Monday, September 16, 2019

திருவிதாங்கூர் கொடுமை - சர்வம் பார்ப்பன மயம்



1938 ஏப்ரல் 10ஆம் தேதி "குடி அரசு" எழுதியிருப்பதாவது


(வாசக நேயர்களே,

ஊன்றிப் படித்துப் பயன்பெற வேண்டிய முக்கியப் பகுதி இது.

இதுபற்றி தங்களது கருத்தினை சுருக்கமாக எழுதி அனுப்புமாறு வேண்டுகிறோம்.

திராவிடர் இயக்கம் - 80 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாடு அரசியல் களத்தின் முக்கிய நிகழ்வுகள் - வரலாறு பற்றிய காலக்கண்ணாடியாக - திராவிடத்தின் தேவைக்கான நுண்ணாடியாக இது அமையும் ஒன்று. இதற்கான தேவை - பயன் - நுகர்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் பெரிதும் வரவேற்கப்படுகிறது. - ஆசிரியர்)


திருவிதாங்கூரில் ஸர். சி. பி. ராமசாமி அய்யர் அவர்களது ஆட்சி இன்று ஒரு குட்டி ஹிட்லர் ஆட்சியாக நடைபெற்று வருகிறது. அங்கு அடக்குமுறை தாண்டவமாடுவது மாத்திர மல்லாமல் அது ஒரு பார்ப்பன ராஜ்யமாகவே ஆக்கப்பட்டு வருவதாகவும் தெரிய வருகிறது. அதன் முழு விபரத்தையும் அங்கு நடக்கும் பார்ப்பன கோலாகலங்களையும் வெளி ஜனங்கள் அறிய முடியாமல் செய்வதற்கு எவ்வளவு சூழ்ச்சி செய்யலாமோ அவ்வளவும் செய்யப்பட்டு வருகிறது. அங் குள்ள பத்திரிகைகள் உள்ள விஷயங்களை வெளியிட்ட தற்கு ஆக ஜாமீன் பறிமுதல் செய்யப்பட்டதோடு பத்திரிகை நடத்த கொடுத்திருந்த அநுமதியையும் கேன்சல் (தள்ளுபடி) செய்யப்பட்டு வருகிறது. அசோசியேட் பிரஸ் என்னும் இந்தியப் பத்திரிகை செய்தி ஸ்தாபனத்தையும் விலைக்கு வாங்கப்பட்டோ அல்லது வேறு வழியில் கைவசப்படுத்தப் பட்டோ அதன் மூலம் விஷயம் வெளியாக்கப்படாமல் தடுக்கப்பட்டு வருகிறது. சென்னைத் தினசரிப் பத்திரிகைகள் பெரிதும் பார்ப்பனப் பத்திரிகைகளானதாலும் பார்ப்பன நிருபர்களையே கொண்டவைகளானதாலும் விஷயங்கள் வெளியாகாமல் அடக்கிவிடப்படுகின்றன.

சர்வம் பார்ப்பன மயம்

இந்நிலைமையில் திருவிதாங்கூர் பிரஜைகள் வதைக்கப் படுகிறது ஒருபுறம் இருக்க அதிகார ஸ்தானம், பெரும் பெரும் உத்தியோகம் மற்றும் பெருத்த வியாபாரத்துறை முதலியவை பார்ப்பன மயமாகி பகற்கொள்ளைக்கு லைசென்சு பெற்ற மாதிரி திருவிதாங்கூர் சர்க்கார் பொக் கிஷமும் மிகவும் கொள்ளை போவதாகச் சொல்லப்படுகிறது. மகாராஜா புத்திசாலியானாலும் இளம்பருவம், உலக அனு பவம் இல்லை. மகாராணியார் சமஸ்தான விஷயங்களில் கவலையற்றவர் போல் இருந்து வருகிறாராம். ஏனெனில் பெரிய மகாராணியார் கையிலிருந்த ராஜ்ய பாரத்தை தனக்கு வாங்கிக் கொடுத்தவர் ஸர்.சி. பி. தான் என்கின்ற நம்பிக்கையினால் அவர் இஷ்டப்படி காரியங்கள் நடத்து வதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

ஸர்.சி.பி. திருவிதாங்கூருக்கு திவானாகப் போனது முதல் அதிகாரமும், செல்வமும் அய்யர்மார் ஏகபோக உரிமையாகி விட்டதாக மேலே குறிப்பிட்டோம்.

வர்த்தகத் துறையிலும் பூணூல்

அதாவது 5 லட்ச ரூபாய் முதலீடு வைத்து சர்க்கார் நடத் திய ரப்பர் தொழிற்சாலை ஒரு சாமிநாதய்யர் கம்பெனிக்கு வாடகைக்கு கொடுக்கப்பட்டு விட்டதாம்.

மற்றும் தக்கலையில் ஏற்படுத்தப்பட்டிருந்த ஒரு பெரிய சர்க்கரை ஆலைக் கம்பெனியை ஒரு ஐரோப்பிய கம் பெனிக்கு கொடுக்கப்பட்டு விட்டதாம். சாராயம் காய்ச்சும் கம்பெனியும் வேறு ஒரு கம்பெனிக்கு கொடுக்கப்பட்டு விட்டதாம். ஒரு பார்ப்பனரல்லாதார் கம்பெனியால் பெரிதும் நடத்தப்பட்ட போக்குவரத்து பஸ் சர்வீசை சர்க்கார் மயமாக்குவது என்னும் பேரால் ஒழித்து சர்க்கார் ஏற்று நிர்வாகம் செய்வதில் பெரிதும் பார்ப்பன மயமாக்கி 10 லக்ஷ ரூபாய் போல் மோட்டார் பஸ்கள் வாங்கி கமிஷன் அபேஸ் ஆகிவிட்டதாம். ஸர்.ஸி.பி. மகன் சம்மந்தப்பட்ட கம்பெனி களுக்கு பெரிய கண்ட்ராக்டுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன வாம்.

உத்தியோக மண்டலத்தில் உச்சிக் குடுமிகள்

உத்தியோக நியமன விஷயமும் மோசமானதெனவே சொல்லப்படுகிறது. ஆயிரக்கணக்கான ரூபாய் சம்பளமுள்ள பொருளாதார காரியதரிசி ஒரு பார்ப்பனர், இன்கம்டாக்ஸ் அதிகாரி ஒரு பார்ப்பனர், பாரஸ்ட் நிபுணர் என்பவரும் ஒரு அய்யர், அவர் ஒரு மாஜி திவான் மாப்பிள்ளையாம். இவருக்கு 1800 ரூபாய் சம்பளம், மற்றும் பப்ளிசிட்டி ஆபீசர் ஒரு பார்ப்பனர், இவர் மெட்ரிகுலேஷன் பரீக்ஷை கூட பாஸ் செய்தது கிடையாது. வயது 45 -க்கு மேலான பிறகு உத்தி யோகம் கொடுக்கப்பட்டது. சம்பளமோ 400. மற்றும் தோழர் பரமேஸ்வரய்யர் என்பவர் யுனிவர்சிட்டி சம்மந்தமுள்ளவர். இவருக்கு சம்பளம் ரூ.1500. இரண்டு சட்ட கலாசாலை பிரின்சி பால்களும் பார்ப்பனர்கள், கல்வி இலாகா அதிகாரிகள் (இன்ஸ்பெக்டர் ஆப் ஸ்கூல்) 3 பேரும் பார்ப்பனர்கள். சர்க்கார், போட்டகிராபர் கூட பார்ப்பனர். இம்மாதிரி பெரிய பெரிய 1000, 1500, 2000 ரூபாய் சம்பளமுள்ள உத்தியோகங்கள் பார்ப்பன மயமாக்கப்பட்டவை தவிர இனியும் பல பெரிய உத்தியோகங்கள் அட்வொகேட் ஜனரல் என்றும், சர்ஜன் ஜனரல் என்றும், புரோசேன்ஸல்லர், வைஸ்சேன்ஸலர் என் றும், லாமெம்பர் என்றும் இப்படியாக மற்றும் மாதம் 1000, 2000 ரூபாய் சம்பளமுள்ள பல புதிய உத்தியோகங்களைச் சிருஷ்டித்து பெரிதும் பார்ப்பனர்களுக்கே கொடுக்கப்படப் போவதாலும் மற்றும் இது போன்ற காரணங்களாலும் திருவிதாங்கூர் பொக்கிஷம் காலியாகி கடனும் ஏற்பட்டு அரைகோடி ரூபாய் கடனும் வாங்கப்பட்டு விட்டதாம்.

சென்னை மாதிரி திருவிதாங்கூரும்

சென்னை மாகாணத்தில் ஆச்சாரியார் ஆட்சியில் சென்ற வருஷம் ஒன்றரைக் கோடி ரூபாய் கடன் இவ் வரு ஷம் ஒன்றே முக்கால் கோடி ரூபாய் கடன், அடுத்த வருஷம் காங்கிரஸ் ஆட்சி இருந்தால் 2 கோடி ரூபாய் கடன் ஆகும் என்பது போல், ஸர்.சி.பி. திவானாவதற்கு முன் தங்கப்பாளங் களும், வைரம், சிவப்பு, பச்சை ஆகிய ரத்தினங்களும் வண்டி வண்டியாய் குவிந்து கிடந்த திருவிதாங்கூர் பொக் கிஷம் அய்யர் கால் வைத்த உடன் இறகு முளைத்துக் கடல் தாண்டிப் பறந்து விட்டதால் பாப்பராகி இவ்வருஷம் அரை கோடி, அடுத்த வருஷம் ஒரு கோடி என கடன் ஏறி 40 லட்சம் ஜனங்களுக்கு மூன்றரை கோடி வருஷ வருமான முள்ள திருவிதாங்கூர் சமஸ்தானம் அழுத்தப்படுவதைப் பார்த்த திருவிதாங்கூர் பிரஜைகளான, வரிசெலுத்துவோரான பார்ப்பனரல்லாத மக்கள் இனி தங்கள் நாடு என்றென்றும் தலையெடுக்க முடியாமல் அழியப் போகிறதே என்று கருதி மனம் பதறி வயிறு வெந்து ஆத்திரப்பட்டு, மாரடித்துக் கொண்டு அழுது ஓலமிடும் காட்சி நமது ஸர்.சி.பி. அய்யர் அவர்களுக்கு ராஜத்துரோகமாய் வகுப்புத் துவேஷமாய் காணப்பட்டு மிருகப்பாய்ச்சல் பாய்ந்து ஒரே அடியில் அடக்கி ஒடுக்கி அழித்து விடப் பார்க்கிறார் போலும்.

தர்மராஜ்ய தர்ம தேவதை தாண்டவமே இப்படி இருந் தால் இனி மற்ற ஆட்சி எப்படி இருக்கும் என்பதை நினைக் கவே பயமாய் இருக்கிறது.

நாராயணபிள்ளை கதி

இவற்றை வெளிப்படுத்த முயற்சி எடுத்துக் கொண்ட திருவனந்தபுரம் ஹைக்கோர்ட்டு வக்கீல் தோழர் நாராயண பிள்ளை அவர்கள் ஏதோ ஒரு பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதினார் என்பதற்காக அவர் மீது ராஜத்துரோக குற்றம் சாட்டப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட முறையைவிட குற்ற வாளி நடத்தப்பட்ட முறையும் அக்கிரமமாக விசாரணை நடத்தப்பட்ட முறையும் நீதி வழங்கப்பட்ட முறையும் தான் நாம் மிகுதியும் கவனிக்கத்தக்கவையாகும். இதை உணர்ந்து, பார்த்து, ஊன்றி கவனித்தால் திருவிதாங்கூரில் இன்று நீதி, நிர்வாக ஆட்சி நடக்கின்றதா அல்லது டையர் ஓட்வியர் ராணுவ ஆட்சி நடக்கின்றதா என்று சந்தேகம் கொள்ள வேண்டி இருக்கும்.

- தொடரும்

- விடுதலை, 16.4.1938

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.