இதற்கு மேலுமா சந்தேகம்?
திட்டவட்டமாக அறிவித்தார் மோகன் பகவத்
புதுடில்லி, அக்.5 -இந்தியாவை இந்து நாடு
ஆக்குவதுதான் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் வேலைத்திட்டம் என்று அதன் தலைவர்
மோகன்பகவத், மீண்டும் பகிரங்கப்படுத்தியுள் ளார். டில்லியில் நடைபெற்ற
நிகழ்ச்சிஒன்றில் அவர் மேலும் பேசியிருப்பதாவது:
யாருமே கிடையாது
“ஆர்எஸ்எஸ் என்பது ‘சங்பரிவார்’,‘சங்
அய்டியாலஜி’ என்ற அடைமொழிகளால் அழைக்கப்படுகிறது. இவை அனைத்துமே முழுமையற்
றவை. டாக்டர் ஹெட்கேவார் கூட ஆர்எஸ்எஸ்பற்றி முழு மையாகப் புரிந்து கொண்டு
விட்டதாக எங்கும் கூறிக் கொண்டதில்லை. குருஜி கோல்வால்கர் கூட நீண்ட நாள்
பிரச்சாரகராக இருந்த பிறகுதான் சங்கத்தைப் புரிந்து கொள்ளவே தொடங்க
முடிந் தது என்றும் கூறுகிறார். ஆர்எஸ்எஸ் கோட்பாட்டா ளர் என்று யாருமே
கிடையாது. சிலர் அவ்வாறு சொல்லிக் கொண்டு மீடியாக்களில் தோன்றலாம். ஆனால்,
அனு மார், மராட்டிய மன்னன் வீரசிவாஜி மற்றும் ஹெட் கேவார் ஆகியோர்தான்
ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் முன்னோடிகள்.ஆர்எஸ்எஸ் அமைப்பைப் பொறுத்தவரை, அது
இந்தியாவை இந்து தேச மாக்கும் இயக்கம் என்பதில் எந்த சமரசமும் கிடையாது.
இந்துஸ்தான் என்ற இந்த நாடு ‘இந்து ராஷ்டிரம்’தான். இந்த உண்மையை நாங்கள்
வாழ்க்கை முறையாக பெற்றி ருக்கிறோம். இதை எங்களால் மாற்றிக் கொள்ள
முடியாது. இந்த நாட்டில் ஒரேஒரு நபராவது தன்னை இந்து என்று
அழைத்துக்கொள்ளும் வரை இது இந்துராஷ்டிரம் தான்.
இவ்வாறு மோகன் பகவத் பேசியுள்ளார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.