பிரேசில் நாட்டில் அமேசான் காடுகள்
ஆர்வலராக விளங்கியவர், பூர்வகுடியைச் சேர்ந்த பவுலோ பவுலினோ குவாஜாஜாரா.
அங்கு காடுகளில் உள்ள மரங்களை வெட்டி கடத்து கிற கும்பல்களை எதிர்த்து
போராடுகிற வன பாதுகாவ லர்கள் அமைப்பின் உறுப்பி னராக இருந்து வந்தார்.
இவர் அங்குள்ள மரான் ஹாவோ மாகாணத்தில்,
அராரிபோயா காட்டுப்பகுதி யில் கடந்த 1ஆம் தேதி வேட் டையாடிக் கொண்டிருந்த
போது, சட்ட விரோத மர கடத்தல் காரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பவுலோவின் படுகொலை, அமேசான் காடுகளின் பாது காவலர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசிலில் தனிமைப்படுத் தப்பட்டுள்ள
சமூகங்களுக் காக போராடி வருகிற லாப நோக்கற்ற சர்வைவல் இன் டர்நேஷனல்
அமைப்பு, இதற்கு முன்பும் கூட அமே சான் காடுகள் ஆர்வலர்கள் 3 பேர் தங்கள்
உறவினர்களு டன் கொல்லப்பட்டுள்ளதாக கூறுகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் டபாடிங்கா நகரில்
பூர்வ குடி மக்களை பாதுகாப்பதற்காக பணியாற்றிய அதிகாரி ஒரு வர்
கொல்லப்பட்டது நினைவு கூரத்தக்கது.
அமேசான் காடுகளின் பாதுகாவலர்கள் கொல்லப்
பட்டு வருகிற சம்பவங்கள், பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சொனாரோவுக்கு எதி ராக
உள்நாட்டிலும், வெளி நாடுகளிலும் கடும் விமர்சனங் களுக்கு வழிவகுத்துள்ளன.
பவுலோ படுகொலை தொடர்பாக காவல்துறையி னர் விசாரணை நடத்துகின் றனர்.
குற்றவாளிகளை பிடித்து நீதியின் முன் நிறுத்துவோம் என்று பிரேசில் நீதித்துறை அமைச்சர் செர்கியோ மோரோ கூறி உள்ளார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.