Monday, February 21, 2011

பெரியார் திரை விருது வழங்கும் விழா

அன்புடையீர்,
பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை & பகுத்தறிவாளர் கழகம் இணைந்து நடத்திய ”பெரியார் திரை குறும்படப்போட்டி 2010”க்கான பரிசளிப்பு விழாவும், “பெரியார் திரை 2010” விருது வழங்கும் விழாவும் சென்னை பெரியார் திடலில் நடைபெறவிருக்கின்றன. குறும்பட, ஆவணப்பட, திரைப்பட, ஊடக நண்பர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் & சமூக ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

24.02.2011 | வியாழன்
மாலை 6.30 மணி
பெரியார் திடல், சென்னை-7

வரவேற்புரை: மானமிகு ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
(அமைப்பாளர், பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை)

தலைமை: மானமிகு கோ.சாமிதுரை
(பொருளாளர், திராவிடர் கழகம்)

முன்னிலை:
மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன்
(பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)
மானமிகு சு.அறிவுக்கரசு
(பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)
மானமிகு வீ.குமரேசன்
(பொதுச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்)
மானமிகு வீ.அன்புராஜ்
(தலைமை நிலையச் செயலாளர், திராவிடர் கழகம்)

அறிமுகவுரை: மானமிகு தி.பெரியார் சாக்ரடீசு
(மாநிலச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்)

இணைப்புரை: மானமிகு கவிஞர் ராஜசேகர்

வாழ்த்துரை:
மானமிகு வெற்றிமாறன்
(திரைப்பட இயக்குநர், பொல்லாதவன், ஆடுகளம்)
மானமிகு கவி பெரியதம்பி
(இசையமைப்பாளர், முத்துக்கு முத்தாக, அய்வர்)
மானமிகு சத்யா (ஒளிப்பதிவாளர், யுத்தம் செய்)

விருது மற்றும் பரிசுகள் வழங்கிப் பாராட்டுரை:
தமிழர் தலைவர்
மானமிகு கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)

நன்றியுரை:
மானமிகு உடுமலை
____________________________________________________________

பரிசு பெறும் குறும்படங்கள் விழாவில் திரையிடப்படும்.
அனைவரும் வருக!

Thursday, February 10, 2011

”விடியலை நோக்கி”

ஆவணப்படம் திரையிடல்
11.2.11 | வெள்ளி
இரவு 7 மணி
பெரியார் திடல், சென்னை-7

தமிழக மீனவர் படுகொலை தொடர்பான ”விடியலை நோக்கி” (Towards Dawn ) இயக்கம்: ஜோ டி குருஸ்

குறும்படம்: “வேண்டுகோள்’ இயக்கம்: விஜய பாஸ்கர்

Wednesday, December 22, 2010

பெரியார் திரை | கடைசி நாள் 27.12.2010 | விரைவீர்!

பெரியார் திரை குறும்படப் போட்டிக்கான வரவேற்பு கடந்த ஆண்டைக் காட்டிலும் சிறப்பாக உள்ளது.
இருப்பினும் போட்டி குறித்த அறிவிப்பு வெளிவந்த நாளிலிருந்து இறுதித் தேதி குறைவாக இருப்பதாகப் பலர் தெரிவித்ததாலும், வெளிநாடுகளிலிருந்து படங்களை அனுப்ப காலம் தேவை எனப் படைப்பாளிகள் வேண்டிக்கொண்டதாலும் வரும் திங்கள் கிழமை (27.12.2010) வரை இறுதிக் கெடு நீட்டிக்கப்படுகிறது.

மேலும் விவரங்கள் & நிபந்தனைகளுக்கு...சுட்டுக!


இவ்வாய்ப்பைத் தமிழ்க் குறும்பட படைப்பாளிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அமைப்பாளர்,
பெரியார் திரை