Wednesday, October 9, 2019

வன்கொடுமைத் தடுப்புச் சட்டமும் - தீர்ப்பும்

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடு மைச் சட்டம் தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்த சீராய்வு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம்,தனது முந்தைய உத்தரவை திரும்பப் பெற்றுள்ளது.
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடு மைச் தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு, பாதிக்கப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் புகார் அளித்தால், உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும், தீவிர விசாரணைக்குப் பின்பே கைது செய்ய வேண்டும் என்றும், குற்றம் சாட்டப்பட்டோர் முன் ஜாமீன் பெறுவதற் குரிய அம்சங்களை அறிமுகப்படுத்தியும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் தேதி இந்தத் தீர்ப்பை வழங்கியது.
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின வன்கொடு மைச் சட்டத்தால் அப்பாவிகள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்ற நோக்கில் இந்தத் தீர்ப்பை வழங்கியதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. எனினும், இந்தத் தீர்ப் பானது, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின வன் கொடுமைச் சட்டத்தின் கடுமையான பிரிவுகளை நீர்த்துப் போகச் செய்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.
இந்த விவகாரத்தை முன்வைத்து, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின அமைப்புகள் சார்பில் கடந்த ஏப்ரல் மாதம் நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட வன்முறையில்
10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதைத் தொடர்ந்து, தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. எனினும், தங்களது தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் விரிவான பதிலைத் தாக்கல் செய்யு மாறு மத்திய அரசுக்கும், மற்ற மனுதாரர்களுக்கும் உத்தர விட்டனர்.
இந்நிலையில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின வன்கொடுமைச் சட்டத்தில் கடுமையான பிரிவுகளை மீண்டும் இடம்பெறச் செய்வதற்கு வழிவகுக்கும் புதிய மசோதாவை, நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறி முகம் செய்தது. அதைக் கடந்த மழைக்காலக் கூட்டத் தொடரில் ஆகஸ்ட் 9ஆம் தேதி நிறைவேற்றியது.
ஆனால், மத்திய அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவின் விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிந்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, யு.யு. லலித் ஆகியோர் இந்த வழக்கில் தீர்ப்பளித்தனர். அதில், "தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின வன்கொடுமைச் சட்டம் குறித்த எங்களின் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற உத்தரவிடுகிறோம். அடுத்த வாரம் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் வழக்கு செல்லும்" எனத் தீர்ப்பளித்தனர்
இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற  தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி, அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அருண் மிஷ்ரா, வினீத் சரண், ரவீந்திர பட் ஆகியோர் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியது. அப்போது, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தொடர் பாக உச்ச நீதிமன்றம் முன்னர் பிறப்பித்த உத்தரவின் சில அம்சங்களை திரும்பப் பெறுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். அதாவது, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்தாலே குற்றம்சாட்டப் பட்டவரை கைது செய்யக்கூடாது என்ற முந்தைய உத்தரவை திரும்பப் பெற்றுள்ளனர். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்தாலே கைது செய்ய சட்டத்தில் இடம் உள்ளது என்று நீதிபதிகள் கூறினர்.
“தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்கள் இன்னும் தீண்டாமையை எதிர் கொள்கிறார்கள். சமூக ரீதியாக ஒதுக்கி வைக்கப்படு கிறார்கள். சம உரிமைக்கான அவர்களின் போராட்டம் இன்னும் முடிந்தபாடில்லை” என்றும் நீதிபதிகள் குறிப் பிட்டனர்.
சட்ட அமலாக்கத்தில் எங்கோ ஓரிடத்திலே தவறு நடக்கிறது என்று கூறி, சமுதாயத்தில் மிகக் கேவலமான தீண்டாமைக் கறையைக் காப்பாற்ற முயலக்கூடாது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.