Thursday, November 14, 2019

சென்னையில் பெண்களுக்காக 150 நவீன இ-கழிப்பறைகள்

சென்னை யில் பெண்களுக்காக ரூ.8 கோடி செலவில் 150 நவீன இ--கழிப்பறைகளை அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
சென்னை மாநகரப் பகு தியில் 74 லட்சம் பேர் நிரந்த ரமாக வசித்து வருகின்றனர். மேலும், சென்னைக்கு தின மும் வந்து செல்வது, சில நாட்கள் தங்கிச் செல்வது என 20 லட்சத்துக்கும் மேற் பட்டோர் உள்ளனர். சென் னையில் பயணம் செய்வோ ருக்கு ஏற்ற வகையிலும், குடி சைப் பகுதிகளுக்கு அருகில் 853 இடங்களில் 6,701 இருக் கைகளை கொண்ட பொதுக் கழிப்பிடங்களை சென்னை மாநகராட்சி அமைத்துள் ளது. தூய்மை இந்தியா திட் டத்தின்கீழ் அந்த கழிப்பி டங்கள் தூய்மையாக பரா மரிக்கப்பட்டு வருகின்றன. இதில் மகளிருக்கான கழிப் பறைகளை அதிகப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
இது தொடர்பாக மாநக ராட்சி அதிகாரிகள் கூறியதா வது:
வெளியில் செல்லும் பொது மக்கள் தங்கள் இயற்கை உபா தைகளை கழிக்க போதிய இடவசதியின்றி அவதிப்படு கின்றனர். குறிப்பாக ஆண் களை விட, பெண்கள் அதிக சிரமத்துக்கு ஆளாகின்றனர். அதனால் அவர்களின் சிர மத்தை போக்கும் வகையில் மாநகராட்சியில் அனைத்து மண்டலங்களிலும், பல்வேறு இடங்களில் ரூ.8 கோடி செலவில் மகளிருக்கான 150 நவீன இ-கழிப்பறைகளை கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இந்த கழிவறைகளை இணையத்தில் கண்காணிக்க முடியும். நீர் இருப்பு, மின் வசதி போன்ற விவரங்களை கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே பெற முடியும். மேலும் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த நவீன இ-கழிப்பறைகள் அமைக்கப் பட உள்ளன.
பொதுமக்கள் தங்கள் அருகில் உள்ள பொதுக் கழிப்பிடங்களின் இருப்பி டங்களை அறிந்துகொள்ள ஏதுவாக, அனைத்து பொது கழிப்பிடங்களும் கூகுள் வரைபடத்தில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ளன.
மத்திய அரசு, சென்னை மாநகராட்சி மற்றும் கூகுள் வரைபடம் ஆகியவை இணைந்து இதற்கான நடவ டிக் கையை மேற்கொண்டனர். கூகுள் வரைபடத்தில் ‘ஜிஷீவீறீமீt’ என தட்டச்சு செய்தால், தங்களின் அருகில் உள்ள பொதுக்கழிப்பிடங்களின் விவரங்கள் கிடைக்கும். இவ் வாறு அதிகாரிகள் கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.