Tuesday, October 8, 2019

மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு: மூவர் தேர்வு!

மனித உடல் செல்கள் குறித்த ஆய்வு மேற் கொண்ட 3 நபர்களுக்கு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவம், இயற் பியல், பொரு ளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டு தோறும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
இந்நிலையில், 2019ஆ-ம் ஆண்டு மருத்துவத்துக் கான நோபல் பரிசு சுவீடன் தலைநகர் ஸ்டோக் ஹோமில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி மருத்துவ ஆராய்ச்சி யாளர்கள் வில்லியம் ஜி,கெலின், சர் பீட்டர் ரேட்கிளிஃப், கிரேக் எல். செமன்சா ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வழங் கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள் ளது.
மனித உடல் கிடைக் கும் ஆக்ஸி ஜனின் அளவை பொறுத்து செல் களை எவ்வாறு தகவ மைத்து கொள்கிறது என் பதை கண்டு பிடித்த தற்காக இந்த 3 மருத்து வர்களுக்கு நோபல் பரிசு பகிர்ந் தளிக்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.