Wednesday, September 4, 2019

உ.பி.: காணாமல் போன 14 வயது தாழ்த்தப்பட்ட வகுப்பு சிறுமியின் உடல் கண்டெடுப்பு

பாலியல் வன்முறை செய்யப்பட்டாரா?

 உத்தரப் பிரதேச மாநிலத்தில் காணா மல் போன 14 வயது தாழ்த் தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த  சிறுமியின் உடல் ஜலான் மாவட்டத்தின் அதா என்ற பகுதியில் கண்டு பிடிக்கப் பட்டது. சனிக்கிழமை மாலை வேலை யாகச் சென்ற இந்தச் சிறுமி அதன் பிறகு வீடு திரும்பாத நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப் பட்டுள் ளது.
இது தொடர்பாக பக்கத்து வீட்டுக்காரரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் மீது பாலியல் வன்முறை மற் றும் கொலை வழக்குப் பதியப் பட்டுள்ளது. பாலியல் வன்முறைக் கொலையா என்பது உடற் கூறாய்வின் முடிவில் தெரிய வரும்.
சனிக்கிழமை இரவே சிறுமி காணாமல் போனது பற்றி பெற்றோர் புகார் அளித் தனர். இந்நிலையில் ஞாயி றன்று மதியம் அவரது ஆடை கள் கிழிந்த நிலையில் கண்கள் தோண்டி எடுக்கப்பட்ட கொடூ ரமான நிலையில் அவரது சடலம் ஜலான் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது பாலியல் வன்முறை செய்தவர் தன்னை அடையா ளம் காட்டி விடக்கூடாது என்பதற்காக கண்களைத் தோண்டி எடுத்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது, ஆனால் சிறுமி கடைசியில் மரணித்தே விட்டார்.
இது தொடர்பாக கைது செய்யப்பட்ட பக்கத்து வீட்டு நபர் மீது ஏற்கெனவே ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும் சிறுமி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத் ததாகவும் இவர் மீது புகார் உண்டு, ஆனால் காவல்துறை யில் புகார் இல்லை.
கைது செய்யப்பட்ட நபர் மீது காவல்துறையினர் விசா ரணை நடத்தி வருகின்றனர், என்று கூறிய டிஅய்ஜி, உடற் கூறாய்வு அறிக்கை வந்த பிறகே பாலியல் வன்முறையா என்பது தெரியவரும் என்றார் அவர்.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.