tag:blogger.com,1999:blog-58222875419867308592024-03-14T00:35:48.858-07:00பெரியார் திரைPRINCENRSAMAhttp://www.blogger.com/profile/10203452119242828715noreply@blogger.comBlogger235125tag:blogger.com,1999:blog-5822287541986730859.post-15709312442107891242019-11-18T21:29:00.000-08:002019-11-18T21:29:15.567-08:00பன்னாட்டு குழந்தைகள் திரைப்பட விழா<div style="text-align: justify;">
பன்னாட்டு குழந்தைகள் திரைப்பட திருவிழா
(Dell-IKFF) என்பது, இவ்வகையினத்தில் முதன் முறையாக, பள்ளிகளில்
திரையிடப்பட்டு கொண்டாடப்படும் ஒரு பன்னாட்டு திரைப்பட திருவிழாவாகும்.
தற்போது மூன்றாவது பதிப்பாக நடைபெறுகின்ற இத்திருவிழா, திரைப்படங்களின்
மேஜிக்கை சிறார்களுக்கு அறிமுகம் செய்யவும், அதன் ஆற்றலைப் பயன்படுத்தி
கற்பிக்கவும, உத்வேகமளிக்கவும் முற்படுகிறது.
</div>
<div style="text-align: justify;">
IKFF 2019 நிகழ்வானது, 40 நாடுகளில் 2
மில்லியனுக்கும் அதிகமான பள்ளிமாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை
இலக்காக கொண்டு பள்ளிகளில் நடத்தப்படுகின்ற உலகின் மிகப்பெரிய திரைப்பட
திருவிழாவாகும்.</div>
<div style="text-align: justify;">
டெல் ஆரம்ப் திட்டத்தின் வழியாக கணினி
கற்றலை ஆசிரியர்களுக்கும், தாய்மார்களுக்கும் மற்றும் ஆயிரக்கணக்கான
பள்ளிகளின் மாணவர்களுக்கும் டெல் கொண்டு சென்றிருக்கிறது. தொழில்நுட்ப
கல்வியறிவானது, எதிர்கால தொழில்முறை பணியாளர்கள் குழுவில் இணையவிருக்கின்ற
சிறார்களுக்கு நிச்சயமாக தேவைப்படுகின்ற அடிப்படைஅம்சமாக இருக்கிறது என்ற
பகிரப்படுகின்ற நம்பிக்கையிலிருந்தே IKFF 2019 உடனான எமது கூட்டுவகிப்பு
செயல்பாடு உருவாகியிருக்கிறது, என்று CSB டெல் டெக்னாலஜிஸ், இயக்குனர்
ரீத்துகுப்தாகுறிப்பிட்டுள்ளார்.</div>
sankar venuhttp://www.blogger.com/profile/04072448538943400230noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5822287541986730859.post-86571754982197287342019-11-14T03:55:00.003-08:002019-11-14T03:55:48.215-08:00 புதிய கருந்துளை கண்டுபிடிப்பு <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
சூரியனைப் போன்று வெறும் 3.3 மடங்கு
மட்டுமே நிறையுடன் கூடிய புதிய கருந்துளையைக் கண்டுபிடித்துள்ள
ஆராய்ச்சியாளர்கள், இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட திலேயே இது தான்
மிகச்சிறியது எனத் தெரிவித்துள்ளனர். உருவில் பெரிய நட்சத்திரமானது தனது
ஆற்றலை இழந்து உருக்குலைந்து வெடித்துச் சிதறும் போது அதீத ஈர்ப்பு
விசையைக் கொண்ட கருந்துளையாவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதேவேளையில்
வெடித்துச் சிதறும் போது நியூட்ரான் நட்சத்திரங்களாவதாகவும் அவர்கள்
குறிப்பிடு கின்றனர். ஆனால் இந்த நியூட்ரான் நட்சத்திரங்கள் சூரிய னுடன்
ஒப்பிடுகையில் 2 முதல் 3 மடங்கு மட்டுமே அளவில் பெரியதாக இருக்கும் என
அவர்கள் தெரிவிக்கின்றனர்.</div>
<div style="text-align: justify;">
சூரியனுடன் ஒப்பிடுகையில் 4000 கோடி
மடங்கு பெரியது தொடங்கி குறைந்தது 5 முதல் 15 மடங்கு பெரிய கருந்து களைகளை
இதுவரை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த நிலையில், சூரியனை விட 3.3
மடங்கு மட்டுமே அளவில் பெரிய கருந்துளையை ஓகியோ மாநில பல்கலைக்கழக
ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டுபிடித்துள்ளது. இதற்கு முன் சூரியனை விட 3.8
மடங்கு பெரிய கருந்துளை கண்டு பிடிக்கப்பட்டிருந்தது.</div>
<div style="text-align: justify;">
நியூட்ரான் நட்சத்திரத்திற்கு இவ்வளவு
பெரிய நிறை இல்லாத போது, இந்த சிறிய கருந்துளை உண்டானது எப்படி என
விஞ்ஞானிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்தக் கேள்வியானது நட்சத்திரங்களின்
வாழ்க்கைச் சுழற்சி பற்றிய மறுவரையறைக்கு வழிவகுத் திருப்பதாக விஞ்ஞானிகள்
கருதுகின்றனர்</div>
</div>
Anbuselvihttp://www.blogger.com/profile/18220155632198494502noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5822287541986730859.post-5670940464517738802019-11-14T03:55:00.000-08:002019-11-14T03:55:26.719-08:00 இந்தியாவில் எதிர்காலத்தில் தொழில் செய்வது கஷ்டம் வோடபோன் தலைவர் பரபரப்பு <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
இந்தியாவில் தொலைதொடர்பு துறையில் உள்ள
நிறுவனங்களுக்கு சிக்கல் தான். இனி தொழில் நடத்த முடியாத சூழ்நிலை
காணப்படுகிறது என்று வோடபோன் தலைவர் கூறி யுள்ளார்.
<br />
<div style="text-align: justify;">
இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல வோடபோன்
நிறுவ னத்தின் சிஇஓ நிக் ரீடு நேற்று டில்லியில் பேட்டியளித் தார்.
அவர் கூறியதாவது: இந்தியாவில் தொழில் முதலீடு மற்றும் வாய்ப்பு மிகவும்
மோசமான நிலையை நோக்கி சென்று கொண்டி ருக்கிறது. எனினும், நம்பிக் கையுடன்
இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டும் என்று உறுதியாக
இருக்கிறோம்.</div>
<div style="text-align: justify;">
அதற்கான சந்தையும் இருப்பதை
கணித்துள்ளோம். சந்தையில் கடுமையான தொழில் போட்டியை சமா ளிக்க வேண்டியது
இருக்கும் என்பதும் எங்களுக்கு தெரி யும். அதற்கு நாங்கள் சமா ளிக்க தயாராக
இருக்கிறோம்.</div>
<div style="text-align: justify;">
கடும் போட்டி நிலவு வதால் இந்தியாவில்
இருந்து வோடபோன் வெளியேற உள்ளது என்ற வதந்தி சமீப காலமாக பரப்பப்பட்டு வரு
கிறது. இதில் உண்மை இல்லை. இந்த வதந்தியை நம்ப வேண்டாம். வோடபோன் நிறுவனம்
தனது சேவையை தொடர்ந்து அளிக்கும் அதில் எந்த சந்தேகமும் இல்லை. தொழில்
போட்டியை சமா ளிக்க தகுந்த உத்திகளை கையாள்வது குறித்து ஆலோ சித்து
வருகிறோம்.இந்திய அரசுடன் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறோம். தொழில்
போட்டியில் சீரான அணுகு முறையை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும்
எடுத்துக் கூறியுள் ளோம்.</div>
<div style="text-align: justify;">
வோடபோன்-அய்டியா ஆகிய இரு நிறுவனங்களும்
இணைந்து இந்தியாவில் தொலைத் தொடர்பு சேவையை செய்து வுகின்றன. இந்தியாவில்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அளிக்கும் சலுகைகள் மற்றும் கூடுதல் வசதிகள் மற்ற
நிறுவனங்க ளின் வர்த்தகத்தை கடுமை யாக பாதிக்கிறது.</div>
<div style="text-align: justify;">
இதனால் அவை தொழில் போட்டியை சமாளிக்க முடி
யாமல் திணறிவருகின்றன. இவ்வாறு வோடபோன் தலைவர் நிக் ரீடு கூறினார் என்பது
குறிப்பிடத்தக்கது.</div>
</div>
Anbuselvihttp://www.blogger.com/profile/18220155632198494502noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5822287541986730859.post-55957618799743194192019-11-14T03:53:00.003-08:002019-11-14T03:53:59.256-08:00 சென்னையில் பெண்களுக்காக 150 நவீன இ-கழிப்பறைகள் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
சென்னை யில் பெண்களுக்காக ரூ.8 கோடி செலவில் 150 நவீன இ--கழிப்பறைகளை அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
<br />
<div style="text-align: justify;">
சென்னை மாநகரப் பகு தியில் 74 லட்சம் பேர்
நிரந்த ரமாக வசித்து வருகின்றனர். மேலும், சென்னைக்கு தின மும் வந்து
செல்வது, சில நாட்கள் தங்கிச் செல்வது என 20 லட்சத்துக்கும் மேற் பட்டோர்
உள்ளனர். சென் னையில் பயணம் செய்வோ ருக்கு ஏற்ற வகையிலும், குடி சைப்
பகுதிகளுக்கு அருகில் 853 இடங்களில் 6,701 இருக் கைகளை கொண்ட பொதுக்
கழிப்பிடங்களை சென்னை மாநகராட்சி அமைத்துள் ளது. தூய்மை இந்தியா திட்
டத்தின்கீழ் அந்த கழிப்பி டங்கள் தூய்மையாக பரா மரிக்கப்பட்டு வருகின்றன.
இதில் மகளிருக்கான கழிப் பறைகளை அதிகப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்து
வருகிறது.</div>
<div style="text-align: justify;">
இது தொடர்பாக மாநக ராட்சி அதிகாரிகள் கூறியதா வது:</div>
<div style="text-align: justify;">
வெளியில் செல்லும் பொது மக்கள் தங்கள்
இயற்கை உபா தைகளை கழிக்க போதிய இடவசதியின்றி அவதிப்படு கின்றனர். குறிப்பாக
ஆண் களை விட, பெண்கள் அதிக சிரமத்துக்கு ஆளாகின்றனர். அதனால் அவர்களின்
சிர மத்தை போக்கும் வகையில் மாநகராட்சியில் அனைத்து மண்டலங்களிலும்,
பல்வேறு இடங்களில் ரூ.8 கோடி செலவில் மகளிருக்கான 150 நவீன இ-கழிப்பறைகளை
கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறோம்.</div>
<div style="text-align: justify;">
இந்த கழிவறைகளை இணையத்தில் கண்காணிக்க
முடியும். நீர் இருப்பு, மின் வசதி போன்ற விவரங்களை கட்டுப்பாட்டு அறையில்
இருந்தபடியே பெற முடியும். மேலும் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த நவீன
இ-கழிப்பறைகள் அமைக்கப் பட உள்ளன.</div>
<div style="text-align: justify;">
பொதுமக்கள் தங்கள் அருகில் உள்ள பொதுக்
கழிப்பிடங்களின் இருப்பி டங்களை அறிந்துகொள்ள ஏதுவாக, அனைத்து பொது
கழிப்பிடங்களும் கூகுள் வரைபடத்தில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ளன.</div>
<div style="text-align: justify;">
மத்திய அரசு, சென்னை மாநகராட்சி மற்றும்
கூகுள் வரைபடம் ஆகியவை இணைந்து இதற்கான நடவ டிக் கையை மேற்கொண்டனர். கூகுள்
வரைபடத்தில் ‘ஜிஷீவீறீமீt’ என தட்டச்சு செய்தால், தங்களின் அருகில் உள்ள
பொதுக்கழிப்பிடங்களின் விவரங்கள் கிடைக்கும். இவ் வாறு அதிகாரிகள் கூறினர்
என்பது குறிப்பிடத்தக்கது.</div>
</div>
Anbuselvihttp://www.blogger.com/profile/18220155632198494502noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5822287541986730859.post-47883251247127075382019-11-14T03:53:00.000-08:002019-11-14T03:53:15.476-08:00 இந்து முன்னணியின் அராஜகம் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
திருப்பூரில் "ஜிம்" பயிற்சி
கூடத்திற்குள் புகுந்து பயிற்சியாளர் மீது இந்து முன்னணி கும்பல் சரமாரி
தாக்குதல் நடத்தி யதில் பயிற்சியாளர் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக 2 பேர் மட்டுமே கைது
செய்யப்பட்டுள்ளனர்.
<br />
<div style="text-align: justify;">
திருப்பூர் பாண்டியன் நகர்ப்பகுதியில்
திருமுருகன்பூண்டி காவல்நிலையத்திற்குட்பட்ட அம்மன் நகரில் "கவின் ஃபிட்னஸ்
ஜிம்" என்ற உடற்பயிற்சி கூடத்தை ஜெயமுருகன் என்பவர் கடந்த 20 ஆண்டுகளாக
நடத்தி வருகிறார்.இவரது உடற்பயிற்சிக் கூடத் தில் திருப்பூர்
பிச்சம்பாளையம் பகுதியைச் சார்ந்த வில்சன் டேனியல் (வயது 23) என்பவர்
பயிற்சியாளராகப் பணியாற்றி வருகிறார்.</div>
<div style="text-align: justify;">
கடந்த 2 மாதங்களுக்கு முன் அப்பகுதியில்
இருக்கும் இந்து முன்னணி என்ற அமைப்பைச் சார்ந்த சிலர் உடற்பயிற்சி
கூடத்தில் சேர வந்துள்ளனர்.பயிற்சியாளர் வில்சன் டேனியல் பயிற்சிக் கட்டணம்
குறித்த நடைமுறையைக் கூறியுள்ளார்.இதுதொடர்பாக பயிற்சியாளர் வில்சன்
டேனியலுக்கும்,இந்து முன்னணி என்ற அமைப்பைச் சார்ந்தவர்களுக்கும்
வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இந்த முகாந்திரத்தின் அடிப்படையில் கடந்த
திங்கட்கிழமை பயிற்சியாளர் வில்சன் டேனியலை பொது இடத்தில் வைத்து இந்து
முன்னணி என்ற அமைப்பைச் சார்ந்தவர்கள் ஜாடை,மாடையாக தகாத வார்த்தைகள் பேசி
வம்புக்கு இழுத்ததாகவும் கூறப்படுகிறது.</div>
<div style="text-align: justify;">
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை
8.45 மணியள வில் இந்து முன்னணி என்ற அமைப்பைச் சார்ந்த 30-க்கும்
மேற்பட்டோர் வெளியே வா,வெளியே வா என்று கூச்சலிட்டபடி அத்துமீறி
உடற்பயிற்சிக் கூடத்திற்கு நுழைந்து அங்கிருந்த பொருட்களை அடித்து
நொறுக்கியுள்ளனர்.இதன் காரணமாக உடற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி
மேற்கொண்டிருந்த நபர்கள் சிதறி வெளியேறியுள்ளனர்.</div>
<div style="text-align: justify;">
இதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட
இக்கும்பலின் ஒருதரப்பினரான சந்தோஷ்,கார்த்தி,தமிழ், குட்டிவிஷ்வா, அருண்,
ஆறுச்சாமி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் பயிற்சியாளர் வில்சன் டேனியலை
சூழ்ந்து கொண்டு மிரட்டியுள்ளனர்.அப்போது வெளியே இருந்து யாரும் உள்ளே
வந்திராதபடி மற்றொரு தரப்பினர் சினிமாவில் ரவுடிக் கும்பல் அணிவகுத்து
நிற்பதைப் போல் வழியை ஆக்கிரமித்து நின்றுள்ளனர்.பயிற்சியா ளர் வில்சன்
டேனியலை சூழ்ந்து கொண்டிருந்த கும்பல் திடிரென அவரை சரமாரியாக
தாக்கியுள்ளனர்.இக்காட்சிகள் யாவும் அங்கு சம்பவம் நிகழ்ந்தபோது
எடுக்கப்பட்ட காணொலிக் காட்சி பதிவுகள் மூலம் தெரியவருகிறது.</div>
<div style="text-align: justify;">
இந்து முன்னணி என்ற ரவுடிக் கும்பலால்
தாக்கப்பட்ட "ஜிம்" பயிற்சியாளர் வில்சன் டேனியலுக்கு தலையில் பலத்த
அடிபட்டதில் அவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாகச்
சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.அவர் அளித்த புகாரைப் பெற்றுக்
கொண்ட திருமுருகன்பூண்டி காவல்துறையினர் இச்சம்ப வத்தில் தொடர்புடைய இந்து
முன்னணியைச் சார்ந்த 30-க்கும் மேற்பட்டவர்களில் 10 பேர் மீது மட்டுமே
வழக்குப் பதிவு செய்து சந்தோஷ், ஆறுச்சாமி என்ற 2 பேரை மட்டுமே கைது செய்து
உள்ளனர்.மற்றவர்களை தேடி வருவதாக கூறி வருகின்றனர்.</div>
<div style="text-align: justify;">
விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிக்கு நன்கொடை
தரவில்லை என்ற காரணத்திற்காக கடந்த 5.9.2019 அன்று திருப்பூர் அங்கேரிபாளை
யம் சாலை ஜீவா காலனியிலுள்ள வீ.கே.கார்மெண்ட்ஸ் என்ற பின்னலாடை
நிறுவனத்திற்குள் புகுந்து இந்து முன்னணி என்ற அமைப்பைச் சார்ந்த 60-க்கும்
மேற்பட்டோர் தாக்குதல் நடத்தியதில் அங்கிருந்த தொழிலாளர்கள் காயம்
அடைந்தனர்.உடைமைகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது.இச்சம்பவத்திற்கு கண்டனம்
தெரிவித்து அரசியல் அமைப்புகள்,அரசியல் சார்பற்ற அமைப்புகள் மற்றும்
பொதுமக்கள் அனைவரும் திரண்டு "இந்து முன்னணி என்ற அமைப்பை தடை
செய்யவேண்டும்" என்ற ஒற்றை முழக்கத்தோடு இருபெரும் ஆர்ப்பாட்டங்களை
திருப்பூரில் நடத்தியுள்ள நிலை யில் மீண்டும் திருப்பூர் பாண்டியன் நகர்
பகுதி அம்மன் நகரில் 30-க்கும் மேற்பட்ட இந்து முன்னணியைச் சார்ந்தவர்கள்
உடற்பயிற்சிக் கூடத்திற்குள் புகுந்து சேதம் விளைவித்து,பயிற்சியாளரைத்
தாக்கியுள்ள இச்சம்பவம் "இந்து முன்னணியை தடை செய்யக் கோரி" தொடர்
போராட்டத்தை திருப்பூரில் தோற்றிவிக்கும் என்று சொன்னால் அது மிகையல்ல!!</div>
</div>
Anbuselvihttp://www.blogger.com/profile/18220155632198494502noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5822287541986730859.post-39435076330828444332019-11-13T03:46:00.000-08:002019-11-13T03:46:28.665-08:00 இந்தியாவில் காற்று மாசால் இதய பாதிப்பு, பக்கம் வாதம் ஏற்படும் ஆபத்து அதிகம்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
டில்லியில் காற்று தர குறியீடு 500க்கும்
மேல் உள்ளது. இது மித அளவை விட 5 மடங்கு அதிகம். பஞ்சாப், அரியானா
மாநிலங்களில் காய்ந்த பயிர்களை எரிப்பதால் 40 சதவீதமும், டில்லியில்
கட்டுமான பணிகள், இடிக்கும் பணிகள் மற்றும் குப்பைகளை எரிப்பதால் 60
சதவீதமும் காற்று மாசு ஏற்படுகிறது என்று டில்லி அரசு தரப்பில்
கூறப்பட்டது.
<br />
<div style="text-align: justify;">
டில்லியில் காற்று மாசு அதிகரித்து
இருப்பது தொடர்பாக டில்லி, பஞ்சாப், அரியானா மாநிலங்களுக்குஉச்சநீதிமன்றம்
கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.</div>
<div style="text-align: justify;">
குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும்
மக்களை கொண்ட நாடான இந்தியாவில் காற்று மாசுபாட்டால் பொதுமக்களுக்கு
ஏற்பட்டு உள்ள பாதிப்பு பற்றி ஸ்பெயின் நாட்டில் உள்ள உலக சுகாதார
பார்சிலோனா அமைப்பின் குழுவினர் தலைமையில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.</div>
<div style="text-align: justify;">
இதற்காக அய்தராபாத் மற்றும் தெலுங்கானாவின் புறநகர் பகுதிகளை ஒட்டிய இடங்களில் 3,372 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது.</div>
<div style="text-align: justify;">
இந்த ஆய்வில், பக்கவாதம் அல்லது இதய
பாதிப்பு போன்ற கார்டியோவாஸ்குலார் வியாதிகள் ஏற்படும் ஆபத்து மக்களிடம்
அதிக அளவில் உள்ளது தெரிய வந்தது. ஏனெனில், காற்று மாசுபாட்டால்,
இதயத்தின் தமனிகள் தடிமன் அடைந்து விடும். இது சி.அய்.எம்.டி. குறியீடு என
அளவிடப்படுகிறது.</div>
<div style="text-align: justify;">
இந்த காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்ட மக்களிடம் சி.அய்.எம்.டி. குறியீடு அதிக அளவில் இருந்துள்ளது.</div>
<div style="text-align: justify;">
காற்றில் மாசுபாடு ஏற்படுத்தும்
நுண்துகள்களின் அளவு பற்றிய உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ள அதிகபட்ச
அளவானது ஒரு கன சதுர மீட்டருக்கு 10 மைக்ரோ கிராம் ஆகும். ஆனால்
இந்தியாவில் ஆண்டு சராசரி அளவானது ஒரு கன சதுர மீட்டருக்கு 32.7 மைக்ரோ
கிராம் என்ற அளவில் இந்தியாவில் உள்ளது.</div>
<div style="text-align: justify;">
இந்த ஆய்வு முடிவில் சி.அய்.எம்.டி.
குறியீடானது, கார்டியோமெட்டாபாலிக் ஆபத்து காரணிகளை கொண்ட அல்லது 40
வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் அதிகம் உள்ளதும், மர கட்டைகள் போன்றவற்றை
சமையல் எரிபொருளாக பயன்படுத்தும் பெண்களிடம் அதிகம் உள்ளதும் தெரிய
வந்துள்ளது.</div>
<div style="text-align: justify;">
இதனால் உயர் ரத்த அழுத்தம், டையாபடீஸ்
மற்றும் உடல்பருமன் போன்ற நோய் தாக்கங்கள் ஏற்படும் ஆபத்தும் அதிகரித்து
உள்ளது என ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
Anbuselvihttp://www.blogger.com/profile/18220155632198494502noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5822287541986730859.post-62279367864043531692019-11-07T03:34:00.002-08:002019-11-07T03:34:11.025-08:00குரூப்-2 தேர்வு: புதிய நடைமுறைக்கு எதிர்ப்பு பட்டதாரி இளைஞர்கள் போராட்டம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
புதிய தேர்வு நடைமுறைக்கு எதிர்ப்பு
தெரிவித்து சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலு வலகத்தை முற்றுகையிட
முயன்ற பட்டதாரி இளைஞர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
அதனைத்தொடர்ந்து அவர்கள் மனு அளித்துச் சென்றனர்.
<br />
<div style="text-align: justify;">
சென்னை பார்க் டவுனில் உள்ள தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.) அலுவலகத்தை முற்றுகை யிடுவோம்
என்று பட்டதாரி இளைஞர்கள் சார்பில் அறிவிப்பு வெளியானது. இதனைத்தொடர்ந்து
அலுவலகம் மற்றும் அச்சாலை முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்புக்காக
நிறுத்தப் பட்டனர்.</div>
<div style="text-align: justify;">
இந்தநிலையில் நேற்று பகல் 12 மணிக்கு
கிராமப்புறங்களை சேர்ந்த பட்டதாரி இளைஞர்- இளம்பெண்கள் நூற்றுக்கணக்கானோர்
கையில் மனுக்களுடன் ஊர்வலமாக டி.என்.பி.எஸ்.சி. அலுவலகம் நோக்கி வந்தனர்.
முற்றுகையில் ஈடுபட முயன்ற அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.</div>
<div style="text-align: justify;">
அதனைத்தொடர்ந்து அவர்கள் அங்கேயே அமர்ந்து
முழக்கமிட்டனர். பின்னர் ஊர்வலமாக வந்தவர்களில் 4 பேர் மட்டும்
டி.என்.பி.எஸ்.சி. அலுவலகம் சென்று, அங்குள்ள அதிகாரி களிடம் மனு
அளித்துவிட்டு சென்றனர். இதுகுறித்து பட்டதாரி இளைஞர் செந்தில்முருகன்
என்பவர் கூறியதாவது:-</div>
<div style="text-align: justify;">
டி.என்.பி.எஸ்.சி. அறிவித்திருக்கும்
புதிய பாடத்திட்டம் ஏழை மாணவர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுகள் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே வருடத்துக்கு டி.என்.பி.எஸ்.சி. 4 தேர்வுகள் நடத்தி கொண்டிருந்தது.
தற்போது அதையும் ஒருங்கிணைந்த தேர்வாக நடத்துவோம் என்று
அறிவித்திருக்கிறார்கள்.</div>
<div style="text-align: justify;">
முதல்நிலை தேர்வில் இருந்த 100 கேள்விகள்
முற்றிலும் நீக்கி, புதிய பாடத்திட்டத்தில் 8 மற்றும் 9-வது யூனிட்களில்
தமிழுக்கு முக்கியத்துவம் அளிப்போம் என்கிறார்கள். முதன்மை தேர்வில் ஆங்கில
மொழிபெயர்ப்பு இருக்கிறது. இது ஆங்கில வழி மாணவர்களுக்கு முன்னுரிமை
கொடுப்பதாகவே உள்ளது. இந்த நடைமுறைகளை எதிர்த்தும், பழைய பாடத்திட்டத்தையே
மீண்டும் செயல்படுத்த கோரியும் மனு அளித்திருக்கிறோம்.</div>
<div style="text-align: justify;">
இவ்வாறு அவர் கூறினார்.</div>
</div>
Anbuselvihttp://www.blogger.com/profile/18220155632198494502noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5822287541986730859.post-9067493191838640242019-11-07T03:33:00.002-08:002019-11-07T03:33:57.080-08:00 தென் இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னை விமான நிலைய தீயணைப்பு நிலையத்தில் பெண் நியமனம் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-8eCfiVy7yVU/XcQBEbzD4AI/AAAAAAAAAtk/sgmlsVbOFCA-KtSOb8sjr5OhSegFPHdmACLcBGAsYHQ/s1600/a1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="625" data-original-width="485" height="320" src="https://1.bp.blogspot.com/-8eCfiVy7yVU/XcQBEbzD4AI/AAAAAAAAAtk/sgmlsVbOFCA-KtSOb8sjr5OhSegFPHdmACLcBGAsYHQ/s320/a1.jpg" width="248" /></a></div>
<br />
சென்னை விமான நிலைய தீயணைப்பு நிலையத்தில் முதல்முறையாக பெண் பணியா ளர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
<br />
<div style="text-align: justify;">
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில்,
விமான நிலைய ஆணையகத்தின் கட்டுப் பாட்டில் தீயணைப்பு துறை செயல் பட்டு
வருகிறது. சென்னை விமான நிலைய தீயணைப்பு நிலையத்தில் முதல்முறையாக ரம்யா
சிறீகண் டன் என்ற பெண் பணியாளர் நிய மிக்கப்பட்டு உள்ளார்.</div>
<div style="text-align: justify;">
இவர், விமான நிலைய ஆணையகத்தின்
கட்டுப்பாட்டில் உள்ள விமான நிலையங்களில் தென்னிந்தியாவில் முதல் பெண்
தீயணைப்பு பணியாளராகவும், இந்திய விமான நிலைய ஆணையத்தின் 3ஆவது பெண் பணியா
ளராகவும் சென்னை விமான நிலைய தீயணைப்பு நிலையத்தில் இளநிலை உதவியாளர்
பணியில் சேர்ந்து உள்ளார். இவர் பணியில் சேருவதற்கு முன்பாக டில்லியில்
உள்ள தீயணைப்பு பயிற்சி மய்யத்தில் 4 மாதம் கடும் பயிற்சி மேற்கொண்டார்.</div>
<div style="text-align: justify;">
இது குறித்து ரம்யா கூறும்போது, தீயணைப்பு
பணி மிகவும் சவால் மிகுந்தது. துணிச்சலுடன் பணியாற்றுவேன் என்ற நம்பிக்கை
உள்ளது. வருங்காலத்தில் தீயணைப்பு துறையிலும் அதிக அளவில் பெண்கள்
பங்கேற்பார்கள் என்றார்.</div>
<div style="text-align: justify;">
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த
இவர், முதுநிலை பொறியியல் பட்டதாரி ஆவார். இவர், 2 வயது குழந்தையின் தாய்
என்பது குறிப்பிடத்தக்கது.</div>
</div>
Anbuselvihttp://www.blogger.com/profile/18220155632198494502noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5822287541986730859.post-6222721465918985002019-11-07T03:32:00.002-08:002019-11-07T03:32:34.108-08:00 அதிமுக அரசின் நிலைப்பாடு என்ன? <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
திருவள்ளுவருக்கு காவி ஆடை போர்த்தி
நெற்றியிலும், கைகளிலும் திருநீற்றுப் பட்டை போட்டு ஒரு சர்ச்சையை அதிகாரப்
பூர்வமாக பா.ஜ.க. தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு
அவமானப்படுத்தியிருக்கிறதே - இதுகுறித்து ஆளும் அண்ணா திமுகவின் நிலைப்பாடு
என்ன?</div>
<div style="text-align: justify;">
அதிமுகவை நோக்கிய கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடை என்ன?</div>
<div style="text-align: justify;">
1) திருக்குறள் எல்லா மதங்களையும் கடந்த அறநெறி நூல் என்பதில் அ.இ.அ.தி.மு.க.வுக்கு உடன்பாடு உண்டா இல்லையா?</div>
<div style="text-align: justify;">
2) திருக்குறள் ஒரு இந்து மத நூல் என்று சாதிக்க முற்படும் பா.ஜ.க.வின் நிலைப்பாடு பற்றி என்ன கருத்து?</div>
<div style="text-align: justify;">
3) திருக்குறளுக்கு திராவிட இயக்கம் ஒன்றும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை ஏற்கிறதா?</div>
<div style="text-align: justify;">
4) 'தீக்குறளைச் சென்றோதோம்' என்ற
ஆண்டாளின் பாசுரத்திற்கு 'தீய திருக்குறளை ஓத மாட்டோம்' என்று காஞ்சி
சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சொன்ன தெல்லாம் தெரியுமா?
தெரிந்தால் பதிலடி கொடுத்திருக்க வேண்டாமா?</div>
<div style="text-align: justify;">
5) அதிமுக அமைச்சரவையில் உள்ள அமைச்சரான
மாபா. பாண்டியராஜன் என்பவர் "திருவள்ளுவர் எல்லா மதங்களுக்கும்
சொந்தக்காரர் - அதனால் எந்த மதக்காரர்களும் தங்கள் அடையாளத்தை அவர்மீது
சாத்தலாம்; திருவள்ளுவர் நாத்திகர் அல்லர்" என்று கூறியுள்ள கருத்து
அதிமுகவுக்கு உடன்பாடுதானா? உடன்பாடு இல்லையென்றால் கட்சியின் சார்பில் ஏன்
மறுப்புத் தெரிவிக்கவில்லை?</div>
<div style="text-align: justify;">
6) திருவள்ளுவர் பெயரில் ஒரு மதச்
சர்ச்சையை உண்டாக்கிக் குளிர் காயலாம் என்ற பா.ஜ.க.வின் சூட்சமம் ஆளும்
அதிமுக அரசுக்குத் தெரியுமா - தெரியாதா?</div>
<div style="text-align: justify;">
7) தஞ்சையையடுத்த பிள்ளையார்ப்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலைமீது சாணி வீசியவர்களைப் பிடிக்க கால தாமதம் ஏன்?</div>
<div style="text-align: justify;">
8) உணர்ச்சிப் பூர்வமான மனநிலை மக்கள்
மத்தியில் நிலவும் ஒரு சூழ்நிலையில் காவல்துறை நிறைந்திருக்கும்
பிள்ளையார்பட்டியில் இந்து மக்கள் கட்சிக்காரர்கள் படிக் கட்டுகள் மூலம்
திருவள்ளுவர் சிலை பீடத்தில் ஏறி அபிஷேகம் செய்ததும், உருத்திராட்ச மாலை
அணிவித்ததும் எப்படி? அதனை அனுமதித்தவர்கள் யார்? யார்?</div>
<div style="text-align: justify;">
9) அது இருக்கட்டும், இந்த செயலை
செய்ததற்காக அவரை மூன்று குற்றப் பிரிவுகளின் அடிப்படையில் கைது செய்து,
உடனே விடுவித்தது ஏன்? அரசியல் தலையீடா?</div>
<div style="text-align: justify;">
10) மத்தியில் ஆளும் பா.ஜ.க.வின் தொங்கு
சதையாக பின்னிப் பிணைந்தநிலையில் பா.ஜ.க.வோ, சங்பரிவாரோ எது செய்தாலும்
கண்டு கொள்வதில்லை என்று அதிமுக அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்து விட்டதா?</div>
<div style="text-align: justify;">
11) அண்ணாவின் பெயரைக் கட்சியிலும்,
கட்சிக் கொடியிலும் வைத்துள்ள அண்ணா திமுக அண்ணாவின் கொள்கைகளைக் காற்றில்
பறக்க விட்டு விட்டு அல்லது வேண்டுமென்றே புறக்கணித்தது <span style="color: black;">வெட்கக் கேடு அல்லவா? </span>சரியானது தானா?</div>
<div style="text-align: justify;">
12) தந்தை பெரியாரையும், அறிஞர்
அண்ணாவையும், திராவிட இயக்கத்தையும் சங்பரிவார் கொச்சைப்படுத்தும் போது,
இழிவுபடுத்திப் பேசும்போது, எழுதும்போது அவற் றைக் கண்டு கொள்ள மறுப்பது
ஏன்? பெரியார், அண்ணா ஆகியோரின் கொள்கைகள் முற்றிலும் துடைத்து எடுக்கப்
பட்ட கட்சியாக அதிமுக உருக்குலைந்து போய் விட்டதா?</div>
<div style="text-align: justify;">
13) அய்யா, அண்ணா கொள்கைகள், திராவிட
இயக்கக் கோட்பாடுகள் இவை சற்றும் இல்லாமலும் வெறும் பதவிப் பசி கட்சியாக
மாறிப் போய் விட்டதா அதிமுக?</div>
<div style="text-align: justify;">
14) பா.ஜ.க.வோடு ஒட்டி உறவாடுவதால் சிறுபான்மை யினருக்கு எதிரானது அதிமுக என்ற எண்ணம் பொதுவாக ஏற்பட்டிருப்பதை அதிமுக உணர்ந்துள்ளதா?</div>
<div style="text-align: justify;">
15) பகுத்தறிவுச் சிந்தனையோடும், இனமான
உணர்வோடும் இருக்கக் கூடிய ஒரே ஒருவர்கூட இல்லாது - அற்றுப் போன கூடாரமாக
அஇஅதிமுகவைக் கருதலாமா?</div>
<div style="text-align: justify;">
இதுபோன்ற கேள்விகள் இன்னும் இருக்கத்தான்
செய் கின்றன. இவற்றைப் பற்றி எல்லாம் கிஞ்சிற்றும் கவலைப்படாத, அக்கறை
செலுத்தாத இந்தக் கட்சி அண்ணா பெயரையும், அவரது உருவத்தையும் நீக்கி
விடுவதுதானே மரியாதை?</div>
<div style="text-align: justify;">
அண்ணா திமுகவில் திராவிட இயக்கவுணர்வும்,
இனவுணர்வும், பகுத்தறிவுச் சிந்தனையும் உள்ள ஒரே ஒருவர் இருந்தால்கூட,
இந்த வினாக்களை கட்சி மட்டத்தில் எழுப் பினால், அத்தகைய ஒருவரை எந்தளவு
வேண்டுமானாலும் பாராட்டி மகிழலாம்.</div>
<div style="text-align: justify;">
எங்கே பார்ப்போம்?</div>
</div>
Anbuselvihttp://www.blogger.com/profile/18220155632198494502noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5822287541986730859.post-78391493719947408422019-11-04T03:56:00.000-08:002019-11-04T03:56:49.521-08:00 ஜம்மு, சிறீநகர் மற்றும் லே வானொலி நிலையங்கள் பெயர் மாற்றம் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-gTqe-4B2m3Y/XcAR-9zGQWI/AAAAAAAAAtQ/vgFp6gI8xJkpSeMKsuEl-USYRgJP6_VpwCLcBGAsYHQ/s1600/v27.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="310" data-original-width="391" height="253" src="https://1.bp.blogspot.com/-gTqe-4B2m3Y/XcAR-9zGQWI/AAAAAAAAAtQ/vgFp6gI8xJkpSeMKsuEl-USYRgJP6_VpwCLcBGAsYHQ/s320/v27.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்திய அரசி யலமைப்பு சட்டத்தின் 370-ஆவது
பிரிவின் கீழ் காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்புத்
தகுதியை மத்திய அரசு கடந்த ஆகஸ்டு 5 ஆம் தேதி ரத்து செய்தது.
</div>
<div style="text-align: justify;">
மேலும் அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிர தேசங்களாகவும் பிரித்தது.</div>
<div style="text-align: justify;">
இந்த சட்டம் நிறைவேறி சுமார் 3 மாதங்கள்
ஆன நிலையில், காஷ்மீர் தொடர் பான நடவடிக் கைகள் நவ.1 முதல் அமலுக்கு
வந்துள் ளன. கிரிஷ் சந்திராமர்மு மற்றும் ஆர்.கே.மாத்தூர் இருவரும் முறையே
ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களின் துணை நிலை
ஆளுநர்களாக பதவியேற்றனர்.</div>
<div style="text-align: justify;">
இதனை தொடர்ந்து ஜம்மு, சிறீநகர் மற்றும்
லே ஆகிய பகுதிகளில் உள்ள வானொலி நிலையங்களின் பெயர்கள் முறையே ‘ஆல்
இந்தியா ரேடியோ-ஜம்மு’, ‘ஆல் இந்தியா ரேடியோ- சிறீநகர்’ மற்றும் ‘ஆல்
இந்தியா ரேடியோ- லே’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.</div>
<div style="text-align: justify;">
இதற்கு முன் இந்த வானொலி நிலையங்கள் ‘ரேடியோ காஷ்மீர்’ என்ற பெயரில் இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.</div>
</div>
Anbuselvihttp://www.blogger.com/profile/18220155632198494502noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5822287541986730859.post-136712897363105422019-11-04T03:54:00.003-08:002019-11-04T03:54:54.040-08:00 "வேலை வாய்ப்பினை உருவாக்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்" <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
படித்த இளைஞர் களுக்கு வேலை வாய்ப்பினை
உருவாக்கும் திட்டத்துக்கு விண்ணப் பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர்
கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார்.
<br />
<div style="text-align: justify;">
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-</div>
<div style="text-align: justify;">
திருவண்ணாமலை மாவட்ட தொழில் மய்யம்,
படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர் களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கும்
திட்டத்தை செயல்படுத்தி கொண்டு இருக்கிறது.</div>
<div style="text-align: justify;">
தமிழக அரசு இந்த திட்டத்தின் கீழ் சேவை
மற்றும் வியாபார தொழில்களுக்கு ரூ.1 லட்சம் மற்றும் ரூ.3 லட்சத்தில்
இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி உள்ளது. உற்பத்தி தொழிலுக்கு எந்தவித
மாற்றமும் செய்யப்பட வில்லை. அதேபோல் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1
லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த
திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புபவர்கள் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று
18 வயது முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
www.msmeonline.tn.gov.in/uyegp என்ற
இணையதளத்தில் விண்ணப்பம் செய்து விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து
கொள்ளலாம். மேலும் இதன் நகல், மாற்று சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார்
அட்டை, சாதி சான்று, விலைபுள்ளி மற்றும் நிழல்படம் ஆகியவற்றுடன் மாவட்ட
தொழில் மய்யம் திருவண்ணாமலை அலுவலகத்திற்கு நேரில் வருகிற 6 மற்றும் 7 ஆகிய
தேதிகளில் வரும்படி கேட்டு கொள்ளப்படுகிறது.</div>
<div style="text-align: justify;">
மேலும் விபரங்கள் பெற 8668147561, 9486494621 ஆகிய தொலைபேசியில் வேலை நாட்களில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.</div>
<div style="text-align: justify;">
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</div>
</div>
Anbuselvihttp://www.blogger.com/profile/18220155632198494502noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5822287541986730859.post-66843514576756874002019-11-04T03:54:00.000-08:002019-11-04T03:54:07.061-08:00புதிய கின்னஸ் புத்தகத்தில் இந்தியர்கள் 80பேருக்கு இடம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
‘கின்னஸ் உலக சாதனைகள் -2020’ என்ற புதிய
புத்தகம் வெளியாகியுள்ளது. இதில் பல பிரிவுகளில் புதிய சாதனை
படைத்தஇந்தியாவைச் சேர்ந்த 80 பேர் இடம் பெற்றுள்ளனர். நிலான்ஸி படேல் என்ற
16 வயது சிறுமியின் தலைமுடி 5 அடி 7 அங்குலம் நீளம் உள்ளது. டீன் ஏஜ்
வயதில் மிக நீளமான முடி கொண்ட பெண்ணாக இவர் இடம் பெற்றுள்ளார்.
</div>
<div style="text-align: justify;">
நாக்பூரைச் சேர்ந்த ஜோதி அமேஜ் என்ற
பெண்ணின் உயரம் 24.7 அங்குலம். மிகவும் குள்ளமான பெண்ணாக இவர் இடம்
பிடித்துள்ளார். புனேவைச் சேர்ந்த தர் சில்லல் என்பவருக்கு இடது கையில்
உள்ள நகம் 909.6 செ.மீ நீளம் உள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த சங்கர நாராயணன்
என்பவர் 736 வகையான பேப்பர் கப்களை சேர்த்து வைத்துள்ளதற்காக இடம்
பிடித்துள்ளார். இதுபோல், பலர் புதிய கின்னஸ் புத்தகத்தில் இடம்
பிடித்துள்ளனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
Anbuselvihttp://www.blogger.com/profile/18220155632198494502noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5822287541986730859.post-63597925890316617802019-11-04T03:51:00.000-08:002019-11-04T03:51:03.449-08:00 குணாதிசயம் சொல்லும் குரோமாசோம் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
கருப்பையில் வளரும் சிசுவின் வளர்ச்சி
சரியாக இருக்கிறதா என்பதை அறிய கர்ப்பிணிகளுக்கு வயிற்றில் அல்ட்ரா சவுண்ட்
ஸ்கேன் பரிசோதனை செய்யப்படுவது பலருக்குத் தெரிந்திருக்கும். சில
கர்ப்பிணிகளுக்கு மட்டும் மருத்துவர்கள் கேரியோ டைப் என்னும் சிறப்புப்
பரிசோதனையை மேற் கொள்ளச் சொல்கிறார்கள். இது ஏன், எதற்கு, இதை எப்படிச்
செய்கிறார்கள்?</div>
<div style="text-align: justify;">
<span style="color: black;">மரபியல் நினைவகம் என்பது என்ன?</span></div>
<div style="text-align: justify;">
நமது உடல் கோடிக்கணக்கான செல்களால் ஆனது.
ஒவ்வொரு செல்லுக்குள்ளேயும் 23 இணை குரோமோசோம்கள் வீதம் மொத்தம் 46
குரோமோசோம்கள் இருக்கின்றன. இவற்றில் 23 குரோமோசோம்கள் அப்பாவிடமிருந்தும்
அடுத்த 23 குரோமோசோம்கள் அம்மாவிட மிருந்தும் வருகின்றன. இந்த 46
குரோமோசோம்களில் எக்ஸ், ஒய் குரோமோசோம்கள் நம் பாலினத்தை நிர்ணயிப்பவை.
ஒருவருக்கு எக்ஸ் குரோமோசோமும் இருக்கிறது; ஒய் குரோமோசோமும் இருக்கிறது
என்றால் அவர் ஆண்; மாறாக, ஒய் குரோமோசோம் இல்லை; இரண்டுமே எக்ஸ்
குரோமோசோம்களே என்றால் அவர் பெண்.</div>
<div style="text-align: justify;">
இந்த குரோமோசோம்களில்தான் மரபணுக் களைக்
கொண்ட டி.என்.ஏ. மூலக்கூறுகள் இருக் கின்றன. இவற்றில் காலம் காலமாய் நம்
மரபில் வரும் குணாதிசயங்கள் பொதிந்திருக்கின்றன. ஆகவே, இவற்றை மரபியல்
நினைவகம் என்கிறோம். ஒரு குழந்தைக்கு அம்மாவின் கண், அப்பாவின் மூக்கு,
தாத்தாவின் உயரம், பாட்டியின் நினை வாற்றல், முப்பாட்டனின் முன்கோபம்,
முப்பாட்டி யின் முடி என்று எல்லாமே சேர்ந்திருப்பதற்கு இதுதான் காரணம்.</div>
<div style="text-align: center;">
<span style="color: blue;">******</span></div>
நிலவேம்பு கசாயத்தில் கல்லீரல் வீக்கத்தை குறைக்கும் ஆற்றல் உள்ளது<br />
* பால் ஒவ்வாமை உள்ளவர்கள் பருத்தி பாலை குடிப்பதால் போதிய சத்துக்களை பெறலாம்<br />
* தேங்காய் உடலில் பரவியுள்ள நுண்கிருமி களை அழித்து, உடலை தூய்மை செய்கிறது.<br />
* அல்சர், குடலில் ஏற்படும் புண்களை ஆற்றும் ஆற்றல் பெற்றது கொய்யா பழம்.<br />
* சுண்டைக்காய் நரம்பு மண்டலத்துக்கு சக்தி கொடுத்து பார்வைத் திறனை அதிகரிக்கும், நினைவாற்றல் கூடும்.</div>
Anbuselvihttp://www.blogger.com/profile/18220155632198494502noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5822287541986730859.post-987498307682185812019-11-04T03:49:00.001-08:002019-11-04T03:49:11.692-08:00 மாலி தாக்குதலுக்கு அய்.எஸ். பொறுப்பேற்பு <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
மாலி நாட் டின் மேனகா பிராந்தியத்தில், இன்தெலிமான் என்ற இடத் தில்
ராணுவ சாவடியில் கடந்த 1ஆம் தேதி பயங்கர வாதிகள் புகுந்து துப்பாக்கி யால்
சுட்டும், குண்டுகளை வெடித்தும் நடத்திய அதி பயங்கர தாக்குதல்களில் 53
வீரர்கள் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் கூறின.
</div>
<div style="text-align: justify;">
இந்த தாக்குதலில் பிரான்ஸ் வீரர் ஒருவரும் பலியாகி இருப் பது இப்போது
அம்பலத்துக்கு வந்துள்ளது. இது தொடர் பாக மாலி அரசுடன் பேச்சு வார்த்தை
நடத்துவதற்காக பிரான்ஸ் ஆயுதப் படைகள் துறை அமைச்சர் புளோரன்ஸ் பார்லி,
மாலிக்கு செல்ல உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.</div>
</div>
Anbuselvihttp://www.blogger.com/profile/18220155632198494502noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5822287541986730859.post-90192751172046927062019-11-04T03:48:00.001-08:002019-11-04T03:48:42.446-08:00 பிரேசில் நாட்டில் அமேசான் காடுகள் பாதுகாப்பு ஆர்வலர் சுட்டுக்கொலை <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-M0Nl_YWT6KQ/XcAQCU-_orI/AAAAAAAAAtE/i5ksAXcumJAeDQnIOxiGILB6UBKo9AIJACLcBGAsYHQ/s1600/v23.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="448" data-original-width="527" height="272" src="https://1.bp.blogspot.com/-M0Nl_YWT6KQ/XcAQCU-_orI/AAAAAAAAAtE/i5ksAXcumJAeDQnIOxiGILB6UBKo9AIJACLcBGAsYHQ/s320/v23.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பிரேசில் நாட்டில் அமேசான் காடுகள்
ஆர்வலராக விளங்கியவர், பூர்வகுடியைச் சேர்ந்த பவுலோ பவுலினோ குவாஜாஜாரா.
அங்கு காடுகளில் உள்ள மரங்களை வெட்டி கடத்து கிற கும்பல்களை எதிர்த்து
போராடுகிற வன பாதுகாவ லர்கள் அமைப்பின் உறுப்பி னராக இருந்து வந்தார்.
</div>
<div style="text-align: justify;">
இவர் அங்குள்ள மரான் ஹாவோ மாகாணத்தில்,
அராரிபோயா காட்டுப்பகுதி யில் கடந்த 1ஆம் தேதி வேட் டையாடிக் கொண்டிருந்த
போது, சட்ட விரோத மர கடத்தல் காரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.</div>
<div style="text-align: justify;">
பவுலோவின் படுகொலை, அமேசான் காடுகளின் பாது காவலர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.</div>
<div style="text-align: justify;">
பிரேசிலில் தனிமைப்படுத் தப்பட்டுள்ள
சமூகங்களுக் காக போராடி வருகிற லாப நோக்கற்ற சர்வைவல் இன் டர்நேஷனல்
அமைப்பு, இதற்கு முன்பும் கூட அமே சான் காடுகள் ஆர்வலர்கள் 3 பேர் தங்கள்
உறவினர்களு டன் கொல்லப்பட்டுள்ளதாக கூறுகிறது.</div>
<div style="text-align: justify;">
கடந்த செப்டம்பர் மாதம் டபாடிங்கா நகரில்
பூர்வ குடி மக்களை பாதுகாப்பதற்காக பணியாற்றிய அதிகாரி ஒரு வர்
கொல்லப்பட்டது நினைவு கூரத்தக்கது.</div>
<div style="text-align: justify;">
அமேசான் காடுகளின் பாதுகாவலர்கள் கொல்லப்
பட்டு வருகிற சம்பவங்கள், பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சொனாரோவுக்கு எதி ராக
உள்நாட்டிலும், வெளி நாடுகளிலும் கடும் விமர்சனங் களுக்கு வழிவகுத்துள்ளன.</div>
<div style="text-align: justify;">
பவுலோ படுகொலை தொடர்பாக காவல்துறையி னர் விசாரணை நடத்துகின் றனர்.</div>
<div style="text-align: justify;">
குற்றவாளிகளை பிடித்து நீதியின் முன் நிறுத்துவோம் என்று பிரேசில் நீதித்துறை அமைச்சர் செர்கியோ மோரோ கூறி உள்ளார்.</div>
</div>
Anbuselvihttp://www.blogger.com/profile/18220155632198494502noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5822287541986730859.post-60907712027585105152019-11-04T03:33:00.000-08:002019-11-04T03:33:03.173-08:00 மத்திய அரசின் உளவு நடவடிக்கைகள் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
மனித உரிமை ஆர்வலர்கள், பகுத்தறிவாளர்கள்
மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் வாட்ஸ் - அப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில்
பகிரும் தகவல்களை மத்திய அரசாங்கம் உளவுபார்க்கிறதோ என்ற அய்யம்
ஏற்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.</div>
<div style="text-align: justify;">
இஸ்ரேலின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலமாக
கணினி வழியே சமூக ஆர்வலர்கள், வழக்குரைஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்களது
நடவடிக்கைகள் களவாடப்பட்டிருப்பதற்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.</div>
<div style="text-align: justify;">
இதுகுறித்து கட்சியின் அரசியல்
தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், வாட்ஸ்அப் நிறுவனம், இந்தியாவின்
40 பேர் உட்பட உலக அளவில் 1400 பேரின் தகவல்கள் குறிவைத்து கள
வாடப்பட்டிருக்கின்றன என்று ஒப்புக் கொண்டி ருக்கிறது.</div>
<div style="text-align: justify;">
இது தனிநபர்களின் ஸ்மார்ட்போன் அல்லது
கணினிகளில் உரிய அனுமதியின்றி ஊடுருவப் படுமானால் அது உச்சநீதிமன்றத்தால்
வரையறுக்கப் பட்டுள்ள, தனிநபரின் அந்தரங்கங்கள் என்கிற அடிப்படை உரிமையை
மீறும் செயலாகும். பெகாசஸ் போன்ற உளவு மென்பொருளைப் பயன்படுத்துவது,
ஒருவரின் தனிப்பட்ட தரவு மற்றும் தகவல்களை அவருக்கும் தெரியாமல்
சட்டவிரோதமாக சோதனை செய்வதற்கு இணையானதாகும்.</div>
<div style="text-align: justify;">
பெகாசஸ் மென்பொருளின் உரிமையாளர், இந்த
மென்பொருளைத் தாங்கள் அரசாங்க ஏஜென்சி களுக்கு மட்டும்தான் விற்கிறோம்
என்று அறிவித் திருக்கிறார். இது இந்தக் களவு வேலைகளையெல்லாம், சமூக
ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் வழக்குரைஞர்களைக் குறிவைத்து,
அரசாங்கம்தான் உளவு பார்க்கிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.</div>
<div style="text-align: justify;">
"அரசாங்கம், தன்னுடைய ஏஜென்சி ஏதாவது இந்த
வேலைகளில் ஈடுபட்டிருக்கிறதா என்பதற்குப் பதில் சொல்லியாக வேண்டும்.
சட்டத்தின்படி, மக்களுடைய தொலைபேசிகளை ஊடுருவுவது என்பது சைபர்
குற்றமாகும். பெகாசஸ் மென் பொருளை அரசாங்கம் பயன்படுத்தவில்லை என்றால்,
பின் ஏன் அது இது தொடர்பாக ஒரு முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து, அதனை
யார் பயன்படுத்துகிறார்கள் என்று புலனாய்வு செய்திடக் கூடாது?.</div>
<div style="text-align: justify;">
மத்திய உள்துறை விவகாரங்கள் அமைச்சகத்தின்
கீழ் இயங்கும் சைபர் மற்றும் தகவல் பாதுகாப்பு பிரிவு பெகாசஸ் மென்பொருளை
வாங்கவில்லை என்று கூறி மறுத்திருக்கும் அதே சமயத்தில், அரசாங்கம் தன்
கீழ் இயங்கும் என்.டி.ஆர்.ஓ, சி.பி.அய் அல்லது ஆர்.ஏ.டபிள்பு (NTRO, CBI,
RAW) போன்று வேறெந்த துறையும் வாங்கவில்லை என்று இன்னமும்
தெரிவிக்கவில்லை.</div>
<div style="text-align: justify;">
இந்தப் பிரச்சினை மீது கிரிமினல்
விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேலும் குடிமக்களின் அந்தரங்கம் மற்றும்
உரிமைகளைப் பாதுகாக்கும் வண்ணம் ஓர் ஒருங்கிணைந்த தரவு பாதுகாப்புச்
சட்டத்தை இயற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல்
தலைமைக் குழு அறிக்கை கோரியுள்ளது.</div>
<div style="text-align: justify;">
உண்மையிலே இது அபாயகரமான பிரச்சினை யாகும் - வெளிநாடுகளில் இது நடந்திருந்தால் ஆட்சிக்கேகூட ஆபத்தாக முடிந்திருக்கும்.</div>
<div style="text-align: justify;">
1972இல் அமெரிக்காவில் என்ன நடந்தது?</div>
<div style="text-align: justify;">
வாட்டர்கேட் மாளிகையில் இரகசியமாக
ஒலிப்பதிவு கருவிகளை பொருத்தி அங்கு நடை பெறும் உரையாடல்களை தேர்தல்
வியூகங்களைத் தெரிந்து கொண்டார் என்று அதிபர் நிக்சன் மீது குற்றச்சாட்டு
எழுந்தது. அதன் அடிப்படையில் பதவியை ராஜினாமா செய்தாரே - அந்த நாகரிகத்தை
இந்தியாவில் அதுவும் பிஜேபிஆட்சியில் எதிர்பார்க்க முடியுமா?</div>
</div>
Anbuselvihttp://www.blogger.com/profile/18220155632198494502noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5822287541986730859.post-33146242485812213562019-10-23T03:55:00.005-07:002019-10-23T03:55:39.745-07:00 காரில் பதிவு எண்ணுக்கு பதில் ஆந்திர பிரதேச முதல்அமைச்சர் பெயராம்! <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தெலங்கானாவில் அய்தராபாத் நகரில் கார்
ஒன்றின் முகப்பு பகுதியில் பதிவு எண் இருப்பதற்கு பதிலாக, ஆந்திர பிரதேச
முதல்அமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் பெயரை குறிப்பிடும் வகையில், ஏ.பி.
சி.எம். ஜெகன் என ஆங்கில எழுத்துகளால் எழுதப்பட்ட வெள்ளை நிற நம்பர் பிளேட்
இருந்தது.
<br />
<div style="text-align: justify;">
அந்த காரை ஓட்டி வந்த நபரிடம் வாகன சோதனையில் ஜீடிமெட்லா காவல்துறையினர் இதுபற்றி விசாரணை மேற்கொண்டனர்.</div>
<div style="text-align: justify;">
அந்த வாகனம் ஏசு ரெட்டி என்பவரது பெயரில்
பதிவு செய்யப்பட்டுள்ளதும், அதனை ராகேஷ் என்பவர் பயன்படுத்தி வந்துள்ளதும்
விசாரணையில் தெரிய வந்துள்ளது.</div>
<div style="text-align: justify;">
காரை ஓட்டிய நபர், சுங்க சாவடி கட்டணம்
செலுத்துவது மற்றும் காவல் துறையினர் சோதனையை தவிர்ப்பதற்காக வாகன பதிவு
எண்ணுக்கு பதில் ஆந்திர பிரதேச முதல்அமைச்சர் ஜெகன் பெயரை பயன்படுத்தி
வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.</div>
<center>
<ins data-ad-slot="5983490669" id="aswift_0_expand" style="background-color: transparent; border: none; display: inline-table; height: 250px; margin: 0; padding: 0; position: relative; visibility: visible; width: 300px;"><ins id="aswift_0_anchor" style="background-color: transparent; border: none; display: block; height: 250px; margin: 0; padding: 0; position: relative; visibility: visible; width: 300px;"></ins></ins>
</center>
</div>
Anbuselvihttp://www.blogger.com/profile/18220155632198494502noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5822287541986730859.post-56052977200361424932019-10-23T03:55:00.002-07:002019-10-23T03:55:22.727-07:00 நாட்டிலேயே அதிக குற்றங்கள் நடக்கிற மாநிலம் பிஜேபி ஆளும் உத்தரபிரதேசம்: தமிழ்நாட்டுக்கு 7ஆவது இடம் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள், யூனியன்
பிர தேசங்களில் 2017ஆ-ம் ஆண்டு நடந்துள்ள குற்றச்சம்பவங்களின் எண்ணிக்கை
தொடர்பான புள்ளி விவர பட்டியலை தேசிய குற்ற ஆவண காப்பகம் (என்.சி.ஆர்.பி.)
வெளியிட்டுள்ளது.
<br />
<div style="text-align: justify;">
2017ஆ-ம் ஆண்டில் நாடு முழு வதும் 30
லட்சத்து 62 ஆயிரத்து 579 குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன. 2016இ-ல் இந்த
எண்ணிக்கை 29 லட்சத்து 75 ஆயிரத்து 711 ஆக இருந்தது.</div>
<div style="text-align: justify;">
2015-ஆம் ஆண்டு இது 29 லட்சத்து 49 ஆயிரத்து 400 ஆகும்.</div>
<div style="text-align: justify;">
நாட்டிலேயே பெரிய மாநிலம் என்ற சிறப்பை பெற்றுள்ள உத்தர பிரதேசம்தான், குற்றச்சம்பவங் களிலும் முதல் இடத்தில் உள்ளது.</div>
<div style="text-align: justify;">
இந்த மாநிலத்தில் 2017ஆ-ம் ஆண்டில் 3 லட்சத்து 10 ஆயிரத்து 84 குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன. இது நாட்டில் 10.1 சதவீதம் ஆகும்.</div>
<div style="text-align: justify;">
இங்கு 2016-ஆம் ஆண்டில் 2 லட்சத்து 82
ஆயிரத்து 171 குற்ற வழக்குகளும், 2015ஆ-ம் ஆண்டு 2 லட்சத்து 41 ஆயிரத்து
920 வழக்கு களும் பதிவாகின.</div>
<div style="text-align: justify;">
மராட்டிய மாநிலம், அதிக எண் ணிக்கையிலான குற்றச்சம்பவங்கள் நடந்துள்ள 2-ஆவது மாநிலம் என்ற பெயரை பெறுகிறது.</div>
<div style="text-align: justify;">
இங்கு 2017-இல் 2 லட்சத்து 88 ஆயிரத்து 879 வழக்குகள் பதிவாகி உள்ளன. இது 9.4 சதவீதம் ஆகும்.</div>
<div style="text-align: justify;">
மத்திய பிரதேசத்துக்கு மூன் றாவது இடம்.</div>
<div style="text-align: justify;">
இந்த மாநிலத்தில் 2 லட்சத்து 69 ஆயிரத்து 512 குற்ற வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. இது 8.8 சதவீதம் ஆகும்.</div>
<div style="text-align: justify;">
4-ஆவது இடம், கேரள மாநிலத் துக்கும், 5-ஆவது இடம் டில்லிக்கும், 6ஆ-வது இடம் பீகாருக்கும் கிடைத் துள்ளது.</div>
<div style="text-align: justify;">
குற்றச்சம்பவங்களின் எண்ணிக் கையில் தமிழ்நாடு 7-ஆவது இடத்தில் உள்ளது.</div>
<div style="text-align: justify;">
தமிழ்நாட்டில் 2017-ஆம் ஆண்டு 1 லட்சத்து 78 ஆயிரத்து 836 வழக்குகள் பதிவாகி உள்ளன.</div>
<div style="text-align: justify;">
இது 5.8 சதவீதம் ஆகும். 2016-ஆம் ஆண்டு, 1
லட்சத்து 79 ஆயிரத்து 896 குற்ற வழக்குகளும், 2015-ஆம் ஆண்டு, 1 லட்சத்து
87 ஆயிரத்து 558 குற்ற வழக்குகளும் பதிவாகி உள்ளன.</div>
<div style="text-align: justify;">
இந்த வகையில் தமிழ்நாட்டில் குற்றங்களின் எண்ணிக்கை குறைந் துள்ளது.</div>
</div>
Anbuselvihttp://www.blogger.com/profile/18220155632198494502noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5822287541986730859.post-35413093116475178272019-10-23T03:54:00.006-07:002019-10-23T03:54:57.310-07:00 2020ஆம் ஆண்டின் தமிழக அரசு விடுமுறை பட்டியல் பாரீர்! <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-ggUMyoUCAcg/XbAxe2BZFGI/AAAAAAAAAsY/zxBfcWhfkIIkgWRXWTIzNER0QiR0MWT7QCLcBGAsYHQ/s1600/a8.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="603" data-original-width="496" height="320" src="https://1.bp.blogspot.com/-ggUMyoUCAcg/XbAxe2BZFGI/AAAAAAAAAsY/zxBfcWhfkIIkgWRXWTIzNER0QiR0MWT7QCLcBGAsYHQ/s320/a8.jpg" width="263" /></a></div>
<br />
தமிழக அரசு, 2020இல் 23 நாட்களை பொது விடுமுறை நாட்களாக அறிவித்துள்ளது.
<br />
<div style="text-align: justify;">
தமிழக அரசு, 2015இல் 24 நாட்கள், 2016இல்
23, 2017இல் 22; 2018இல், 23, 2019இல் 23 நாட்களை பொது விடுமுறை நாட்களாக
அறிவித்திருந்தது. அடுத்த 2020ஆம் ஆண்டிற்கும் நடப்பு ஆண்டை போலவே, 23
நாட்களை பொது விடுமுறை நாட்களாக அறிவித்துள்ளது. பொது விடுமுறை நாட்களில்
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அலுவலகங்களும், மூடப்பட
வேண்டும். அனைத்து, சனி, ஞாயிற்று கிழமைகளும், விடுமுறை நாட்கள் ஆகும்.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-TE-KB10GX7c/XbAxatXB0gI/AAAAAAAAAsU/LYemFrGCFWAnbOwBtVqAKUWsBHNbf6KEQCLcBGAsYHQ/s1600/a9.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1600" data-original-width="900" height="320" src="https://1.bp.blogspot.com/-TE-KB10GX7c/XbAxatXB0gI/AAAAAAAAAsU/LYemFrGCFWAnbOwBtVqAKUWsBHNbf6KEQCLcBGAsYHQ/s320/a9.jpg" width="179" /></a></div>
<div style="text-align: center;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஜனவரி மாதத்தில் 5 நாட்களும், ஏப்ரல்
மாதத்தில் 4 நாட்களும், ஆகஸ்ட் மாதத்தில் 5 நாட்களும், அக்டோபர் மாதத்தில் 4
நாட்களும் பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.</div>
</div>
Anbuselvihttp://www.blogger.com/profile/18220155632198494502noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5822287541986730859.post-40061192793850290982019-10-23T03:54:00.000-07:002019-10-23T03:54:03.067-07:00 ரஷ்யாவும், கியூபாவும் இணைந்து பல்நோக்கு கதிர்வீச்சு மய்யம் அமைப்பு <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-v2YX4jas9lQ/XbAxRBI1E6I/AAAAAAAAAsQ/tQ_bpCuN_6AMywExJHETiZQs6wOkHeorgCLcBGAsYHQ/s1600/a7.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="167" data-original-width="301" src="https://1.bp.blogspot.com/-v2YX4jas9lQ/XbAxRBI1E6I/AAAAAAAAAsQ/tQ_bpCuN_6AMywExJHETiZQs6wOkHeorgCLcBGAsYHQ/s1600/a7.jpg" /></a></div>
<br />
இந்தியாவைப் போன்ற தனி சுதந்திர குடியரசு
நாடான கியூபாவில், பல்வேறு பணிகளுக்கு பயன் படுத்தும் நோக்கிலான
கதிர்வீச்சு மய் யம் ஒன்றை அமைக்க கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி ஒப்பந்தம்
கையெழுத்தானது. கியூபாவின் தலைநகர் ஹவானாவில் இதற்காக நடைபெற்ற நிகழ்வில்
பங் கேற்று, கூட்டு ஒப்பந்தத்தில் ரசியா கையொப்பமிட்டது.
<br />
<div style="text-align: justify;">
கியூபாவின் சார்பில் அந்நாட்டின்
அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுப்புறச் சூழல் துறைகளுக்கு பொறுப்பு
வகிக்கும் துணை அமைச்சர் ஜோஸ் ஃபிடல் சந்தனா அவர்களும், ரஷ்யாவின்
சார்பில், அந்நாட்டு அணு மின் சக்திக் கழகமான ரொசாட்டம் நிறுவனத்தின் துணை
தலைமை இயக்குனர் நிக்கோலே ஸ்பாஸ்கை அவர்களும் இந்த ஒப்பந் தத்தில்
கையொப்பமிட்டனர்.</div>
<div style="text-align: justify;">
இந்த ஒப்பந்தத்தின் மூலம், ரசிய அணுமின்
கழகமான ரொசாட்டம் நிறு வனம் சார்பில் கியூபாவிற்கு வழங்கப் படும் நவீன
தொழில்நுட்பத்தைக் கொண்டு, ரொசாட்டம் நிறுவனத்தின் துணை நிறுவனமான
ஜே.எஸ்.சி. ரொசாட்டம் ஹெல்த்கேர் வடிவமைத்து உருவாக்கும் பல்நோக்கு
கதிர்வீச்சு மய்யம் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகின்றன.</div>
<div style="text-align: justify;">
தற்போது அமைக்கப்படும் முதல் மய்யம்
வெற்றிகரமாக அமைந்தால், இந்த இரு நாடுகளும் இணைந்து கியூபா வில் மேலும் பல
இடங்களில் இது போன்ற மய்யங்களை அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்
எனவும் தெரிகிறது.</div>
</div>
Anbuselvihttp://www.blogger.com/profile/18220155632198494502noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5822287541986730859.post-11236164619484129092019-10-23T03:52:00.003-07:002019-10-23T03:52:54.045-07:00 கனடா நாடாளுமன்ற தேர்தல் மீண்டும் பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-_HSv3a6Ru7E/XbAw97MvmRI/AAAAAAAAAsI/frbHf7u7ysAcMXCeJfciyjVnankaJuWuACLcBGAsYHQ/s1600/a6.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="360" data-original-width="525" height="219" src="https://1.bp.blogspot.com/-_HSv3a6Ru7E/XbAw97MvmRI/AAAAAAAAAsI/frbHf7u7ysAcMXCeJfciyjVnankaJuWuACLcBGAsYHQ/s320/a6.jpg" width="320" /></a></div>
<br />
நிலப் பரப்பில் உலகின் 2ஆவது மிகப்பெரிய
நாடாக விளங் கும் கனடாவில் 338 தொகு திகளை கொண்ட நாடாளு மன்றத்துக்கு
நேற்று முன் தினம் தேர்தல் நடைபெற்றது.
<br />
<div style="text-align: justify;">
இதில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான
லிபரல் கட்சிக்கும், ஆண்ட்ரூ ஷீர் தலைமையிலான கன்சர் வேட்டிவ் கட்சிக்கும்
இடையே நேரடி போட்டி நிலவியது. நேற்று மாலை வாக்குப்பதிவு முடிந்தவுடன்,
வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.</div>
<div style="text-align: justify;">
இந்த தேர்தலில் எந்த கட் சிக்கும்
தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனாலும், ஜஸ்டின் ட்ரூடோவின் லிப ரல்
கட்சி, 157 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. கன்சர் வேட்டிவ் கட்சிக்கு 121
இடங்கள் கிடைத்துள்ளன. ஆட்சி அமைக்க 170 இடங் கள் தேவை என்கிற நிலையில்,
ஜஸ்டின் ட்ரூடோவுக்கு 13 நாடாளுமன்ற உறுப்பினர் களின் ஆதரவு மட்டுமே
தேவைப்படுகிறது.</div>
<div style="text-align: justify;">
அந்த வகையில் இந்திய வம்சாவளி சீக்கியரான
ஜக் மித் சிங்கின், புதிய ஜனநாயக கட்சி ஆதரவுடன், ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும்
ஆட்சிய மைப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் மத்தி யில் அதிகம்
வரவேற்பை பெற்ற புதிய ஜனநாயக கட்சி 20 இடங் களை கைப்பற்றி யுள்ளது.</div>
<div style="text-align: justify;">
கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைப்ப
தன் மூலம் ஜஸ்டின் ட்ரூடோ தொடர்ந்து 2ஆவது முறை யாக பிரதமராகிறார். இதற்
கிடையே நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்கு ஜஸ்டின் ட்ரூடோவுக்கு
அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து
தெரிவித்துள்ளனர்.</div>
</div>
Anbuselvihttp://www.blogger.com/profile/18220155632198494502noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5822287541986730859.post-2138235269690238142019-10-23T03:50:00.008-07:002019-10-23T03:50:54.466-07:00 சமூக நீதிக்கு மரண அடி!: பல்கலைக்கழகம், கல்லூரி படிப்பில் சேர உயர்கல்விக்கு ஒரே நுழைவு தேர்வாம்! சமூக நீதிக்கு மரண அடி!: பல்கலைக்கழகம், கல்லூரி படிப்பில் சேர உயர்கல்விக்கு ஒரே நுழைவு தேர்வாம்! <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஒரே தேர்தல், ஒரே உணவுப் பங்கீட்டு அட்டை
பாணியில், பல்கலைக்கழகம், கல்லூரிகளில் கலை, அறிவியல் படிப்புகளில் மாணவர்
சேர்க்கைக்காக நாடு முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வை கொண்டு வர மத்திய அரசு
தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
<br />
<div style="text-align: justify;">
இது தொடர்பாக, புதிய தேசியக் கல்விக்
கொள்கை இறுதி வரைவில் பரிந்துரைக்கப்பட இருப்பதாக மத்திய மனிதவள
மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.</div>
<div style="text-align: justify;">
மருத்துவ படிப்புக்கு நாடு முழுவதும் ஒரே
மாதிரியான நீட் நுழைவுத்தேர்வு கொண்டு வரப்பட்டது. கடந்த மே மாதம்
வெளியிடப்பட்ட புதிய தேசிய கல்விக் கொள்கையில், கலை அறிவியல் உட்பட
அனைத்துபட்டப் படிப்புகளுக்கும் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டுமென
பரிந்துரைக்கப் பட்டது.</div>
<div style="text-align: justify;">
இதற்கு பல தரப்பிலும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின.</div>
<div style="text-align: justify;">
ஆனாலும், பட்டப்படிப்புக்கு ஒரே நுழைவுத்
தேர்வை கொண்டு வருவதில் மத்திய அரசு தீவிரமாக இருப்பதாக மத்திய மனிதவள
மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தற்போது கூறியிருக்கிறார்.</div>
<div style="text-align: justify;">
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:</div>
<div style="text-align: justify;">
நாடு முழுவதும் பல்கலைக் கழகங்கள்,
கல்லூரிகளில் கலை, அறிவியல் படிப்புகளில் சேர, பாடவாரியாக ஒரே நுழைவுத்
தேர்வை கொண்டு வருவது குறித்து புதிய தேசிய கல்விக் கொள்கையின் இறுதி
வரைவில் பரிந்துரைக்கப்படும். மாணவர்களின் சிரமத்தை போக்க, இத்தேர்வு
ஆண்டுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட முறை நடத்தப்படும். இத்தேர்வை தேசிய தேர்வு
முகமை நடத்தும். தற்போது, பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் சேர மாணவர்கள்
தனித்தனியாக நுழைவுத் தேர்வு எழுதி வருகின்றனர். ஒரே நுழைவுத்தேர்வு கொண்டு
வருவதின் மூலம் மாணவர்களுக்கு ஏற்படும் நெருக்கடி குறையும். புதிய தேசிய
கல்விக் கொள்கையின் இறுதி வரைவு குறித்து 2 லட்சம் பரிந்துரைகள் ஆய்வு
செய்யும் பணி முடிந்துள்ளது.</div>
<div style="text-align: justify;">
இதனால், இறுதி வரைவு விரை வில் தயாராகி
விடும். இதற்கான பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன. உயர்கல்விக்கான பரிந்
துரைகளை ஆய்வு செய்ய பெங்களூ ருவில் ஓர் அலுவலகம் அமைக்கப் பட்டது. பள்ளி
கல்விக்காக, சிபிஎஸ்இ தலைவர் அனிதா கர்வாலின் கீழ் ஒரு குழு அறிக்கையை
இறுதி செய்தது.</div>
<div style="text-align: justify;">
புதிய தேசிய கல்விக் கொள்கை, முற்போக்கான,
முற்றிலும் இந்தியாவை மய்யமாக கொண்ட கொள்கையாக இருக்கும் என நம்புகிறேன்.
இறுதி வரைவுக்கு பிரதமர் மோடியின் ஒப்புதல் கிடைத்ததும், அதை விரைவில்
அறிவிப்போம்.</div>
<div style="text-align: justify;">
இவ்வாறு அவர் கூறினார்.</div>
<div style="text-align: justify;">
தற்போது, பொறியியல், வேளாண், மருத்துவம்,
மேலாண்மை உள்ளிட்ட சில பட்டப்படிப்பு களுக்கு மட்டுமே நுழைவுத்தேர்வு
இருந்து வருகிறது. கலை, அறிவியல் பட்டப் படிப்பில் சேர நுழைவுத் தேர்வு
கிடையாது. ஆனால் புதிய கல்விக் கொள்கையில், கலை, அறிவியல்
பட்டப்படிப்புக்கும் ஒரே நுழைவுத்தேர்வு கொண்டு வரப் படும் என்பது
கிராமப்புற மாண வர்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தும் என கல்வியாளர்கள்
வேதனை தெரிவித்துள்ளனர்.</div>
</div>
Anbuselvihttp://www.blogger.com/profile/18220155632198494502noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5822287541986730859.post-55740485293341080862019-10-23T03:50:00.005-07:002019-10-23T03:50:36.107-07:00 கீழடி அகழாய்வில் சுடுமண் குழாய் கண்டுபிடிப்பு <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-ZHE83hRskDA/XbAwcMe5IvI/AAAAAAAAAr8/KhOFKsLvR840yIJca-9vfoaSCKpZvqsJgCLcBGAsYHQ/s1600/a5.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="460" data-original-width="598" height="246" src="https://1.bp.blogspot.com/-ZHE83hRskDA/XbAwcMe5IvI/AAAAAAAAAr8/KhOFKsLvR840yIJca-9vfoaSCKpZvqsJgCLcBGAsYHQ/s320/a5.jpg" width="320" /></a></div>
<br />
<div style="text-align: justify;">
கீழடி அகழாய்வுக் குழிகளை மூடும்போது, மேம்பட்ட சுடுமண் குழாய் அமைப்புகள் கண்டுபிடிக்கப்பட் டுள்ளன.
</div>
<div style="text-align: justify;">
சிவகங்கை மாவட்டம், கீழடியில், இதுவரை,
அய்ந்து கட்டங்களாக அகழாய்வுகள் செய்யப்பட்டு உள்ளன. முதல் மூன்று கட்ட
அகழாய்வுகளை, மத்திய தொல் லியல் துறையும், அடுத்த, இரண்டு கட்ட
அகழாய்வுகளை,தமிழக தொல்லியல் துறையும் மேற்கொண் டன. அய்ந்தாம் கட்ட
அகழாய்வு பணிகள், கடந்த வாரத்தில் முடிந்தன. அதனால், அகழாய்வுக் குழிகளை,
தார்ப்பாய்களால் மூடி, மண் கொட்டும் பணிகள் நடந்தன.</div>
<div style="text-align: justify;">
அப்போது, அகழாய்வுக் குழி ஒன்றின், 52
செ.மீ., ஆழத்தில், 20 செ.மீ., விட்டமுள்ள வாய்ப் பகுதி யுடன் கூடிய, 60
செ.மீ., நீளமுள்ள, சுடுமண் குழாய் கண்டுபிடிக்கப் பட்டது.</div>
<div style="text-align: justify;">
அது, இரண்டு குழாய் களால்
இணைக்கப்பட்டிருந்தது. அதன் ஒவ்வொன்றிலும், தலா, 5 விளிம்புகள் இருந்தன.
குழாயை உறுதியாக்கி, பாதுகாப்பான தண் ணீரை வழங்கும் வகையில் அமைக்
கப்பட்டிருக்கும் இந்த விளிம்புகள், பார்வைக்கு, சுருள் வடிவத்தில் உள்ளன.
இக்குழாய் ஒன்றின் வாய்ப் பகுதியில், வடிகட்டும் வகையில், மூன்று துளைகள்
இடப்பட் டுள்ளன.</div>
<div style="text-align: justify;">
இந்த குழாய்களின் கீழ்ப்பகுதி யிலும்,
அகழாய்வு செய்யப்பட்டது. அப்போது, பீப்பாய் வடிவிலான, மூன்று, சுடுமண்
குழாய்கள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு, ஒரே குழாயாக இருந்தது.</div>
<div style="text-align: justify;">
அதன் வாய்ப் பகுதியிலும், வடிகட்டி
பொருத்தப்பட்டிருந்தது. வடி கட்டப்பட்ட நீர் செல்லும் குழாயின் இறுதிப்
பகுதி, இரண் டடுக்கு பானைக்குள் செல்கிறது.</div>
<div style="text-align: justify;">
இவ்வாறு, ஒரே இடத்தில்
அமைக்கப்பட்டிருக்கும், வெவ் வேறு விதமான இரண்டு சுடுமண் குழாய்களுக்கும்,
வெவ்வேறு பயன்பாடு இருந்திருக்க வேண்டும். இந்த வடிகால் குழாய்களின் கீழ்ப்
பகுதியை அகழாய்வு செய்தபோது, சுடுமண் கூரை ஓடுகள் பதிக்கப்பட்ட தரைப்பகுதி
காணப்பட்டது.</div>
<div style="text-align: justify;">
இது, தண்ணீரை எளிதாக வடிய வைக்கும்
திறந்தவெளி அமைப்பாக இருக்கலாம்.தமிழக அகழாய்வு களில், இதுவரை கிடைக்காத
வகையிலான, இந்த வடிகால் அமைப்பு களின் பயன்கள் குறித்து, அடுத்த கட்ட
அகழாய்வுகளில் தான் தெரிய வரும். மேலும், அந்த பகுதியை தொடர்ந்து ஆய்வு
செய்த போது, கூரை ஓடுகள் அடுக்கப்பட்ட நிலையில் இருந்தன. அவற்றின்
தொடர்ச்சியில், செங்கல் கட்டடப் பகுதி இருந்தது.அது, இரண்டாம் கட்ட
அகழாய்வின் போது கண்டறியப்பட்ட, கட்டடப் பகுதி யின் தொடர்ச்சி.</div>
<div style="text-align: justify;">
அதன் தொடர்ச்சி யை, அடுத்த கட்ட அகழாய்வில் தான் கண்டறிய முடியும்.</div>
<div style="text-align: justify;">
'கீழடி அய்ந்தாம் கட்ட அகழாய் வின்
முடிவில் கண்டறியப்பட்டுள்ள, இந்த சுடுமண் குழாய்கள் மற்றும் கட்டடப்
பகுதிகளை தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும்.'சங்க காலத்தில், வைகை
நதிக்கரையில் வாழ்ந்த தமிழர்களின் நீர் மேலாண்மை, கட்டடக்கலை,
தொழில்நுட்பம் உள்ளிட்டவை குறித்த, பல்வேறு தகவல்கள் வெளிப் படும்' என,
தமிழக தொல்லியல் துறை அதிகாரிகள் நம்புகின்றனர்.</div>
<div style="text-align: justify;">
இது, தமிழக வரலாற்றின், புதிய
திருப்பங்களுக்கு மிகப்பெரிய சான்றுகளாக இருக்கும் என்பதால், அடுத்தகட்ட
அகழாய்வக்காக, வர லாற்று ஆய்வாளர்கள் எதிர் பார்ப்பில் உள்ளனர்.</div>
<div style="text-align: justify;">
மதுரை தமிழ் சங்கத்தில்கீழடி தொல்பொருட்கள்</div>
<div style="text-align: justify;">
கீழடி அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்களை, மதுரை தமிழ் சங்கத்தில் காட்சிப்படுத்த, தமிழக தொல்லியல் துறை முடிவு செய் துள்ளது.</div>
<div style="text-align: justify;">
சிவகங்கை மாவட்டம், கீழடியில், அய்ந்தாம் கட்ட அகழாய்வுப் பணி, சமீபத்தில் நிறைவடைந்தது; அக ழாய்வுக் குழிகள் மூடப்பட்டு விட் டன.</div>
<div style="text-align: justify;">
ஆறாம் கட்ட அகழாய்வுக்கான அனுமதியை, மத்திய தொல்லியல் ஆலோசனை வாரியத்திடம், தமிழக அரசு கோரியுள்ளது.</div>
<div style="text-align: justify;">
இந்நிலையில், கீழடியில் கிடைத்த தொல்பொருட்களை, அங்கேயே காட்சிப்படுத்த வேண் டும் என, பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர்.</div>
<div style="text-align: justify;">
அதையேற்ற தமிழக தொல்லியல் துறை, கீழடியில்
கிடைத்த தொல் பொருட்களை, பலரும் பார்க்கும் வகையில், மதுரை தமிழ்
சங்கத்தில் காட்சிப்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள், மும்முரமாக
நடந்து வருகின்றன.</div>
<div style="text-align: justify;">
பார்வையாளர்களின் வருகை யை பொறுத்து, கண்காட்சி நடத்தும் நாட்களை முடிவு செய்ய, அதிகாரிகள் திட்ட மிட்டுள்ளனர்.</div>
</div>
Anbuselvihttp://www.blogger.com/profile/18220155632198494502noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5822287541986730859.post-90417973899066135172019-10-23T03:49:00.003-07:002019-10-23T03:49:40.870-07:00 செவ்வாய்க் கோளில் உப்பு ஏரிகள் : ஆய்வில் தகவல் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-YnO6nTcHmMQ/XbAwPp-c9zI/AAAAAAAAAr4/sRGbUjiAyZcAOs70ZnlWHEJ0J6w9rS1NQCLcBGAsYHQ/s1600/a4.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="211" data-original-width="516" height="130" src="https://1.bp.blogspot.com/-YnO6nTcHmMQ/XbAwPp-c9zI/AAAAAAAAAr4/sRGbUjiAyZcAOs70ZnlWHEJ0J6w9rS1NQCLcBGAsYHQ/s320/a4.jpg" width="320" /></a></div>
<br />
செவ்வாய்க் கோளில் ஒரு காலத்தில் பூமியில்
இருந் ததைப் போன்ற உப்பு ஏரிகள் இருந்ததாக ஆய்வில் கண்டறியப் பட்டுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் ஏ அண்ட் எம் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி
யாளர்கள் ‘நேச்சர் ஜியோ சைன்ஸ்’ இதழில் வெளியிட்டுள்ள கட்டுரை யில்
கூறியிருப்ப தாவது:
<br />
<div style="text-align: justify;">
செவ்வாய்க்கோளில் 3 பில்லியன்
ஆண்டுகளுக்கு முன்பு கேல் க்ரேட் டர் பள்ளத்தில் இருந்த ஏரி, 95 மைல்
அகலமுள்ள ஒரு பெரிய பாறைப்படுகை, இது 2012 முதல் நாசா கியூரியா சிட்டி
ரோவர் மூலம் ஆராயப்பட்டு வருகிறது. சுமார் 3.6 பில்லியன் ஆண்டுகளுக்கு
முன்பு செவ்வாய்க் கோளில் ஒரு விண்கல் தாக்கியபோது கேல் பள்ளம் உருவானது.
செவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் உப்பு ஏரிகள் இருந் துள்ளன. அவை
பூமியில் இருந் ததைப் போலவே ஈரமான மற்றும் வறண்ட கட்டங்களைக் கடந்து
வந்துள்ளன. செவ்வாய்க் கோளின் காலநிலை நீண்ட காலமாக வறண்டு போய்
இருக்கிறது. செவ்வாய்க் கோளின் வளிமண்டலம் மெல்லிய தாக மாறியதால்
செவ்வாய்க் கோளில் திரவ நீர் நிலைத்திருக்காமல் ஆவியாகியுள்ளது என்று
தெரிவிக் கப்பட்டுள்ளது.</div>
<div style="text-align: justify;">
மரியன் நாச்சன் கூறுகையில், கேல்
க்ரேட்டர் அதன் வரலாற்றில் திரவ நீர் இருந்ததற்கான அறிகுறி களை
வெளிப்படுத்துகிறது. இது நமக்குத் தெரிந்த நுண்ணுயிர் வாழ் வின் முக்கிய
அங்கமாகும், வறண்ட காலங்களில் உப்பு ஏரிகள் இறுதியில் உருவாகின. இந்த
ஏரிகள் எவ்வளவு பெரியவை என்று சரியாகச் சொல் வது கடினம். ஆனால் கேல் க்ரேட்
டரில் உள்ள ஏரி நூற்றுக்கணக்கான ஆண்டுகள் முதல் பல்லாயிரக்கணக் கான
ஆண்டுகள் வரை இருந்துள் ளது என்றார்.</div>
</div>
Anbuselvihttp://www.blogger.com/profile/18220155632198494502noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5822287541986730859.post-59683904080806328142019-10-23T03:48:00.004-07:002019-10-23T03:48:43.074-07:00 சத்திஸ்கர் அரசின் முடிவு <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
சத்திஸ்கர் மாநிலத்தில் விரைவில்
உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மின்னணு வாக்குப்பதிவு
இயந்திரங்கள் (இவிஎம்) தேவையில்லை என்றும், வாக்குச் சீட்டுகளைக் கொண்டே
தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறும் என்றும் மாநில முதல் அமைச்சர் பூபேஷ்
பாகேல் அறிவித்து உள்ளார்.</div>
<div style="text-align: justify;">
வாக்குச்சீட்டு முறை தேர்தலுக்கு கடந்த
சில ஆண்டுகளாக முடிவு கட்டிய தேர்தல் ஆணையம், மின்னணு வாக்குப் பதிவு
இயந்திரம் மூலம் வாக்குப்பதிவை செயல்படுத்தி வருகிறது. இந்த இயந்திர
வாக்குப் பதிவில் தில்லுமுல்லு நடைபெறுவதாக காங்கிரஸ் உள்பட
எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.</div>
<div style="text-align: justify;">
இந்த நிலையில், சத்திஸ்கர் மாநிலத்தில்
நடைபெற உள்ள உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் வாக்குச் சீட்டு வாக்குப்
பதிவுக்கு ஆதரவாக ஈ.வி.எம்-களை அகற்றி விட்டு, மீண்டும் பழைய முறையான
வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த மாநில அரச முடிவு செய்துள்ளது.</div>
<div style="text-align: justify;">
இதன் காரணமாக வாக்குச்சீட்டு முறையில் மீண்டும் தேர்தல் நடத்தும் முதல் மாநிலமாக சத்திஸ்கர் மாறி உள்ளது.</div>
<div style="text-align: justify;">
சத்திஸ்கர் மாநிலத்தில் ஏற்கெனவே
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான தேர்தல் விதிகள் ஆய்வு தொடர்பாக அமைச்சரவைக்
குழு அமைக்கப் பட்டிருந்த நிலையில், நேற்று (அக். 22) முதல்வர் பூபேஷ்
பாகல் தலைமையில், அமைச்சரவைக் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில்
உள்ளாட்சித் தேர்தல்களில் ஈ.வி.எம்-களுக்குப் பதிலாக வாக்குச் சீட்டைப்
பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.</div>
<div style="text-align: justify;">
சத்திஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல்
தலைமையிலான அமைச்சரவை ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட பரிந்துரைகள்
மாநில ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று
கூறப்படுகிறது.</div>
<div style="text-align: justify;">
இதுகுறித்துக் கூறிய மாநில அமைச்சர்,
"நகர்ப்புற உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் வாக்குச் சீட்டைப்
பயன்படுத்துவதற்கும், மேயர் மற்றும் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத்
தேர்தல்களை நடத்துவதற்கும், நகராட்சித் தேர்தல் சட்டத்தைத் திருத்தும்
வகையில் திருத்தம் செய்ய சத்திஸ்கர் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்
வழங்கப்பட்டு உள்ளது. நடைபெற உள்ள உள்ளாட்சி அமைப்புத் தேர்தல்களில்
வாக்குச் சீட்டைப் பயன்படுத்துவதை சம்பந்தப்பட்ட சட்டம் தடை செய்யாது"
என்று தெரிவித்து உள்ளார்.</div>
<div style="text-align: justify;">
கடந்த ஆண்டு (2018) சத்திஸ்கரில்
நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 15 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு காங்கிரஸ்
மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. இந்த நிலையில், இவிஎம் இயந்திரத்துக்குப்
பதிலாக மீண்டும் வாக்குச்சீட்டுத் தேர்தல் முறையை கொண்டு வர முயற்சி
எடுத்துள்ளது.</div>
<div style="text-align: justify;">
இதுகுறித்துக் கூறிய சத்திஸ்கர் மாநில
பாஜக செய்தித் தொடர்பாளர் சஞ்சய் சிறீவாஸ்தவ், வாக்குச் சீட்டைப்
பயன்படுத்துவதை எதிர்த்ததுடன், இது “காங்கிரசின் சதி” என்று குற்றம்
சாட்டியுள்ளார்.</div>
<div style="text-align: justify;">
ஆனால், இதுகுறித்து கருத்துத் தெரிவித்த
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சைலேஷ் திரிவேதி, “சத்திஸ்கரில் இவிஎம்
இயந்திரம் குறித்த சர்ச்சைகள் ஏற்கெனவே வெடித்துள்ள நிலையில், அங்குள்ள
வாக்காளர்கள் உள்ளாட்சி அமைப்புத் தேர்தல்களில் வாக்குச் சீட்டைப்
பயன்படுத்துவதற்கான முடிவை வரவேற்றுள்ளனர்" என்று கூறினார்.</div>
<div style="text-align: justify;">
அரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தல்
பா.ஜ.க. வேட்பாளர் கூறுகிறார், "எந்த பொத்தானை அழுத்தினாலும்
தாமரைக்குத்தான் வாக்குப் பதிவாகும்" என்று கூறியுள்ளதைப் பார்த்தால்
சத்திஸ்கர் மாநில அரசின் முடிவு சரியானதே என்றுதான் தோன்றுகிறது.</div>
<div style="text-align: justify;">
பிஜேபி என்று சொன்னாலே எதிலும்
சந்தேகிக்க வேண்டியுள்ளது என்கிற அளவுக்கு அதன் சிந்தனைகளும்,
போக்குகளும், நடவடிக்கைகளும் அமைந்திருப்பதை யார்தான் மறுக்க முடியும்?</div>
</div>
Anbuselvihttp://www.blogger.com/profile/18220155632198494502noreply@blogger.com0