்டா?
‘மிசா'வில் இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின்மீது கொண்ட காழ்ப்பால் ஒட்டுமொத்தமாக சிறை சென்ற அனைவரையும் சிறுமைப்படுத்தும் பார்ப்பன ‘தினமலரை' அடையாளம் காண்பீர்!

Monday, October 21, 2019

ஈரான் அதிபரும், மோடியும்


துய்மைப் பணியில் ஈடுபட்ட ஈரான் அதிபர் பதவி விலகி 6 ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்கள் வெளியிட்ட படத்தால் வியந்த உலகம்
முகமது அகமதிஜாத் 2005 முதல் 2013-ஆம் ஆண்டுவரை ஈரானின் அதிபராக இருந்தவர், இவர் தன்னுடைய பதவிகாலத்தில் பொதுமக்கள் தன்னார் வலர் தூய்மைப்பணி அமைப்பு என்ற அமைப்பில் உறுப்பினராக இருந்தார். தான் அதிபராக இருந்த காலகட்டத் திலும் அவ்வப்போது அந்த அமைப்புகள் நடத்தும் தூய்மைப்பணி முகாம்களில் கலந்துகொண்டு பணியாற்றியுள்ளார்.
2013-ஆம் ஆண்டு பதவி விலகிய பிறகு முழுநேரமும் அவ்வமைப்பின் ஊழிய ராக பணியாற்றத் துவங்கி விட்டார்.  இவர் ஈரான் பல்கலைக்கழகத்தில் பகுதிநேர பொறியியல் பேராசிரியராக வும் உள்ளார்.  இவர் அதிபராக இருந்த போது தூய்மைப்பணி செய்ததை எந்த ஒரு பத்திரிகையும் படமாகவோ அல்லது காணொலியாகவோ பிடித்து முதல் பக்கத்தில் பெரிய படத்தோடு செய்தி களை வெளியிட வில்லை.   சமீபத்தில் முன்னாள் அதிபரின் பிறந்த நாளின் போது அவர் இணைந்திருந்த அமைப்பு அதிபராக இருந்த போது தங்களது குழு உறுப்பினர்களுடன் இருந்த போது எடுத்த படத்தை வெளியிட்டது.  இந்தப் படம் வெளியான பிறகுதான் அதிபர் தங்களது பகுதிக்கு வந்து தூய்மைப் பணியாற்றியிருந்தார் என்பதே அம் மக்களுக்கு தெரியவந்தது. அதிபரின் இந்த நடவடிக்கை பன்னாட்டு ஊடகங் களில் இன்று பேசும் பொருளாக மாறியுள்ளது.
அதே நேரத்தில் இந்தியப் பிரதமர் மோடியின் ஜோடனை தூய்மைப் பணியையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

குர்துக்களுக்கு துருக்கி அதிபர் எச்சரிக்கை

சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள குர்து படையினரை குறி வைத்து, துருக்கி ராணுவம் தொடர்ந்து 8 நாட்களாக தாக்குதல் நடத்தியது.
அமெரிக்கா கொடுத்த அழுத்தத்தை தொடர்ந்து, 5 நாட்களுக்கு சண்டை நிறுத் தத்தை துருக்கி அறிவித்தது. இந்த 5 நாட்களுக்குள் பாது காப்பு மண்டலம் என வரை யறுக்கப்பட்டுள்ள பகுதியில் இருந்து குர்துக்கள் வெளி யேற வேண்டும் என துருக்கி கூறுகிறது.
இந்த நிலையில், சண்டை நிறுத்தத்தை மீறி குர்து படை கள் ஆத்திரமூட்டும் தாக்கு தல்களை நடத்தியதாக துருக் கியின் பாதுகாப்பு அமைச்ச கம் நேற்று முன்தினம் குற்றம் சாட்டியது.
ஆனால் அதனை மறுத் துள்ள குர்துக்கள் துருக்கி ராணுவம்தான் ஒப்பந்தத்தை மீறி அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றம் சாட் டினர்.
இந்த நிலையில், செவ் வாய்க்கிழமை (நாளை) மாலைக் குள் குர்து போராளிகள் பின்வாங்கவில்லை என்றால் அவர்கள் கடுமையான பின் விளைவுகளை சந்திக்க நேரி டும் என துருக்கி அதிபர் தாயீப் எர்டோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறு கையில், “சண்டை நிறுத்த ஒப்பந்தத்தின்படி குர்து போரா ளிகள் நடந்து கொள்ள வில்லை என்றால், நாங்கள் புறப்பட்ட இடத்துக்கு திரும் புவோம். குர்துக்களின் தலையை நசுக்குவோம்” என்றார்.
மேலும் அவர், குர்துக்கள் மீதான தாக்குதல் தொடர் பாக அடுத்த வாரம் ரஷிய அதிபர் புதினுடன் பேச்சு வார்த்தை நடத்த இருப்பதா கவும், அந்த பேச்சுவார்த்தை ஒரு தீர்வை உருவாக்கவில்லை என்றால் துருக்கி தனது சொந்த திட்டங்களை செயல் படுத்தும் எனவும் கூறினார்.

அபுதாபியில் 8 ஆயிரம் ஆண்டுகள் பழமையான முத்து கண்டுபிடிப்பு

நவீன தொழில் நுட்பங்கள், விஞ்ஞான கண் டுபிடிப்புகள் என இன்றைய உலகம் நவநாகரிகத்தோடு விளங்கினாலும், மனிதனின் தோற்றம் மற்றும் பழமை யான நாகரிகங்களை பற்றி அறிவதில் உலக நாடுகள் மிகுந்த ஆர்வம் காட்டி வரு கின்றன. தமிழகத்தின் கீழடி முதல் உலக நாடுகள் அனைத் திலும் நடந்து வரும் தொல் பொருள் ஆய்வுகள் இதையே கட்டியம் கூறுகின்றன.
இந்த ஆய்வுகளில் அடிக் கடி கிடைக்கும் பழங்கால அரிய பொக்கிஷங்கள், அரசு களின் ஆவலை மேலும் தூண்டி விடுவதுடன், இத்தகைய ஆய் வுகளை மேலும் பரவலாக்கும் அவசியத்தையும் அளிக்கின் றன. அந்தவகையில் அய்க்கிய அரபு அமீரக தலைநகரான அபுதாபியில் 8 ஆயிரம் ஆண் டுகள் பழமையான முத்து ஒன்று சமீபத்தில் கிடைத்து உள்ளது.
அங்குள்ள மறவா தீவில் பல ஆண்டுகளாக தொல் பொருள் ஆய்வுகள் நடந்து வருகின்றன. இதில் கற்கா லத்தை சேர்ந்த கற்சிற்பங்கள், பீங்கான் பொருட்கள், ஓடு மற்றும் கற்களால் செய்யப் பட்ட மணிகள் என ஏராள மான பழங்கால பொருட்கள் கிடைத்து வருகின்றன.
இதில் மிகப்பெரிய பொக் கிஷமாக, பழமையான முத்து ஒன்றும் சமீபத்தில் கிடைத் தது. உலகின் பழமையான முத்து என கருதப்படும் இந்த இயற்கை முத்து சுமார் 8 ஆயி ரம் ஆண்டுகள் பழமையானது என தெரியவந்துள்ளது. குறிப் பாக கி.மு.5800 முதல் 5600 வரையிலான ஆண்டுகளுக்கு இடைப்பட்டதாக இருக்கும் என கண்டறியப்பட்டு உள் ளது. அதாவது கற்காலத்தின் கடைசி பகுதியை சேர்ந்தது என ஆய்வாளர்கள் தெரிவித் தனர்.
இந்த முத்து கண்டுபிடிக் கப்பட்டதால், அமீரக தொல் பொருள் ஆய்வாளர்களிடம் மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டு உள்ளது. ‘அபுதாபி முத்து’ என பெயரிடப்பட்டு உள்ள இந்த முத்து, அபுதாபியில் உள்ள லூவர் அருங்காட்சிய கத்தில் (பாரீசில் உள்ள புகழ் பெற்ற அருங்காட்சியகத்தின் கிளை) 30ஆம் தேதி முதல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வயதானவரை பராமரிக்கவில்லையா? எழுதிவைத்த சொத்து பறிபோகும் உயர்நீதிமன்றம் தீர்ப்பு

'வயதான காலத்தில், வாரிசுகள் கவனிக்க மறுத்தால், அவர்களுக்கு தானமாக வழங்கிய சொத்தை மீட்க முடியும்' என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சிங்கமணி நயினார் என்ப வரின் முதல் மனைவி ஞானமதி அம்மாளுக்கு குழந்தை இல்லாத தால் இரண்டாவதாக வசுந்தரையம்மாள் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு சரோஜாபாய் என்ற மகள் உள்ளார்.
கணவரின் மறைவுக்கு பின் சகோதரியின் மகள் சுகுணாபாய் வீட்டில் ஞானமதி அம்மாள் சிறிது காலம் இருந்தார். கடைசி வரை காப்பாற்றுவார் எனக் கருதி, சொத்துகளை சுகுணாபாய்க்கு எழுதி வைத்தார். அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சரோஜாபாய் வீட்டுக்கு ஞானமதி அம்மாள் வந்தார்.
சுகுணாபாய்க்கு தானமாக வழங்கியதை ரத்து செய்து அந்த சொத்துகளை சரோஜாபாய் பெயருக்கு எழுதினார். இதை எதிர்த்து செஞ்சி நீதிமன்றத்தில் சுகுணாபாய் வழக்கு தொடுத்தார். வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அதை எதிர்த்து, விழுப்புரம் நீதிமன்றத் தில் மேல்முறையீடு செய்தார். 'சரோஜாபாய்க்கு சொத்துகளை எழுதி வைத்தது செல்லாது' என விழுப்புரம் நீதிமன்றம் உத்தர விட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சரோஜாபாய் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி டீக்காராமன் அளித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: தன்னை பராமரிக்கவில்லை என்பதால் தன்னிச் சையாக முடிவெடுத்து சகோதரி மகள் சுகுணாபாய் ஒப்புதல் பெறாமல் 'செட்டில்மென்ட்' பத்திரத்தை ஞானமதி அம்மாள் ரத்து செய்துள்ளார்.
தன்னிச்சையாக பத்திரத்தை ரத்து செய்வதற்கு, சட்டப்படி அனுமதியில்லை என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. எனவே, விழுப்புரம் நீதிமன்ற உத்தரவில் குறுக்கிட தேவையில்லை; உறுதி செய்யப்படுகிறது. இம்மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு நல சட்டத்தின்படி, செட்டில்மென்ட் பத்திரம், தானப் பத்திரத்தை ரத்து செய்ய வகை செய்யப்பட்டுள்ளது. இதற்கு வருவாய் கோட்ட அதிகாரிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
வயதான காலத்தில் பெற்றோரை வாரிசுகள் மற்றும் உறவினர் கள் ஏமாற்றினால் செட்டில்மென்ட் பத்திரத்தை ரத்து செய்ய சட்டத்தில் வகை செய்யப்பட்டிருப்பது குறித்து சட்ட விழிப்பு ணர்வை ஏற்படுத்த வேண்டும்.  இது குறித்த சட்ட உதவியை மூத்த குடிமக்களுக்கு வழங்க வேண்டும். அதற்கான முயற்சிகளை சட்டப்பணிகள் ஆணையம் எடுக்க வேண்டும். இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்க மீண்டும் ஒரு சுதந்திரப் போர் தேவை

ஆர்.நல்லகண்ணு

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க இரண்டாம் சுதந்திரப் போர் தேவை என்ற நிலை தற்போது உருவாகியிருக்கிறது என்று மூத்த அரசியல்வாதி ஆர்.நல்லகண்ணு கூறினார்.
வங்கி ஊழியர் சங்க சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்ற ஆர்.நல்ல கண்ணு பேசியது:
மத்தியில் ஆளும் பாஜக, இரண்டாவது முறை ஆட் சிக்கு வந்தவுடன், பொறுப்பேற்ற 100 நாள்களில், 36 நாள்களில் மட்டும் 36 மசோதாக்களை நிறை வேற்றி இருக்கிறது. முந்தைய ஆட் சிக் காலத்தில், போதிய பெரும் பான்மை இல்லாததால், தேவையற்ற திட்டங் களைச் செயல்படுத்த மத்தியில் ஆளும் இந்த அரசு முனைப்புக் காட்டவில்லை.
ஆனால், மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அறுதிப் பெரும்பான்மை இருப்பதால், இவ் வாறான நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளனர். புதிய மசோ தாக்கள் மக்களுக்கு பயன் தரும் வகையில் இல்லை. அவை தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாகவே உள்ளன. பாஜக அரசு 5 ஆண்டு திட்டத்தை ரத்து செய்து, நிதி ஆயோக் என்பதை உருவாக்கியது. இதனால் புதிய திட்டங்கள் எதுவும் செயல்பாட்டுக்கு வரவில்லை.
5 ஆண்டு திட்டங்கள் நிறுத்தப்பட் டது, நாட்டின் வளர்ச்சிக்குத்தான் ஆபத்தாக மாறியுள்ளது.
பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க இரண்டாம் சுதந்திரப் போர் தேவை என்ற நிலை தற்போது உருவாகியிருக்கிறது. இதற்கு, மதச் சார்பற்ற கட்சிகளும், இடதுசாரி இயக்கங்களும், வெகு ஜன மக்களும் ஒருங்கிணைந்து போராட வேண் டும் என்றார்.

மாணவர்கள், பெற்றோர்களுக்கு துறை சார்ந்த தகவல்களுக்கு இலவச தொலைபேசி எண் 14417

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் சுடலைக்கண்ணன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:
மாணவர்கள், பெற்றோர்களுக்கு தேவையான கல்வி, வேலைவாய்ப்பு உட்பட துறை சார்ந்த தகவல்கள் மற்றும் உயர்கல்வி, உளவியல் ஆலோசனைகள் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் தருவதற்காக  இலவச தொலைபேசி எண் 14417 என்ற கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் செயல்பாட்டில் உள்ளது. ஆனாலும் பள்ளியில்  இலவச எண் குறித்து தலைமையாசிரியர்கள் மீண்டும் எடுத்துரைத்து மாணவர்களிடம் விழிப்புணர்வு உருவாக்க வேண்டும். 14417 எண்ணுக்கு வரும் புகார்கள், குறைகள் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு கல்வியியல் மேலாண்மை தகவல் முகமை (எமிஸ்) இணையதளம் மூலம் அனுப்பப்படும்.

Saturday, October 19, 2019

பகவான் இலட்சணம்!

கல்கி ஆசிரம சோதனையில் ரூ.93 கோடி சிக்கியது
விஜயகுமார் என்பவர் தன்னை கல்கி பகவான் என அறிவித்துக்கொண்டு, பூந்தமல்லி அருகே கல்கி ஆசிரமத்தை தொடங் கினார்.
ஆந்திரா, கருநாடகம் என இந்தியா முழுவதும் மட்டுமின்றி வெளிநாடுகளி லும் அவரது ஆசிரம கிளைகள் உதய மாயின. சென்னையில் மட்டுமே 20 கிளைகள் திறக்கப்பட்டன.
காணிக்கை என்ற பெயரிலும், பூஜை கட்டணம் என்ற பெயரிலும் பணம்  கொட்டியது. தங்க, வைர நகைகள் குவிந்தன. ஆனால் அரசுக்கு சேர வேண்டிய வரியை மட்டும் செலுத்த தயாரில்லை.
அவர் பெருமளவு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன. அதைத் தொடர்ந்து வருமான வரி அதிகாரிகள் குழு கடந்த 16-ஆம் தேதி தொடங்கி ஒரே நேரத்தில் சென்னை, அய்தரா பாத், பெங்களூரு, வரதய்யா பாளையம் ஆகிய பகுதிகளில் கல்கி பகவானுக்கு சொந்தமான ஆசிரமங்கள் உள்பட 40 இடங்களில் அதிரடி சோதனைகள் நடத்தினார்கள். இந்த சோதனைகளில் ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக சிக்கின.
இந்த நிலையில் வருமான வரி அதிகாரிகள் நடத்திய அதிரடி சோத னையில் என்னென்ன கைப்பற்றப்பட் டுள்ளன என்ற பட்டியலுடன் கூடிய அதிகாரப்பூர்வ அறிக்கையை வரு மான வரித்துறையின் மத்திய நேரடி வரிகள் வாரியம் நேற்று வெளியிட் டது. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:-
40 இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.43 கோடியே 90 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.
வெளிநாட்டு பணம் என்ற வகையில், 2லு மில்லியன் அமெரிக்க டாலர் சிக்கியது. இதன் இந்திய மதிப்பு சுமார் ரூ.18 கோடி ஆகும்.
88 கிலோ தங்க கட்டிகள், நகைகள் கைப்பற்றப்பட்டன. இதன் மதிப்பு ரூ.26 கோடி.
1,271 காரட் வைரக்கற்கள் சிக்கின. இவற்றின் மதிப்பு ரூ.5 கோடி.
கைப்பற்றப்பட்ட ரொக்கம், அமெரிக்க டாலர், தங்கம், வைரம் ஆகியவற்றின் மொத்த மதிப்பு ரூ.93 கோடி ஆகும்.
கணக்கில் காட்டாத வருமானம் ரூ.500 கோடிக்கு அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கல்கி பகவான் குழுமம், இந்தியா வில் மட்டுமல்லாது சீனா, அமெரிக்கா, சிங்கப்பூர், அய்க்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் உள்ள கம்பெனி களில் பெரிய அளவுக்கு முதலீடுகள் செய்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இன்னும் வருமான வரி சோதனைகள் தொடருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

கேரள அரசின் பாராட்டத்தக்க நடவடிக்கை: நாட்டிலேயே முதல் முறையாக தனியார் பள்ளி ஆசிரியைகள் பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு

நாட்டிலேயே முதல் முறையாக, மகப்பேறு நலன் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியைகள், பெண் ஊழியர்கள் அனைவருக்கும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கும் திட்டத்தை கேரள அரசு கொண்டு வர உள்ளது.
தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியைகளுக்கும் மகப்பேறு நலன் கள், பலன்கள் கிடைக்க வேண்டும் என்ற கேரள அரசு கொண்டு வந்த இந்த அறிவிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என கேரள அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கேரள அரசு வெளியிட்ட அறிவிப்பில்,
"கடந்த ஆகஸ்ட் மாதம் 29ஆ-ம் தேதி மாநில அமைச்சரவை கூடி எடுத்த முடிவான தனியார் பள்ளிகளில் பணிபுரியும் பெண் ஊழியர்கள், ஆசிரியை களுக்கும் மகப்பேறு நலன் சட்டத்தின் கீழ் பலன் கிடைக்க வேண்டும் என்று அனுமதி கோரி அனுப்பப்பட்ட அறிவிக்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்த உத்தரவு மூலம் மாநிலத்தில் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள், ஆசிரியைகள் 26 வாரங்கள் மகப்பேறு விடுப்பை, ஊதியத்துடன் எடுக்க முடியும்.
மேலும், மகப்பேறு காலத் தில் குழந்தை பிறக்கும் வரை மாதம் ரூ.ஆயிரம் மருத்துவச் செலவுக்காக வழங்கப்படும்
மகப்பேறு நலச்சட்டத்தின்கீழ் நாட்டிலேயே முதல் முறையாக தனியார் பள்ளிகளில் பணிபுரியும் பெண் ஊழியர்கள், ஆசிரியைகளுக் கும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்பட உள்ளது.
ஏற்கெனவே, தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு குறைந்தபட்சம் ஊதியம் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள் ளது" எனத் தெரிவித்துள்ளது
தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஊழியர்கள், ஆசிரியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக விடுத்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

உண்மைத்தன்மை அறியாமல் சமூகவலைத் தளங்களில் தகவல்களை பகிரக்கூடாது: காவல்துறை அறிவிப்பு

ஈரோடு மாவட்ட சைபர் க்ரைம் பிரிவில் இந்த ஆண்டு 373 மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:
வங்கி மேலாளர் பேசுவது போல பேசி ஏடிஎம் கார்டிலுள்ள 16 இலக்க எண் மற்றும் சிவிவி எண் மற்றும் ஓடிபி எண் ஆகிய விவரங் களை பெற்றும், போலியாக ஏடிஎம் கார்டை பயன்படுத்தியும் மனுதாரர்களின் வங்கிக் கணக்கிலி ருந்து மோசடி செய்தாக 158 புகார் மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நட வடிக்கை மூலம், ரூ.6.74 லட்சம் பணம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வங்கியின் மூலமாக திருப்பி கொடுக் கப்பட்டுள்ளது. செல்போன் தொலைந்த புகார்களின்பேரில், 79 போன்கள் கண்டறியப்பட்டு புகார் தாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
முகநூல், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களால் ஏற் பட்ட பாதிப்புகள் தொடர்பாக 24 புகார்கள் வரப்பெற்ற நிலையில், 14 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. தவறான எஸ்.எம்.எஸ். அனுப்பிய குற்றச்சாட்டில் நான்கு புகார்கள் மீது நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஈரோடு சைபர் க்ரைம் அதி காரிகள் கூறும்போது, அறிமுகம் இல்லாத நபர்கள் உங்களது செல் போனிற்கு தொடர்பு கொண்டு, வங்கி மேலாளர் பேசுவதாகக் கூறி ஏடிஎம் கார்டு விவரங்களைக் கேட்டால் பொதுமக்கள் வழங்கக் கூடாது.
சமூக வலைத்தளங்களின் மூலம் தங்களுக்கு வரும் செய்தியின் உண் மைத் தன்மை அறியாமல் அதை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம். சில பொய்யான தகவல்களை பகிர்வதன் மூலம் பொதுமக்களுக்கு தேவையற்ற வதந்திகளை பரப்பு வதற்கு நீங்கள் காரணம் ஆவது மட்டுமின்றி, சில சமயங்களில் நீங்களும் சட்டப்பூர்வமான நட வடிக்கைக்கு ஆளாவீர்கள் என்ப தால் பொது மக்கள் கவனமாக செய்திகளை பகிர வேண்டும், என்றனர்.

குஜராத்: தேர்வு எழுதிய 119 நீதிபதிகளும் தோல்வி!

குஜராத் மாநிலத்தில், மாவட்ட நீதிபதி பணியிடங்களுக்கான தேர்வை எழுதியவர்களில் ஒருவர் கூட தேர்ச்சி பெறாத அவலம் அரங்கேறியுள்ளது. அதிலும் தேர்வை எழுதிய வர்களில் 119 பேர் உரிமையியல் நீதிமன்ற நீதிபதிகளாக, நீதித்துறை அதிகாரிகளாக ஏற்கெனவே பணியாற்றி வரு பவர்களாக உள்ளனர்.
இவர்கள் தவிர ஆயிரத்து 372 வழக்குரைஞர்களும் தேர்வை எழுதி தோல்வி அடைந்துள்ளனர். குஜராத் மாவட்ட நீதிமன்றங்களில் மொத்தம் 40 நீதிபதி பணியிடங்கள் காலியாகஉள்ளன. விதிமுறைகளின்படி, மொத்த காலிப் பணியிடங்களில் 65 சதவிகித இடங்கள், மூத்த உரிமையியல் நீதிபதிகளைக் கொண்டும், 25 சதவிகிதம் வழக்குரைஞர்கள் மூலமாக வும், 10 சதவிகிதம் மாவட்ட கூடுதல் நீதிபதிகளில் இருந் தும் நிரப்பப்பட வேண்டும். இதன்படி கடந்த ஜூன், ஆகஸ்ட் மாதங்களில் தேர்வு கள் நடைபெற்றன. இறுதி யாக 494 வழக்குரைஞர்களும் 119 நீதிபதிகளும் களத்தில் இருந் தனர்.
கடந்த வாரம் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலை யில் நீதிபதிகள் தேர்வில் ஒரு வர் கூட தேர்ச்சிபெறவில்லை என்று அறிவிக்கப்பட்டுள் ளது. இது நீதித்துறை வட் டாரத்தில் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது.

Thursday, October 17, 2019

பசியால் வாடுவோர் இந்தியாவில் அதிகம்

உலகளாவிய பசி மற்றும் ஊட்டச்சத் தின்மை கொண்ட நாடுகள் பட்டியலில்  இந்தியா 102-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த ஆய்வு 117 நாடுகளில் நடத்தப்பட்டது. 2014 ஆம் ஆண்டில் 77 நாடுகளில் இந்தியா 55-ஆவது இடத்தில் இருந்தது.
உலகளாவிய, தேசிய மற்றும் பிராந்திய மட்டங் களில் பசி குறித்து  அளவிடு வதற்கும் கண்காணிப்பதற்கும், பசிக்கு எதிரான திட்டங்களில்  முன்னேற்றம் மற்றும் பின் னடைவுகளை மதிப்பிடுவ தற்கும் வருடாந்திர குறியீட்டு பட்டியல்  வடிவமைக்கப்படு கிறது.
தெற்காசிய நாடுகளில் இந்தியா இப்போது பாகிஸ் தான் (94) வங்காளதேசம்  (88), இலங்கை (66) ஆகியவற் றுக்கும்  கீழே உள்ளது.
இந்த பட்டியலில் இந்தி யாவில் குழந்தைகள் வீணாக் கும் உணவு 20.8 சதவீதம் என்று குறிப்பிட்டுள்ளது. இது மிக உயர்வான சதவீதம் என்று குறிப்பிட்டுள்ளது.
ஒவ்வொரு வருட பசி பட்டியலிலும் இந்தியா பின்னோக்கியே செல்கிறது  என்றும் குறிப்பிட்டுள்ளது. எனவே இந்தியா இன்னும் அதன் பசி அளவில் தீவிரமாக பின்னோக்கி செல்கிறது. இதை உடனடியாக கவனத் தில் கொள்வது அவசியம் என்று குறிப்பிட்டுள்ளது.
வெல்துங்கர்ஹில்ஃப் மற்றும் கன்சர்ன் வேர்ல் டுவைட் ஆகியவை  தயாரித்த அறிக்கையின்படி, கடுமை யான பசி  உள்ள 45  நாடுகளில் இந்தியாவும் உள்ளது.
2015-2016 நிலவரப்படி, 90 சதவீத இந்திய குடும்பங்கள் மேம்படுத்தப்பட்ட குடிநீர் ஆதாரத்தைப் பயன்படுத்தின. 39 சதவீத வீடுகளில் சுகாதார வசதிகள் இல்லை (அய்அய் பிஎஸ் மற்றும் அய்சிஎஃப் 2017)  என அந்த அறிக்கைகள் கூறுகின்றன.
பசியுடன் போராடுவதில் நேபாளம் மற்றும் பங்களா தேஷ் ஆகிய தெற்காசியா நாடுகளின் முயற்சிகளையும் இந்த அறிக்கை பாராட்டு கிறது. உலகளாவிய பசி குறி யீட்டில் இந்தியா பாகிஸ்தா னுக்கும், இலங்கைக்கும்  கீழே உள்ளது என்று அறிக்கை கூறுகிறது.

இந்திய அரசின் சாதனை இதுதான்!

இந்தியாவில் 5 வயதுக்கு உட்பட்ட 69 சதவீத குழந்தைகள் ஊட்ட சத்து குறைவால் உயிரிழப்பு
அய்.நா.வின் யுனிசெப் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இந்தியாவில் 5 வயதுக்கு கீழுள்ள குழந்தைகள் சில ஊட்டச்சத்து பற்றாக் குறைக்கு இலக்காகிறார்கள்.  42 சதவீத குழந்தைகளே (6 முதல் 23 மாதங்கள் வரையி லான வயது) போதிய அள வில் உணவை பெறுகிறார்கள்.  21 சதவீத அளவிலான குழந் தைகளே போதிய பல்வேறு வகையான உணவை பெறு கின்றனர்.
இந்திய பெண்களின் சுகா தாரத்தில், ஒவ்வொரு 2ஆவது பெண்ணும் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டு உள்ளார்.  5 வயதுக்கு உட்பட்ட குழந் தைகளில் பரவலாக ரத்த சோகை காணப்படுகிறது.  சிறுவர்களை விட சிறுமி களில் நோய் பாதிப்பு இரண்டு மடங்காக உள்ளது.
5 வயதுக்கு கீழுள்ள ஒவ் வொரு 5 குழந்தைகளில் ஒன்றுக்கு வைட்டமின் ஏ பற்றாக்குறை உள்ளது.  ஒவ் வொரு 3 குழந்தைகளில் ஒன்றுக்கு வைட்டமின் பி12 பற்றாக்குறையும், ஒவ்வொரு 5 குழந்தைகளில் 2 குழந் தைகளுக்கு ரத்த சோகையும் ஏற்பட்டு உள்ளது.
தேசிய ஊட்ட சத்து திட்டம்
இந்தியா முழுவதும் ஊட்ட சத்து காரணிகளை ஊக்குவிப்பதில் போஷான் அபியான் அல்லது தேசிய ஊட்ட சத்து திட்டம் பெரு மளவிலான பங்கு வகிக்கிறது என அந்த அறிக்கை தெரிவித்து உள்ளது.

உ.பி. பாஜகவினர் அதிர்ச்சி : மக்கள் ஆர்வம் காட்டாததால் பசுக்கள் பாதுகாப்பு திட்டம் தோல்வி

உத்தரப்பிரதேச பாஜக அரசு கொண்டு வந்த பசுக்கள் பாதுகாப்புத் திட்டத்தில் மக்கள் ஆர்வம் காட்டாததால் அந்த திட் டம் தோல்வி அடைந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் மாடுகள் பல ஆதரவின்றி தெருக் களில் விடப்பட்டன.  இந்த மாடுகள் அருகில் உள்ள விவசாய நிலங்களில் மேய்ந்து பயிர்களை அழித்தன.   இதனால் கோபமடைந்த விவசாயிகள் ஆங்காங்கு உள்ள பள்ளிகளில் இந்த மாடுகளைப் பிடித்து அடைத்தனர்.    இதனால் குழந்தைகள் வெளியில் அமர்ந்து படிக்க நேரிட்டது.   இந்த புகைப்படங்கள் பல உள்நாடு மற்றும் வெளிநாட்டு ஊடகங்களில் வெளியாகின.
இதையொட்டி உத்தரப் பிரதேச மாநில அரசு தெருவில் திரியும் அனைத்து மாடுகளையும் அரசு அமைத்துள்ள தற்காலிக முகாம்க ளில் அடைத்தது.  இவ்வாறு 1 லட் சத்துக்கும் மேற்பட்ட மாடுகள் குறிப்பாகப் பசு மாடுகள் அரசு தற்காலிக முகாம்களில் அடைக்கப் பட்டன.  இந்த பசுக்களுக்காக மாநி லத்தை ஆளும் பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒரு புதிய திட் டத்தை அறிவித்தார்.
பசுக்கள் பாதுகாப்புத் திட்டம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ் ஆதரவற்று திரியும் பசுக்களை மக்கள் தத்து எடுத்துப் பராமரிக்கலாம் என அரசு அறிவித்தது.   அவ்வாறு தத்து எடுக்கப் படும் ஒவ்வொரு பசுவுக்கும் தினம் ரூ.30 வீதம் மாதத்துக்கு ரூ.900 பராமரிப்புத் தொகை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அரசு முகாம்களில் உள்ள அனைத்து மாடுகளும் தத்து எடுக்கப்படும் என முதல்வர் யோகி நம்பிக்கை தெரிவித்தார்.
ஆனால் அவர் எதிர்பார்த்தது நடக்கவில்லை.  மாநில விலங்குகள் நலத்துறை தலைமை செயலர் பி.எல்.மீனா, “இதுவரை மக்கள் 9000 - 10000 மாடுகளை மட்டுமே தத்து எடுத்துள்ளனர்.   ஆகவே ஆதரவற்ற மாடுகளில் பல இன்னும் அரசு தற்காலிக முகாம்களில் உள்ளன.  எனவே தற்போதைய திட்டத்துக்கு மாற்றாக புதிய திட்டம் கொண்டு வர ஆலோசித்து வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
உ.பி. பாஜக முதல்வரின் திட்டம் தோல்வி அடைந்தது மாநில பாஜக வினருக்கு அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.

பிரதமர் அலுவலகத்தின் மூலம் இந்தியப் பொருளாதாரத்தை கையாள முடியாது: ரகுராம் ராஜன்

இந்தியப் பொருளாதாரம் மிகவும் பெரியது என்றும், அதை பிரதமர் அலுவலகத்திலிருந்து அதிகாரிகளின் வழியாக மட்டுமே  கையாள முடியாது என்றும் விமர்சித் துள்ளார் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன்.
அவர் கூறியுள்ளதாவது, “இந்தியப் பொருளாதாரத்தை பிரதமர் அலு வலகத்திலிருந்து கையாள முடியாது. ஏனெனில் அது மிகவும் பெரியது. தற் போதைய நிலையில் மத்திய அரசில் பெரிய அதிகாரக் குவிப்பு நிலவுகிறது.
தலைமையிடமே அனைத்து அழுத்தமும் குவிந்துள்ளது. தலைமையிடம் நிலைத்தன்மையும் தெளிவான தொலைநோக்கும் இல்லை. எனவே, பொருளாதார வளர்ச்சியை நோக்கி இவர்களால் நாட்டை செலுத்த முடியாது.
பிரதமர் அலுவலகம் என்பது அதி காரிகளை வைத்து செயல்படக்கூடி யது. இன்றைய நிலையில் மத்திய அமைச்சர்களுக்கு அதிகாரமில்லை. அவர்கள் முடிவெடுக்கும் இடத்தில் இல்லை.
சிவில் சர்வீஸ் அதிகாரிகளைப் பொறுத்தவரை, அவர்கள் தங்களின் சொந்த முடிவுகளை எடுக்கத் தயங்கு வார்கள். அவர்களிடம் பொருளாதார சீர்திருத்தத்திற்கான வலுவான யோச னைகள் கிடையாது. மோடி அரசிடம் அரசியல் தொலைநோக்கு இருப்ப தைப்போல் பொருளாதார தொலை நோக்குக் கிடையாது” என்று விமர் சித்தார் ரகுராம் ராஜன்.

மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபின் தினமும் 52 விவசாயிகள் தற்கொலை அவலம்

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தபின்னர் நாள்தோறும் 52 விவசாயிகள்வீதம் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று அகில இந்திய விவசாயிகள் சங்கம் கூறியுள்ளது.
சிவகங்கையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு மாநாடு மற்றும் விரிவடைந்த மாநிலக்குழு கூட்டம் 2 நாட்கள் நடந்தது. இதில் பங்கேற்க வந்த அகில இந்திய விவசாயி கள் சங்க பொதுச்செயலாளர் ஹன்னன்முல்லா கூறுகையில்,  ‘‘விவசாயிகளை தற்கொலைக்கு தூண்டும் நிலைமை தற்போது உள்ளது. இந்தியாவில் இதுவரை 4 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். நாள் ஒன்றுக்கு 52 விவசாயிகள் தற்கொலை செய்து கொள் கின்றனர். மோடி ஆட்சிக்கு வந்த பிறகுதான் விவசாயிகளின் தற்கொலை சதவீதம் அதிகரித்துக்கொண்டு செல்கிறது.
ஆட்சியாளர்கள் விவசாயிகளின் பிரச்சினையை தீர்க்க முன் வர வேண்டும். 44 ஆசிய பிராந்திய நாடு களிடையே வரியில்லாமல் வேளாண் பொருட்களை இறக்குமதி செய்வது என்ற ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட் டுள்ளது. இதில் வரும் நவ.4ஆம் தேதி மத்திய பாஜ அரசு கையெழுத்திட உள்ளது.
இதனால் இந்தியாவில் உள்ள விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் போகும் நிலை ஏற்படும். எனவே ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை கண்டித்து நவ.4இல் அனைத்து பகுதிகளிலும் போராட்டம் நடத்தப்பட உள்ளது’’ என்றார்.

குரூப்-2 புதிய பாடத்திட்டத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு

குரூப்-2 தேர்வுக்கான புதிய பாடத்திட்டத்தை ரத்து செய் யக் கோரும் மனுவை, அரசு கவனத்தில் கொண்டு உரிய முடிவெடுக்க வேண்டுமென உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை, தெற்கு மாரட் வீதியைச் சேர்ந்த வழக்குரைஞர் அப்பாஸ் மந்திரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 தேர்வு களுக்கான பாடத்திட்டத்தில் அரசு மாற்றம் கொண்டு  வந்துள்ளது. இதன்படி, தேர்வுகளில் 175 வினாக்கள் பொது அறிவு பிரிவிலிருந்தும், 25 வினாக்கள் கணிதத்தில் இருந்தும் கேட்கப்படும். இதனால், பழைய பாடத்திட்டத்தில் இருந்த 100 மதிப்பெண்ணிற்கு கேட்கப்பட்டி ருந்த  தமிழ் வினாக்கள் இனி  இருக் காது.இதேபோல் 100 மதிப் பெண்ணிற்கு மொழிபெயர்ப்பும் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், ஏற்கனவே குரூப்-2 போட்டித்தேர்வுக்கு தயாரான தமிழக இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட லட்சக்கணக்கானோர் பெரிதும் பாதிப்பர். 100  மதிப்பெண்ணிற்கான தமிழ் வினாக்கள் அகற்றப்பட்டதால் பெரிதும் பாதிப்பை சந்திப்பர். பலரால் உரிய இலக்கை அடைய முடியாத நிலை ஏற்படும். குறிப்பாக கிராமப்புறத்தை அடிப்படையாகக் கொண்ட மாணவர்கள் பெரிதும் பாதிப்பர். எனவே,  குரூப்-2 தேர்வுக் கான புதிய பாடத்திட்டத்தை ரத்து செய்தும், பழைய முறையிலேயே தேர்வை தொடர்ந்து நடத்த வேண்டு மெனவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை நேற்று முன்தினம் விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர், ‘‘மனுதாரர் குறிப்பிடும் விவகாரம் பணியாளர் நலன் சார்ந் தது. அரசு தரப்பு ஆய்வுக்கு பிறகே முடிவெடுத்திருக்கும். இது அரசின் கொள்கை  முடிவோடு தொடர் புடையது. நிபுணர்களின் பரிந் துரைகள் இருந்திருக்கும்.
எனவே, இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. அதேநேரம், மனுதாரரின் கோரிக்கை குறித்து பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீரமைப்புத்துறை  செயலர், டிஎன்பி எஸ்சி செயலர் ஆகியோர் கவனத்தில் கொண்டு உரிய முடிவெடுக்க வேண் டும். மனுதாரரின் மனு அடிப்படையில் இவர்கள் எடுக்கும் முடிவை, நீதிமன் றத்தின் இந்த உத்தரவு கட்டுப் படுத்தாது’’ என உத்தரவிட்டு மனுவை  முடித்து வைத்தனர்.

நிலவில் பயிர்ச்செய்கை

அமெரிக்கா மற்றும் ரஷ்யாவை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் சீனாவும் நிலவிற்கு விண்வெளி ஓடத்தினை அனுப்பியிருந்தது.இதில் புதிய முயற்சி ஒன்றினையும் சீனா மேற்கொண்டிருந்தது.அதாவது 2.6 கிலோ கிராம் எடை உடைய சிறிய உயிர்க்கோளம் ஒன்றினையும் வைத்து அனுப்பியிருந்தது.
குறித்த உயிர்க் கோளத்தில் பருத்தி விதை, தக்காளி விதை, ஈஸ்ட், பழ ஈக்களின் முட்டை,   எனப்படும் களை மற்றும் எண்ணெய் வித்துக்கள் என்பன உள்ளடக்கப்பட்டிருந்தது.
இந்த வித்துக்களை நிலவில் முளைக்க வைத்து பார்ப்பதே சீன ஆராய்ச்சியாளர்களின் நோக்கமாக இருந்தது.எனினும் தற்போது பருத்தி விதை மாத்திரம் முளைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அவ் விதையிலிருந்து ஒரு இலை மாத்திரம் வெளிவந்துள்ளதற்கான ஆதாரங்கள் காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட் டுள்ளது.
டைனோசர் மீன்
நார்வேயில் உள்ள மீன் பிடிக்கும் நிறுவனங் களுக்கு வழிகாட்டியாக இருப்ப வர் ஆஸ்கர். கடலில் எந்த இடத்தில் தூண்டில் வீசினால் மீன்கள் கிடைக்கும் என்று இவரால் துல்லியமாகச் சொல்ல முடியும். அதனால் மீன் பிடிப்பவர்களுக்கு மத்தியில் இவருக்கு செம மவுசு. சமீபத்தில் இவர் பிடித்த மீன் ஒன்று இணையத்தில் ஹாட் வைரலாகி விட்டது.  அந்த மீனின் தோற்றம் டை னோசர் வடிவில் இருப்பதால் டைனோசர் மீன் என்று அதனை அழைக்கின்றனர். கடலின் 800 மீட்டர் ஆழத்துக்குள் இந்த மீன் கிடைத் திருக்கிறது.

நிலவும் சுருங்கும்!

முதுமையின் காரணமாக மனிதனின் தோல் பகுதி சுருங்குவதை பார்த்திருப்போம். நமக்கும் அந்த அனுபவம் கிடைக்கும். மனிதனைப் போல நிலாவும் சுருங்குமா? ஆம்... என்கிறது நாசாவின் சமீபத்திய ஆய்வு.
ஆனால், நிலவு கொஞ்சம் கொஞ்சமாகத்தான் சுருங்கி வருகிறதாம். கடந்த ஆயிரம் கோடி ஆண்டுகளில் 50 மீட்டர் அளவுக்கே நிலவு சுருங்கியிருக்கிறது.
இப்படி நிலவு சுருங்குவதால் அதன் மேற்பரப்பில் மட்டும் சுருக்கம் விழுகிறது.
எப்படி திராட்சையின் மேற்பகுதி சுருங்கி உலர் திராட்சையாக மாறுகிறதோ அதே மாதிரி நிலவும் சுருங்குகிறது... என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
நிலவின் மய்யப்பகுதியின் வெப்ப நிலை குறைந்து அது குளிர்மை யடைவது தான் நிலா சுருங்குவதற்கு முக்கிய காரணம். இதனால் அதன் மேற்பரப்பில் விரிசல்கள் விழுகின்றன.
தவிர, நடுக்கம் கூட ஏற்படுகிறது. இதனை நிலா நடுக்கம் என்கின்றனர்.
இதனால் பூமிக்கு ஏதாவது ஆபத்து ஏற்படுமோ என்ற கோணத்தில் ஆராய்ச் சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

Friday, October 11, 2019

பொறியியலுக்கு எதற்கு பகவத் கீதை?

கொதிக்கும் கல்வியாளர்கள்!
தொடர் சர்ச்சையில் அண்ணா பல்கலைக் கழகம்


அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமத்தின் அறிவுறுத்தலின்பேரில், குரோம்பேட்டையில் உள்ள எம்.அய்.டி., ஏ.சி.டி., எஸ்.ஏ.பி., சி.இ.ஜி உள்ளிட்ட அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்வி அமைப் புகளில் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் தத்துவவியல் படிப்பும், பகவத் கீதை பாடமும் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மூன்றாவது செமஸ்டரில் இந்தப் படிப்பு சேர்க்கப்படும் என்றும் அறிவிப்பில் சொல்லப்பட்டுள்ளது.
இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பவே, "மேலை நாடுகளில் சாக்ரடீஸ், பிளாட்டோ உள்ளிட்ட தத்துவ மேதைகளின் தத்துவங்கள், பொறியியலில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில்தான் பகவத் கீதையை வைத்துள்ளோம். தவிர, அது விருப்பப் பாடம் மட்டுமே. விரும்புபவர்கள் படிக்கலாம்" என்று பத்திரிகையாளர்களிடம் விளக்கம் கொடுத்துள்ளார் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா. ஆனால், இது சப்பைக்கட்டு என்று கொந்தளிக் கிறார்கள் கல்வியாளர்கள்.
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமியிடம் பேசினோம். "பல்கலைக் கழகப் பாடத் திட்டத்தில் நன்னெறி தொடர்பான பாடத்திட்டத்தைக் கொண்டுவருவதில் தவறில்லை. நான் துணைவேந்தராக இருந்த காலத்தில்கூட அப்படி கொண்டு வந்திருக்கிறேன். ஆனால், அதில் மத அடையாளங்களைத் திணிக்கவில்லை. தற்போது பகவத் கீதையைச் சேர்த்திருப்பது தேவையற்ற செயல். பொறியியல் பாடத்திட்டத்தில் மதம்சார்ந்த நூல்களின் தேவை எங்கிருந்து வந்தது? பகவத் கீதை, நன்னெறி நூலே கிடையாது; இந்து மதம் சார்ந்த ஆவணம். பகவத் கீதையை அறிமுகப்படுத்த முடிவு எடுத்தால், குர்ஆனையும் பைபிளையும் சேர்த்து அறிமுகப்படுத்த வேண்டும். அதைவிடுத்து, பகவத் கீதையை மட்டும் படிக்கலாம் எனச் சொல்வது தவறு. தனது வரலாற்றில் மிகப்பெரிய தவற்றைச் செய்துள்ளது அண்ணா பல்கலைக்கழகம்" என்றார் கொதிப்புடன்.
பா.ஜ.க-வின் அறிவுசார் பிரிவின் தமிழகத் தலை வரும், ஓய்வுபெற்ற பேராசிரியருமான ராஜலட்சுமி யிடம் பேசினோம்.

"நான் கிறிஸ்துவ கான்வென்ட்டில்தான் கல்லூரிப் படிப்பை முடித்தேன். அங்கே மதபோதனையும் இருந்தது. அதற்காக நான் மதம் மாறிவிட்டேனா? தற்போது தத்துவவியலில் ஒரு பகுதியாக, விருப்பப் பாடமாகத்தான் பகவத் கீதை சேர்க்கப்பட்டுள்ளது. சிறுபான்மைக் கல்விக்கூடங்கள் உட்பட பெரும் பான்மையான கல்வி நிலையங்களில் தற்போது மதம்சார்ந்த போதனைகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. அத்தனை போதனைகளுமே மனிதன் நல்லவனாக வாழ வேண்டும் என்கிற ஒரே கொள்கையை மட்டும்தான் வலியுறுத்துகின்றன. அதனால் பல்கலைக் கழகத்தின் முடிவு தவறு இல்லை. இதை அரசிய லாக்குவதும் அதற்கு பா.ஜ.க-வை காரணம் காட்டுவதும் தவறு" என்றார்.
பேராசிரியர் கருணானந்தம், "பகவத் கீதையை, தத்துவமாக்க முயற்சி செய்கிறார்கள். கீதை தத்துவ மெனில், சைவ சித்தாந்தமும் தத்துவம்தான். ஆக, இவர்களுடைய நோக்கம் மதத்தையும் பண்பாட் டையும் கலந்து நம்மிடம் திணிப்பதுதான். 'சதுர்வர்ணம் மயா சிருஷ்டம்....' அதாவது, 'அந்தந்தத் தொழில் களைச் செய்ய வேண்டிய நான்கு வர்ணங்களை, நான் (கடவுள்) படைத்தேன்' எனக் கூறுகிறது பகவத் கீதை. இதுதான் தத்துவமா? சாக்ர டீஸை பகவத் கீதையுடன் ஒப்பிடுவதும் பொருந்தாது. மதம் என்றாலே, விவாதத் துக்கு அப்பாற்பட்டது என்று பொருள். ஆனால் கல்விக்கூடம் என்பது, விவாதம் நிகழ்த்தபட வேண் டிய இடம். அங்கே மதத்தைப் பாடமாகக் கொண்டு வருவது அப்பட்டமான ஜனநாயக அத்துமீறல். தொழில் நுட்பக் கல்விக்கும் மதபோதனைக்கும் என்ன தொடர்பு என்கிற சிந்தனையாவது கவுன் சிலைச் சேர்ந்தவர்களுக்கு இருந்திருக்க வேண்டும். புதிய கல் விக்கொள்கையில் அறிவிக்கப்பட்டதை அமல்படுத் துவதற்கு முன்பே இவர்கள் ஒவ்வொன்றாக நடை முறைப்படுத்தி வருகிறார்கள். துணைவேந்தராக இருக் கும் சூரப்பா, ஆளுநரின் பரிந்துரையில் நியமிக்கப் பட்டவர். அவர் அப்படித்தான் செயல்படுவார்" என்றார்.
பள்ளிக்கல்வித் துறை 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறிவித்தது, அண்மையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்போது விருப்பப்பாடப் பிரிவில் கீதையை அறிவித்துள்ளது அண்ணா பல்கலைக்கழகம். பள்ளிகளில் பொதுத்தேர்வும், பல்கலைக் கழகங்களில் விருப்பப்பட முறையும் புதிய கல்விக்கொள்கை வரைவில் குறிப்பிடப்பட்டிருந்தது கவனிக்கத்தக்கது!
- அய்ஷ்வர்யா

நன்றி: "ஜூனியர் விகடன்" 2-10-2019