Wednesday, October 23, 2019

கனடா நாடாளுமன்ற தேர்தல் மீண்டும் பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ


நிலப் பரப்பில் உலகின் 2ஆவது மிகப்பெரிய நாடாக விளங் கும் கனடாவில் 338 தொகு திகளை கொண்ட நாடாளு மன்றத்துக்கு நேற்று முன் தினம் தேர்தல் நடைபெற்றது.
இதில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சிக்கும், ஆண்ட்ரூ ஷீர் தலைமையிலான கன்சர் வேட்டிவ் கட்சிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது. நேற்று மாலை வாக்குப்பதிவு முடிந்தவுடன், வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.
இந்த தேர்தலில் எந்த கட் சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனாலும், ஜஸ்டின் ட்ரூடோவின் லிப ரல் கட்சி, 157 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. கன்சர் வேட்டிவ் கட்சிக்கு 121 இடங்கள் கிடைத்துள்ளன. ஆட்சி அமைக்க 170 இடங் கள் தேவை என்கிற நிலையில், ஜஸ்டின் ட்ரூடோவுக்கு 13 நாடாளுமன்ற உறுப்பினர் களின் ஆதரவு மட்டுமே தேவைப்படுகிறது.
அந்த வகையில் இந்திய வம்சாவளி சீக்கியரான ஜக் மித் சிங்கின், புதிய ஜனநாயக கட்சி ஆதரவுடன், ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் ஆட்சிய மைப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் மத்தி யில் அதிகம் வரவேற்பை பெற்ற புதிய ஜனநாயக கட்சி 20 இடங் களை கைப்பற்றி யுள்ளது.
கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைப்ப தன் மூலம் ஜஸ்டின் ட்ரூடோ தொடர்ந்து 2ஆவது முறை யாக பிரதமராகிறார். இதற் கிடையே நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்கு ஜஸ்டின் ட்ரூடோவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.