Monday, April 22, 2019

கையில் வைத்த ‘மை‘ அழிந்ததால், வழக்கு தொடுத்த வாக்காளர்

பெங்களூருவை சேர்ந்தவர் பிரிக்சித் தலால் (வயது 43). தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வரும் அவர் நேற்று முன்தினம் பெங்களூரு மாநகராட்சி அரசு பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தார்.
இதற்காக அவரது கை விரலில் ஊழியர்கள் வைத்த 'மை', அவர் வீட்டுக்கு வந்து சாப்பிடுவதற்காக கையை சோப்பு போட்டு கழுவிய போது அழிந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.
உடனே தான் வாக்களித்த வாக்குச்சாவடிக்கு சென்று 'மை' அழிந்தது பற்றி அங்கி ருந்த அதிகாரிகளிடம் பிரிக் சித் தலால் கூறினார். ஆனால் அவர்கள் கண்டுகொள்ளவில்லை.
இதனால் காவல் நிலையத் துக்கு சென்று தேர்தல் ஆணை யத்தின் மீது அவர் புகார் கொடுத்தார். அதில், வாக்க ளித்த பின் விரலில் வைக்கப் படும் 'மை' குறைந்தது இரண்டு வாரங்கள் அழியாமல் இருக் கும். ஆனால் தனது விரலில் வைக்கப்பட்ட 'மை' உடன டியாக அழிந்து விட்டது, எனவே தேர்தல் ஆணையம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். அதன்பேரில், காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.