Monday, October 7, 2019

சீனப் பிரதமருக்கு எதிர்ப்பு திபெத் எழுத்தாளர் விழுப்புரத்தில் கைது

மாமல்லபுரம் வருகை தரும் சீனப் பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்க இருந்த திபெத் எழுத்தாளரை விழுப்புரத்தில் காவல் துறையினர்  கைது செய்தனர்.
இந்தியாவுக்கு வரும் சீனப் பிரதமர் ஜி ஜின்பிங்க்குக்கு கருப்பு கொடி காட்ட டென்ஜின் சுண்டு (40) என்பவர் விழுப்புரம், புதுச்சேரி எல்லையில் பதுங்கி இருப்பதாக மத்திய உளவுத்துறை விழுப்புரம் மற்றும் புதுச்சேரி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் அனுப்பியது. இதையடுத்து விழுப்புரம், புதுச்சேரி காவல்துறையினர் கடந்த சில நாட்களாக தேடுதல் வேட்டையில் ஈடுபட் டனர். தமிழக எல்லையான கோட்டக்குப்பத்தில் வாடகைக்கு வீடு கேட்டு சுற்றிக்கொண்டிருந்த டென்ஜின் சுண்டுவை விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் காவல்துறை ஆய்வாளர் சரவணன்  மற்றும் காவல்துறையினர் நேற்று முன்தினம் இரவு கோட்டக்குப்பம் அருகே தந்திரியான்குப்பத்தில் இந்திய தண்டனை சட்டப் பிரிவு 7/1ஏஇன் கீழ் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
சீனா வெளியேறு' என்ற வாசகங்கள் அடங்கிய சிவப்பு பேனரை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட டென்ஜின் சுண்டு திபெத்திய எழுத்தாளரும், சமூக ஆர்வலருமாக உள்ளார்.
இவர் 2002ஆம் ஆண்டு மும்பை வந்த அப்போதைய சீனப் பிரதமர் ஜி.ரோங்ஜிக்கு கருப்பு கொடி காட்டும்போது கைது செய்யப் பட்டார். இமாச்சல் பிரதேசம் தர்மசலாவில் தங்கி இருந்த இவர் மீண்டும் 2006ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
தற்போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடனான தேனீர் விருந்தையும், அருணா சலப்பிர தேசத்தில் ராணுவ கூட்டுப் பயிற்சியில் கலந்து கொள்ள உள்ளதை கண்டித்தும், மாமல்லபுரம் வருகை புரியும் சீனப் பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.