இந்திய அரசி யலமைப்பு சட்டத்தின் 370-ஆவது
பிரிவின் கீழ் காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்புத்
தகுதியை மத்திய அரசு கடந்த ஆகஸ்டு 5 ஆம் தேதி ரத்து செய்தது.
மேலும் அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிர தேசங்களாகவும் பிரித்தது.
இந்த சட்டம் நிறைவேறி சுமார் 3 மாதங்கள்
ஆன நிலையில், காஷ்மீர் தொடர் பான நடவடிக் கைகள் நவ.1 முதல் அமலுக்கு
வந்துள் ளன. கிரிஷ் சந்திராமர்மு மற்றும் ஆர்.கே.மாத்தூர் இருவரும் முறையே
ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களின் துணை நிலை
ஆளுநர்களாக பதவியேற்றனர்.
இதனை தொடர்ந்து ஜம்மு, சிறீநகர் மற்றும்
லே ஆகிய பகுதிகளில் உள்ள வானொலி நிலையங்களின் பெயர்கள் முறையே ‘ஆல்
இந்தியா ரேடியோ-ஜம்மு’, ‘ஆல் இந்தியா ரேடியோ- சிறீநகர்’ மற்றும் ‘ஆல்
இந்தியா ரேடியோ- லே’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதற்கு முன் இந்த வானொலி நிலையங்கள் ‘ரேடியோ காஷ்மீர்’ என்ற பெயரில் இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.