சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள குர்து படையினரை குறி வைத்து, துருக்கி ராணுவம் தொடர்ந்து 8 நாட்களாக தாக்குதல் நடத்தியது.
அமெரிக்கா கொடுத்த அழுத்தத்தை தொடர்ந்து, 5
நாட்களுக்கு சண்டை நிறுத் தத்தை துருக்கி அறிவித்தது. இந்த 5
நாட்களுக்குள் பாது காப்பு மண்டலம் என வரை யறுக்கப்பட்டுள்ள பகுதியில்
இருந்து குர்துக்கள் வெளி யேற வேண்டும் என துருக்கி கூறுகிறது.
இந்த நிலையில், சண்டை நிறுத்தத்தை மீறி
குர்து படை கள் ஆத்திரமூட்டும் தாக்கு தல்களை நடத்தியதாக துருக் கியின்
பாதுகாப்பு அமைச்ச கம் நேற்று முன்தினம் குற்றம் சாட்டியது.
ஆனால் அதனை மறுத் துள்ள குர்துக்கள் துருக்கி ராணுவம்தான் ஒப்பந்தத்தை மீறி அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றம் சாட் டினர்.
இந்த நிலையில், செவ் வாய்க்கிழமை (நாளை)
மாலைக் குள் குர்து போராளிகள் பின்வாங்கவில்லை என்றால் அவர்கள் கடுமையான
பின் விளைவுகளை சந்திக்க நேரி டும் என துருக்கி அதிபர் தாயீப் எர்டோகன்
எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறு கையில், “சண்டை
நிறுத்த ஒப்பந்தத்தின்படி குர்து போரா ளிகள் நடந்து கொள்ள வில்லை என்றால்,
நாங்கள் புறப்பட்ட இடத்துக்கு திரும் புவோம். குர்துக்களின் தலையை
நசுக்குவோம்” என்றார்.
மேலும் அவர், குர்துக்கள் மீதான தாக்குதல்
தொடர் பாக அடுத்த வாரம் ரஷிய அதிபர் புதினுடன் பேச்சு வார்த்தை நடத்த
இருப்பதா கவும், அந்த பேச்சுவார்த்தை ஒரு தீர்வை உருவாக்கவில்லை என்றால்
துருக்கி தனது சொந்த திட்டங்களை செயல் படுத்தும் எனவும் கூறினார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.