Tuesday, October 1, 2019

வயலில் மலம் கழித்த தாழ்த்தப்பட்ட சிறுவர்கள் அடித்துக்கொலை வட இந்தியாவில் தலைவிரித்தாடும் தீண்டாமைக்கொடுமை

மத்தியப்பிர தேசத்தில் உள்ள பாவ்கேதி என்ற கிராமத்தில் ஊருக்கு வெளியே இருந்த வயல்வெளியில் மலம் கழித்த இரண்டு சிறுவர்களை சுற்றுப் புறச்சூழலை கெடுத்ததாக கூறி பஞ்சாயத்தைச் சேர்ந்த இரண்டு பேர் அடித்துகொலை செய்துள்ளனர். இக்கொலை தொடர்பாக இருவரை காவல்துறையினர் கைது செய்துள் ளனர்.
மத்தியில் இரண்டாம் முறையாக பா.ஜ.க ஆட்சியமைத்த நாள் முதற் கொண்டு நாடு முழுவதும் ஆங் காங்கே வன்முறையும், கொடூரத் தாக்குதல்களும் அதிகரித்து வரு கிறது. குறிப்பாக சிறுபான்மையினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் அதிக அளவில் தாக்கப்பட்டு வரு கின்றனர்.
இதுபோன்ற மதவாத கும்பல் நடத்தும் தாக்குதல்களால் இதுவரை பலர் தங்களது உயிரையும், உடைமை களையும் இழந்திருக்கின்றனர். அதுபோன்ற ஒரு சம்பவம் மத்திய பிரதேசத்தின் ஷிவ்புரி மாவட்டத்தில் உள்ள பாவ்கேதி கிராமத்திலும் நிகழ்ந்துள்ளது.
பாவ்கேதி கிராமத்தின் வெளிப் பகுதியில் உள்ள பஞ்சாயத்திற்கு சொந்தமான கட்டிடத்திற்கு அருகில் உள்ள வயிலில் ரோஷ்னி மற்றும் அவினாஷ் ஆகிய இரு குழந்தைகள் மலம் கழித்துள்ளனர்.  இதனைக் கண்ட அந்த ஊரைச் சேர்ந்த இருவர் முதலில் குழந்தைகள் மலம் கழிப்பதை காணொலியாக எடுத்தனர், பின்னர் இருவரும் குழந்தைகளை அங்கு கிடந்த இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். இத னால் மயக்கமடைந்த சிறுவர்களை அவர்களின் உறவினர்கள் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவர்கள் சோதித்து பார்த்ததில் இரண்டு பேரும் உயிரி ழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குழந்தைகளைத் தாக்கிய இருவரையும் கைது செய் துள்ளனர். அவர்கள் மீது கொலை வழக்கு மற்றும் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்த விசாரணையில், அவர்கள் மோடியின் சுவட்ச பாரத் தூய்மை இந்தியா திட்டத்தின் படி அந்த ஊரில் கழிப்பறை கட்டித்தரும் ஒப்பந்தப்பணியைச் செய்து கொடுப் பவர்கள் என்று தெரியவந்தது.
இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, கைது செய்யப்பட் டுள்ள ஹக்கிம் யாதவ்வின் அண் ணன் அந்த கிராமத்தில் அரசியல் தலைவர் என்பதும், கொலை செய் யப்பட்ட ரோஷ்னியின் குடும்பத்தின ரோடு கழிப்பறை கட்டுவது தொடர் பான விஷயத்தில் ஏற்கெனவே மோதல் இருந்ததாகவும் தெரிவித் துள்ளனர். மேலும் குற்றவாளியின் உறவினர் சிறுவர்களின் குடும்பத்தி னரிடம் கழிப்பறை கட்ட அதிக பணம் கேட்டு வற்புறுத்தியதாக தெரியவந்தது.
பொதுவெளியில் மலம் கழித்த தற்காக தூய்மை இந்தியா என்ற திட்டத்தைக் கூறி 10 வயதிற்கும் கீழ் உள்ள குழந்தைகளை அடித்துக் கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள் ளது.
வடமாநிலங்களில் உள்ள சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட மக்களை குறிவைத்தே இதுபோன்ற வன்முறை தாக்குதல்கள் அரங்கேறி வருவதும், இதுகுறித்து பா.ஜ.க அரசு வாய் திறக்காமல் மவுனம் சாதிப்பதும் பெரும் அதிருப்தியை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.