செவ்வாய்க் கோளில் ஒரு காலத்தில் பூமியில் இருந் ததைப் போன்ற உப்பு ஏரிகள் இருந்ததாக ஆய்வில் கண்டறியப் பட்டுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் ஏ அண்ட் எம் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி யாளர்கள் ‘நேச்சர் ஜியோ சைன்ஸ்’ இதழில் வெளியிட்டுள்ள கட்டுரை யில் கூறியிருப்ப தாவது:
செவ்வாய்க்கோளில் 3 பில்லியன்
ஆண்டுகளுக்கு முன்பு கேல் க்ரேட் டர் பள்ளத்தில் இருந்த ஏரி, 95 மைல்
அகலமுள்ள ஒரு பெரிய பாறைப்படுகை, இது 2012 முதல் நாசா கியூரியா சிட்டி
ரோவர் மூலம் ஆராயப்பட்டு வருகிறது. சுமார் 3.6 பில்லியன் ஆண்டுகளுக்கு
முன்பு செவ்வாய்க் கோளில் ஒரு விண்கல் தாக்கியபோது கேல் பள்ளம் உருவானது.
செவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் உப்பு ஏரிகள் இருந் துள்ளன. அவை
பூமியில் இருந் ததைப் போலவே ஈரமான மற்றும் வறண்ட கட்டங்களைக் கடந்து
வந்துள்ளன. செவ்வாய்க் கோளின் காலநிலை நீண்ட காலமாக வறண்டு போய்
இருக்கிறது. செவ்வாய்க் கோளின் வளிமண்டலம் மெல்லிய தாக மாறியதால்
செவ்வாய்க் கோளில் திரவ நீர் நிலைத்திருக்காமல் ஆவியாகியுள்ளது என்று
தெரிவிக் கப்பட்டுள்ளது.
மரியன் நாச்சன் கூறுகையில், கேல்
க்ரேட்டர் அதன் வரலாற்றில் திரவ நீர் இருந்ததற்கான அறிகுறி களை
வெளிப்படுத்துகிறது. இது நமக்குத் தெரிந்த நுண்ணுயிர் வாழ் வின் முக்கிய
அங்கமாகும், வறண்ட காலங்களில் உப்பு ஏரிகள் இறுதியில் உருவாகின. இந்த
ஏரிகள் எவ்வளவு பெரியவை என்று சரியாகச் சொல் வது கடினம். ஆனால் கேல் க்ரேட்
டரில் உள்ள ஏரி நூற்றுக்கணக்கான ஆண்டுகள் முதல் பல்லாயிரக்கணக் கான
ஆண்டுகள் வரை இருந்துள் ளது என்றார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.