Wednesday, October 23, 2019

நாட்டிலேயே அதிக குற்றங்கள் நடக்கிற மாநிலம் பிஜேபி ஆளும் உத்தரபிரதேசம்: தமிழ்நாட்டுக்கு 7ஆவது இடம்

நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள், யூனியன் பிர தேசங்களில் 2017ஆ-ம் ஆண்டு நடந்துள்ள குற்றச்சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்பான புள்ளி விவர பட்டியலை தேசிய குற்ற ஆவண காப்பகம் (என்.சி.ஆர்.பி.) வெளியிட்டுள்ளது.
2017ஆ-ம் ஆண்டில் நாடு முழு வதும் 30 லட்சத்து 62 ஆயிரத்து 579 குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன. 2016இ-ல் இந்த எண்ணிக்கை 29 லட்சத்து 75 ஆயிரத்து 711 ஆக இருந்தது.
2015-ஆம் ஆண்டு இது 29 லட்சத்து 49 ஆயிரத்து 400 ஆகும்.
நாட்டிலேயே பெரிய மாநிலம் என்ற சிறப்பை பெற்றுள்ள உத்தர பிரதேசம்தான், குற்றச்சம்பவங் களிலும் முதல் இடத்தில் உள்ளது.
இந்த மாநிலத்தில் 2017ஆ-ம் ஆண்டில் 3 லட்சத்து 10 ஆயிரத்து 84 குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன. இது நாட்டில் 10.1 சதவீதம் ஆகும்.
இங்கு 2016-ஆம் ஆண்டில் 2 லட்சத்து 82 ஆயிரத்து 171 குற்ற வழக்குகளும், 2015ஆ-ம் ஆண்டு 2 லட்சத்து 41 ஆயிரத்து 920 வழக்கு களும் பதிவாகின.
மராட்டிய மாநிலம், அதிக எண் ணிக்கையிலான குற்றச்சம்பவங்கள் நடந்துள்ள 2-ஆவது மாநிலம் என்ற பெயரை பெறுகிறது.
இங்கு 2017-இல் 2 லட்சத்து 88 ஆயிரத்து 879 வழக்குகள் பதிவாகி உள்ளன. இது 9.4 சதவீதம் ஆகும்.
மத்திய பிரதேசத்துக்கு மூன் றாவது இடம்.
இந்த மாநிலத்தில் 2 லட்சத்து 69 ஆயிரத்து 512 குற்ற வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. இது 8.8 சதவீதம் ஆகும்.
4-ஆவது இடம், கேரள மாநிலத் துக்கும், 5-ஆவது இடம் டில்லிக்கும், 6ஆ-வது இடம் பீகாருக்கும் கிடைத் துள்ளது.
குற்றச்சம்பவங்களின் எண்ணிக் கையில் தமிழ்நாடு 7-ஆவது இடத்தில் உள்ளது.
தமிழ்நாட்டில் 2017-ஆம் ஆண்டு 1 லட்சத்து 78 ஆயிரத்து 836 வழக்குகள் பதிவாகி உள்ளன.
இது 5.8 சதவீதம் ஆகும். 2016-ஆம் ஆண்டு, 1 லட்சத்து 79 ஆயிரத்து 896 குற்ற வழக்குகளும், 2015-ஆம் ஆண்டு, 1 லட்சத்து 87 ஆயிரத்து 558 குற்ற வழக்குகளும் பதிவாகி உள்ளன.
இந்த வகையில் தமிழ்நாட்டில் குற்றங்களின் எண்ணிக்கை குறைந் துள்ளது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.