சென்னை குரோம் பேட்டை ரேலா இன்ஸ்டியூட்
மருத்து வமனை மருத்துவர்கள் இந்தியாவில் முதன்முறையாக ஒரு மாதக்
குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து மறுவாழ்வு அளித்து
உள்ளனர்.
மும்பையில் தகவல் தொழில்நுட் பத்துறையில்
பணிபுரிந்து வரும் இளம் பெண் கஷ்பியின் பச்சிளம் குழந்தை ஆர்யா. பிறந்த சில
நாட்களில் வாந்தி எடுக்கத் தொடங்கிய ஆர்யாவின் உடல் நிலை நாளுக்குநாள்
மோசமடையத் தொடங்கியதும் மும்பையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டான்.
ஆரம்பத்தில் தொற்றுநோய் என்று கருதி
சிகிச்சை அளித்த மருத்துவர்களின் தீவிர பரிசோதனைக்குப்பின் ஆர்யா வளர்சிதை
மாற்ற நோயால் பாதிக் கப்பட்டு இருப்பதும், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை
மூலம் தான் குழந் தையின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்றும் கண்டறிந்தனர்.
பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தை
ஆர்யாவுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள தயங் கிய
மருத்துவர்கள், அனுபவமிக்க அறுவை சிகிச்சை மருத்துவரான முகமது ரேலாவை
அணுகுமாறு யோசனை தெரிவித்தனர்.
உடனடியாக குழந்தை ஆர்யாவை விமானம் மூலம்
சென்னை கொண்டு வந்து குரோம்பேட்டை ரேலா மருத்து வமனையில் குழந்தையை
சேர்த்தனர். பேராசிரியர் மருத்துவர் முகமது ரேலா தலைமையில் மருத்துவர்கள்
இளங் குமரன், ஈரல்நோய் சிகிச்சை மருத்துவர் நரேஷ் ஆகியோர் மருத்துவப் பரி
சோதனை மேற்கொண்டனர்.
உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை
மேற்கொள்ள வேண்டிய நிலையில், கஷ்பியின் இளைய சகோதரர் அசிக் குழந்தை
ஆர்யாவுக்கு கல்லீரல் உறுப்பு கொடையளித்தார். 10 மணி நேரம்
மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை மூலம் குழந்தை ஆர்யாவை உயிர் பிழைக்க
வைத்தனர் மருத்துவர்கள்.
இது குறித்து பேராசிரியர் முகமது ரேலா கூறியது:
இந்தியாவில் முதன்முதலாக ஒரு மாத பச்சிளம்
குழந்தைக்கு வெற்றிகரமாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு
குழந்தையின் பெற்றோரை மட்டுமல்லாமல் அனைவ ரையும் மகிழ்ச்சி அடைய
வைத்துள்ளது.
தற்போது பிறக்கும் 30,000 குழந் தைகளில்
ஒரு குழந்தை வளர்சிதை மாற் றப் பிரச்சினை காரணமாக பாதிக் கப்படுகிறது.
பெரும்பாலான பச்சிளம் குழந்தைகள் என்ன நோயால் பாதிக் கப்பட்டுள்ளன என்பதை
கண்டறியும் முன்பே உயிரிழக்கும் நிலையில், குழந்தை ஆர்யாவுக்கு ஏற்பட்ட
நோய் பாதிப்பு குறித்து துல்லியமாகக் கண்டறியப்பட்டு, உரிய கல்லீரல் மாற்று
அறுவை சிகிச்சை மூலம் குழந்தையின் உயிரைக் காப்பாற் றியது மகிழ்ச்சி
அளிக்கிறது என்றார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.