Monday, April 22, 2019

மக்களவை தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை

இடைத்தேர்தலில் 11.56 லட்சம் பேர் ஓட்டு போடவில்லை
தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிக்கு நடத்தப்பட்ட தேர்தலில் 1 கோடியே 64 லட்சத்து 17 ஆயிரத்து 983 பேர் வாக்களிக்கவில்லை. அது மட்டுமல்லாமல் 18 சட்ட மன்ற தொகுதிக்கான இடைத் தேர்தலில் 11 லட்சத்து 56 ஆயிரத்து 730 பேர் வாக்களிக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளி யாகியுள்ளது.
தமிழகத்தில் 38 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிக் கான இடைத்தேர்தல் நேற்று முன்தினம் அமைதியாக நடந்து முடிந்தது. மக்களவை தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல் வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி, பேரணி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைளை எடுத்தது.
அது மட்டுமல்லாமல் சனி, ஞாயிறு என 10 நாட்கள் சிறப்பு முகாம்களை நடத்தியது. இவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தி யும் மொத்தம் 71.90 சதவீதம் தான் வாக்குப்பதிவாகியுள்ளது. மக்களவை தேர்தல் நடைபெற்ற 38 தொகுதிகளில் மொத்தம் 5 கோடியே 84 லட்சத்து 42 ஆயிரத்து 767 வாக்காளர்கள் உள்ளனர்.


இதில் ஆண்கள் 2 கோடியே 88 லட்சத்து 96 ஆயிரத்து 279 பேர். 2 கோடியே 95 லட்சத்து 40 ஆயிரத்து 800 பேர் பெண்கள். 5688 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவர். ஆனால், இதில் 4 கோடியே 20 லட்சத்து 24 ஆயிரத்து 784 பேர் மட்டுமே வாக்களித் துள்ளனர். அதாவது, 1 கோடியே 64 லட்சத்து 17 ஆயிரத்து 983 பேர் வாக்களிக்கவில்லை. 18 சட்ட மன்றத்துக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 47 லட்சத்து 32 ஆயிரத்து 775 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 23 லட்சத்து 40 ஆயிரத்து 553 பேர் ஆண்கள். பெண்கள் 23 லட்சத்து 91 ஆயிரத்து 706 பேர். மூன்றாம் பாலினத்தவர் 516 பேர். இதில் 75.56 சதவீதம் பேர் மட்டுமே, அதாவது 35 லட்சத்து 76 ஆயிரத்து 45 வாக்கா ளர்கள் மட்டுமே வாக்களித்துள் ளனர். இதில் ஆண்கள் 17 லட்சத்து 56 ஆயிரத்து  878 பேரும், பெண்கள் 18 லட்சத்து 19 ஆயிரத்து 91 பேரும், மூன்றாம்  பாலினத் தவர் 76 பேரும் அடங்குவர். ஆனால் ஆனால், 11 லட்சத்து 56 ஆயிரத்து 730 பேர் வாக்களிக்க வில்லை.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.