Thursday, October 10, 2019

வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் விவசாயிகள் அளித்த விண்ணப்பங்கள் தூக்கி வீசப்பட்டுள்ளன

அறந்தாங்கி வட்டாட்சியர் அலுவலக வளாகத் தில்  ஊக்கத்தொகை பெறுவதற்காக விவசாயிகள் அளித்த மனுக்கள் தூக்கி வீசப்பட்டுள்ளன.
கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு பிரதமர் மோடி, ஏழை விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் ரூ.6 ஆயிரம் கவுரவ நிதி உதவி வழங்கும் திட்டத்தை அறிவித்தார்.
தொடர்ந்து இரண்டாவது முறையாக மோடி பிரதமர் ஆனபிறகு, அனைத்து  விவ சாயிகளுக்கு கவுரவ நிதி உதவி வழங்கப்படும் என திட்டத்தை மாற்றி அறிவித்தார். அதன்படி, பிரதமரின் விவசாயிகள் கவுரவ ஊக்கத்தொகை பெற விரும்பிய விவசாயிகள் ஒரு படி வத்தில் விபரங்களை பூர்த்தி செய்து,  விண்ணப்பத்தில் விவசாயியின் படத்தை ஒட்டி, அதனுடன் சுய உறுதிமொழி படிவம், ஆதார்நகல், நிலத்தின் சிட்டா காப்பி, வங்கிக் கணக்கு புத்தக முன்பக்க நகல் ஆகியவற்றை இணைத்து கொடுக்க வேண்டும்.
அவ்வாறு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை வரு வாய்த்துறையினரிடம் வழங்கினர். அந்த படிவங்களை வருவாய்த்துறையினர் ஆய்வு செய்து, அதன் அடிப் படையில் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2  ஆயிரம் வீதம் அனுப்பப்பட்டு வருகிறது.
அறந்தாங்கி வட்டாட்சியர் அலு வலகத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதற்காக பழைய தாலுகா அலுவலக வளாகம் (காவல்நிலையம், நீதிமன்றம், வட்டாட்சியர் அலு வலகம் இயங்கிய கட்டடங்கள்) இடித்து  அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
ஏற்கெனவே அறந்தாங்கி காவல் நிலையம் இயங்கி வந்த பகுதியில், காவல்துறை ஆய்வாளர் அறை ஆதார் சேர்க்கை மய்யமாக பயன் படுத்தப்பட்டு வந்தது. தற்போது அந்த கட்டடமும் இடிக்கப்பட்டு வருகிறது.
ஆதார் சேர்க்கை மய்யமாக இருந்த அறையும், தற்போது இடிக்கப் பட்டு வரும் நிலையில், அந்த அறையில் பிரதமரின் விவசாயிகள் கவுரவ ஊக்கத் தொகை பெறுவதற்காக விவசாயிகள் வழங்கிய நூற்றுக் கணக்கான விண்ணப்பப்படிவங்கள்  தூக்கி வீசப்பட்டு சிதறிக் கிடக் கின்றன.
இதுகுறித்து விவசாயிகள் கூறிய தாவது:
பிரதமரின் கவுரவ ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்திற்காக கொடுக் கப்பட்ட விண்ணப்பப்படிவங்கள் கேட்பாரற்று கிடக்கின்றன.
தூக்கி எறியப்பட்ட விவசாயிகளின் மனுக்களை சேகரித்து, அவர்களுக்கும்  பிரதம அமைச்சரின் கவுரவ ஊக்கத் தொகை கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.