Monday, November 4, 2019

புதிய கின்னஸ் புத்தகத்தில் இந்தியர்கள் 80பேருக்கு இடம்

‘கின்னஸ் உலக சாதனைகள் -2020’ என்ற புதிய புத்தகம் வெளியாகியுள்ளது. இதில் பல பிரிவுகளில் புதிய சாதனை படைத்தஇந்தியாவைச் சேர்ந்த 80 பேர் இடம் பெற்றுள்ளனர். நிலான்ஸி படேல் என்ற 16 வயது சிறுமியின் தலைமுடி 5 அடி 7 அங்குலம் நீளம் உள்ளது. டீன் ஏஜ் வயதில் மிக நீளமான முடி கொண்ட பெண்ணாக இவர் இடம் பெற்றுள்ளார்.
நாக்பூரைச் சேர்ந்த ஜோதி அமேஜ் என்ற பெண்ணின் உயரம் 24.7 அங்குலம். மிகவும் குள்ளமான பெண்ணாக இவர் இடம் பிடித்துள்ளார். புனேவைச் சேர்ந்த தர் சில்லல் என்பவருக்கு இடது கையில் உள்ள நகம் 909.6 செ.மீ நீளம் உள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த சங்கர நாராயணன் என்பவர் 736 வகையான பேப்பர் கப்களை சேர்த்து வைத்துள்ளதற்காக இடம் பிடித்துள்ளார். இதுபோல், பலர் புதிய கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர்.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.