Thursday, October 10, 2019

காஷ்மீரில் கல்லூரிகள் திறப்பு: மாணவர்கள் புறக்கணிப்பு

காஷ்மீர் மாநி லத்தில் கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்ட போதிலும் மாணவர்கள் யாரும் வர வில்லை. ஜம்மு காஷ்மீரில் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டப்பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது.
இதனை தொடர்ந்து, வன் முறைகள், அசம்பாவிதங்கள் நடப்பதை தடுக்க, தடை உத்தரவுகள் விதிக்கப்பட்டன. முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் வீட்டு சிறையில் வைக்கப்பட்டனர். பள்ளிகள், கல்லூரிகள், கடை கள், வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதன் காரணமாக அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தற்போது, இம்மாநிலத் தில் படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகின்றது. பள்ளத்தாக்கு முழுவதும் தரைவழி தொலைதொடர்பு சேவை தொடங்கியுள்ளது. சாலையோர கடைகள் திறக் கப்பட்டுள்ளன.
தனியார் வாகனங்களின் போக்குவரத்து அதிகரித் துள்ளது. 66ஆவது நாளான நேற்றும் நகரின் பெரும்பா லான பகுதிகளில் கடைகள் அதிகாலையிலேயே திறக்கப் பட்டன. காலை 11 மணி வரை மட்டுமே கடைகள் இயங்கு கின்றன. பின்னர், சிறப்பு  தகுதி நீக்கத்துக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் வியா பாரிகள் கடைகளை மூடிவிடு கின்றனர்.
இந்நிலையில், கடந்த வாரம் அறிவிக்கப்பட்டதை போன்று நேற்று அனைத்து கல்லூரிகளும் திறக்கப்பட் டன. பெரும்பாலான பேராசி ரியர்கள் பணிக்கு வந்திருந் தனர். ஆனால், மாணவர்கள் யாரும் கல்லூரிக்கு வர வில்லை.  பாதுகாப்பு கருதி பெற்றோர்கள் தங்கள் பிள் ளைகளை பள்ளி, கல்லூரி களுக்கு அனுப்ப தயக்கம் காட்டி வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீரில் வருகிற 24ஆம் தேதி உள்ளாட்சி அமைப்புக்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இது, சிறப்பு தகுதியை மத்திய அரசு ரத்து செய்த பின்னர் நடைபெறும் முதல் தேர்தலாகும். ஆனால், இந்த தேர்தலை புறக்கணிப்பது என ஜம்மு காஷ்மீர் காங்கி ரஸ் முடிவு செய்துள்ளது. இது குறித்து மாநில காங் கிரஸ் தலைவர் ஜி ஏ மிர் கூறுகையில், “ஜனநாயக அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என காங்கிரஸ் நம்புகிறது. எந்தவொரு தேர் தலில் இருந்தும் காங்கிரஸ் ஒருபோதும் விலகி செல்ல வில்லை. ஆனால், மாநில நிர் வாகத்தின் அலட்சியப் போக்கு மற்றும் மூத்த கட்சி தலைவர்கள் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு இருப் பதன் காரணமாக உள்ளாட்சி தேர்தல்களை புறக்கணிப்பது என முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் உள்ளது,” என்றார்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.