முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு
பங்களாக்களை காலி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஒரு மாதத்துக்கும்
மேலாகிவிட்ட நிலையில், சுமார் 50 பேர் இன்னும் அந்த பங்களாக்களை காலி
செய்யாமல் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. அவர்களை விரைவில் வெளியேற்ற, அரசு
கட்டட (அங்கீகாரம் இன்றி குடியிருத்தல்) சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க
மத்திய அரசு முனைந்து வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக, தங்களது பதவிக் காலம் முடிந்த
பிறகும் டில்லி லுட்டியன் பகுதியில் உள்ள அரசு பங்களாக்களில் குடியிருந்த
200-க்கும் மேற்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு
வாரத்துக்குள்ளாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று சி.ஆர். பாட்டீல்
தலைமையிலான அரசு இல்லங்கள் ஒதுக்கீட்டுக் கான நாடாளுமன்றக் குழு கடந்த
ஆகஸ்ட் 19-ஆம் தேதி உத்தரவிட்டது.
மேலும், அந்த பங்களாக்களுக்கான மின்சாரம், குடிநீர், சமை யல் எரிவாயு இணைப்புகளை 3 நாள்களுக்குள் துண்டிக்குமாறும் உத்தரவிட்டது.
இதையடுத்து பல முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினர்கள் அந்த பங்காளக்களை காலி செய்துவிட்டனர். எனினும், சில
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசு பங்களாவை காலி செய்யாமல் உள்ளனர்.
இதுதொடர்பாக தகவலறிந்த வட்டாரங்கள்
கூறுகையில், "சுமார் 50 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாங்கள்
குடியிருக்கும் அரசு பங்களாவை இன்னும் காலி செய்யவில்லை. அடுத்த சில
நாள்களில் அவர்கள் பங்களாவை காலி செய்யாவிட்டால், கட்டாயமாக வெளியேற்றுதல்
உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என்று தெரிவித்தன.
விதிகளின்படி, ஒரு நாடாளுமன்றம்
கலைக்கப்பட்ட பிறகு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு
மாதத்துக்குள்ளாக தாங்கள் குடியிருக்கும் அரசு பங்களாக்களில் இருந்து
வெளியேற வேண்டும்.
16ஆவது மக்களவையை கலைப்பதற்கான உத்தரவை
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த மே 25-ஆம் தேதி பிறப்பித்தார்.
சுமார் 5 மாதங்களை நெருங்கி விட்ட போதிலும் முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினர்கள் சிலர் அரசு பங்களாவை காலி செய்யாமல் உள்ளனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.